search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞரின் நூற்றாண்டு விழா"

    • ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் 4 இடங்களில் நடைபெற உள்ளது.
    • வரும் 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை நடக்கிறது.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் வரும் முன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதல்- அமை ச்சரின் வழிகாட்டுதலின்படி சுகாதாரத்துறை அமை ச்சரின் அறிவுறுத்தலின் படி வரும் 24-ந் தேதி (சனி க்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்களில் தாய் சேய் நல மருத்துவம், இருதய நோய், சரக்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் சிகிச்சை, அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பு, தோல், கண், பல், காது, மூக்கு தொண்டை சிகிச்சை மருத்து வம், மனநல மருத்துவம், பொது நல மருத்துவம், பெண்நல மருத்துவம், புற்றுநோய் பரிசோதனை மற்றும் பொது மருத்துவம், சித்த மருத்துவம் ஆகியவை களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் ஸ்கேன் வசதி, செமி ஆட்டோ அனலைசர் மூலம் ரத்தப்பரிசோதனை, ரத்தம், சர்க்கரை, கொழுப்பு, மலேரியா பரிசோதனை, அல்ட்ராசோனோ கிராம், கண்புரை ஆய்வு, கர்ப்ப ப்பை வாய் புற்று நோய் பரிசோதனை ஆகிய பிரிவுகள் செயல்பட்டு மேல்சிகி ச்சைக்காக பரி ந்துரை செய்யப்பட உள்ளது.

    மேல்சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் முதல்- அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக செய்யப்படும். காப்பீட்டு திட்ட பழைய அட்டை உள்ளவர்கள் புதுப்பித்து மாற்றிக் கொள்ளவும், புதிய அட்டை தேவைப்படு பவர்கள் தங்களது குடும்ப அட்டை ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்கு கீழ்வருமா னம் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலரின் சான்றையும் ஆவணங்களாக எடுத்து வருமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் 4 இ டங்களில் நடைபெற உள்ளது. முகாம்கள் ஈரோடு ராஜாஜிபுரம் காமராஜர் மேல்நிலைப்பள்ளி, பவானி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி, கவுந்த ப்பாடி, அந்தியூர் வட்டா ரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, அந்தியூர், சத்தியமங்கலம் வட்டாரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி, ரங்கசமுத்திரம் பகுதிகளில் வரும் 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை நடக்கிறது.

    எனவே ஈரோடு மாவட்ட பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளுக்கு அருகா மையில் நடைபெறும் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை, பரி சோதனையும் செய்து கொள்ளலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • பொன்னேரி நெடுஞ்சாலை துறை சார்பில் உதவி பொறியாளர் பாரதிதாசன் தலைமையில் நிகழ்ச்சி.
    • நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் புருஷோத்தமன், குமார், மோகன்தாஸ் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:-

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி நெடுஞ்சாலை துறை சார்பில் உதவி பொறியாளர் பாரதிதாசன் தலைமையில் புவி வெப்பமயமாதலை தடுக்கவும் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தி ஆக்சிஜனை அதிகப்படுத்தவும் பொன்னேரி பழவேற்காடு ஏலியம்பேடு சாலை ஓரங்களில் 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் புருஷோத்தமன், குமார், மோகன்தாஸ் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கி ணங்க கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நாளை (3-ந் தேதி) ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு வைத்து கட்சித் தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்திடவும், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஒன்றியம், நகர, பேரூர் கழகம், கிளைக் கழகம், வார்டு கழகம் தோறும் கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், ஏழை, எளியோர், மாற்றுத் திறனாளிகள், மாணவ- மாணவிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    "என்றென்றும் கலைஞர்" என்ற தலைப்பில், கருத்தரங்கம், பொதுக் கூட்டங்களும் வெகு நடத்தப்பட வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக, வார்டு கழக செயலா ளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சியினர் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×