search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எவ வேலு"

    • தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    • தமிழர்களின் வீர விளையாட்டை அடையாளப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் இந்த விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர்களின் வீர விளையாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு மைதானம் அமைய வேண்டும் என முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முழுவதுமாக நிறைவு பெறும். பணிகள் தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து 4-வது முறையாக மைதான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன்.

    இதுவரை 35 சதவீதம் பணிகள் முடிவு பெற்றுள்ளது. தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    தற்போது மைதான நுழைவு வாயில் வளைவு, மழைநீர் வடிகால் வசதி, செயற்கை புல் தரை, குடிநீர் வசதி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி, வீரர்கள், உரிமையாளர்கள் ஓய்வு ஆறை, மருத்துவ வசதி, கால்நடை மருத்துவ வசதி, உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    குறிப்பிட்ட நாளில் பணிகள் நிச்சயம் முடிவு பெறும். மைதானத்திற்கு விரைந்து வர புதிதாக சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடையிடையே பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. அனைத்து பணிகளும் முழுமையாக முடிவு பெற்ற பின்னரே இந்த மைதானம் திறக்கப்படும். புதிய சாலை அமைக்கும்போது தனியார் நிலங்களும் கையகப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே அதற்கான பணிகளும் விரைவில் நடைபெற உள்ளது.

    வழக்கம் போல் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் ஆங்காங்கே வழக்கம்போல் நடக்கும். தமிழர்களின் வீர விளையாட்டை அடையாளப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் இந்த விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசை மக்கள் பாராட்டி கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் விமர்சித்தால் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • தமிழகத்தில் எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகம் வளர்ச்சி பெறுகிறது.
    • புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் கலைஞர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு., பி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

    தி.மு.க. அரசு யானை பலம் கொண்டது. தமிழகத்தில் எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகம் வளர்ச்சி பெறுகிறது. தி.மு.க. ஆட்சியின் போது தான் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் மட்டும் மதுரை-திண்டுக்கல் புறவழிச்சாலை, வைகை ஆற்றில் குறுக்கு பாலம், ஆண்டாள்புரம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம், திருப்பரங்குன்றம் சாலையில் மேயர் முத்துபாலம், மதுரை மாநகராட்சி கட்டிடம் அறிஞர் அண்ணா மாளிகை, மேலூர் சாலையில் ஒருங்கிணைந்த ஐகோர்ட்டு வளாகம் கட்டியதும் தி.மு.க. ஆட்சியில் தான்.

    அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மட்டுமல்லாது தென்தமிழகமே பயன்படும் வகையில் ரூ.120 கோடியில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம் மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ள ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக மாவட்ட செயலாளர் மணிமாறன் முயற்சியால் மேம்பாலம் அமைய உள்ள இடத்தினை கையகப்படுத்த ரூ.22.88 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    மேலும் மேம்பாலம் கட்ட ரூ.33.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த ஆண்டிலேயே ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும். தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடி பேர் பயனடைந்து உள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் கொரோனா காலத்தில் கடனை செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.2400 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கியவர் மு.க.ஸ்டாலின். இது மக்கள் ஆதரிக்கும் திராவிடமாடல் ஆட்சியாக உள்ளது.

    தமிழக கவர்னர் விரும்புவது மனுதர்மம், மனுநீதி. ஆனால் தமிழக முதலமைச்சர் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், அனைவரும் சமம் என்ற சமூக நீதியை விரும்புகிறார்.

    தமிழகத்தில் பா.ஜனதா வளரவில்லை. மத்தியில் உள்ள ஆட்சியை வைத்துக்கொண்டு அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டும் பணியை செய்கின்றனர். பா.ஜனதா வின் சலசலப்பு தமிழகத்தில் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×