என் மலர்
நீங்கள் தேடியது "கத்திக்குத்து தாக்குதல்"
- நெதர்லாந்தில் மர்ம நபர் கண்ணில் பட்டவர்களை கத்தியால் குத்தினார்.
- தகவலறிந்து வந்த போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.
தி ஹோக்:
நெதர்லாந்தின் மத்திய ஆம்ஸ்டர்டாமில் உள்ள டாம்ஸ்கொயர் என்ற இடம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி.
இந்நிலையில், இங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணில் பட்டவர்களை திடீரென சரமாரி குத்தினார். இதில் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலர் கத்திக்குத்தில் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் டாம்ஸ்கொயர் உள்ளிட்ட சில பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். மேலும், போலீசார் அவனை மடக்கிப் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
- மகளும், மனைவியும் மாடியில் தூங்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.
- அதற்கு அவர் வீட்டின் அறையில்தான் தூங்க வேண்டும் என அனுமதி மறுத்துள்ளார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் சூரத்தில் வசித்து வருபவர் ராமானுஜ சாஹு. இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு இவரின் மகளும், மனைவியும் மாடியில் தூங்க விரும்புவதாகத் தெரிவித்தனர். அதற்கு அவர், வீட்டின் அறையில்தான் தூங்க வேண்டும் என அனுமதி மறுத்துள்ளார். இதனால் 3 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமானுஜ சாஹு, வீட்டின் சமையலறையிலிருந்த கத்தியை எடுத்துவந்து மகளைக் குத்தியிருக்கிறார்.
தடுக்க வந்த குடும்பத்தினரையும் கத்தியால் தாக்கியிருக்கிறார். இதில் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் கத்திக்காயம் ஏற்பட்டிருக்கிறது. மகளையும், மனைவியையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.
ஆத்திரத்தில் மகளை மட்டும் ஏறத்தாழ 25 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்திருக்கிறார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றன.
இதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த தந்தை மகளை 25 முறை கத்தியால் குத்திக் கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- காயமடைந்த மாணவியை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
- கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவி ஒருவர், கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, தன்னை காதலிக்க வேண்டும் என்று நவீன் என்ற இளைஞர் அவரை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் மாணவி அதனை ஏற்க மறுத்தார்.
இந்நிலையில் நவீன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாணவியை அருகிலிருந்தவர்கள்மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது.
- இந்த தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பீஜிங்:
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் வுக்ஸி நகரில் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் 21 வயது வாலிபர் கண்ணில் பட்டவர்கள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்.
இந்த கோர தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்றும், மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 12-ம் தேதி சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த மக்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
- கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பட்னாவிஸ் தெரிவித்தார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தின் பாந்த்ராவில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை இவரது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், அங்கிருந்த பணிப்பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த சைஃப் அலிகானை அந்த நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.
படுகாயம் அடைந்த சைஃப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இதற்கிடையே, குற்றவாளியின் சிசிடிவி புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர்.
சைஃப் அலிகான் மீதான கத்திக்குத்து தாக்குதலுக்கு பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவது பற்றி மாநில அரசை கடுமையாக சாடினர்.
இந்நிலையில், கத்திக்குத்து சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். மும்பையை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது சரியல்ல என தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
மும்பை நாட்டின் மிகவும் பாதுகாப்பான மெகா நகரம். இந்த சம்பவம் தீவிரமானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது.
ஆனால் நகரத்தை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது தவறு. இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் போலீசார் வழங்கி உள்ளனர்.
இது என்ன வகையான தாக்குதல், உண்மையில் இதற்குப் பின்னால் என்ன இருக்கிறது, தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்ன என்பது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது.
- இந்த தாக்குதலில் குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர்.
பெர்லின்:
ஜெர்மனியின் பவாரியா மாநிலத்தில் அமைந்துள்ள அஷாபன்பர்க் நகரில் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது. இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் ஒரு குழந்தை, ஒரு பெரியவர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியானது.
இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 11.45 மணிக்கு நடைபெற்றது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் நடந்த இடத்தில் ஒருவரை கைதுசெய்த போலீசார், வேறு யாருக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தினர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதலில் குழந்தை உள்பட 2 பேர் பலியானது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தானேவில் வைத்து வங்கதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.
- ஷரிபுல் இரத்த மாதிரிகள் மற்றும் உடைகள் தடயவியல் ஆய்வகத்துக்கு [FSI] அனுப்பப்பட்டுள்ளன
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், ஜனவரி 16 அன்று மும்பை பாந்ராவில் உள்ள தனது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கத்தி குத்தில் காயமடைந்த சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சைஃப் அலி கான் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் என்று சந்தேகத்தின் பேரில் ஜனவரி 19 அன்று, தானேவில் வைத்து வங்கதேசத்தைச் சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது என்ற 30 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

ஆனால் அவரது கை ரேகை, சைஃப் அலி கான் வீட்டில் இருந்து பெறப்பட்ட 19 கைரேகை மாதிரிகளுடன் பொருந்தவில்லை என்று தகவல் வெளியானது. ஆனால் ஊடங்களில் வெளியான இந்த தகவலை மும்பை போலீஸ் மறுத்துள்ளது. கைரேகை ஒத்துபோகின்றனவனா என்பது குறித்த அறிக்கை இன்னும் ஆய்வகத்தில் இருந்து வரவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கைதுசெய்யப்பட்ட ஷரிபுல் உடைய காவலை ஜனவரி 29 ஆம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
ஷரிபுல் விசாரணைக் குழுவுடன் ஒத்துழைக்கவில்லை என்றும், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அவர் எங்கிருந்து வாங்கினார் என்பதை இன்னும் கூறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஷரிபுல் இரத்த மாதிரிகள் மற்றும் உடைகள் தடயவியல் ஆய்வகத்துக்கு [FSI] அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என மும்பை போலீசார் சந்தேகிக்கின்றனர்.