search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூறை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளை காணவில்லை என முருகவேல் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார்.
    • மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில் பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் விசாரணை நடத்தினார்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை அருகே உள்ள நம்பிக்கை நகரை சேர்ந்தவர் மதன் (வயது 28).

    இவரும், பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த முருகவேல் மகள் உதய தாட்சாயினி(23) என்பவரும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில், பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன்தினம் பாளை ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதனிடையே மகளை காணவில்லை என முருகவேல் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

    இந்த தகவலை அறிந்த பெண் வீட்டாரின் உறவினர்கள் நேற்று மாலையில் மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா தலைமையில் சென்ற பெண்ணின் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் அலுவலகத்தை சூறையாடினர்.

    இந்த தாக்குதலில் அங்கிருந்த வக்கீல் பழனி, அருள்ராஜ் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். தொடர்ந்து உதய தாட்சாயினிக்கு திருமணம் செய்து வைத்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில் பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து பெண்ணின் தந்தை முருகவேல்(55), பெண்ணின் அண்ணன் சரவணக்குமார்(27), தாய்மாமாவான புதுப்பேட்டையை சேர்ந்த சங்கர்(35), உறவினர்கள் குரு கணேஷ்(27), மதுரை யோகீஸ்வரன்(23), பெண்ணின் தாய் சரஸ்வதி(49), மார்த்தாண்டத்தை சேர்ந்த சித்தி சுமதி(44), பாட்டி ராஜிலா(75), பெரியம்மா புதுப்பேட்டையை சேர்ந்த அருணாதேவி(51), மதுரை பெரியம்மா வேணி(52), அக்காள்கள் ஸ்டெல்லா(29), சூர்யா(32) ஆகிய 12 பேரை கைது செய்தனர்.

    மேலும் இந்த பிரச்சனையில் தொடர்புடைய பந்தல் ராஜாவும் வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர்கள் மீது அத்துமீறி கும்பலாக நுழைவது, மிரட்டல், சூறையாடுவது, பெண்களை தவறான வார்த்தையில் பேசியது உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் பெண்ணின் பாட்டி ராஜிலா வயது மூப்பின் காரணமாகவும், பெண்ணின் அக்கா சூர்யா கைக்குழந்தையுடன் இருப்பதன் காரணமாகவும் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. மற்ற 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • வயலூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக வீடு சூறையாடப்பட்டது
    • தாக்கப்பட்ட பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்

    அகரம்சீகூர், 

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வயலூர் கிராமத்தில் வசிக்கும் தங்கவேல் பூசாரியின் மகன்கள் முருகேசன், மாணிக்கம். இருவரிடையே சொத்து பிரிப்பதில் தகராறு காரணமாக முன் விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முருகேசன் மருமகன் மோகன் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து, மாணிக்கம் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.அப்போது மாணிக்கம் மனைவி பூங்காவனம் (வயது 60) என்பவரையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பூங்காவனம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த வந்த அகரம்சீகூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ரூ. 5 லட்சம் பணம்-நகைகள் திருட்டு நடந்ததாக போலீசில் மனைவி பரபரப்பு புகார் செய்தார்.
    • பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள கருவனூரை சேர்ந்தவர் பொன்னம்பலம் (வயது65). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2001-2006-ம் ஆண்டு வரை சமயநல்லூர் (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவில் உற்சவ விழா தொடங்கியது. இதில் முதல் மரியாதை யாருக்கு? என்பது தொ டர்பாக பொன்னம்பலம் தரப்புக்கும், தி.மு.க. கிளைச் செயலாளர் வேல்முருகன் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேல்முருகன் தரப்பினர், பொன்னம்பலம் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தினர். வீட்டில் நின்ற காருக்கு தீ வைத்தது மட்டுமின்றி, அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டுக்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    கோவில் மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய சத்திரப்பட்டி போலீசார், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தி.மு.க.பிரமுகர் வேல் முருகன், ராஜபாண்டி, செந்தமிழன், கலைவாணன், ராஜ்மோகன், படையப்பா, சங்கர், அருண் உள்பட 18பேர் மீதும், வேல்முருகன் தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் பொன்னம்பலம்,

    அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் மற்றும் பழனிவேல், சின்னகருப்பு, விஜய், வேலுமணி உள்பட 20பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    அவர்களில் வேல்மு ருகன், செந்தமிழன், ராஜ்மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம், அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 6பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மனைவி பழனியம்மாள், சத்திரப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தங்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டை, எதிர்தரப்பினர் சூறையாடிய போது பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.5லட்சம் ரொக்கப்பணம் மற்றும் பத்திரப்பதிவு ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 பேர் மீது வழக்கு; வாலிபர் கைது
    • வீட்டுடன் சேர்த்து சிறிய கடை வைத்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளையை சேர்ந்தவர் ஜான்ரோஸ் (வயது 70). இவர் வீட்டுடன் சேர்த்து சிறிய கடை வைத்துள்ளார்.

    இவரது கடையில் பலரும் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதில் சிலர் கடனுக்கு வாங்குவதுண்டு. அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வின் சிஜோ (24) என்பவரது தாயாரும் பொருட்களை கடனுக்கு வாங்கினாராம்.

    இந்த நிலையில் அஸ்வின் சிஜோவிடம், அவரது தாயார் வாங்கிய கடன் தொகையை ஜான்ரோஸ் கேட்டுள்ளார். இது அஸ்வின் சிஜோவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது. இந்த முன் விரோதத்தில் அஸ்வின் சிஜோ தனது நண்பர்களுடன் ஜான்ரோஸ் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

    அவர்கள், வீடு புகுந்து ஜான்ரோசை கத்தியை காட்டி மிரட்டிய தாகவும் கடையில் உள்ள பொருட்களை சூறையாடியதாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணை நடத்திய தக்கலை போலீசார், அஸ்வின் சிஜோ, வினீத்(24), அபினேஷ் (19), ஆகாஷ் (23) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் அபினேஷ் கைது செய்யப்பட்டார்.

    ×