search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் நிதி"

    • இன்று முதல் 2 நாட்கள் டெல்லியிலேயே முகாமிட்டு சந்திப்புகளை நடத்த முடிவு.
    • மாநிலத்திற்கு தேவையான நிதி குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    பாராளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை பெறாத நிலையில் பா.ஜ.க. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

    இதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் இருவரும் எதையும் பெற்றுக் கொள்ளும் சக்தி வாய்ந்த தலைவர்களாக மாறி உள்ளனர்.

    சந்திரபாபு நாயுடு கட்சி எம்பிக்கள் 3 பேருக்கு மத்திய மந்திரி பதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்றார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

    இதனை தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா விவசாய மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் சவுகான், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி மனோகர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

    இதற்காக அவர் இன்று முதல் 2 நாட்கள் டெல்லியிலேயே முகாமிட்டு சந்திப்புகளை நடத்த முடிவு செய்துள்ளார்.

    ஆந்திர மாநிலத்தில் நிலுவையில் உள்ள போலவரம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்கள், அமராவதி தலைநகர் திட்டம், மாநில நெடுஞ்சாலைகள், சாலைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்புகளின் நிலை குறித்து டெல்லி செல்வதற்கு முன்பாக அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை ஒன்றை சந்திரபாபு நாயுடு தயார் செய்தார்.

    மேலும் ஆந்திர மாநிலத்திற்கு தேவையான நிதி குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த நீண்ட பட்டியலுடன் டெல்லியில் சந்திரபாபு நாயுடு முகாமிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி மற்றும் மத்திய மத்திரிகளுடன் சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து, ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் நிதி சலுகைகள் மற்றும் வரி சலுகைகளை சந்திரபாபு நாயுடு கேட்க முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

    அரசியல் அனுபவம் வாய்ந்த சந்திரபாபு நாயுடு தற்போது பா.ஜ.க கூட்டணியில் சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை அவர் ஒருபோதும் நழுவ விட மாட்டார். ஆந்திராவிற்கான அனைத்து திட்டங்களையும் கேட்டு பெறுவதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

    மேலும் பல தொழில் நிறுவனங்களையும் ஆந்திராவுக்கு கொண்டு செல்வதில் கில்லாடியாக செயல்படுவார். அவருடைய கோரிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். சந்திரபாபு நாயுடு முகாமிட்டிருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்துக்கு ரூ.4,114 கோடி கூடுதல் நிதி.
    • ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு திட்டத்தின் செலவின தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்துக்கு ரூ.4,114 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், குழந்தைகள் மையங்களிலுள்ள சத்துணவுத் திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி, தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ. 1.33 எனவும், உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் ரூ. 0.46 எனவும், எரிபொருளுக்கான செலவினம் ரூ.0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • மீன்கள் மீன்பிடி த்தளத்திற்கு கொண்டு வர முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
    • சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு சட்ட பேரவையின் உறுதிமொழிக் குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மோகன், ராமலிங்கம், வில்வநாதன், சக்கரபாணி, அருள் ஆகியோர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். இக்குழுவினர் கடலூர் எம்.எல்.ஏ., அய்யப்பனுடன் சென்று கடலூர் துறைமு கத்தில் நடைபெறும், தூர்வாரும் பணி, பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அய்யப்பன் எம்.எல்.ஏ., கூறுகையில், கடந்த 2006 - 2007 ஆம் ஆண்டு வைத்த கோரிக்கை மற்றும் தற்போது நடைபெற்ற சட்டமன்றத்தில் துறைமுகம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியின் அடிப்படையில் இக்குழு துறைமுகத்தை ஆய்வு செய்து உள்ளனர். துறைமுகத்தில் நடைபெற்ற பணியில் மோசடி செய்திருந்தால் அதற்குரிய தண்டனை வாங்கி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும், துறைமுக வளர்ச்சிக்காக கூடுதல் நிதியை குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. மற்றும் உறுப்பினர்கள் பெற்று தருவார்கள் என பேசினார்.

    இதனை தொடர்ந்து மீனவர் வாழ்வுரிமை இயக்க சார்பில் ஆய்வுக்குழுவிடனம் மனு அளித்தனர். அந்த மனுவில், கடலூர் துறைமுகம் 135 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு தூர்வாரப்பட்டு உள்ளது. ஆனால் துறைமுகத்தில் ஒரு பகுதியில் ஆழப்படுத்தியும், மற்றொரு பகுதியில் ஆழப்படுத்தாத நிலை உள்ளது. இதனால் கடலில் பிடிக்க ப்பட்ட மீன்கள் மீன்பிடி த்தளத்திற்கு கொண்டு வர முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆய்வுக்குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ கூறுகையில், கடலூர் துறைமுகத்தை ஆய்வு செய்வதற்கு முக்கிய காரணம் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய அய்யப்பன் எம்.எல்.ஏ.தான். கடலூர் துறைமுகத்தில் சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து கடலூர் கலெக்டர் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி. அதிகாரிகள் குழுவை அமைத்து உரிய ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏதுவாக வெயிலுகந்தம்மன் கோவிலுக்கு கூடுதல் நிலம் ஒதுக்கி தரவேண்டும்.
    • கள்ளிக்குடி வட்டாட்சியரிடடம் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள அரசப்பட்டி, வலையன் குளம், வீர பெருமாள்புரம் ஆகிய கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட வெயி லுகந்த அம்மன் கோவில் அரச பட்டியில் அமைந்து ள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் 3 கிராமங் களை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் ஒன்று சேர்ந்து சாமி கும்பிட்டு வருகிறார்கள்.

    தற்போது கோவில் இருக்கும் இடத்தை சுற்றிலும் புறம்போக்கு பகுதியாக உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 70 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. எனவே 3 கிரா மங்களை சேர்ந்த பொது மக்கள் ரூ.2 ஆயிரம் வரி கொடுத்து கோவில் கும்பா பிஷேகம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் கோவில் பெய ரில் நிலம் இல்லாததால் சுற்றுச்சுவர் எழுப்புவ தற்கும், கும்பாபி ஷேகம் செய்ய முடிய வில்லை. இந்து அறநிலை யத்துறை மற்றும் வரு வாய்த்துறை அதிகாரி களிடம் கோவில் பெயரில் நிலத்தை மாற்றிக் கொடு ப்பதற்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த ந டவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசு நிதி உதவி மூலம் ரூ.7 லட்சம் பெற்று கோவில் புனர மைப்பு செய்யப்பட்டது.

    தற்போது கோவில் பெயரில் குறைந்தது 50 சென்ட் நிலம் பதிவு செய்து தர வேண்டும் என கள்ளிக்குடி வட்டாட்சி யரிடடம் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். சாமி கும்பிடுவதற்காக நிலங்கள் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளிக் குடி வட்டாட்சியர் தெரிவித்தார்.

    ×