search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமங்கள்"

    • பாறை துகள்கள் பயிர்கள் மீது படிந்து காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
    • கல்குவாரியால் கிணறுகளிலும் தண்ணீர் வற்றி, வறட்சி நிலைக்கு சென்று விட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள குறிச்சாம்பட்டி கரையாளனூர் கிராமத்தில் கிணற்று பாசனங்கள் மூலம் விவசாய பணிகள் நடைபெறுகிறது.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் ராட்சத எந்திரம் மூலம் கல் அரவை மேற்கொள்ளப்படுவதாகவும், அதனால் அங்கிருந்து வரும் பாறை துகள்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும், பயிர்கள் மீதும் படிந்து காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஏமையா, திரவியம் உள்ளிட்ட விவசாயிகள் கூறும் போது, கல் அரவை பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து வரும் பாறை துகள்கள் எங்களது பயிர்கள் மீது படிந்து அவற்றை கருக செய்கிறது. இதுகுறித்து நாங்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. மேலும் இந்த கல்குவாரியால் வேளாண்மைக்கு பயன்படுத்தி வரும் எங்கள் கிணறுகளிலும் தண்ணீர் வற்றி, வறட்சி நிலைக்கு சென்று விட்டது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. இந்த கல்குவாரியால் கரையாளனூர் பகுதியில் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் அறிவிப்பு
    • மேற்படி விதிமுறைகள் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மோட்டார் வாகன சட்டம் துணை விதி (1) விதி 370 தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டவிதி 1989-ன் படி போக்குவரத்து ஆணையர் ஒப்புதல் பெறப்பட்டுள்ள தன் அடிப்படையில் எல்லையோர மாவட்டங்க ளான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து கனிமங்கள் ஏற்றி வரும் 10 சக்கரங்களுக்கு (28,000 கிலோ) மேற்பட்ட கனரக வாகனங்கள் குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் 10 சக்கரங்களுக்குட்பட்ட கனரக வாகனங்களில் கனிமங்கள் கொண்டு வரும் வாகனங்கள் கீழ்கண்ட வழித்தடத்தில் மட்டுமே சென்றுவர அனுமதிக்கப்படு கிறது. ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், துவரங்காடு, களியங்காடு வழியாக கேரள மாநிலம் செல்வதற்கு (அல்லது) வெள்ளமடம், காவல்கிணறு, ஆரல்வாய்மொழி, தோவாளை, அப்டா மார்க்கெட், புத்தேரி, இறச்சகுளம், களியங்காடு செல்வதற்கு அனுமதிக்கப்ப டுகிறது. மேற்படி விதிமுறைகள் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதிக எடை கொண்ட வாகனங்களின் போக்குவரத்தால் சாலைகள் பாதிப்படைவதையும், பொதுமக்கள் நலன்கருதியும் இந்த விதிமுறைகள் நடைமுறை படுத்தப்படுகி றது. இந்த விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டிரைவர் வாகனம் ஓட்டும்போது அயர்ந்து தூங்கியதால் விபத்து நடைபெற்றது.
    • இரவு பகலாக குவாரிகள் இயங்குவதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    கடையம்:

    அம்பை, தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், இயற்கை வள பாதுகாப்பு சங்கத் தலைவருமான ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கனிம வளங்கள்

    கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு 24 மணி நேரமும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு, பகலாக தூங்காமல் கனரக வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி தென் மாவட்டங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் களக்காட்டில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    இதேபோன்று தென்காசி மாவட்டம் திரவியநகர் அருகே டிரைவர் வாகனம் ஓட்டும்போது அயர்ந்து தூங்கியதால் அங்கேயும் ஒரு விபத்து நடைபெற்றது.

    இது போன்று குற்றா லத்தில் பள்ளி செல்லும் சிறுவன் மீது வாகனம் ஏற்றி விபத்துக் குள்ளானதால் அந்த சிறுவன் நடக்க முடியாத நிலையில் இருக்கிறான். அதேபோன்று இலஞ்சியிலும் ஒரு வாகன விபத்தும் நடைபெற்றது.

    இது போன்று தொழிலாளர் நல சட்டங்களுக்கு விரோதமாக இரவு, பகல் கனிம வளங்களை கொண்டு செல்லலாம் என்று உத்தரவிட்டிருப்பது சாலையில் செல்லும் பாத சாரிகளுக்கும், வாகனத்தில் செல்பவர்களுக்கும் இந்த வாகனங்களால் விபத்து ஏற்படுகிற ஒரு சூழ்நிலை இருக்கின்றது.

    திரும்ப பெற வேண்டும்

    இரவு பகலாக குவாரிகள் இயங்குவதால் அங்கே நிலச்சரிவு ஏற்படுகிற ஒரு வாய்ப்பு இருக்கிறது.

    எனவே தொழிலாளர் நல சட்டத்திற்கு விரோதமாக இரவு- பகலாக குவாரிகள் இயங்குவதை பொது மக்களின் நலன் கருதி உடனடியாக அதை அரசு திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடவடிக்கை எடுப்பதற்காக 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
    • குமரியில் ஒரே மாதத்தில் 109 வாகனங்கள் பறிமுதல் ரூ.42 லட்சம் அபராதம் வசூல்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் விதிமுறை மீறி கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.

    31-ந்தேதி வரை தனி தாசில்தார்கள் தலைமை யிலான 7 சிறப்பு குழுவினரால் மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை மேற் கொள்ளப்பட்டது. மொத்தம் 273 வாகனங்களை சோதனை செய்ததில் 29 கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக கனிமங்கள் ஏற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதால் அவை கைப்பற்றப்பட்டு நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் இருந்து அபராத நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.

    கனிமவளத்துறை துணை இயக்குநர் தலைமையிலான மதுரை மண்டல பறக்கும் படையினர் மே 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கனிமங்கள் ஏற்றி சென்ற 195 வாகனங்களை சோதனை செய்ததில் 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்களி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக கனிமங்கள் எடுத்து சென்ற 9 வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு தொடர்புடைய நபர்கள் மீது தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக கனிமங்கள் எடுத்து சென்ற 27 வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அந்த வகையில் மாவட் டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் காவல் துறை வாயிலாக 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.10 லட்சத்து 47 ஆயிரத்து 710-ம், மதுரை மண்டல பறக்கும் படை வாயிலாக 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.17 லட்சத்து 41 ஆயிரம், தனி தாசில்தார்கள் தலைமையிலான சிறப்பு குழு வாயிலாக 29 வாகனங்கள் என மொத்தம் 109 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.14 லட்சத்து 17 ஆயிரம் என்று மொத்தம் ரூ.42 லட்சத்து 5 ஆயிரத்து 710 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    ×