என் மலர்
நீங்கள் தேடியது "சாமு நாசர்"
- வீடியோக்களில் கமென்ட் செய்து வருகின்றனர்.
- இந்தப் படம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சா.மு. நாசர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருந்த போது வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தை புகழ்ந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசும் போது, "அவருக்கும் கல்லுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பல பேர் பல படங்களை எடுத்தார்கள். பல ஜாம்பவான்கள் படங்களை எடுத்தார்கள். அந்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்துள்ளது. ஒரு சில படங்கள் பெரிய வசூல் செய்துள்ளது. ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி என்று ஒரு படம் எடுத்தார். மகத்தான, மாபெரும், மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதிலும் பார்த்தீர்கள் என்றால் கல் தான்," என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா மோத்வானி, சந்தானம் மற்றும் பலர் நடித்து வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வெளியாகி 12 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்தப் படம் நகைச்சுவை கலந்த காதல் கதையம்சம் கொண்டிருந்தது.
இந்த நிலையில், ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் புரட்சியை ஏற்படுத்தியதாக அமைச்சர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பலர், இது தொடர்பான வீடியோக்களில் கமென்ட் செய்து வருகின்றனர்.
- பச்சைப் பயறு கொள்முதல் செய்யும் திட்டத்தை திருவள்ளுர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
- ஒரு ஹெக்டேருக்கு 384 கிலோ வீதம் 1,200 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் ராபி பருவம் 2022-23-ல் பச்சைப்பயறு, சுமார் 10 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட பச்சைப்பயறு அறுவடை தற்போது தொடங்கியுள்ளது.
இந்நிலையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ், பச்சைப் பயறு கொள்முதல் செய்யும் திட்டத்தை திருவள்ளுர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து 3 விவசாயிகளுக்கு நெல் விளைபொருளுக்காக ரூ.5.10 லட்சம் மதிப்பில் பொருளீட்டுக் கடன் பெற்றதற்கான ஆணைகள் மற்றும் காசோலைகளையும், 3 உழவர் உற்பத்தியாளர் குழு நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் வழங்கப்படுவதற் கான அனுமதி ஆணை களையும், 2 விவசாயிகளுக்கு பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட்டதற்கான ரசீதுகளையும் அமைச்சர் வழங்கினார்.
இதுகுறித்து அமைச்சர் சா.மு.நாசர் பேசியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் ஒரு ஹெக்டே ருக்கு 257 கிலோ வீதம் 675.65 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப் பட்டது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட தர குறியீட்டின் படி கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் ஒன்றுக்கு ரூ.4.80 வீதம் உயர்த்தப்பட்டு ரூ77.55 என்ற விலைக்கு தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலம் விவசாயிகளிடம் இருந்து பச்சைப்பயறு கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒரு ஹெக்டேருக்கு 384 கிலோ வீதம் 1,200 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய ஆணை வழங்கப் பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வரும் மே 29-ந் தேதிக்குள் தங்களின் ஆதார் எண், வங்கி கணக்கு புத்தகம், நிலச்சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன், திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ், வேளாண்மை துணை இயக்குநர் சீனிராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.