search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    திருடனுக்கு பயந்து மறைத்து வைக்கப்பட்ட ரூ.15 லட்சம் - சம்பவம் பண்ணிய சொந்தக்காரர்
    X

    திருடனுக்கு பயந்து மறைத்து வைக்கப்பட்ட ரூ.15 லட்சம் - சம்பவம் பண்ணிய சொந்தக்காரர்

    • சண்முகத்தின் உறவினர் கடைசியில் இருந்த போது வாடிக்கையாளர் ஒருவர் வந்து அரிசி கேட்டுள்ளார்.
    • சிறிது நேரத்திற்கு பிறகு கடைக்கு வந்த சண்முகம் அந்த அரிசி மூட்டை இல்லாததை கண்டு திடுக்கிட்டுட்டார்.

    'கொசுவுக்கு பயந்து வீட்டைகொளுத்துன' பழமொழியை நாம் கேள்விபட்டு இருக்கோம். அதுபோல திருடனுக்கு பயந்து அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சத்தை கடை உரிமையாளர் மறைத்து வைத்திருந்தார். இதனை அறியாத அவரது உறவினர் அந்த அரிசி மூட்டையை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சண்முகா அரிசி மண்டி உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் சண்முகம். இவர் கடையில் வசூலான ரூ.15 லட்சம் பணத்தை திருட்டுக்கு பயந்து அரிசி மூட்டைக்குள் ரூ.10 லட்சத்தை ஒரு பையிலும், ரூ.5 லட்சத்தை மற்றொரு பையிலும் போட்டு மறைத்து வைத்து மற்ற அரிசி மூட்டைகளுடன் சேர்த்து வைத்துள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலையில் சண்முகத்தின் உறவினர் கடைசியில் இருந்த போது வாடிக்கையாளர் ஒருவர் வந்து அரிசி கேட்டுள்ளார். அப்போது அவர் ரூ.15 லட்சம் மறைத்து வைத்திருந்த அரிசி மூட்டையை எடுத்து விற்பனை செய்துள்ளார்.

    சிறிது நேரத்திற்கு பிறகு கடைக்கு வந்த சண்முகம் அந்த அரிசி மூட்டை இல்லாததை கண்டு திடுக்கிட்டுட்டார். இதுகுறித்து விசாரித்த போதுதான், விபரம் தெரியவந்தது. உடனே வாடிக்கையாளரின் முகவரி தேடி சென்று விசாரித்த போது அந்த மூட்டைக்குள் ரூ.10 லட்சம் தான் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் உரிய முறையில் விசாரித்து ரூ.5 லட்சத்தை மீட்டு தர வேண்டும் என்று சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×