search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரத்து அதிகம்"

    • மீன்கள் வரத்து இன்று அதிகமாக காணப்பட்டது.
    • மீன்களை மக்கள் போட்டிபோட்டு வாங்கிசென்றனர்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் 61 நாட்கள் அமல்படுத்தப்பட்ட மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந்தேதி முடிந்தது. அன்று இரவே காசிமேட்டில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

    கடந்த வாரம் மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை விசைப் படகு மீனவர்கள் அதிக அளவில் கரை திரும்பாததால் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. மேலும் விலையும் குறையாமல் இருந்தது.

    இந்த நிலையில் தடை காலம் முடிந்து 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு முதலே அதிக அளவு விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்ப தொடங்கினர்.

    சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு திரும்பியதால் கடந்த வாரத்தை விட பெரிய மீன்கள் வரத்து இன்று அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், கடமா, இறால், உள்ளிட்ட மீன்கள் அதிகமாக காணப் பட்டது. இதனால் மீன்கள் விலையும் கடந்த வாரத்தை விட ரூ.50 முதல் ரூ.200 வரை குறைவாக இருந்தது.

    கடந்த வாரத்தில் ரூ.1500 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் இன்று ரூ.1200-க்கு விற்பனை ஆனது. இதே போல் மற்ற மீன்களில் விலையும் குறைந்து இருந்தது.

    இதனால் மீன் பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மீன்களை போட்டிபோட்டு வாங்கிசென்றனர். காசி மேட்டில் மீன்வாங்க அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததாலும் நல்ல விற் பனை ஆனதாலும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர். கூடுதல் நாட்கள் கடலில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள் அடுத்த வாரம் கரைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே அடுத்தவாரம் இப்போதைய நிலையை விட கூடுதலாக பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் எனவும், மேலும் விலையும் குறையும் என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். காசிமேட்டில் மீன்கள் விலை (கிலோவில்)வருமாறு:-

    வஞ்சிரம் - ரூ.1200

    வெள்ளை வவ்வால் மீன்- ரூ.1200

    கருப்பு வவ்வால் மீன்- ரூ.700

    சங்கரா - ரூ.350

    ஷீலா - ரூ.250

    கிழங்கா - ரூ.300

    டைகர் இறால் - ரூ.1000

    இறால் - ரூ.300

    கடமா - ரூ.300

    நண்டு - ரூ.300

    • சங்கரா மீன் கிலோ ரூ.200 முதல் 300-க்கு விற்பன செய்யப்பட்டது.
    • மீன்களின் வரத்து அதிகம் இருந்ததால் விலை குறைந்தது.

    தஞ்சாவூர்,

    தஞ்சை கொண்டிராஜபா ளையம் பகுதியில் தற்காலிக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இங்கு தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

    பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் மீன்கள் வாங்க அதிகளவில் கூட்டம் இருக்கும்.

    இந்த நிலையில் இன்று உள்ளூரில் பிடிக்கப்பட்ட உயிர் மீன்கள் மற்றும் நாகை, ராமேஸ்வரம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

    மீன்களின் வரத்து அதிகம் இருந்ததால் அவற்றின் விலையும் கணிசமாக குறைந்தது.

    சங்கரா மீன் கிலோ ரூ.200 முதல் 300-க்கு விற்பன செய்யப்பட்டது.

    இதேப்போல் இறால் கிலோ ரூ.250, நண்டு ரூ.250 முதல் 300-க்கும், கெண்டை மீன் ரூ.150, கிழங்கா ரூ.150-க்கு விற்பனையானது. மீன்களில் விலை குறைவாக இருந்ததால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது .

    காலையில் மழை பெய்தாலும் பொருட்படுத்தாமல் மக்கள் ஏராளமானோர் வந்து தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர்.

    இதனால் மீன் மார்க்கெட் பரபரப்பாக இயங்கியது.

    • உருளைக்கிழங்கு மண்டிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
    • ஊட்டியிலிருந்து 10 டன் எடையுள்ள 4 முதல் 6 லோடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் மைதானம் பகுதியில் ஏராளமான உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன.இங்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்தும், உத்தரபிரதேசம்,குஜராத், கர்நாடகா மாநிலம் கோலார்,மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் உருளைக்கிழங்குகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதனை வியாபாரிகள் ஏலம் முறையில் எடுத்துச் சென்று விற்பனை செய்வது வழக்கம்.

    இந்த உருளைக்கிழங்கு மண்டிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் போதிய சீசன் இல்லாத காரணத்தால் தற்போது ஒரு நாளைக்கு தலா 10 டன் எடையுள்ள 4 முதல் 6 லோடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    மேலும்,உத்தரப்பிரதேசம்,குஜராத்,மேற்கு வங்காளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தலா 15 முதல் 20 டன் எடையுள்ள சுமார் 25 லோடு உருளைக்கிழங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து தலா 15 முதல் 20 டன் எடையுள்ள சுமார் 20 லோடு உருளைக்கிழங்குகள் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.

    தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் 45 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1500 க்கும், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் உருளைக்கிழங்குகள் 45 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.750 முதல் 850 வரை விற்பனையாகிறது. இதனால் ஊட்டி உருளைக் கிழங்குகளின் விலை அதிகமாகவும், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகளின் விலை குறைவாகவும் விற்பனையாகிறது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் விளைச்சல் குறைவாக இருந்தாலும் போதுமான விலை கிடைப்பதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    ×