என் மலர்
நீங்கள் தேடியது "கவுண்டி கிரிக்கெட்"
- கென்ட் கிளப்பில் சேர இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னை ஊக்கப்படுத்தியதாக அர்ஷ்தீப் தெரிவித்திருந்தார்.
- அர்ஷ்தீப் சிங் 14.2 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் அணியான கெண்ட் அணிக்காக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் பென் போக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் கவுண்டி கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் பதிவு செய்தார். அருமையான இன்ஸ்விங் மூலம் (LBW) இந்த விக்கெட் அவருக்கு கிடைத்தது.
அவர் 14.2 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் நான்கு மெய்டன்கள் அடங்கும்.
கென்ட் கிளப்பில் சேர இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னை ஊக்கப்படுத்தியதாக அர்ஷ்தீப் தெரிவித்திருந்தார்.
Arshdeep Singh has his first #LVCountyChamp wicket!
— LV= Insurance County Championship (@CountyChamp) June 12, 2023
The @KentCricket bowler gets one to nip back and dismisses Ben Foakes pic.twitter.com/RS4TTfAjut
24 வயதான அர்ஷ்தீப் சிங் 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் இந்திய அணியில் இடம் பிடித்தார். இதன்மூலம் இங்கிலாந்தில் தனது முதல் அறிமுக போட்டியில் களமிறங்கினார்.
அர்ஷ்தீப் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஆனால் 26 டி20 போட்டிகளில் 41 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20-யில் அவரது சிறந்த பந்துவீச்சு 4/37 ஆகும்.
அவர் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார், அதில் அவர் 25 விக்கெட்டுகளை சராசரியாக 23.84 மற்றும் எகானமி ரேட் 2.92, 5/33 என்ற சிறந்த பந்துவீச்சுடன் எடுத்துள்ளார்.
- சர்ரே அணி வெற்றி பெற 501 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- அந்த அணியின் சிப்ளே, பென் போக்ஸ், ஜேமி ஸ்மித் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
லண்டன்:
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி டிவிஷன் 1-ல் கெண்ட் அணியும், சர்ரே அணியும் மோதின. டாஸ் வென்ற கெண்ட் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய கெண்ட் அணி முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோர்டான் காக்ஸ் சதமடித்து 133 ரன்கள் எடுத்தார். ஜோய் எவிசன் 58 ரன்கள் சேர்த்தார்.
சர்ரே அணி சார்பில் சீன் அபாட் 4 விக்கெட்டும், ஜோர்டான் கிளார்க், கஸ் அட்கின்ஸன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய சர்ரே அணி முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சீன் அபாட் 34 ரன்கள் எடுத்தார்.
கெண்ட் அணி சார்பில் மேத்யூ குயின், வெஸ் அகர் தலா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், ஜோய் எவிசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 2வது இன்னிங்சில் ஆடிய கெண்ட் அணி 344 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டவாண்டா முயியே 79 ரன்னும், ஹமிதுல்லா குவாடி 72 ரன்னும், டி பெல் டிரம்மண்ட் 59 ரன்னும் எடுத்தனர்.
சர்ரே அணி சார்பில் ஜோர்டான் கிளார்க் 5 விக்கெட்டும், டேனியல் வோரல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
501 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சர்ரே அணி களமிறங்கியது. தொடக்கம் முதல் அந்த அணியின் வீரர்கள் அதிரடியில் இறங்கினர்.
அந்த அணியின் 3 பேட்ஸ்மேன்கள் சதமடித்து அசத்தினர். ஜேமி ஸ்மித் 114 ரன்னும், பென் போக்ஸ் 124 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். டாம் லாதம் 58 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், சர்ரே அணி 5 விக்கெட் இழப்புக்கு 501 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றது. டொமினிக் சிப்ளே 140 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் இரண்டில் லிசெஸ்டர்ஷையர் அணிக்காக ரகானே விளையாடி வந்தார்.
- போட்டிக்கு நடுவே ரகானேவை கவுண்டி மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரகானே. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுவந்த இவர், சமீப கலமாக மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதன் காரணமாக அவர், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் லிசெஸ்டர்ஷைர் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார்.
அந்த அணி அரையிறுதிச்சுற்று வரை முன்னேறிய லிசெஸ்டர்ஷையர் அணியானது, அரையிறுதியில் சொமர்செட் அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்தது.
இருப்பினும் ஒருநாள் தொடருக்கு பிறகு கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் இரண்டில் லிசெஸ்டர்ஷையர் அணிக்காக ரகானே விளையாடி வந்தார். இத்தொடரில் லிசெஸ்டர்ஷைர் அணியானது விளையாடிய 12 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வி மற்றும் 9 போட்டிகளை டிராவில் முடித்து புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனையடுத்து நடப்பு சீசனின் கடைசி இரண்டு போட்டிகளில் லிசெஸ்டர்ஷைர் அணியானது விளையாடவுள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக நடப்பு சீசன் கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து ரகானே விலகியுள்ளதாக லிசெஸ்டர்ஷைர் அணி அறிவித்துள்ளது.
அதன்படி போட்டிக்கு நடுவே காயத்தால் அசௌகரியமாக உணர்ந்த ரகானேவை கவுண்டி மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையின் முடிவிக்கு பிறகு அவர் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டார்.
- ஷோயப் பஷீர் தனது முதல் பந்திலேயே அபோட் பந்துவீச்சில் போல்டானார்.
- பந்தை வீசும்போது அபோட் இடுப்பில் இருந்த துண்டு கீழே விழுந்தது.
இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சோமர்செட் மற்றும் ஹாம்ப்ஷயர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சோமர்செட் அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 10 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷோயப் பஷீர் தனது முதல் பந்திலேயே அபோட் பந்துவீச்சில் போல்டானார்.
ஆனால் அந்த பந்தை வீசும்போது அபோட் இடுப்பில் இருந்த துண்டு கீழே விழுந்தது. இதை கவனித்த பஷீர் நடுவரிடம் தெரிவிக்க, அந்த பந்தை டெட் பாலாக நடுவர் அறிவித்தார்.
பேட்ஸ்மேன் பந்தை சந்திக்கும் போது கவன சிதறல் ஏற்படும் வகையில் ஏதேனும் அசைவுகள், சத்தம் கேட்டால் அந்த பந்து டெட் பாடலாக அறிவிக்கப்படும்.
அதனால் பஷீர் தனது விக்கெட்டை காப்பாற்றினார். ஆனால் பஷீர்க்கு நீண்ட நேரம் இந்த அதிர்ஷ்டம் நீடிக்கவில்லை. அபோட் பந்துவீச்சில் அடுத்த 2 பந்துகளிலேயே பஷீர் டக் அவுட் ஆனார்.
இதன் விளைவாக, சோமர்செட் முதல் இன்னிங்ஸில் 136 ரன்களுக்குச் சுருண்டது.
- ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக ஷர்துல் தாகூர் விளையாடி வருகிறார்.
- கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ESSEX அணிக்காக இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தியாவில் ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் அரையிறுதியில் மும்பை, விதர்பா, கேரளா, குஜராத் அணிகள் முன்னேறியுள்ளனர். ஒரு அரையிறுதியில் குஜராத் -கேரளா அணிகளும் மற்றொரு அறையிறுதியில் மும்பை- விதர்பா அணிகளும் மோதுகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் மும்பை அணியில் இடம்பிடித்துள்ள ஷர்துல் தாகூர் விளையாட உள்ளார்.
கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ESSEX அணிக்காக இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் ஒப்பந்தமாகியுள்ளார். ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் 7 கவுண்டி போட்டிகளில் அவர் விளையாடுகிறார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வரும் ஜூனில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதற்கான பயிற்சியாக கவுண்டி போட்டிகள் அமையும் என பார்க்கப்படுகிறது.