என் மலர்
நீங்கள் தேடியது "பக்தர் மரணம்"
- செல்வமணியை உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
- செல்வமணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 11 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்றுவிட்டு பழனிக்கு சென்றனர்.
அப்போது, செல்வமணி என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது திடீரென மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார்.
பிறகு, செல்வமணியை உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், செல்வமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பக்தர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
- ராமநாதபுரம் கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும்.
- பக்தர் இறந்ததால் கோவிலில் சிறிது நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும், தென்னகத்து காசி என்றழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அமாவாசை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ராமநாதபுரம் கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். பிரசித்தி பெற்ற இந்த பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதில் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக வடமாநிலத்தவர்கள் இந்த பூஜையில் அதிகளவில் பங்கேற்பார்கள்.
அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குழுவினர் இன்று காலை ஸ்படிக லிங்க பூஜையில் பங்கேற்க கோவிலுக்கு வந்தனர். இதில் ராஜ்தாஸ் (வயது 59) என்பவரும் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு மணிநேரத்துக்கு மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது.
இந்த நிலையில் வரிசையில் நின்றிருந்த ராஜ்தாசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அங்கேயே ஓரத்தில் படுக்க வைத்தனர். ஆனால் அங்கு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேல் அவரிடம் எந்த அசைவும் இல்லை.
இதுகுறித்து பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஊழியர்கள் ராஜ்தாசை கோவில் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ராஜ்தாஸ் இறந்து 20 நிமிடங்களுக்கு மேலாகி விட்டதாக தெரிவித்தனர். ராஜ்தாஸ் வரிசயைில் நின்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராமேசுவரம் கோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிலில் அதிகாலையில் நடந்த ஸ்படிக லிங்க பூஜையில் பக்தர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பக்தர் இறந்ததால் கோவிலில் சிறிது நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் என்பவர் திருச்செந்தூரில் வரிசையில் நின்றிருந்தபோது மூச்சுத்திணறி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாராபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
- கோவிலுக்கு வந்த பக்தர் உயிரிழந்ததை தொடர்ந்து உச்சிகால பூஜைக்கு முன்பாக நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்து மீண்டும் நடை திறக்கப்பட்டது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். ரோப்கார், வின்ச் போன்றவற்றில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் நடந்து சென்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த சேகர்(52) என்பவர் தனது குடும்பத்தினருடன் பழனி கோவில் படிப்பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர்.
ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டது தெரியவரவே அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை கீழே கொண்டுவந்து அடிவாரம் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது உயிரிழந்தது உறுதியானது. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகம் அடைந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாராபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதால் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
தற்போது கடும் கோடைவெயில் அடித்துவரும் நிலையில் பகல் பொழுதில் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு செல்பவர்கள் மயங்கி விழும் நிலை ஏற்படுகிறது. இதனை போக்க பல்வேறு இடங்களில் தண்ணீர்பந்தல் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலுக்கு வந்த பக்தர் உயிரிழந்ததை தொடர்ந்து உச்சிகால பூஜைக்கு முன்பாக நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்து மீண்டும் நடை திறக்கப்பட்டது.
- புதுமண ஜோடி இருவரும் குடும்பத்தினருடன் ஒரு காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர்.
- சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர் செல்வி (வயது 28). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தூர் செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா (34) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் புதுமண ஜோடி இருவரும் குடும்பத்தினருடன் ஒரு காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர். இந்த நிலையில் மேலூர் ரோடு பகுதியில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்தி அனைவரும் இறங்கும் போது திடீரென்று ராஜா மயங்கிய நிலையில் காணப்பட்டார். இதையடுத்து அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கதிர்காபாளையத்தை சேர்ந்தவர் ரஜினி முருகேசன் (வயது 40). இவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி கும்பிட வந்தார். பின்னர் அவர் திடீரென்று காணாமல் போய் விட்டார்.
இதுகுறித்து அவரது உறவினர் தண்டபாணி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஜினி முருகேசனை தேடி வருகின்றனர்.