என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி தீ விபத்து"

    • தீ விபத்தில் லாரியில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதமானது.
    • தீ விபத்தால் நள்ளிரவில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பவானி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் சதீஸ். இவருக்கு சொந்தமான லாரியை சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஓட்டி வருகிறார்.

    இவர் நாக்பூரில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு வந்தார். நேற்று நள்ளிரவு 12.50 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு-சத்தி மெயின் ரோட்டில் ஊத்துக்காடு என்ற பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென லாரி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் வெங்கடேஷ் லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி தப்பினார். அந்த நேரத்தில் தீ மளமளவென பிடித்து லாரி முழுவதும் எரிய தொடங்கியது.

    பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கபப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் புகழேந்தி தலைமையில் பவானி மற்றும் ஈரோட்டில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் லாரியில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தபோது லாரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இந்த தீ விபத்தால் நள்ளிரவில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நடுரோட்டில் லாரி தீப்பிடித்து ஏரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள சில்லாங்கட்டு புதூர் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான லாரி சென்று கொண்டிருந்தது.

    லாரி பழுது காரணமாக ஈரோட்டில் உள்ள பட்டறையில் பழுது நீக்கி விட்டு ஓட்டுநர் வேலுச்சாமி (42 ) என்பவர் லாரியை ஈரோட்டில் இருந்து அரச்சலூர் அருகே உள்ள வடபழனி செட்டிக்கு கொண்டு சென்ற போது, சில்லாங்கட்டபுதூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென லாரியிலிருந்து புகை வெளியேறியது. இதனால் ஓட்டுநர் வேலுச்சாமி லாரியை அப்படியே நிறுத்தி இறங்கிப் பார்த்தார். சற்று நேரத்தில் தீ மளமளவென பிடித்து லாரி முழுவதும் எரிய தொடங்கியது. நடுரோட்டில் லாரி தீப்பிடித்து ஏரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து சென்னிமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் லாரி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. நல்ல வாய்ப்பாக டிரைவர் லாரிய விட்டு இறங்கியதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    • பொதுமக்கள் உடனடியாக போலீசார் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    ராணிப்பேட்டை:

    மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் பகுதியில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்வதற்காக விலை உயர்ந்த 8 சொகுசு கார்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று இன்று காலை வந்தது.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அம்மணதாங்கல் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் டிரைவர் சோனு யாதவ் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றுள்ளார்.

    அப்போது கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் திடீரென தீ பிடித்து எஞ்சின் முழுவதும் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது.

    இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக போலீசார் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் ராணிப்பேட்டை உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டெய்னர் லாரியின் முன்பக்கம் எரிந்த தீ மேலும் பரவி விடாமல் அணைத்தனர்.

    கண்டெய்னர் லாரியில் முன்பக்கத்தில் எரிந்த தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பின்பக்கம் இருந்த பல லட்சம் மதிப்பு உள்ள சொகுசு கார்கள் எந்தவித சேதமும் இன்றி தப்பின.

    கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. பெட்ரோல் பங்க் அருகில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உடனடியாக தீயணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • லாரியில் ஏற்றி வந்த நிலக்கரியும் தீப்பிடிக்க அதில் இருந்து அதிக புகை வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    காரைக்காலில் இருந்து 35 டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று பெரம்பலூருக்கு புறப்பட்டது. லாரியை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓதவந்தான் குடிகாட்டை சேர்ந்த அந்தோணி ஆனந்தராஜ் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார்.

    வரும் வழியில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி சுங்கச்சாவடி அருகில் லாரி டயர் பஞ்சர் ஆனது. இதனை சரி செய்து விட்டு அந்தோணி ஆனந்தராஜ் லாரியை தஞ்சாவூர் நோக்கி ஓட்டி வந்தார். நள்ளிரவில் தஞ்சை மாரியம்மன் கோவில் எதிரில் வந்த போது சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு அருகில் டிரைவர் அந்தோணி ஆனந்தராஜ் பிரேக் அடித்துள்ளார். அப்பொழுது திடீரென லாரி டயர்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    புகை வருவதை கண்டவுடன் லாரிலிருந்து அந்தோணி ஆனந்தராஜ் உடனடியாக இறங்கி குதித்தார். 10 டயர்களும், டீசல் டாங்கும் பற்றி எரிய ஆரம்பித்தது. லாரியில் ஏற்றி வந்த நிலக்கரியும் தீப்பிடிக்க அதில் இருந்து அதிக புகை வந்தது. அந்த பகுதியே தீப்பிளம்பாகவும், புகை மூட்டமாகவும் காட்சியளித்தது.

    இது பற்றி தகவல் அறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தாலும்பாதி அளவு நிலக்கரி எரிந்து சாம்பலானது. லாரியின் பெரும்பகுதியும் சேதமானது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×