search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்டலூர்"

    • விபத்து நடந்த நேரத்தில் ஆட்டே ரேஸ் நடந்து இருப்பது தெரியவந்தது.
    • வாலிபர்கள் கூச்சலிட்டபடி பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகி உள்ளது.

    பொன்னேரி:

    சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 60.5 கி.மீ. தூரத்துக்கு வெளி வட்டச் சாலை 6 வழி சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையானது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை செங்குன்றம், பொன்னேரி மீஞ்சூர், திருவொற்றியூர், பஞ்செட்டி ஆகியவற்றுடன் இணைக்கிறது.

    மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் கனரக வாகனங்கள் எவ்வித தடையின்றி செல்ல வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கு பெரிய அளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த சாலை அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்படும்.

    இந்த சாலைகளில் தடையை மீறி வாரவிடுமுறை நாட்களில் பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ் தொடர்ந்து நடந்து வருகின்றன.போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அவ்வப்போது ரேஸ் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் சோழவரம் அருகே அருமந்தை என்ற பகுதியில் அதிகாலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த மணி, ஷாம் சுந்தர் ஆகிய 2 பேர் பலியானார்கள்.

    மேலும் மோகனகிருஷ்ணன், மாரிமுத்து, ஜெபேயர் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அங்குள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது விபத்து நடந்த நேரத்தில் ஆட்டே ரேஸ் நடந்து இருப்பது தெரியவந்தது.

    மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் போட்டி போட்டு சீறி பாய்ந்து செல்வதும் அதன் பின்னாலேயே 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் கூச்சலிட்டபடி பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகி உள்ளது.

    ரேசின் போது ஆட்டோ ஒன்று கவிழ்ந்த போது அதனை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்தவர்களும் அதன் மீது மோதி விழுந்து உள்ளனர். இதில் 2 பேர் பலியாகி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையே ஆட்டோ ரேஸ் செல்வதை மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆட்டே ரேஸ் செல்வதை பார்க்கும் போதே அச்ச உணர்வு ஏற்படும் வகையில் சீறிப்பாய்கின்றன.

    வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சாகச ரேசை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மேம்பாலம் அமைய உள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு.
    • இறுதிகட்ட அனுமதி கிடைத்தவுடன் மேம்பாலப்பணிகள் நடைபெறும்

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்து உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன நெரிசலை தடுக்கும் வகையில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கோயம்பே ட்டில் செயல்பட்டு வந்த பஸ்நிலையமும் தற்போது கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் தற்போது தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கூடுதலாக வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

    இதனை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜி.எஸ்.டி. சாலையில் வண்டலூர் சந்திப்பில் இருந்து காட்டாங்கொளத்தூர் வரை முதல் கட்டமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான கட்டுமான பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    இந்த நிலையில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 6 வழிச்சாலையாக சுமார் 27 கி.மீட்டர் தூரத்திற்கு உயர் மட்டமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ரூ.3523 கோடி செலவில் இந்த மேம்பாலம் பெருங்களத்தூரில் இருந்து தொடங்கி பரனூர் சுங்கச்சாவடிக்கு முன்பு முடிக்க திட்டமிட்டு இருந்தனர். இதனால் அதிகப்படியான செலவு மற்றும் கூடுதல் சுங்ககட்டணம் வசூலிக்கும் நிலை இருந்தது.

    இதற்கிடையே தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயான 27 கி.மீட்டர் உயர்த்தப்பட்ட மேம்பால திட்டத்தை கைவிட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்து உள்ளது. இதற்கு பதிலாக ஜி.எஸ்.டி.சாலையில் முக்கியமான சாலை சந்திப்புகளில் கூடுதலாக மேம்பாலங்கள் கட்ட திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே முக்கிய சந்திப்புகளான வண்டலூர் மற்றும் பெருங்களத்தூரில் மேம்பாலங்கள் உள்ளன.

    இதைத்தொடர்ந்து வண்டலூர் அருகே கிளாம்பாக்கம், அய்யஞ்சேர சந்திப்பு முதல் பொத்தேரி வரை சுமார் 7 கி.மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் வாகனங்கள் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மற்றும் காட்டாங்கொளத்தூ ருக்கு செல்லாமல் பயணம் செய்யமுடியும். இதற்கான திட்டமதிப்பீடு மற்றும் மேம்பாலம் அமைய உள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இறுதிகட்ட அனுமதி கிடைத்தவுடன் மேம்பாலப்பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதேபோல் மறைமலைநகர், போர்டு தொழி ற்சாலை, சிங்கப்பெ ருமாள்கோவில், மற்றும் மகேந்திராசிட்டி பகுதியிலும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இது 6 வழிப்பா தையாக அமைய உள்ளன. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களுக்கு விடிவு பிறக்கும்.

    • பொதுமக்கள் வசதியாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கம்.
    • சிறப்பு பஸ்கள் ஜூன் முதல் வாரம் வரை இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலாலும், இரவு நேரத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் புழுக்கத்தாலும் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    மாலை நேரங்களில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க சென்னை நகர மக்கள் மெரினா, பெசன்ட்நகர், மாமல்லபுரம் கடற்கரைக்கு படையெடுத்து வருகின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வண்டலூர் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணி களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. தினந்தோறும் கடற்கரை மற்றும் மாமல்லபுரம், வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.

    இதையடுத்து இந்த வழித்தடங்களில் மாநகர பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பயணிகளின் வசதிக்காக மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், மாமல்லபுரம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா, கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர தினமும் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த சிறப்பு பஸ்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரம் வரை இயக்கப்பட உள்ளது.

    இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, `கோடை விடுமுறையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கோவளம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வது அதிகரித்து உள்ளது.

    எனவே இந்த வழித்தடங்களில் பொதுமக்கள் சென்று வர வசதியாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஜூன் மாதம் முதல் வாரம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மாநகர பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மண்பானையில் குடிநீர், மோர் ஆகியவை தடையின்றி வழங்கப்படுகிறது. பிராட்வே, தி.நகர், திருவான்மியூர், அடையாறு, திருவொற்றியூர் உள்ளிட்ட 70 இடங்களில் இவை வழங்கப்படுகிறது' என்றார்.

    • விஜயன் என்கிற ஆண் வங்கப்புலிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.
    • மருத்துவ குழுவினரால் வங்கப்புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பூங்காவில் உள்ள 21 வயது உடைய விஜயன் என்கிற ஆண் வங்கப்புலிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அது உணவு உண்பதை குறைத்து சோர்வாக காணப்படுகிறது.

    இதை த்தொடர்ந்து வங்கப்பு புலியின் உடல்நிலையை பூங்காவில் உள்ள மருத்துவ குழு வினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பூங்காவில் பராமரிக்கப் பட்டு வரும், விஜயன் என்கிற 21 வயது ஆண் வங்கப்புலியானது கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உணவு உட்கொள்ளு தலைக் குறைத்துக் கொண்டது. இதன் காரணமாக படிப்படியாக அதன் உடல்நிலை சரியில்லாமல் போனது. புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன் வங்கப்புலிக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. இருப்பினும் வயிறு இறக்கம் ஏற்பட்டு சோர்வாக காணப்படுகிறது. மேலும் பூங்கா மருத்துவ குழுவினரால் வங்கப்புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கனமழை மற்றும் சூறைக்காற்றால் பூங்காவில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.
    • மிச்சாங் புயல் காற்றின் தாக்கத்தால் பூங்காவில் உள்ள சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக மாறி உள்ளது.

    புயலின் தாக்குதலுக்கு வண்டலூர் பூங்காவும் தப்ப வில்லை. கனமழை மற்றும் சூறைக்காற்றால் பூங்காவில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. சுமார் 30 மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. மேலும் 5 இடங்களில் பூங்காவின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்து விட்டன. இதைத்தொடர்ந்து பூங்காவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இன்று வண்டலூர் பூங்கா மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சேதம் அடைந்த சுற்றுச்சுவர் சீரமைப்பு மற்றும் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    புயல் மற்றும் கனமழையின் போது பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் அதன் இருப்பிடங்களில் பாதுகாப்பாக அடைக்கப்பட்டு அதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மிச்சாங் புயல் காற்றின் தாக்கத்தால் பூங்காவில் உள்ள சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சுமார் 30 மரங்கள் விழுந்து உள்ளன. கனமழையின் போது பூங்கா ஊழியர்களால் சிலர் பணிக்கு வர முடியவில்லை என்ற போதிலும் பூங்காவில் உள்ள ஊழியர்களைப் பயன்படுத்தி விலங்குகளுக்கு உணவளிப்பது மற்றும் விலங்குகளின் அடைப்புகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. எந்த விலங்குகளும் பாதிக்கப்படவில்லை மற்றும் அனைத்து அடைப்புகளும் அப்படியே பாதுகாக்கப்பட்டன.

    வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையின் இருபுறமும் உள்ள சுவர்களில் 4 இடங்களில் 50 மீட்டர் நீளத்துக்கு சேதமடைந்து உள்ளன. பூங்காவிற்குள் அருகில் உள்ள ஓட்டேரி ஏரியும் நிரம்பி தண்ணீர் வந்ததால் 30 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் சேதமடைந்தன. மோட்டார் பம்புகள் மூலம் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முறிந்துவிழுந்த மரங்களை அகற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்காவுக்கும் மாற்றப்பட்டன.
    • 23 முதலைகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்கா, மோயார் ஆறு, முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய இடங்களுக்கு மாற்றப்படுகின்றன.

    சென்னை:

    கோவையில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்தது. இதையடுத்து அப்போது முதல் அங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில் கோவை வ.உ.சி. பூங்கா மூடப்பட்டது. இதையடுத்து அங்குள்ள பறவைகள், விலங்குகள், ஊர்வன போன்ற பிராணிகள் மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகள், பாம்புகள், ஆமைகள் போன்றவை சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்காவுக்கும் மாற்றப்பட்டன.

    இடமாற்றம் செய்யப்பட்ட பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவற்றில் 51 ரோஸ் வளையம் கொண்ட கிளிகள், 27 அலெக்சாண்ரிட்ன் கிளிகள், 18 சிவப்பு மார்பக கிளிகள், 1 சரஸ் கொக்கு, 8 பாம்புகள், 3 இந்திய நட்சத்திர ஆமைகள் உள்ளிட்டவை அடங்கும். மேலும் 22 பிளாக் கைட்ஸ், 88 நைட்ஸ் ஹெரோன்ஸ், 30 போனெட் மக்காக்ஸ், 11 இந்திய மலைப்பாம்புகள், 26 புள்ளிமான்கள், 25 சாம்பார் மான்கள், 10 கோப்ரா பாம்புகள் ஆகியவை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு அனுப்பப்பட உள்ளன.

    23 முதலைகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்கா, மோயார் ஆறு, முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவை உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகள், விலங்குகள் மற்றும் பாம்புகள் வேறு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதற்காக கூண்டுகள் அமைத்து மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பறவைகள் மற்றும் பாம்புகளின் மன அழுத்தத்தை குறைக்க அவற்றை ஏற்றி வந்த லாரிகள் ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கும் ஒருமுறை நிறுத்தப்பட்டு சிறிது நேரம் கழித்தே மீண்டும் இயக்கப்பட்டன' என்றார்.

    • கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன.
    • பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.

    கூடுவாஞ்சேரி:

    விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், மைசூரில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு கரடிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    ஆண் கரடியின் பெயர் அப்பு ஆகும். இதற்கு 2 வயது ஆகிறது. பெண்கரடியின் பெயர் புஷ்பா. இதற்கு ஒன்றரை வயது ஆகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன. பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் மைசூரில் இருந்து 2 கரடிகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. பகல் நேர பயணத்தை தவிர்க்க இரவு நேரத்தில் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. பயணத்தின் போது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாகனம் நிறுத்தப்பட்டது. அதற்கு பழங்கள், தேன் வழங்கப்பட்டன. இது கரடிகளின் மன அழுத்தத்தை தவிர்க்க உதவியது. தற்போது இந்த கரடிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. விரைவில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விடப்படும். இவற்றிற்கு காலை 11 மணிக்கு பழங்கள், காய்கறிகள், மதியம் 1.30 மணிக்கு ரொட்டி, வேகவைத்த முட்டை, மாலையில் கஞ்சியும் பாலும் வழங்கப்படுகிறது என்றார்.

    இதில் ஒரு கரடியின் வயது ஒன்றரை மற்றொரு கரடியின் வயது இரண்டு. இவ்விரண்டு கரடிகளையும் 21 நாள் தனி கூண்டில் வைத்து பராமரித்து பின்னர் மற்ற கரடிகளுடன் பழகிய பிறகு பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • தினமும் காலை அனைத்து பறவைகளின் மீதும், கூடுகளின் மீதும் விலங்கினங்கள் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஊழியர்கள் உடலை குளிரச் செய்கின்றனர்.
    • பொதுமக்களின் வசதிக்காக ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கூடுதலாக செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்று கிண்டி சிறுவர் பூங்கா.

    சுமார் 22 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் குரங்கு, முதலை, நரி, ஈமு கோழி, தீக்கோழி, ஆமை, மான், பாம்பு என 500-க்கும் மேற்பட்ட வன விலங்குகள்,மயில், கொக்கு, நாரை, கிளிகள் என 300- க்கும் மேற்பட்ட பறவைகளும் உள்ளன.

    தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களும், விடுமுறை நாட்களில் 5 ஆயிரம் பார்வையாளர்களும் வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் பொதுமக்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

    சென்னையில் தற்போது வெயிலின் அகோரம் அதிகரித்து வருகிறது. இந்த வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பறவைகளை பாதுகாப்பதற்கு பல்வேறு நட வடிக்கைகளை பூங்காவில் உள்ள வனத்துறையினர் எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக வெயிலினால் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உடல் அலர்ஜி ஏற்படாத வண்ணம் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

    தினமும் காலை அனைத்து பறவைகளின் மீதும், கூடுகளின் மீதும் விலங்கினங்கள் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஊழியர்கள் உடலை குளிரச் செய்கின்றனர்.

    இதுமட்டுமல்லாமல் வெயில் காலத்துக்கு ஏற்ற தர்பூசணி, திராட்சை, வாழைப்பழம், சாத்துக்குடி உள்ளிட்ட பழங்கள் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கூடுதலாக செய்யப்பட்டுள்ளது.

    பூங்காவில் தீ பரவாமல் இருக்க காய்ந்த மரங்களின் செடிகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றன. சில விலங்குகள் கோடை வெப்பத்தை தாங்கும் வகையில் சிறப்பு கூண்டுகளில் அடைக்கப்பட்டு வருகிறது.

    வண்டலூர் விலங்கியல் பூங்காவிலும் வெயில் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க ஷவர் மூலம் யானைகளுக்கு குளியலும், மலைப்பாம்புகளின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், விலங்கினங்களின் கூண்டுகளின் மீது தண்ணீரை தெளிப்பதுடன் நீர்சத்து உள்ள பழங்கள் உணவாக வழங்கப்படுகின்றன.

    ×