search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமிகள் கற்பழிப்பு"

    • சென்னை, பழனி உள்ளிட்ட இடங்களில் விடுதிகளில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
    • கைதான வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் 2 பேர் கடந்த வாரம் திடீரென மாயமானார்கள். இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் சிறுமிகள் இருவரும் திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பகுதியில் இருப்பது கேரள போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் சிறுமிகளுடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதுல் ஜோமி, அகிலேஷ் அனில்குமார் என்ற 2 வாலிபர்கள் இருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து திருமுருகன்பூண்டிக்கு விரைந்த கேரள போலீசார், அங்கிருந்த 2 சிறுமிகளை மீட்டதுடன், சிறுமிகளை திருப்பூருக்கு அழைத்து வந்த அதுல் ஜோமி, அகிலேஷ் அனில்குமார் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், வாலிபர்கள் இருவரும் ஆசை வார்த்தை கூறி சிறுமிகளை அழைத்து வந்ததும், பின்னர் சென்னை, பழனி உள்ளிட்ட இடங்களில் விடுதிகளில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. செலவுக்கு பணம் இல்லாததால் திருப்பூருக்கு சிறுமிகளுடன் வேலை தேடி வந்தபோது நண்பர்கள் உதவியுடன், திருமுருகன்பூண்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அங்குள்ள குடிநீர் பாட்டில் தயார் செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கைதான வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தில் ஈடுபட்ட சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    • பழனி பைபாஸ் பகுதியில் பிரசன்னகுமார் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே 19, 17 வயதுடைய 2 சகோதரிகளை கடந்த வாரம் மோட்டார் பைக்கில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. தாமரைக்குளம் பகுதியில் சிறுமிகளின் காதலர்கள் முன்பே அவர்களை கட்டிப்போட்டு கூட்டு பலாத்காரம் செய்தனர்.

    2 சிறுமிகளையும் 4 பேர் கற்பழித்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு நாங்கள் அழைக்கும் போதெல்லாம் எங்கள் இடத்துக்கு வர வேண்டும். இல்லையெனில் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் எனவும் மிரட்டினர்.

    திண்டுக்கல் நகரையே பெரும் பரபரப்பாக்கிய இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    தலைமறைவான ரவுடி பிரசன்னகுமாரை பிடிக்க மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. உதயகுமார் ஆலோசனையின் பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

    பழனி பைபாஸ் பகுதியில் பிரசன்னகுமார் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பொன்மாந்துரை வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜான்பிரிட்டோ மகன் பிரசன்ன குமார் மீது 5 கொலை வழக்குகள், அடிதடி வழக்குகள் உள்ளது. இவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    தன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் தேர்தல் சமயத்தில் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகவும், சம்பவத்தன்று தனது நண்பர்கள் உதவி என கேட்டதால் அவர்களுக்கு தான் பதுங்கி இருக்கும் இடத்தை காட்டியதாகவும் கூறினார்.

    பின்னர் நண்பர்கள் 3 பேரும் சிறுமிகளை பலாத்காரம் செய்ததை பார்த்து தனக்கும் ஆசை வந்ததால் அதில் இறங்கியதாக கூறினார். கொலை, அடிதடி வழக்குகளில் ஈடுபட்டாலும் தனக்கு பெரும்பாலும் இது போன்ற விஷயங்களில் ஈடுபாடு இல்லை என்பதால் விருப்பம் இல்லாமல் இறங்கியதாகவும் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.
    • கைதான 3 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 19, 17, 13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். தாய் இல்லாத சூழலில் தந்தை மற்றும் தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இதில் 19 வயது சிறுமிக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் 19 மற்றும் 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் 4 பேரும் கடந்த வாரம் ஒரு கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். பின்னர் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சகோதரிகள் 2 பேரும் சாலையின் ஓரம் நின்றிருந்தனர். காதலர்கள் சாப்பிட்ட பில் தொகையை கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சிறுமிகளை மிரட்டினர்.

    இதை பார்த்ததும் காதலர்கள் ஓடி வரவே அவர்களை கத்தி முனையில் மிரட்டி தங்களுடன் பைக்கில் வருமாறு கூறினர். பின்னர் அவர்கள் 4 பேரையும் தாமரைக்குளம் என்ற இடத்திற்கு இரவில் தங்க வைத்தனர். பின்னர் தங்கள் கூட்டாளியான மேலும் ஒருவரை அங்கு வரவழைத்தனர்.

    அங்கு காதலர்கள் 2 பேரையும் கட்டி போட்டுவிட்டு 2 சகோதரிகளையும் 4 வாலிபர்கள் மாறிமாறி பலாத்காரம் செய்தனர். இதனை அவர்கள் வீடியோவாகவும் எடுத்துக் கொண்டனர். நாங்கள் எப்போது கூப்பிட்டாலும் நீங்கள் எங்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையெனில் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

    அதிகாலை வரை தங்கள் காம இச்சையை நிறைவேற்றிய 4 வாலிபர்களும் பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர். அதன்பின் சிறுமிகள் இருவரும் எழுந்து கட்டப்பட்டிருந்த தங்கள் காதலர்களை விடுவித்தனர். பின்னர் இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைத்தில் புகார் அளித்தனர்.


                                                                            கைதானவர்கள்

     

    போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை பலாத்காரம் செய்த மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சரண்குமார் (வயது 21), முத்தழகுபட்டியை சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான சுள்ளான் என்ற பிரசன்னகுமாரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பிரசன்னகுமார் மற்றும் சரண்குமார் மீது திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரசன்னகுமார் எப்போதும் செல்போன் பயன்படுத்தமாட்டாராம். தனது நெருக்கமான நண்பர்கள் சிலரின் செல்போன் எண்களை மனப்பாடமாக வைத்திருப்பாராம். அவசர தேவைக்கு மட்டும் யாரிடமாவது செல்போன் வாங்கி பேசுவார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள். வருமானத்திற்காக பல திருட்டு, வழிப்பறியிலும் ஈடுபட்டு வருவது இவர்களின் தொழிலாக உள்ளது.

    கைதான 3 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளை தவிர மற்ற வீடியோக்களும் இருந்ததால் இவர்கள் இதேபோல வேறு யாரிடமாவது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பெரும்பாலும் வடமாநிலங்களில் மட்டுமே இதுபோல கூட்டு பலாத்காரம், காதலர்களை கட்டிப் போட்டு 4 பேர் கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது அதேபோல ஒரு சம்பவம் திண்டுக்கல் அருகே நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • முதல் கணவருக்கு 2 குழந்தைகள் பிறந்தவுடன் இளம்பெண் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
    • இளம்பெண்ணின் மூத்த மகள் மீண்டும் 3 மாத கர்ப்பம் ஆனார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் ஏலூர் மாவட்டம் வட்லூரை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இளம்பெண்ணின் கணவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த 2007-ல் இறந்தார்.

    கணவர் இறந்த பிறகு தனது தாய் மாமன் சதீஷ்குமார் (வயது 43) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு பிறகு தனது 2 மகள்களையும் சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளியில் சேர்த்து அங்கேயே தங்க வைத்தார்.

    முதல் கணவருக்கு 2 குழந்தைகள் பிறந்தவுடன் இளம்பெண் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

    2-வது திருமணம் செய்து கொண்ட சதீஷ்குமார் சில மாதங்களுக்கு பிறகு தனக்கு குழந்தை பெற்று தர வேண்டும். இல்லையென்றால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வேன் என அடம்பிடித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் நீ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு பதிலாக என்னுடைய மகள் மூலம் குழந்தை பெற்றுக்கொள் என கூறினார்.

    இதையடுத்து விசாகப்பட்டினத்திற்கு வந்த இளம்பெண் அங்கு 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தனது மூத்த மகளை 2-வது கணவரிடம் ஒப்படைத்தார். சிறுமியின் கடும் எதிர்ப்பையும் மீறி சதீஷ்குமார் பலாத்காரம் செய்தார்.

    இதனால் சிறுமி கர்ப்பமானார். சிறுமி கர்ப்பமான விஷயம் வெளியே தெரிந்தால் அவதூறாக பேசுவார்கள் என கூறி டாக்டரிடம் அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர்.

    ஆனால் மீண்டும் சிறுமி கர்ப்பமாகி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது சதீஷ்குமார் தனக்கு பெண் குழந்தை தேவையில்லை. ஆண் குழந்தை தான் வேண்டும் என அடம் பிடித்தார்.

    இதையடுத்து விசாகப்பட்டினம் சென்ற இளம்பெண் தனது 2-வது மகளை அழைத்து வந்தார். அவரையும் சதீஷ்குமார் பலாத்காரம் செய்தார். இதனால் கர்ப்பமான சிறுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் கருவிலேயே இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இறந்த நிலையில் பிறந்த குழந்தையை தூக்கிச் சென்று கால்வாயில் வீசி விட்டனர்.

    இதனால் இளம்பெண்ணிற்கும் சதீஷ் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தனது 2 மகள்களையும் சதீஷ்குமாரிடம் விட்டு விட்டு இளம்பெண் விசாகப்பட்டினத்திற்கு சென்று அங்குள்ள போலீசில் புகார் செய்தார். போலீசார் சதீஷ்குமார் மற்றும் சிறுமிகளை அழைத்து கவுன்சிலிங் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணின் மூத்த மகள் மீண்டும் 3 மாத கர்ப்பம் ஆனார். இது குறித்த தகவல் அறிந்த இளம்பெண் ஏலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சதீஷ்குமார் மீது போக்சோ மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் அவருக்கு துணையாக இருந்த சிறுமியின் தாய் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    சிறுவயதிலேயே குழந்தை பெற்ற சிறுமிகள் தவித்து வருகின்றனர்.

    • சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்து விட்டு தலைமறைவானார்.
    • வாலிபர் பெற்றோர் இல்லாத சிறுமிகளை கண்டறிந்து, அவர்களுடன் சமூக வலைதளங்களில் பழகி, பின்பு அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கஜக்கூட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு, மலப்புரம் அருகே உள்ள பெரிந்தால் மன்னா வெங்காடு பகுதியைச் சேர்ந்த கோகுல் (வயது20) என்ற வாலிபருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அதன் மூலம் பேசி வந்த இருவரும் நேரிலும் சந்தித்து பழகி வந்துள்ளனர். அப்போது வாலிபர் கோகுல் காதலிப்பதாக கூறி சிறுமியை பல இடங்களுக்கு காரில் அழைத்துச் சென்றிருக்கிறார். அவ்வாறு அழைத்துச் செல்லும் போது, சிறுமியை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்து விட்டு தலைமறைவானார். இது குறித்து கஜக்கூட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுலை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கருநாக பள்ளி பகுதியில் அவர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை பல முறை பலாத்காரம் செய்ததும், நகைகளை பறித்ததும் உறுதியானது. மேலும் அவர் இது போன்று பல சிறுமிகளை காதலிப்பதாக கூறி தனது வலையில் வீழ்த்தி உள்ளார்.

    அவர் பெற்றோர் இல்லாத சிறுமிகளை கண்டறிந்து, அவர்களுடன் சமூக வலைதளங்களில் பழகி, பின்பு அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து கோகுலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
    • ஆசிரியர் விசாரித்த போது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    செல்போன் பயன்பாட்டுக்கு வந்த பின் பயனுள்ளதாக இருந்தாலும், அதன் மூலம் குற்ற சம்பவங்கள் நடைபெறவும் ஒரு காரணமாக உள்ளது.

    தற்போது விழுப்புரத்தில் செல்போன் மூலம் ஆபாச படம் வீடியோவை காண்பித்து 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறி பொதுமக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

    விழுப்புரம் தாலுகா போலீஸ் எல்லைக்குட்பட்ட ஒரு கிராம பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் வடமாநில குடும்பத்தை சேர்ந்த 6 வயது சிறுமி 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன் அச்சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இது குறித்து ஆசிரியர் விசாரித்த போது அச்சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது.

    இது குறித்து விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை குழந்தைகள் நல அலுவலருக்கு ஆசிரியர் தகவல் தெரிவித்தார். குழந்தைகள் நல அலுவலர் அச்சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    அங்கு சிறுமியை பரிசோதித்ததில் அவர் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரிய வந்தது.

    இது குறித்து குழந்தைகள் நல அலுவலர் கடந்த 28-ந்தேதி விழுப்புரம் மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 14 முதல் 17 வயதுடைய 4 சிறுவர்கள் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    4 சிறுவர்களும் தங்கள் செல்போனில் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை காண்பித்து வட மாநில சிறுமி உளபட 5 சிறுமிகளுக்கு பாலியல் கொடுத்ததும் அந்த சிறுமிகளை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளதும் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து 4 சிறுவர்கள் மீதும் போக்சோவில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் 4 பேரும் இளஞ்சிறார் மன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் கிக்கிரவாண்டி அருகே உள்ள கப்பிலியாம் புலியூர் பகுதியில் ஒதுக்குப்புறமாக காதலனுடன் பேசிக் கொண்டிருந்த பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×