என் மலர்
நீங்கள் தேடியது "வீடியோ வைரல்"
- நடிகர் பெஞ்சமின் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.
- நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கியுள்ளார்.
இயக்குனர் பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான திருப்பாச்சி படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு நண்பராக நடிகர் பெஞ்சமின் நடித்துள்ளார்.
அந்த படத்திற்கு பிறகு பெஞ்சமின் புகழ்பெற்று பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பெஞ்சமின் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.
இதனை மறுத்து நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கியுள்ளார்.
இதுகுறித்து வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
சமூக வலைத்தளங்களில் என் புகழை கலங்கப்படுத்துவதற்காக என்னை பற்றி தவறுதலான செய்திகளை போடுகிறார்கள்.
இது 4வது முறை. திருப்பாச்சி பட நடிகர் பெஞ்சமின் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இது மிகவும் சங்கடமாக உள்ளது. மக்கள் என்னுடைய வீட்டிற்கு சென்று என் மனைவியிடம் விசாரித்து வருகிறார்கள்.
நான் தற்போது பரமத்தி வேலூரில் கோரைக்காரன் என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன்.
ஒரு சில நண்பர்கள் தங்கள் சேனலுக்கு வியூவர்ஸ் வரவேண்டும் என்பதற்காக பெஞ்சமின் இறந்துவிட்டார் என்று செய்தியை பரப்புகின்றனர்.
இது கஷ்டமாக இருக்கிறது. இப்படி செய்தி பரவினால் என் வீட்டில் யாருக்காவது அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என்றால் நான் என்ன செய்வது.
என் வீட்டில் ஏற்கனவே 4 பேர் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துள்ளனர். நானும் ஹார்ட் அட்டாக் வந்து பிழைத்திருக்கிறேன்.
இப்படி செய்தியை பரப்பி வியூவர்சை கொண்டு வரவேண்டும் என்கிற அவசியம் உங்களுக்கு வேண்டாம். தயவு செய்து இதுபோன்று செய்திகளை பரப்பாதீர்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மரியாதை செய்துவிட்டு தான் செல்ல வேண்டும் என கூறி குணாளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
- வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39),இவர் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் பேட்டரி கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் டி. வி. நகர் பகுதியை சேர்ந்த குணால் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17-ந் தேதி இரவு கடையை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் செல்ல முற்பட்டபோது எம்.ஜி. ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் அவரது கூட்டாளிக ளான சபரீசன், ஜாஸ்மி ன்,அமீர்,மற்றும் 5-க்கும் மேற்ப ட்டோர் திடீரென கடை ஊழியர் குணாளின் வாகனத்தை நிறுத்தி இந்த தெருவில் நீ வேகமாக செல்லக்கூடாது எங்களை பார்த்துவிட்டு மரியாதை செய்துவிட்டு தான் செல்ல வேண்டும் என கூறி குணாளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்ட கடை உரிமையாளர் பா.ம.க. நிர்வாகி ரமேஷ் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகியோர் ஏன் எங்கள் கடையில் வேலை செய்யும் நபரை அடிக்கிறீர்கள் என கேட்டதற்கு ரமேஷ் மற்றும் பரமேஸ்வரியையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்த மோட்டார் சைக்கிள்,கடை போர்டு போன்ற பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அருகில் இருந்தவர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர். இது சம்பந்தமாக பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து சபரிசன் மற்றும் ஜாஸ்மின் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.மேலும் இது சம்பந்தமாக தகவல் அறிந்த மயிலம் பா.ம.க. எம்.எல்.ஏ. சிவக்குமார் பா.ம.க. நிர்வாகி ரமேஷ் மற்றும் பரமேஸ்வரி ஆகியோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில் முக்கிய குற்றவாளியான பார்த்திபனை உடனடியாக கைது செய்ய வேண்டும். வணிகர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது வேதனையாக உள்ளது. உடனடியாக போலீசார் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
- செல்பி எடுப்பதற்காக அவரது தோள்களில் கைகளை வைக்க முயன்றார்.
- டி.கே.சிவகுமார் காங்கிரஸ் தொண்டரை பளார் என அறைந்தார்.
பெங்களூரு:
கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் கடந்த சனிக்கிழமை தார்வாட் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினோதா அசூட்டிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது ஹாவேரி சவனூர் நகரில் பிரசார பேரணியில் பங்கேற்பதற்காக காரில் இருந்து இறங்கியபோது அவரை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் டி.கே.சிவகுமாரால் அங்கிருந்து மெதுவாகதான் நகர முடிந்தது.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த நகராட்சி உறுப்பினரும், காங்கிரஸ் தொண்டருமான அல்லாவுதீன் மணியார் என்பவர் ஆர்வத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமாருடன் செல்பி எடுப்பதற்காக அவரது தோள்களில் கைகளை வைக்க முயன்றார். இதனால் டி.கே.சிவகுமார் அந்த காங்கிரஸ் தொண்டரை பளார் என அறைந்தார்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அல்லாவுதீன் மணியாரை கூட்டத்தில் இருந்து ஒதுக்கி தள்ளி டி.கே.சிவகுமாரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த காட்சி காமிராக்களில் பதிவானது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டி.கே.சிவகுமார் காங்கிரஸ் உறுப்பினரை அறைந்த சம்பவம் குறித்து பா.ஜனதா ஐ.டி.விங் தலைவர் அமித் மாளவியா எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் டி.கே.சிவகுமார் ஒருவரை தாக்குவது இது முதல் முறையல்ல. டி.கே.சிவகுமாரின் தோளில் கை வைத்தது காங்கிரஸ் மாநகர உறுப்பினர் செய்த குற்றமா? காங்கிரஸ்காரர்கள் ஏன் காங்கிரசுக்கு வேலை செய்ய விரும்புகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? அவர்களின் தலைவர்கள் அவர்களை அறைகிறார்கள்.
அவமானப்படுத்துகிறார்கள். போட்டியிட டிக்கெட் கொடுக்கவில்லை, ஒதுக்கப்படுகிறார்கள். அவர்கள் பக்கத்தில் சுயமரியாதை இல்லையா? என பதிவிட்டுள்ளார்.
- இரவு நேர ரெயிலில் நெருக்கியடித்து ஏறி வீடு திரும்பினர்.
- வீடியோவாக வெளியிட அதை சமூக வலைத்தள ரசிகர்களும் வைரலாக்கினர்.
மும்பையில் ரெயில் கூட்ட நெரிசலை பயணிகள் கச்சேரி பாடி மகிழ்ச்சியாக மாற்றினர். இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஷ் ராக் என்ற இசைக்குழு மும்பையில் 3 நாட்கள் இசைக் கச்சேரி நடத்தியது. அதில் கலந்து கொண்டவர்கள், இரவு நேர ரெயிலில் நெருக்கியடித்து ஏறி வீடு திரும்பினர்.
இருக்கை கிடைக்காமல், நெரிசலில் நின்று வந்த பயணிகளில் ஒருவர் இசைக் கச்சேரியில் கேட்ட பாடல்களை செல்போனில் ஒலிக்கச்செய்து பாட ஆரம்பிக்க, அசதி தெரியாமல் பயணிக்க மற்ற பயணிகளும் கூட்டு சேர்ந்து 'கோரஸ்' பாட, பயணமே புதிய கச்சேரியாக களைகட்டியது.
இதை பயணி ஒருவர் தனது வலைத்தள பக்கத்தில் வீடியோவாக வெளியிட அதை சமூக வலைத்தள ரசிகர்களும் வைரலாக்கினர். நெரிசலான பயணத்தை நெகிழ்ச்சியாக மாற்றிய அந்த வீடியோ 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் விரும்பப்பட்டு, 20 லட்சத்துக்கும் மேலானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது.
- வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வலைத்தளவாசிகளிடம் சிரிப்பை வரவழைத்தது.
- இப்படி தேவையற்ற யோசனைகளை யாரும் செயல்படுத்தாதீர்கள் என்று பலரும் கருத்துகளை பதிவிட்டனர்.
சமூக வலைத்தளங்களில் எளிய தீர்வுகள் என்ற பெயரில் ஏராளமான யோசனைகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் பல பயனளிப்பதில்லை என்பதை அனுபவத்தில்தான் உணர முடியும். அப்படி ஒரு பெண், எளிமையான முறையில் முடியை நேராக்க யுத்தி சொல்வதாக கூறி, ஆபத்தை சந்தித்தார்.
அவர் வீட்டில் சமையல் அறையில் பயன்படுத்தும் இரும்பு இடுக்கியைக் கொண்டு முடியை நேராக்கலாம் என்ற யோசனையை செயல்படுத்தினார். இரும்பு இடுக்கியை அடுப்பில் சூடாக்கிவிட்டு அதை முடியை நேராக்கும் எலக்ட்ரிக் கருவி போல பயன்படுத்த முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி சோதனையில் முடிந்தது. சூடான இடுக்கி முடியை நேராக்குவதற்குப் பதிலாக கத்தையாக முடியை துண்டாக்கிவிட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் பதற்றம் அடைந்தபடியே இடுக்கியை மீண்டும் நெருப்பில் காட்ட, கத்தரிக்கப்பட்ட முடி பற்றி எரியத் தொடங்கியது. பதறிப்போன அவர், அதை தூக்கிப்போட்டதும் வீடியோ முடிவடைகிறது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வலைத்தளவாசிகளிடம் சிரிப்பை வரவழைத்தது. இப்படி தேவையற்ற யோசனைகளை யாரும் செயல்படுத்தாதீர்கள் என்று பலரும் கருத்துகளை பதிவிட்டனர். வீடியோ 3½ லட்சம் பேரின் விருப்பங்களை பெற்றதோடு, மேலும் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது.
- செல்போன் பேசியபடியே நடந்து செல்லும் பெண் பேனரை கவனிக்காமல் செல்கிறார்.
- செல்போனுக்கு அடிமையானதன் விளைவு என பலரும் பதிவிட்டனர்.
செல்போனை அனைவருமே பயன்படுத்தி வரும் நிலையில், சிலர் போனுக்கு அடிமையாகும் சம்பவங்களையும் காண முடிகிறது. நடக்கும் போது தொடங்கி வாகனம் ஓட்டும் போதும் கூட சிலர் செல்போன் பேசியபடியே செல்வதும், இதனால் அவர்கள் விபத்துக்குள்ளான சம்பவங்களும் நடந்துள்ளது.
அது போன்ற ஒரு சம்பவம் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்துள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை கையில் வைத்து கொண்டு செல்போன் பேசியபடியே நடந்து செல்கிறார். அப்போது சாலையோரம் ஒரு பாதாள குழி உள்ளது. அதில் பொது மக்கள் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக பேனரும் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் செல்போன் பேசியபடியே நடந்து செல்லும் பெண் பேனரை கவனிக்காமல் செல்கிறார். திடீரென அவர் குழந்தையுடன் அந்த பாதாள குழிக்குள் விழுவது போன்று அதிர்ச்சியான காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த தாயை விமர்சித்தனர். செல்போனுக்கு அடிமையானதன் விளைவு என பலரும் பதிவிட்டனர்.
- வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து அந்த பெண்ணிடம் செல்போனை பறிக்க முயற்சிக்கிறார்.
- வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஒரு பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் செல்போனுடன் சேர்த்து அந்த பெண்ணையும் இழுத்து சென்ற அதிர்ச்சி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அதில், ஒரு இளம்பெண் செல்போனில் பேசிக்கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். இதை நோட்டமிட்ட வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து அந்த பெண்ணிடம் செல்போனை பறிக்க முயற்சிக்கிறார். அவர் கொடுக்க மறுக்கவே, போனுடன் அந்த பெண்ணையும் சேர்த்து இழுக்கிறான்.
அப்போதும் அந்த பெண் செல்போனை விடாமல் பிடித்து கொள்ள திருடன் தனது மோட்டார் சைக்கிளில் அந்த பெண்ணை இழுத்து செல்கிறான். பின்னர் அந்த பெண்ணை விட்டுவிட்டான். அதன் பிறகு பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் காட்சிகள் உள்ளன. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
- மொத்தம் 7 பேரின் நெற்றியிலும் குங்குமம் பூசும் காட்சிகள் உள்ளது.
- புனிதமான திருமண மரபுகளை இதுபோன்று கேலி செய்வது கண்டனத்திற்குரியது என பதிவிட்டனர்.
திருமண விழாவின் போது நடைபெறும் சில வித்தியாசமான சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு. அது போன்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. திருமணத்தின் போது மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமம் வைப்பது வழக்கம். ஆனால் இந்த வீடியோவில், பாரம்பரிய முறைப்படி திருமணம் நடக்கிறது.
இதற்காக திருமண மண்டபம் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. மணமேடையில் திருமண சடங்குகள் நடைபெறுகிறது. அப்போது மணமகன் மணப்பெண்ணுக்கு குங்குமம் வைக்கிறார். தொடர்ந்து அவரது அருகே இருக்கும் மணப்பெண்ணின் சகோதரிகள் 6 பேர் மற்றும் சகோதரர் ஒருவர் என மொத்தம் 7 பேரின் நெற்றியிலும் குங்குமம் பூசும் காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 1.13 கோடி பார்வைகளை குவித்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் மணமகனின் செயலை விமர்சித்து பதிவிட்டனர். புனிதமான திருமண மரபுகளை இதுபோன்று கேலி செய்வது கண்டனத்திற்குரியது என பதிவிட்டனர்.
- பதிவுகள், மீம்கள் உலகெங்கிலும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
- கூகுள் தேடலில் 'ஆண்டில் மிக நீண்ட மாதம் எது?' என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது.
2025 ஜனவரி மாதம் இன்று [31 ஆம் தேதியுடன்] முடிவடைகிறது. இந்த ஆண்டில் 31 நாட்களை கடப்பதற்குள்ளாகவே பலருக்கு போதும் போதும் என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.
மிக நீண்ட மாதமாக மக்கள் இதை கருதுகின்றனர். எனவே சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான பதிவுகள், மீம்கள் உலகெங்கிலும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் உள்ள பயனர்கள் ஜனவரி மாதம் 31 நாட்களுக்குப் பதிலாக 65 நாட்களைக் கொண்டிருப்பதைப் போல் தோன்றுவதாக மலைப்பு தெரிவித்து வருகின்றனர். சிலர் ஜனவரியை நகைச்சுவையாக மாதங்களின் "திங்கட்கிழமை" என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கூகுள் நிறுவனமும் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் மீம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கூகுள் தேடலில் 'ஆண்டில் மிக நீண்ட மாதம் எது?' என்ற கேள்வுக்கு பதிலாக, 'ஆண்டின் நீண்ட மாதம் ஜனவரி, பிற மாதங்களை போல 31 நாட்களை மட்டுமே கொண்டுள்ள போதும் ஜனவரி முடிவடையாமல் காலாகாலத்துக்கும் நீண்டு கொண்டே செல்கிறது' என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளது. இதை பகிர்ந்து, ஜனவரி முடியவே மாட்டேன் என்கிறது என்று கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது.

- திரைப்படங்களின் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் எடுத்துள்ளனர்.
- இப்பகுதியில் கேரளா வனத்துறையினர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்
பொள்ளாச்சி:
கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி, உலக அளவில் பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் அருவியை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறைனர் அனுமதி அளித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களின் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் இந்த நீர்வீழ்ச்சியில் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை கடமான் அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று உணவு கேட்டு நிற்கும் வீடியோ வெளியாகி உள்ளது. சுற்றுலா பயணிகள் எடுத்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இப்பகுதி பாதுகாக்கபட்ட பகுதி என்பதாலும், வனவிலங்குகள் நடமாட்டம் நிறைந்த பகுதி என்பதாலும் கேரளா வனத்துறையினர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- தூய்மைப் பணியாளர் சிலர் குப்பையை கொட்டி செல்வது வாடிக்கையாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோவை:
கோவை ஆர்.எஸ். புரம் ராமச்சந்திரா ரோட்டில் எல்இடி கடை நடத்தி வருபவர் ஜேம்ஸ். இவர் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர். இவரிடம், கடந்த 4 ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது 20 ஆம் தேதிக்கு மேல் வாங்க தருகிறேன் என கூறியுள்ளார். 500 ரூபாய் கேட்டு அவர் தொந்தரவு செய்யவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவர் கடை அருகே இருந்த குப்பையை எடுத்து, கடை முன்பு போடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் பணம் கேட்டு, கொடுக்காத கடை முன்பு, தூய்மைப் பணியாளர் சிலர் குப்பையை கொட்டி செல்வது வாடிக்கையாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் வலுக்கட்டாயமாக, வியாபரிகளிடம் தீபாவளி பணம் கேட்கும் ஊழியர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, உண்மையாக பணிபுரியும் தூய்மைப் பணியாளர் மதிக்கப்படுவார்கள்.
- இந்த வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்து விபரம் தெரியவில்லை.
- 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் அந்த வீடியோ பெற்றுள்ளது.
சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகள் இயற்கையான அவற்றின் வாழ்விடங்களில் வாழக் கூடியவை. மிகவும் ஆபத்தான விலங்குகளாக கருதப்படும் அவைகளை செல்ல பிராணிகளாக வீடுகளில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரண்டு சிங்கக் குட்டிகளை செல்ல பிராணியாக வளர்த்து வரும் நபர் குறித்த வீடியோ ஒன்று இன்ஸ்ட்ரகிராம் வளைதளத்தில் பகிரப்பட்டு வைரலானது. அந்த வீடியோவில் உள்ள நபர் அருகே கார் டிக்கியில் சிங்க குட்டிகள் அமர்ந்திருக்கின்றன. அப்போது அவர் தனது கைகளால் அந்த சிங்க குட்டிகளை செல்லமாக தடவிக் கொடுக்க முயலுகிறார்.
சில வினாடிகளில் ஒரு சிங்கக் குட்டி ஆக்ரோஷமாக சீறியவுடன் அவர் கையை எடுத்து விடுகிறார். இந்த வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்து விபரம் தெரியவில்லை. இதுவரை 2 லட்சத்து 74 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் அந்த வீடியோ பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பலர் இது ஆபத்தான செயல் என்றும், அந்த விலங்குகள் விளையாடும் பொம்மைகள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். சிலர் இது முட்டாள்தனம் என்றும், காட்டு விலங்குகள் மீதான துஷ்பிரயோகம் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.