என் மலர்
நீங்கள் தேடியது "பட்டாசு வெடித்தது"
- சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
- சிறுவனுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
தருமபுரி:
தருமபுரி அருகே நடுப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் ரித்திக் (வயது15). இந்த சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
நேற்று வீட்டின் அருகே வெடிக்காமல் கிடந்த ஒரு பட்டாசை எடுத்துள்ளார். அதனை தீ வைத்து பற்ற வைத்துள்ளார். அப்போது சரியாக வெடிக்கவில்லை என்று தவறாக நினைத்து பட்டாசை சிறுவன் கையில் எடுத்தபோது திடீரென்று வெடித்தது.
இதில் சிறுவனுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைக்கில் இருந்த பட்டாசு மூட்டை கீழே விழுந்தது.
- வெடியின் தீப்பொறி மற்ற வெடிகளுக்கு பரவியதால் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது.
ஆந்திர மாநிலம், ஏலூரை சேர்ந்தவர் சுதாகர். தீபாவளி பண்டிகையொட்டி தனது நண்பர் ஒருவரை பைக்கில் அழைத்துக் கொண்டு மார்க்கெட்டிற்கு சென்றார். அங்குள்ள கடையில் வெங்காய வெடி உட்பட பட்டாசுகளை வாங்கினார்.
பின்னர் தனது நண்பருடன் பட்டாசு மூட்டையை எடுத்துக்கொண்டு மீண்டும் வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அங்குள்ள சாலையில் இருந்த பள்ளத்தில் பைக் ஏறி இறங்கியது.
பைக்கில் இருந்த பட்டாசு மூட்டை கீழே விழுந்தது. அதில் இருந்த வெங்காய வெடிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்து சிதறியது. வெங்காய வெடியின் தீப்பொறி மற்ற வெடிகளுக்கு பரவியதால் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது. அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
இந்த விபத்தில் சுதாகர் உடல் சிதறி இறந்தார். அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக ஆங்காங்கே சிதறியது. விபத்து ஏற்பட்ட இடத்தில் பேசிக்கொண்டு இருந்த தபேலு சாய், சிவாரா ஷஷி, சீனிவாச ராவ், காதர், சுரேஷ், சதீஷ் என 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் இருக்க ஏலூர் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் சுதாகர் பைக் ஓட்டி செல்வதும், விபத்தில் சிக்கி வெடித்து சிதறும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தில் பட்டாசுகள் வெடித்துள்ளனர்.
- பட்டாசுகள் வெடித்து, மைதானத்திற்குள் போட்டியைப் பார்க்க மக்கள் அமர்ந்திருந்த பகுதியில் சிதறி வெடித்தது.
கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று முன்தினம் பட்டாசுகள் வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மலப்புரத்தில் உள்ள அரிக்கோடு அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் யுனைடெட் எப்சி நெல்லிக்குத் மற்றும் கேஎம்ஜி மாவூர் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நடந்துள்ளது.
கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தில் பட்டாசுகள் வெடித்துள்ளனர். பட்டாசுகள் வெடித்து பார்வையாளர்கள் இருந்த பகுதியில் சிதறின. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்,
கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு பட்டாசுகள் வெடித்ததால் இந்த சம்பவம் நடந்தது.
பட்டாசுகள் வெடித்து, மைதானத்திற்குள் போட்டியைப் பார்க்க மக்கள் அமர்ந்திருந்த பகுதியில் சிதறி வெடித்தது. இதில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.