என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமாவாசை வழிபாடு"

    • அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், பரமத்திவேலூர் மகா மாரியம்மன், செல்லாண்டி அம்மன், பேட்டை பகவதி அம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மகா மாரியம்மன், சேளூர் மகா மாரியம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டி யம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனையொட்டி எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோவில் குளத்தில் பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    இதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹரமங்கலமாருதி 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் கோவில், நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை-திருப்புவனம் பகுதியில் மகாளய அமாவாசை வழிபாடு நடந்தது.
    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் திரண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சியில் பிரசித்தி பெற்ற வழிவிடு பெரிய நாச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் காசியில் இருந்து பிரதிஷ்டை செய்ய பட்ட சிவலிங்கம் சன்னதிஉள்ளது. இங்கு தை, ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசை தினத்தில் காசியில் நடைபெறுவது போல் முன்னோர்கள் தர்பண பூஜை நடைபெறும்.

    இன்று மகாளய அமாவாசை முன்னிட்டு காலை 6 மணிக்கு சிறப்பு யாகபூஜையுடன் தர்பண பூஜை தொடங்கியது. அதைதொடர்ந்து மதுரை, மானாமதுரை, பரமக்குடி, இளையான்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் முன்னோர்கள் தர்பண பூஜை செய்து காசி சிவலிங்கத்திற்கு கங்கை தீர்த்ததால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர். இதேபோல திருப்புவனம் வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்கள் திதி பூஜை செய்து புஸ்பவனேஸ்வரை வழிபாடு செய்தனர். குறிச்சி காசிசிவன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு அன்னதானமும் நடைபெற்றது.

    • தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள்.
    • நீத்தார் கடன் செய்வது என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை.

    ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கவேண்டும் எனவும், புரட்டாசி மகாளய அமாவாசையில் அவர்களை பூஜிக்கவேண்டும் என்றும், தை அமாவாசை அன்று மூதாதையர்களுக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். சூரியன் தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கின்றார்.

    சூரியனை பிதுர்காரகன் என்றும் சந்திரனை மாதுர்காரகன் என்றும் முன்னோர்கள் கூறுகின்றனர். சூரியனும், சந்திரனும் சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் தை அமாவாசை சிறப்புக்கு உரியதாகிறது. இதை புண்ணிய காலம் என்பார்கள்.


    உத்தராயண புண்ணிய காலமான தை அமாவாசை அன்று பித்ருக்கள் தங்களின் உலகத்துக்கு புறப்படுகிறார்கள். நம் வீடுகளுக்கு வந்து தங்கி இருந்து கிளம்பும் உறவினர்களை எப்படி நாம் நல்ல முறையில் வழி அனுப்பி வைப்போமோ, அப்படி பித்ருக்களுக்கு தை அமாவாசை நாளில் தர்ப்பணம் முதலிய வழிபாடுகளை செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

    அவ்வாறு செய்தால் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு பூரணமாகக் கிடைக்கும். தை அமாவாசை அன்று அவர்கள் மீண்டும் தங்களின் உலகத்துக்குப் புறப்படுவதாகக் கூறப்படுகிறது.\


    நாம் இன்று அனுபவிக்கும் நற்பலன்களுக்கு காரணம் நம் முன்னோர்கள் சேர்த்து வைத்துள்ள புண்ணியம்தான். அதை நம் பிள்ளைகளும் பெற்று பயனடைய அதை தொடர வேண்டும்.

    பெற்றோர்கள் செய்யும் நற்செயல்கள் பிள்ளைகளுக்கு கட்டாயம் போய் சேரும். எனவே நீத்தார் கடன் செய்வது என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை ஆகும்.

    • ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.
    • இதுவரை 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததைக் குறிக்கும் விதமாகக் கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.

    இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

    இதுவரை 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புனித நீராடினார்.

    இந்நிலையில் இன்றுடன் முதல் அமிர்த ஸ்நானம் [புனித நீராடல்] முடிவடைந்து நாளை [ஜனவரி 29] மவுனி அமாவாசையையொட்டி 2 ஆம் கட்ட அமிர்த ஸ்நானம் தொடங்குகிறது.

    மவுனி அமாவாசை நாளில், மக்கள் புனித நதிகளில் நீராடி, தான தர்மங்கள் செய்வார்கள். இந்த நாளில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. முன்னோர்கள் பூமிக்கு வருவதாக நம்பப்படும் இந்த நாளின் முக்கியத்துத்தால் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    எனவே நாளை திரிவேணி சங்கமத்தில் நீராட மகா கும்பமேளாவுக்கு லட்சக்கணக்கானோர் இன்றுமுதலே படையெடுத்து வருகின்றனர். இதனால் பிரயாக்ராஜுக்கு  வரும் ரெயில்கள் நிரம்பி வழிகின்றன.

    மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் நகருக்கு 48 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை இருக்கும் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.

    விமான கட்டணங்கள் 300% முதல் 600% வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக டெல்லி-பிரயாக்ராஜ் இடையே விமான டிக்கெட் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மகா கும்பமேளாவில் பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் மொத்தமாக 40 கோடி பேர் வருகை தருவார்கள் என அரசு கணக்கிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×