என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசி கடை"

    • இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லூர் அடுத்த அமராவதிபாளையம் கருமாங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 39). இவர் அப்பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் .பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 60 ஆயிரம் பணம், மற்றும் செல்போன் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் நல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வரும் திண்டுக்கல், வேடச்சந்தூரை சேர்ந்த குமார் (20) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.
    • ரொக்கம் ரூ.49 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் வேணுகோபால்( வயது 37). இவர் பல்லடம் - பூமலூர் ரோட்டில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு, வீடு சென்ற அவர் வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் ஷட்டரைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த கல்லாப்பெட்டி பூட்டை உடைத்து அதில் வைத்திருந்த ரொக்கம் ரூ.49 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    இந்த திருட்டு குறித்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • சண்முகத்தின் உறவினர் கடைசியில் இருந்த போது வாடிக்கையாளர் ஒருவர் வந்து அரிசி கேட்டுள்ளார்.
    • சிறிது நேரத்திற்கு பிறகு கடைக்கு வந்த சண்முகம் அந்த அரிசி மூட்டை இல்லாததை கண்டு திடுக்கிட்டுட்டார்.

    'கொசுவுக்கு பயந்து வீட்டைகொளுத்துன' பழமொழியை நாம் கேள்விபட்டு இருக்கோம். அதுபோல திருடனுக்கு பயந்து அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சத்தை கடை உரிமையாளர் மறைத்து வைத்திருந்தார். இதனை அறியாத அவரது உறவினர் அந்த அரிசி மூட்டையை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சண்முகா அரிசி மண்டி  உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் சண்முகம். இவர் கடையில் வசூலான ரூ.15 லட்சம் பணத்தை திருட்டுக்கு பயந்து அரிசி மூட்டைக்குள் ரூ.10 லட்சத்தை ஒரு பையிலும், ரூ.5 லட்சத்தை மற்றொரு பையிலும் போட்டு மறைத்து வைத்து மற்ற அரிசி மூட்டைகளுடன் சேர்த்து வைத்துள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலையில் சண்முகத்தின் உறவினர் கடைசியில் இருந்த போது வாடிக்கையாளர் ஒருவர் வந்து அரிசி கேட்டுள்ளார். அப்போது அவர் ரூ.15 லட்சம் மறைத்து வைத்திருந்த அரிசி மூட்டையை எடுத்து விற்பனை செய்துள்ளார்.

    சிறிது நேரத்திற்கு பிறகு கடைக்கு வந்த சண்முகம் அந்த அரிசி மூட்டை இல்லாததை கண்டு திடுக்கிட்டுட்டார். இதுகுறித்து விசாரித்த போதுதான், விபரம் தெரியவந்தது. உடனே வாடிக்கையாளரின் முகவரி தேடி சென்று விசாரித்த போது அந்த மூட்டைக்குள் ரூ.10 லட்சம் தான் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் உரிய முறையில் விசாரித்து ரூ.5 லட்சத்தை மீட்டு தர வேண்டும் என்று சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×