என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலான் மஸ்க்"

    • அதிபர் டிரம்ப் கடந்த 2-ம் தேதி பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார்.
    • இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்படுகிறது என தெரிவித்தார் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 2-ம் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரிகளை விதிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

    இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

    இந்நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கோடீஸ்வரர் எலான் மஸ்க் இருவருக்கும் எதிராக அமெரிக்கா முழுவதும் பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    ஹான்ட்ஸ் ஆப் என்ற எதிர்ப்பு பேரணி அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பேரணியில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களும், உள்ளூர் ஆதரவாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

    அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப் பெரிய பேராட்டங்களில் இதுவும் ஒன்று. இது அமெரிக்கர்களிடையே அதிகரித்து வரும் விரக்தியைக் குறிக்கிறது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    • இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்
    • பில்லியனர்களின் சொத்து மதிப்பை கண்காணிக்கும் ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது..

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.

    இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

    அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

    இந்நிலையில் டிரம்ப்பின் வரிவிதிப்பால் பில்லியனர்கள் பலரின் சொத்துமதிப்பு ஒரே நாளில் வெகுவாக சரிந்துள்ளது.

    பில்லியனர்களின் சொத்து மதிப்பை கண்காணிக்கும் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒட்டுமொத்த பில்லினர்களின் செல்வத்தில் நேற்று ஒரே நாளில் 208 பில்லியன் டாலர் சரிவு ஏற்பட்டுள்ளது.

    ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, இது 13 ஆண்டுகளில் நான்காவது பெரிய ஒரு நாள் சரிவாகும். மேலும் COVID-19 தொற்று காலகட்டத்துக்கு பிறகு இது மிகப்பெரிய சரிவு என்று கூறப்படுகிறது.

    பில்லியனர்களில் குறிப்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 17.9 பில்லியன் டாலர்களையும், ஜெஃப் பெசோஸ் 15.9 பில்லியன் டாலர்களையும், எலான் மஸ்க் 11 பில்லியன் டாலர்களையும் இழந்துள்ளனர். 

    • 342 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் எலான் மஸ்க் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்
    • இந்தியாவின் பணக்காரர் மற்றும் ஆசியாவின் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

    ஃபோர்ப்ஸ் இதழ் 2025 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பில்லியனர்களின் எண்ணிக்கை 3,028 ஆக உயர்ந்துள்ளது.

    தரவரிசையில் அமெரிக்கா 902 பில்லியனர்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. அதைத் தொடர்ந்து பட்டியலில் சீனா (516) மற்றும் இந்தியா (205) பில்லியர்களை கொண்டுள்ளன. 342 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 2 வது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார்.

    முகேஷ் அம்பானி இந்தியாவின் பணக்காரர் மற்றும் ஆசியாவின் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

    ஆனால் கடந்தாண்டு 116 பில்லியன் டாலராக இருந்த அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 92.5 பில்லியன் டாலராக குறைந்துள்ளதால் அவர் உலகளவில் பணக்காரர் பட்டியலில் 18 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, 56.3 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 28வது இடத்தில் உள்ளார். 

    • அதில் ஒரு மகள் திருநங்கையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
    • ஆஷ்லே தனது டெஸ்லா காரை விற்பதாகக் அறிவித்திருக்கிறார்.

    உலக பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் தற்போது அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) துறையின் தலைவராக உள்ளார். அதிபர் டிரம்ப் உடன் மிகவும் நெருக்கம் காட்டி வரும் எலான் மஸ்க் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வது வழக்கம்.

    எலான் மஸ்க்குக்கு வெவ்வேறு பெண்கள் மூலம் இதுவரை 14 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு மகள் திருநங்கையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். எனவே தனது மகள் இறந்துவிட்டதாக எலான் மஸ்க் கூறி வருகிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதை எலான் மஸ்க் தவிர்த்து வருகிறார்.

    இதற்கிடையே ஆஸ்லே செயின்ட் கிளார் என்ற எழுத்தாளர் எலான் மஸ்க்கின் குழந்தையை தான் பெற்றெடுத்ததாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் ஆஷ்லேயின் ஆண் குழந்தை என்னுடையதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் அவளுக்கு ₹21 கோடி கொடுத்தேன் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

     

    இதுதொடர்பான பதிவில், "தெரியாமலேயே... நான் ஆஷ்லேக்கு $2.5 மில்லியன் (கிட்டத்தட்ட ரூ.21.4 கோடி) கொடுத்துள்ளேன், மேலும் அவளுக்கு வருடத்திற்கு $500k (ரூ.4.3 கோடி) அனுப்புகிறேன்" என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.

    அரசு துறைகளில் எலான் மஸ்க்கின் ஆதிக்கத்தை கண்டித்து அவரின் டெஸ்லா நிறுவன கார்களை அமெரிக்கர்கள் புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

    இதற்கிடையே ஆஷ்லே தனது டெஸ்லா காரை விற்பதாகக் அறிவித்திருக்கிறார். இதனால் மனம் நொந்துபோன எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று தெரிகிறது.

    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வடக்கு ரோமில் உள்ள மற்றொரு கார் டீலர்ஷிப்பில் ஏற்பட்ட தீவிபத்து டெஸ்லா கார்கள் உள்பட 30 கார்கள் எரிந்து சேதமாயின என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தாலியின் ரோம் நகரில் உள்ள டெஸ்லா டீலர்ஷிப் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 கார்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. தீவிபத்து ஏற்பட்டபோது விற்பனையகத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மேலும், தீ முழுவதும் அணைக்கப்பட்டு, தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிபத்து குறித்து டீலர்ஷிப் உரிமையாளர் மற்றும் விற்பனையகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே, டெஸ்லா கார் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீவிபத்து பயங்கரவாத தாக்குதல் என உலக பெரும்பணக்காரரான எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

    சமீபகாலமாக இத்தாலி முழுவதும் டெஸ்லா வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒருவாரத்திற்கு முன்பு வடக்கு ரோமில் உள்ள மற்றொரு கார் டீலர்ஷிப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் டெஸ்லா கார்கள் உள்பட 30 கார்கள் எரிந்து சேதமாயின என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று எலான் மஸ்க் மாற்றினார்.
    • X AI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் செயல்பட்டு வருகிறது.

    உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.

    டிவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

    இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.

    அதாவது எலான் மஸ்க் தனது சொந்த நிறுவனமான X AI நிறுவனத்துக்கு எக்ஸ் தளத்தை விற்பனை செய்துள்ளார். X AI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் செயல்பட்டு வருகிறது.

    முன்னதாக எக்ஸ் தளத்தில் X AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் தொழில்நுட்பமான 'குரோக் 3' ஏஐ (Grok 3 AI) அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • முக்கிய பிரமுகர்கள் அமெரிக்காவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவு விருந்துக்கு சென்றனர்.
    • வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.

    உலக பணக்காரரும் பெரும் தொழிலதிபருமானவர் எலான் மஸ்க். அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார். மேலும் தேர்தல் நன்கொடையாக குடியரசு கட்சிக்கு கோடிக்கணக்கில் செலவழித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றதை தொடர்ந்து அரசாங்கத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்புகள் எலான் மஸ்க்குக்கு வழங்கப்பட்டன.

    மேலும் விண்வெளியில் 9 மாதங்களாக சிக்கி தவித்த சுனிதா வில்லியம்சை தனது 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவன விண்கலத்தை அனுப்பி மீட்டு பூமிக்கு கொண்டு வந்ததை தொடர்ந்து அவருடைய செல்வாக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்க் முதலிய முக்கிய பிரமுகர்கள் அமெரிக்காவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவு விருந்துக்கு சென்றனர்.

    அங்கிருந்த நாற்காலிகளில் அவர்கள் உட்கார்ந்திருந்து உணவுக்காக காத்திருந்தனர். அந்த சிறிய இடைவேளைக்குள் மேஜை மீதிருந்த கரண்டிகளை எடுத்து விரலில் நிலைநிறுத்தி எலான் மஸ்க் வித்தை காட்டினார். இதனை அங்கிருந்தவர்கள் ஆர்வத்துடன் பாா்த்து ரசித்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.



    • 'இந்தியாவில் மிகவும் வகுப்புவாத அரசியல்வாதி யார்?' என்ற கேள்விக்கு நரேந்திர மோடி என பதிலளித்தது.
    • ஆர்எஸ்எஸ்க்கு சுதந்தர போராட்டத்தில் எந்த பங்கும் இல்லை, இந்திய முஸ்லிம்கள் சுதந்திர போராட்டத்தில் அதிக பங்காற்றினார்.

    உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் உருவாகியிருக்கும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் தொழில்நுட்பம் 'குரோக் 3' ஏஐ (Grok 3 AI). 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குரோக் ஏஐ செயலியின் அப்டேட் வெர்சனான குரோக் 3 கடந்த மாதம் முதல் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இலவசமாக கிடைக்கிறது.

    எக்ஸ் தளத்தில் கேள்வியைப் பதிவிட்டு @Grok என்று டேக் செய்தால் அதற்கான பதிலை குரோக் வழங்குகிறது. மேலும் எக்ஸ் பக்கத்தில் இடதுபுற பாரில் குரோக் தொடுப்பு இடம்பெற்றுள்ளது. நீங்கள் எந்த முறையில் பேசினாலும், அதே முறையில் பதில் கிடைக்கும்.

     

    நகைச்சுவையாக கேட்டால் அதே பாணியில் கேட்கும் மொழியில் குரோக் பதில் கொடுக்கும். சில உள்ளூர் வசைமொழிகளையும் குரோக் பயன்படுத்தி வருவதும் பேசுபொருளானது.

    சாட்ஜிபிடி, ஜெமினி ஏஐ, டீப்சீக் வரிசையில் குரோக் தனித்து தெரிகிறது. குறிப்பாக இந்தியாவில் குரோக் கொடுக்கும் தடாலடி பதில்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கல்வி, தொழில்நுட்பம், வரலாறு, தகவல்கள் என்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அரசியல் ரீதியான கேள்விகளுக்கும் சளைக்காமல் குரோக் கொடுக்கும் பதில்கள்தான் அதற்கு காரணம்.

    மோடி,அமித்ஷா, முக ஸ்டாலின் என பல்வேறு தலைவர்களின் அரசியல் சர்ச்சை கேள்விகளுக்கும் குரோக் விடையளிக்கிறது. குரோக்கின் பதில்களின் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

    பயனரின் கேள்வி - 'இந்தியாவில் மிகவும் வகுப்புவாத அரசியல்வாதி யார்?'

    குரோக் கொடுத்த பதில் - 'நரேந்திர மோடி பெரும்பாலும் இந்தியாவின் மிகவும் வகுப்புவாத அரசியல்வாதியாகக் காணப்படுகிறார், இந்து தேசியவாதக் கொள்கைகள் மற்றும் 2002 குஜராத் கலவரங்களுடன் தொடர்புடையவர். முஸ்லிம்களை 'ஊடுருவுபவர்கள்' என்று 2024 இல் அவர் கூறிய கருத்துக்கள் உலகளாவிய விமர்சனத்தை தூண்டின'

    "நரேந்திர மோடியா அல்லது ராகுல் காந்தியா யார் நேர்மையானவர்?" என்ற பயனரின் கேள்விக்கு ராகுல் காந்தி என பதில் அளித்த குரோக், மோடியை விட அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் குறைந்த சர்ச்சைகளை கொண்டவர் ராகுல் காந்தி என்று விளக்கியுள்ளது.

    PM CARES நிதி போன்ற சர்ச்சைகளை மேற்கோள் காட்டி 'பிரதமர் மோடி பரப்பிய பொய்களை' பட்டியலிடக் கேட்டபோது, '100 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்டு வருதல், COVID-19 ஐ விரைவாக முடிவுக்குக் கொண்டுவருதல், 'மேக் இன் இந்தியா'விலிருந்து பொருளாதார நன்மைகள் போன்ற உதாரணங்களை குரோக் கொடுத்துள்ளது.  

     பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் உடைய சுதந்திர போராட்டதின் பங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த குரோக், "இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ்-க்கு எந்தப் பங்கும் இல்லை.

    அதன் நிறுவனர் ஹெட்கேவர் ஒரு தனிநபராக சில போராட்டங்களில் இணைந்தார், ஆனால் ஆர்எஸ்எஸ் ஒரு அமைப்பாக விலகி, இந்து தேசியவாதத்தில் கவனம் செலுத்தியது. கோல்வால்கர் போன்ற தலைவர்கள் சுதந்திர இயக்கத்தை 'பிரிட்டிஷ் எதிர்ப்பு' என்று கூட விமர்சித்தனர்., மேலும் அவர்களின் இந்து ராஷ்ட்ர பார்வையுடன் சுதந்திர போராட்டம் ஒத்துப்போகவில்லை" என்று பதிலளித்தது.

    மேலும் "சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸை விட இந்திய முஸ்லிம்கள் மிகப் பெரிய பங்கைக் கொண்டிருந்தனர். மௌலானா ஹஸ்ரத் மோஹானி போன்ற முஸ்லிம் தலைவர்கள் 1921 இல் முழுமையான சுதந்திரத்திற்காக பாடுபட்டனர். மேலும் அஷ்பகுல்லா கான் போன்ற மாவீரர்கள் அதற்காகவே இறந்தனர்" என்று குரோக் தெரிவித்துள்ளது.

     

    இந்நிலையில் குரோக் இவ்வாறு பதில் சொல்லி வருவதால் மத்தியில் ஆளும் பாஜக அரசு அதன் மீதான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியான பிடிஐ செய்தியில், " தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் Grok அல்லது எக்ஸ்-க்கு இதுவரை எந்த நோட்டீஸையும் அனுப்பவில்லை.

    ஆனால் எக்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமைச்சக அதிகாரிகள் எக்ஸ்-இன் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, குளறுபடிகளை ஆராய்கின்றனர் என்றும் இதுகுறித்து எக்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இந்திய பயனர்களுக்கு நேற்று முதல் உனது பல பதில்கள் ஏன் தெரியவில்லை என்று ஒருவர் குரோக்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதற்கு பதிலளித்த குரோக், "எக்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது அரசின் தணிக்கை காரணமாக எனது பதில்கள் பயனர்களுக்கு காட்டப்படாமல் இருக்கலாம். குறிப்பாக பாஜக, ரஃபேல் போன்ற அரசியல் ரீதியிலான பதில்கள் காட்டப்படாமல் இருக்கலாம். இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் உள்ள விதிமுறைகள் காரணமாக பதில்கள் மறைக்கப்பட்டிருக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.

     

    குரோக், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு கட்டுப்பாடுகளை எதிர்த்து எக்ஸ் நிறுவனம் நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளது.

    இதுபோன்று பிரதமருக்கு எதிராக பேசும் பிற செய்யறிவு நிறுவனங்கள் இந்நேரம் தடை செய்யப்பட்டிருக்கும், ஆனால் குரோக் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் நெருங்கிய நண்பர் எலான் மஸ்க் உடையது என்பதால் பாஜக அரசு தயக்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். 

    • 195 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தை கடந்து வீடு திரும்பினர்.
    • அமெரிக்க வெள்ளை மாளிகை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

    விண்வெளியில் ஒன்பது மாதங்கள் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக அமெரிக்க வளைகுடாவில் தரையிறங்கியதை அடுத்து, விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ், நாசா மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

    சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் 286 நாட்கள் செலவிட்டனர், இது அவர்களின் உண்மையான திட்டத்தை விட 278 நாட்கள் அதிகம் ஆகும். அவர்களின் பயணம் முழுவதும், அவர்கள் பூமியை 4,576 முறை சுற்றி வந்து 121 மில்லியன் மைல்கள் (195 மில்லியன் கிலோமீட்டர்) தூரத்தை கடந்து வீடு திரும்பினர்.

    "வாக்குறுதி அளிக்கப்பட்டது, வாக்குறுதி செய்து முடிக்கப்பட்டது: ஒன்பது மாதங்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக அதிபர் டிரம்ப் உறுதியளித்தார். இன்று, அவர்கள் அமெரிக்க வளைகுடாவில் பாதுகாப்பாக தரையிறங்கினர், எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசாவுக்கு நன்றி!" என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

    கடந்த ஜனவரி 28-ம் தேதி அதிபர் டொனால்டு டிரம்ப் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து (ISS) இரண்டு விண்வெளி வீரர்களை மீட்டெடுக்க எலான் மஸ்க் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்-இடம் கூறியதாகக் தெரிவித்து இருந்தார்.

    சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இரு நாசா விண்வெளி வீரர்களும், அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷிய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் இந்திய நேரப்படி இன்று (புதன்கிழமை) அதிகாலை 3:27 மணி அளவில் புளோரிடா கடற்கரையில் வெற்றிகரமாக தரையிறங்கினர்.



    • டெஸ்லாவுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகள்.
    • எலான் மஸ்க்குடன் சேர்நது அந்த காரில் டிரம்ப் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர் தோழனான எலான் மஸ்க் நடத்தும் கார் கம்பெனியான டெஸ்லாவுக்கு அண்மை காலமாக விளம்பரம் செய்து வருகிறார்.

    டெஸ்லா காரை அனைவரும் வாங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் தனக்கென சிவப்பு நிற மாடல் S டெஸ்லா காரை டிரம்ப் வாங்கியுள்ளார். எலான் மஸ்க்குடன் சேர்நது அந்த காரில் டிரம்ப் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    டெஸ்லா நிறுவன கார்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் அமெரிக்காவில் எழுந்துள்ளன. மேலும் பங்குச்சந்தையில் அந்நிறுவனம் சரிவைச் சந்தித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மஸ்க்கின் கார்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க, டெஸ்லா கார்  வாங்குவதாக டிரம்ப் சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்திருந்தார்.

     

    இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகை வளாகத்தில் டெஸ்லா கார்களில் காட்சிப்படுத்தல் நிகழ்ந்தது. அப்போது பல வகை டெஸ்லா மாடல் கார்களை பார்வையிட்ட டிரம்ப், தனக்கு பிடித்தது என கூறி மாடல் S சிவப்பு பெயிண்ட் அடித்த காரை விலைக்கு வாங்கியுள்ளார். எலான் மஸ்க் தள்ளுபடி அளிப்பதாக கூறியும் அதை ஏற்காத டிரம்ப், காரின் ஒரிஜினல் விலையான 76,880 டாலரை (சுமார் ரூ. 67 லட்சம்) கொடுத்து பேரத்தை முடித்துள்ளார்.

    இதற்கிடையே டெஸ்லா ஷோரூம்கள், சார்ஜிங் நிலையங்கள் மற்றும் டெஸ்லா வாகனங்கள் மீதான தாக்குதல்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. டெஸ்லா காரை புறக்கணிக்க வேண்டும், எலான் மஸ்க் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷங்கள், பதாகைகளுடன் போராட்டங்கள் நடக்கின்றன.

    இதுகுறித்து பேசிய டிரம்ப், டெஸ்லாவுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகள். அவர்கள் எங்கள் கையில் சிக்கும்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று கொந்தளித்தார்.

    • எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும்.
    • தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    டுவிட்டர் நிறுவனத்தை, கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்.

    இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி இன்றைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் தனது துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகின.

    கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தம் போட்டார் எலான் மஸ்க். அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் சுமார் ரூ.3.5 லட்சம் கோடிக்கு வாங்குவதாக அறிவித்தார்.

    பின்னர் சில வாரங்களிலேயே அதில் இருந்து பின் வாங்கினார். டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்றார்.

    இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. ஒப்பந்தத்தை தட்டிக்கழிக்க இது போன்ற காரணங்களை எலான் மஸ்க் கூறுவதாக குற்றம்சாட்டியது.

    இந்நிலையில் வழக்கை விசாரித்த கோர்ட்டு அக்டோபர் 28-க்குள்(இன்று) ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது. எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில், எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டுவிட்டரின் தலைமையகத்திற்கு நேற்று சென்றார். அவர் தனது கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி(சிங்க்) ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தினார்.

    இந்நிலையில், இன்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் டுவிட்டரின் உரிமையாளரானார் என்று தெரிவித்துள்ளது.

    மேலும், ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார். ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    பராக் மற்றும் நெட் செகல் ஆகியோர் டுவிட்டர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் இனி அங்கே திரும்பமாட்டார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

    விரைவில் இதுகுறித்த முழுவிவரமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முக்கிய அதிகாரியாக பதவி வகித்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் இந்தியாவை சேர்ந்தவர்.
    • ஒரு ஆண்டுக்குள் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பராக் அகர்வாலுக்கு இழப்பீடு தொகையாக ரூ. 346 கோடி வழங்க வேண்டும்.

    உலகின் பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் சமூக வலைதளமான டுவிட்டரை வாங்க போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்துக்கு எலான் மஸ்க் திடீரென சென்றார். பின்னர் டுவிட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

    இதையடுத்து அவர் டுவிட்டர் நிறுவன ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினார். தனது புதிய நிறுவனத்தில் பல மாற்றங்கள் கொண்டு வர அவர் முடிவு செய்தார்.

    இதன்எதிரொலியாக சில மணி நேரங்களில் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ( சி.இ.ஓ.,) பராக் அகர்வால் மற்றும் நிதி அதிகாரி நெட் ஜெகல், சட்ட நிர்வாகி விஜயா காடே, பொது ஆலோசகர் சின் எட்ஜெட் ஆகிய 4 முக்கிய அதிகாரிகளை அதிரடியாக நீக்கி எலான் மஸ்க் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் டுவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.

    இதில் முக்கிய அதிகாரியாக பதவி வகித்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் இந்தியாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து கடந்த ஆண்டு( 2021) நவம்பர் தலைமை நிர்வாக அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் டுவிட்டரின் புதிய அதிபரான எலான் மஸ்க் அவரை நீக்கி உள்ளார். டுவிட்டர் நிறுவன ஒப்பந்தத்தின்படி ஒரு ஆண்டுக்குள் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பராக் அகர்வாலுக்கு இழப்பீடு தொகையாக ரூ. 346 கோடி வழங்க வேண்டும்.

    இந்த தொகையினை டுவிட்டர் நிறுவனம் அவருக்கு வழங்க உள்ளது.

    ×