என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்தியப் பிரதேசம்"

    • இந்த அரசாங்கமும், அதிகாரிகளும் ஊழல் நிறைந்தவர்களாக உள்ளனர்.
    • ஆட்சியர் அலுவலக அறையில் அழுதபடி புறண்டுள்ள வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    தனது நிலம் தன்னிடமிருந்து அபகரிக்கப்பட்டதாக விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  கைகளை குவித்தபடி புரண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் மந்சவுர் மாவட்டத்தில் உள்ள சங்கர்லால் என்ற விவசாயி வைத்திருந்த  நிலத்தில் பாதி அவருக்கு சொந்தமில்லை என்றும் அந்த பாதி நிலத்தை அதன் அப்போதய சொந்தக்காரர்கள் ஏற்கனவே பக்கத்து கிராமத்தில் உள்ளவருக்கு 2010 ஆம் ஆண்டில் விற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

    தாசில்தார் முன்னிலையில் நடந்த பத்திரப்பதிவுக்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி தற்போது நிலத்தை வாங்கியவரின் மகன் நிலத்துக்கு சொந்தம் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் அந்த நிலம் தன்னுடையதே என்றும் தனது குடும்பமே அதில் இத்தனை காலமாக விவசாயம் பார்த்து வந்ததாகவும், எனவே இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கும் படியும் பல முறை சங்கர்லால் அரசு அலுவலகங்களுக்கு நடையாக நடந்துள்ளார்.

    ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த விவசாயி சங்கர்கர்லால், தனது நிலத்தை மாஃபியாக்கள் தன்னிடம் இருந்து  பறித்துவிட்டனர், தாசில்தாரின் தவறினால்  விவசாயியான நான் பாதிக்கப்பட்டுள்ளேன், இந்த அரசாங்கமும், அதிகாரிகளும் ஊழல் நிறைந்தவர்களாக உள்ளனர். அரசாங்கத்தால் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர் என்று ஆட்சியர் அலுவலக அறையில்  கைகளை குவித்தபடி புறண்டுள்ள வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • 2020 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின்படி இந்திய அறிவுப் பாரம்பரியத்தை மாணவர்கள் அறியும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
    • 88 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பைத் தாமதம் இன்றி கல்லூரி நிர்வாகங்கள் விரைவில் வாங்க வேண்டும்

    2020 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின்படி இந்திய அறிவுப் பாரம்பரியத்தை மாணவர்கள் அறியும் விதமாக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து உயர் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில்,பரிந்துரைக்கப்பட்ட 88 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பைத் தாமதம் இன்றி கல்லூரி நிர்வாகங்கள் விரைவில் வாங்கி அதைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

     

    பரிந்துரைக்கப்பட்ட அந்த 88 புத்தகங்களில், ஆர்எஸ்எஸ் தலைவர்களான சுரேஷ் சோனி, தினநாத் பத்ரா, டி. அதுல் கோதாரி, தேவேந்திர ராவ் தேஷ்முக், சந்தீப் வசேல்கர் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் அடங்கும். இவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதியில் அங்கம் வகித்தவர்கள் ஆவர்.

     

    இதைத்தவிர்த்து மாணவர்களுக்கு இந்த புத்தகங்கள் குறித்து விலகிச் சொல்ல, அனைத்து கல்லூரிகளிலும், பாரதிய கியான் பரம்பரா ப்ரக்சோதா [பாராபரிய அறிவை கற்றுத்தரும்] செல்களை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அம்மாநில பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிரிக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    • பெண் கான்டபிள் ஒருவர் சீருடை அணைத்தவாறு நடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
    • ரத்லாம் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இந்த தனியார் பயிற்சி மையம் இயங்கி வருகிறது

    மத்தியப் பிரதேசத்தில் காவலர் சீருடை அணைத்தவாறு தனியார் பயிற்சி மைய விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில் இயங்கி வரும் போட்டித் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் பெண் கான்டபிள் ஒருவர் சீருடை அணைத்தவாறு நடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் மேலதிகாரிகளின் கவனத்துக்கு இது சென்றுள்ளது. எனவே அவரை தற்போது இடைநீக்கம் செய்து காவல் கண்கணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதியளித்துள்ளார்.   

    • குடோன் ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரத்துக்கும், இயற்கைக்கு மாறான வல்லுறவுக்குக்கும் ஆளாக்கினார்கள்
    • ம.பி. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நீலப் சுக்லா, குற்றவாளி பாஜகவை சேர்ந்தவன் என்பதால் போலீசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோரில் 5 ஆண்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் நிர்வாணமாக ஆடவைத்து சித்ரவதை செய்ததாகக் காவல் நிலையத்தில் பெண் புகார் அளிக்க வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண் அளித்த புகாரில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி தன்னை அவர்கள் கடத்திச் சென்று குடோன் ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரத்துக்கும், இயற்கைக்கு மாறான வல்லுறவுக்குக்கும் ஆளாக்கினார்கள், அதன்பின் தொலைக்காட்சி பார்த்த அவர்கள் தன்னை பெல்டால் அடித்து வற்புறுத்தி அந்த நிலைமையில் அரை மணி நேரம் தன்னை நிர்வாணமாக நடனம் ஆட வைத்தார்கள் என்று தெரிவித்திருந்தார்.

    19 நாட்களுக்கு முன்னர் அந்த பெண் புகார் அளித்திருந்தும் போலீசார் இந்நாள்வரை எப்.ஐஆர் பதியாமல் இருந்துள்ளனர். தற்போது உயர்நீதிமன்றத்தில் தலையீட்டுக்கு பின்னர் எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. போலீசார் எப்.ஐ.ஆர் பதியாததற்கு காரணம், குற்றம்சாட்டப்பட்ட அந்த ஐவருள் ஒருவன் பாஜகவை சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ம.பி. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நீலப் சுக்லா, பாஜக போலீசை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

    இதற்கு பதிலளித்த அம்மாநில பாஜக செய்தி தொடர்பாளர் நரேந்திர சாலுஜா, குற்றவாளியின் அரசியல் சார்புகள் எதுவாக இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக விரைந்து விசாரணை நடதப்பட்டும் என்று துணை ஆணையர் அபிநய் விஸ்வகர்மா தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடக்க முடியாமல் வலியில் தள்ளாடியபடி நேற்று காலை 11.30 மணியளவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வந்துள்ளார்.
    • அந்தரங்க வீடியோவை காட்டி என்னை மிரட்டி ஹோட்டலுக்கு வரவழைத்தார்.

    மத்தியப் பிரதேசத்தில் பெண்ணை பலாத்காரம் செய்து அந்தரங்க உறுப்பில் கண்ணாடித் துண்டை திணித்து கொடுமை படுத்திய ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோர் நகரில் AB சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அசாமில் பணியில் உள்ள சஞ்சய் யாதவ் என்ற ராணுவ அதிகாரி [நாயக்] தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக வங்கி மேனஜராக பணியாற்றிவரும் கவுசல்யா என்ற திருமணமான 35 வயது பெண் நடக்க முடியாமல் வலியில் தள்ளாடியபடி நேற்று காலை 11.30 மணியளவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வந்துள்ளார்.

    அவரை உடனே மருத்துவமனைக்கு போலீஸ் சென்று அனுமதித்துள்ளனர். கவுசல்யா தனது புகாரில், ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ் ஒரு வருடம் முன் மோவ் [Mhow] பகுதியில் பணியில் இருந்தபோது கேன்டீன் அட்டை தந்து உதவியபோது அவரை நான் அறிவேன். அவர் அசாமுக்கு மாற்றலான பின் தற்போது தான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்த சஞ்சய், அந்தரங்க வீடியோ ஒன்றை காட்டி என்னை மிரட்டி ஹோட்டலுக்கு வரவழைத்தார்.

    அங்கு அறையில் வைத்து என்னை பாலியல் தொல்லை செய்த அவர் எனது அந்தரங்க உறுப்பில் கண்ணாடித் துண்டை நுழைக்க முயன்றார். அங்கிருந்து தப்பித்து தான் வந்ததாக தெரிவித்திருந்தார். கவுசல்யாவின் புகாரை அடுத்து ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ் உடனடியாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையே மருத்துவமனையில் கவுசல்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • போலீசிடம் இருந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளான்.
    • சிறுமியின் பாட்டி மற்றும் உறவினர் ஒருவர் படுகாயம் அடைந்தனர்.

    மத்தியப் பிரதேசத்தில் பாலியல் பலாத்கார குற்றவாளி பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் வீட்டுக்கு சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதில் குண்டு பாய்ந்து சிறுமியின் 60 வயது  தாத்தா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிறுமியின் பாட்டி மற்றும் உறவினர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சதர்பூர்[Chhatarpur] பகுதியில் உள்ள மொஹாரா கிராமத்தில் வசித்து வந்த 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் போலா அஹிர்வார் [Bhola Ahirwar] என்ற 24 வயது நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அஹிர்வார் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்ட நிலையில் அவர் போலீசிடம் இருந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளான்.

    இந்நிலையில் நேற்று [திங்கள்கிழமை] காலை 10.30 மணியளவில் திடீரென பாதிக்கப்பட்ட 17 சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்த அஹிர்வார் அங்கு இருதவர்கள் மீது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளான். இதனையடுத்து குற்றவாளியைத் தேடும் பணியை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளது.

    • சுற்றுலா சென்ற இடத்தில் தனியாக இருந்த அவர்களை குடிபோதையில் அங்கு வந்த எட்டுப்பேர் சூழ்ந்துள்ளனர்.
    • அதை வீடியோ எடுத்த அவர்கள், வெளியே சொன்னால் ஆன்லைனில் பதிவிடுவோம் என்று மிரட்டினர்

    சுற்றுலா சென்ற இடத்தில் கணவன் மரத்தில் கட்டப்பட்ட அவரின் கண் முன்னேயே இளம்பெண் 8 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ரேவா மாவட்டம் குர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பைரவ் பாபா கோவிலுக்குச் சென்றுள்ளனர். இருவருக்கும் 19 வயதுதான் இருக்கும் என்று தெரிகிறது.

    இந்நிலையில் சுற்றுலா சென்ற இடத்தில் தனியாக இருந்த அவர்களை குடிபோதையில் அங்கு வந்த எட்டுப்பேர் சூழ்ந்துள்ளனர். பெண்ணின் கணவனை மரத்தில் கட்டி வைத்து அவரது கண் முன்னேயே 8 பேரும் அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    மேலும் அதை வீடியோ எடுத்த அவர்கள், நடந்ததை வெளியே சொன்னால் வீடியோவை ஆன்லைனில் பதிவிடுவோம் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து அடுத்த நாள் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்குப்பதிந்த போலீசார் அந்த 8 போரையும் அடையாளம் கண்டுள்ளனர்.

    ராம்கிஷான் கோரி, தீபக் கோரி, ராவிஷ் குப்தா, சுசில் கோரி, ராஜேந்திர கோரி, கருட் கோரி, லவ்குஷ் கோரி, ராஜ்நிஷ் கோரி ஆகிய 8 பேர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் 19 முதல் 21 வயது தான் இருக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் இவர்களில் 7 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. தப்பியோடிய ராஜ்நிஷ் கோரியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர் தரையில் தான் கையோடு கொண்டு வந்த ஆவணங்களைப் பரப்பி வைத்துள்ளார்
    • அவர்களின் புகாரை கேட்ட மாவட்ட ஆட்சியர் பவ்யா மிட்டல் ஆடிப்போனார்.

    மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது கிணற்றைக் காணவில்லை என குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நின்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில், காகர்லா பகுதியைச் சேர்ந்த விவசாயி தேவ்தாஸ் ரத்தோர் தனது கிணற்றை கடந்த ஆறு மாதங்களாகக் காணவில்லை அரசு அலுவலகங்களுக்கு நடையாக நடந்துள்ளார்.

    இந்த நிலையில்தான் தனது குடும்பத்தினரையும் சேர்த்து அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர் தரையில் தான் கையோடு கொண்டு வந்த ஆவணங்களைப் பரப்பி வைத்துள்ளார். அவர்களின் புகாரை கேட்ட மாவட்ட ஆட்சியர் பவ்யா மிட்டல் ஒரு நிமிடம் ஆடிப்போனார்.

     

    தனது பிரச்சனை குறித்து ஊடகத்தினரிடம் பேசிய தேவதாஸ் ரத்தோர், எனக்கு ஆறு ஏக்கர் நிலம் உள்ளது, ஆனால் எனது பெரிய மாமா எனது நிலத்தின் ஒரு பகுதியை தனக்குச் சொந்தமானது என்று கூறி விற்றுவிட்டார். இதனால் எனது கிணறு தற்போது எனது நிலத்தில் இல்லை, எனவே விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்குத் தீர்வு காண மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

    இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளித்த துணை ஆட்சியர் அஜ்மீர் சிங், ஆவணப் பதிவேட்டில் நடந்து தவறால் இந்த இந்தப் பிரச்சனை எழுந்துள்ளதாகத் தெரிவித்தார்.

    கிணறு உண்மையில் மறைந்துவிடவில்லை, அது அவருக்கு சொந்தமான நிலத்திலேயே உள்ளது என்பதை அவருக்கு விலக்கினோம். குடிபோதையில் இருந்த எழுத்தர் ஆவணத்தில் தவறாக குறித்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டது என்று விளக்கம் அளித்தார்.

    மறைந்த தமிழ் இயக்குனர் மாரிமுத்து இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தில் தனது கிணற்றை காணவில்லை என வடிவேலு போலீசில் புகார் கொடுக்கும் காமெடி நிஜத்திலேயே நடந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

    • எஸ்.கே.சக்சேனா (55 வயது) கடந்த 5 வருடங்களாக தலைமை ஆசிரியராக இருந்து வந்தார்.
    • நெற்றியில் குண்டு பாய்ந்த சக்சேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தான் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரை சுட்டுக் கொலை செய்து அவரது ஸ்கூட்டரிலேயே 12 ஆம் வகுப்பு மாணவன் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் [Chhatarpur] மாவட்டத்தில் தாமோரா [Dhamora] அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமை ஆசிரியராக கடந்த 5 வருடங்களாக எஸ்.கே.சக்சேனா (55 வயது) இருந்து வந்தார்.

    இந்நிலையில் இன்று மதியம் 1:30 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்ற சக்சேனா மீது அதே பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளான். நெற்றியில் குண்டு பாய்ந்த சக்சேனா சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார்.

     

    சம்பவத்தின்பின் சக்சேனாவின் ஸ்கூட்டரிலேயே 12 ஆம் வகுப்பு மாணவனும் அவனுடன் வந்த கூட்டாளியும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் காவல் கண்காணிப்பாளர் அகம் ஜெயின் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தப்பியோடிவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் இந்தூர்.
    • பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம்

    இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் இந்தூர். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த நகரத்திலும் இந்தியாவில் உள்ள வேறெந்த நகரத்தையும் போலவே பிச்சைகாரர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

    இந்த பிச்சைக்காரர்கள் நகரத்தின் தூய்மையைக் கெடுப்பதாகக் கருதிய மாவட்ட நிர்வாகம் அவர்களை ஒழித்துக்கட்ட புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதாவது வரும் ஜனவரி 1ம் தேதி முதல், பிச்சைக்காரர்களுக்குப் பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு [எஃப்.ஐ.ஆர்] பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தூரில் பிச்சை எடுப்பதைத் தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

    பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த மாத இறுதி வரை தொடரும். ஜனவரி 1 முதல் யாராவது பிச்சை போடுவது, கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். மக்களுக்கு பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம் என்று இந்தூரில் வசிப்பவர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்

    பிச்சை எடுப்பதற்கு எதிரான பிரச்சார திட்ட அலுவலர் தினேஷ் மிஸ்ரா கூறுகையில், நாங்கள் இதுதொடர்பாக ஆராயும்போது சில பிச்சைக்காரர்கள் வீடு வைத்திருப்பதையும், மற்றவர்களின் குழந்தைகள் வங்கியில் வேலை செய்வதையும் அறிந்தோம்.

    ஒரு முறை பிச்சைக்காரர் ஒருவர் ரூ. 29,000 வைத்திருந்ததைப் பார்த்தோம். மற்றொரு பிச்சைக்காரர் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை அறிந்தோம்.

    இங்கு பிச்சை எடுப்பதற்காக ராஜஸ்தானைச் சேர்ந்த குழந்தைகளுடன் ஒரு கும்பல் வந்தது. அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து குழந்தைகளை மீட்கப்பட்டனர் என்று தெரிவித்தார். 

    • கடந்த 2013-ம் ஆண்டு பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளையில் ரூ.1.25 கோடி முறைகேடு நடந்துள்ளது
    • இந்த வழக்கில் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா உட்பட 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டு, மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் நகரத்தில் அமைந்துள்ள ஜோல்கேடா கிராமத்தில் உள்ள பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளையில் ரூ.1.25 கோடி முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா உட்பட 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட அபிஷேக் ரத்னத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 80 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தையும், அப்போது வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றியவருமான வினய் ஓஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வங்கியுடன் தொடர்புடைய இரண்டு தரகர்களான தன்ராஜ் பவார் மற்றும் லகான் ஹிங்வே ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட அபிஷேக் ரத்னம், வங்கி அதிகாரிகளின் கடவுச்சொற்களை (PASSWORD) பயன்படுத்திக் கடந்த 2013-ம் ஆண்டு மோசடி செய்துள்ளார். அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜாவும் அதே வங்கியில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இறுதியில் அவரது கழுத்தை அறுத்தார் என்று டிசிபி அபினய் விஸ்வகர்மா கூறினார்
    • இருவருக்கும் இடையில் முன் விரோதம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் குடிபோதையில் நடந்த சிறு தகராறு கொடூர கொலையில் முடிந்துள்ளது. 

    வினோத் ரத்தோர், 35, நேற்று [வெள்ளிக்கிழமை] மதியம் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, பிரமோத் சாய் யாதவ், 29, அவரை பின்னால் இருந்து வந்து தரையில் தள்ளினார்.

    வினோத் மீது பிரமோத் கத்தியால் தாக்கினார். வினோத் வலியால் துடித்தபோது, பிரமோத் தொடர்ந்து கத்தியால் குத்தினார், இறுதியில் அவரது கழுத்தை அறுத்தார். இதில் படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று டிசிபி அபினய் விஸ்வகர்மா கூறினார்

    கொலைக்குப் பிறகு பிரமோத், குல்கர்னி  தனது வீட்டிற்கு தப்பிச் சென்றார், அங்கு உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிரமோத் குற்றத்தின் போது தானும் வினோத்தும் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்தார்.

    சிறு வாக்குவாதம் ஏற்பட்டு, வினோத், பிரமோத்தை மடிக்கக்கூடிய கத்தியால் தாக்கியதில், அவரது விரலில் லேசான காயம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரமோத், கத்தியை பறித்து, வினோத்தை குத்தி கொலை செய்துள்ளார்.

    இருவருக்கும் இடையில் முன் விரோதம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மடிப்பு கத்தியை பறிமுதல் செய்து பிரமோத் மீது பிஎன்எஸ் பிரிவு 103 இன் கீழ் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    ×