என் மலர்
நீங்கள் தேடியது "கறி விருந்து விழா"
- பல நூறு ஆண்டுகளாக கறி விருந்து நடைபெற்று வருகிறது.
- கோவிலுக்குச் சொந்தமான பொருட்களை மக்கள் உபயோகப்படுத்துவதில்லை.
முதுகுளத்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சாக்குளம் கிராமத்தில் கடலாடி-முதுகுளத்தூர் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது தர்ம முனீஸ்வரர் ஆலயம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி களரி விழாவையொட்டி பாரிவேட்டை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறு வது வழக்கம்.
பாரி வேட்டை திருவிழா விற்காக நூற்றுக்கணக்கான ஆடுகள் நேர்த்திக் கடனாக கோவிலுக்கு செலுத்தப்ப டும். ஆடுகள் குட்டி போடும் போதே இது முனியனுக்கு என்று சொல்லி நேர்ந்து விடும் பழக்கம் இப்பகுதியில் உள்ளது.
மேலும், கீழச்சாக் குளம் கிராமத்தின் சார்பில் தலைகட்டுவரியாக 2 ஆயிரம் வசூல் செய்து ஒவ்வொரு ஆண்டும் பொது அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து செலவுகளையும் கீழச்சிக்குளம் கிராம மக்களே ஏற்றுக் கொள்கின்றனர்.
2 ஆண்டுக்கு ஒருமுறை பாரிவேட்டை திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்தாண்டு தர்ம முனீஸ்வரர் கோவிலில் பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கீழச்சாக்குளம் தர்ம முனீஸ்வரர் ஆலய பாரிவேட்டை திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொது அன்னதான விருந்து இந்தாண்டு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜாதி பேதம் பாராமல் கலந்து கொண்டு கறிவிருந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். பல நூறு ஆண்டுகளாக இந்த ஆட்டுக்கறி விருந்து நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோவிலுக்குச் சொந்தமான பொருட்களை இப்பகுதி மக்கள் உபயோகப் படுத்துவதில்லை. கோவில் பொருட்கள் அனைத்தும் தர்ம முனீஸ்வரருக்கு சொந்தம் என இப்பகுதி மக்கள் கருதுவதால், கோவில் ஊரணியைச் சுற்றியுள்ள மரங்களில் உள்ள இலை தழைகளைக் கூட தங்களது ஆடு, மாடுகளுக்கு அளிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- விழாவில் ஊர் கவுடர்மண்டகப்படி, நாட்டாண்மைகாரர்கள் மண்டகப்படி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்பதற்காக அவர்கள் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஜி.நடுப்பட்டியில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் ஆகிய தெய்வங்களுக்கான திருவிழா சாமி சாட்டுதலுடன் தொடங்கியது.
விழாவில் ஊர் கவுடர்மண்டகப்படி, நாட்டாண்மைகாரர்கள் மண்டகப்படி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெரு பகுதி மக்களின் சார்பாக பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் சாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊரைக்காக்கும் மந்தை முனியப்பன் கோவிலுக்கு கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்பதற்காக அவர்கள் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டனர். அதன் பின்னர் ஊர் மந்தையில் முனியப்ப சாமிக்கு கிடாய்வெட்டி சமையல் செய்து படையல் போடப்பட்டது. அதன் பின்னர் கிராமத்தின் 4 பகுதிகளிலும் கோவில் பூசாரியான சந்திரன் என்பவர் கறிச்சோற்றை கலந்து அருள்வந்து ஆடி வானத்தை நோக்கி வீசினார்.
அவ்வாறு வீசப்படும் கறி சோறை முனியப்ப சாமி பிடித்துக்கொள்வார் என்பதும், ஒரு பருக்கை கூட கீழே விழாது என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன் பின்னர் ஆண்கள் அனைவரும் சாமிக்கு படையல் இடப்பட்ட அசைவ உணவை சாப்பிட்டனர். இரவு 9 மணிக்கு தொடங்கி இந்த திருவிழா அதிகாலை 3 மணிக்கு நிறைவுபெற்றது. இந்த வினோத திருவிழாவை காண சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.