என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய பெண்கள் அணி"
- இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரேயங்கா பட்டீல் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
- இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மோங் கோக்:
23 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஹாங்காங்கில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தொடரில் மழை காரணமாக 8 ஆட்டங்கள் கைவிடப்பட்டன. இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஒரே ஒரு லீக் ஆட்டத்தில் (ஹாங்காங்குக்கு எதிராக) மட்டுமே ஆடியது.
மோங் கோக் நகரில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தினேஷ் விரிந்தா 36 ரன்னும், கனிகா அகுஜா ஆட்டம் இழக்காமல் 30 ரன்னும் திரட்டினர்.
பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி, இந்திய வீராங்கனைகளின் மாயாஜால சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் 96 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரேயங்கா பட்டீல் 4 விக்கெட்டும், மன்னத் காஷ்யப் 3 விக்கெட்டும், கனிகா அகுஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- எஸ்டோனியா அணியை 232-229 என வீழ்த்தி தங்கம் வென்றது.
- ஏற்கனவே 2 முறை தங்கம் வென்ற நிலையில், 3-வது முறையாக தங்கம் வென்றது.
துருக்கி:
துருக்கியில் வில்வித்தை உலகக் கோப்பை (ஸ்டேஜ்-3) நடைபெற்றது. இதில் காம்பவுண்ட் பிரிவில் 3 பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி எஸ்டோனியா அணியை 232-229 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.
உலகின் நம்பர் ஒன் காம்பவுண்ட் பிரிவு பெண்கள் அணியாக திகழும் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி உலகக் கோப்பை ஸ்டேஜ்-1 மற்றும் ஸ்டேஜ் 2 பிரிவுகளிலும் தங்கம் வென்றனர். கடந்த ஆண்டு இறுதியில் பாரிசில் நடந்த போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியிருந்தனர்.
- அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 435 ரன்கள் குவித்தது.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய ஆண்கள் அணி 418 ரன்கள் குவித்துள்ளது.
ராஜ்கோட்:
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இரு மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 435 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளாக மந்தனா (135), பிரதிகா ராவல் (154) சதம் அடித்து அசத்தினர். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
மேலும் அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா 4 -வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் நியூசிலாந்து அணி உள்ளது.
இதனையெல்லாம் விட ஒருநாள் போட்டியில் ஆண்கள் இந்திய அணி குவித்த ரன்களை விட பெண்கள் அணி ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. ஆண்கள் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 418 எடுத்ததே அதிக ரன்களாக இருந்தது. அதனை தற்போது பெண்கள் முறியடித்துள்ளது.
- கோ கோ உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள் அணி, நேபாளம் அணியுடன் மோதியது.
- இந்திய பெண்கள் அணி 78 -40 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் கோ கோ உலகக் கோப்பை 2025 இறுதி போட்டி இன்று நடைபெற்றது.
இதில் இந்திய பெண்கள் அணி, நேபாளம் பெண்கள் அணியுடன் மோதியது.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய பெண்கள் அணி 78 -40 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி முதல் முறையாக கோ கோ உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
இந்திய அணியை சேர்ந்த சைத்ரா இப்போட்டியின் சிறந்த வீராங்கனையாக தேர்வானார்.