search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதவியேற்பு நிகழ்ச்சி"

    • அனுர குமார திசநாயகவிற்கு பல தோல்விகளுக்கு பிறகு ஜே.வி.பிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.
    • ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுத தயாராக நிற்கிறோம்.

    இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றுள்ளார்.

    இதன்மூலம், இலங்கையின் 9வது அதிபராக நாளை காலை 9 மணிக்கு அனுர குமார திசநாயக பதவியேற்கிறார். அனுர குமார திசநாயகவிற்கு பல தோல்விகளுக்கு பிறகு ஜே.வி.பிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.

    கொழும்பு, அம்பாந்தோட்டை, கம்பஹா உள்ளிட்ட 158 மாவட்டங்களில் அனுர குமார திசநாயக முதலிடம் பிடித்துள்ளார்.

    அதிபர் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, " நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம்" என்று அனுர குமார திசநாயக தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், " சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்த புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும்.

    நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி இந்த பகிரப்பட்ட வலிமை மற்றும் பார்வையிலிருந்து எழும். ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுத தயாராக நிற்கிறோம்" என்றார்.

    • மேலூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் காமாட்சியம்மன் கோவிலில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • அவர்கள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கோவிலில் பதவியேற்றுக் கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கல்யாண சுந்த ரேஸ்வரர் காமாட்சியம்மன் (சிவன் கோவில்) அறங்காவலர் குழு தலைவராக, முல்லை பெரியாறு வைகை ஒருபோக பாசன விவசாயிகள் சங்க தலைவர் முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மேலும் குழு உறுப்பினர்களாக காந்திஜி பூங்காவை சேர்ந்த ஸ்தபதி மகேந்திரன், மேலூர் மலம்பட்டி விஜயபாண்டியன், மற்றும் முன்னாள் சொக்கம்பட்டி கவுன்சிலர் கலையரசி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கோவிலில் பதவியேற்றுக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின், வல்லாள பட்டி பேரூ ராட்சி தலைவர் குமரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதா அப்பாஸ், மேலும் மேலும் யூனியன் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டி, ராஜராஜன், உதவி ஆணையர் செல்வி, செயல் அலுவலர் வாணி மகேஸ்வரி, அர்ச்சகர் தட்சிணா மூர்த்தி, பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    • போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
    • முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் பதவியில் அமர்த்தி சிறப்புரையாற்றினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அரிமா சங்க பதவியேற்பு நிகழ்ச்சி போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் 2023-24-ம் ஆண்டிற்கான போச்சம்பள்ளி நகர அரிமா சங்கத் தலைவராக காமராஜர் அகாடமி நிறுவனர் கௌதமை அரிமா சங்கத்தின் முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் பதவியில் அமர்த்தி சிறப்புரையாற்றினார்.

    மேலும் அரிமா சங்க செயலாளராக நிர்வாகம் பிரபு, சேவை செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் பாரதி குமரன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆளுநர் செல்வராஜ், முதலாம் துணை மாவட்ட ஆளுநர் செந்தில்குமார், லியோ ஒருங்கிணைப்பாளர் முரளி, மாவட்ட அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் போச்சம்பள்ளி நகர அரிமா சங்கத்தைச் சார்ந்த பட்டய தலைவர் தாமரை ச்செல்வன், வட்டாரத் தலைவர் ராஜா, திருநாவுக்கரசு, சுப்பிரமணி, ஜெயவேல், செந்தில், சரவணன், பழனி, பிள்ளையார், சிவராஜ், கணேசன், ராமன், செல்வம், போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சார்பாக சரவணன் சாந்த மூர்த்தி புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கொண்டனர்.போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.

    ×