search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் ரவி"

    • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • 'தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா கடந்த மாதம் 29-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

    கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    எதிர்கட்சிகள் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    தமிழ்நாடு சட்டப்பேரைவையில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் வகையிலும், அவற்றை விற்பனை செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையிலும், 'தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா கடந்த மாதம் 29-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரைவையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதலுக்கு அனுப்பபட்டது.

    இந்நிலையில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், கடுமையான தண்டனைகளை விதிப்பதற்கான சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

    கள்ளச்சாராயம் தயாரிப்பது, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • ம.தி.மு.க. சார்பில் கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், மாநில மருத்துவர் அணி செயலாளர் வி.எஸ். சுப்பாராஜ், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. நகர செயலாளர் ரத்தினவேல் குமார் வரவேற்று பேசினாார்.தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. முதல் கையெழுத்திட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன், தொகுதி செயலாளர் பீர் மைதீன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் பேசினர். நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியதுரை, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சசி முருகன், ராஜகுரு, குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ், மாவட்ட துணைச்செயலாளர் பொன் ஆனந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாஜலபதி, தென்காசி, விருதுநகர் இணையதள மண்டல பொறுப்பாளர் சங்கரசுப்பு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலெட்சுமி சுப்பையா, இளைஞர் அணி துணைச்செயலாளர் முகமது ஹக்கீம், பூக்கடை பொன்னுச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • பதவி பிரமாணத்தை மீறி விட்ட கவர்னர் ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
    • மத்திய அரசுக்கு அ.தி.ம.மு.க. கோரிக்கை வைத்துள்ளனர்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு திராவிட மக்களின் உணர்வுகளையும், தமிழர்களின் அமைதி யையும் சீர்குலை க்கிறது. மக்களால் நூறாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். சனாதன கொள்கையை கவர்னர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு கவர்னர் தூக்கி பிடிக்க நினைப்பது வன்மை யாக கண்டிக்கத்தக்கதாகும்.

    திராவிட மாடலின் உன்னதமான புதுமைப் பெண் திட்டத்தின் காரண மாக உயர்கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை 26 சதவீதம் உயர்ந்துள்ளது. இதைக்கண்டு ஆர்.எஸ்.எஸ். கொள்கை பற்றாளர் கவர்னர் பொறாமை படுகிறார்.

    எனென்றால் பெண் கல்வி அவரது சனாதனத்திற்கு எதிரானது என்பதால் தமிழ்நாட்டின் கல்வியை குறை கூறி வருகிறார். தமிழ்நாடு இந்திய ஒன்றியத்திலேயே அமைதி பூங்காவாக திகழ்கிறது.

    ஆனால் மாநில அரசின் அங்கமாக இருக்கும் கவர்னர் மாநில அரசையே தவறாக குற்றம் சொல்வது எப்படி சரியானதாக இருக்க முடியும் என்ப தையும் கவர்னர் பதவிக் கான இலக்கணத்தையும் அவர் தெளிவு படுத்த வேண்டும்.

    மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் உள்ளதை மறந்துவிட்டு தான் மேற்கொண்ட பதவிபிரமாணத்தை மீறி கவர்னர் ரவி பொது வெளியில் அரசின் நிர்வாக விவரங்களை தொடர்ந்து சொல்லி வருவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகும்.

    தமிழ்நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளும் கவர்னருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பி வரும் நிலையில் திராவிடமே உயிர் மூச்சாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டு மக்களி டையே பாசிச, வகுப்புவாத சனாதனத்தை திணிக்க நாள்தோறும் நாலாந்தர பேச்சாளராக கவர்னர் பதவியில் அமர்ந்து கொண்டு ரவி கூறி வருவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களிடையே ஆபத்தான விஷக்க ருத்துக்களை தொடர்ந்து பரப்பி வரும் கவர்னரை ஒன்றிய அரசு உடனே திரும்பபெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×