search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி ரெயில் நிலையம்"

    • கும்பமேளாவில் குளிக்க செல்ல முயன்றபோது 39 பக்தர்கள் பலியான கோர சம்பவம் நடந்துள்ளது.
    • மக்கள் பலியானதற்கு ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெல்லி ரெயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல முற்பட்ட பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது.

    ஏற்கனவே கும்பமேளாவில் குளிக்க செல்ல முயன்றபோது 39 பக்தர்கள் பலியான கோர சம்பவம் நடந்துள்ளது.

    கும்பமேளாவில் 30, 40 கோடி பேர் குளித்தார்கள் என்று சாதனையாக கூறுகிற பா.ஜ.க. அரசு எத்தனை பேர் கும்பமேளாவில் இறந்தார்கள் என்ற முழு விவரத்தை இன்று வரை வெளியிடத் தயாராக இல்லை.

    இன்னும் பலர் காணாமல் போன விவரமும் தெரியாத நிலை உள்ளது. இதற்கெல்லாம் உத்தரபிரதேச பா.ஜ.க. அரசு பொறுப்பேற்க வேண்டும்.

    குறிப்பாக கும்பமேளாவில் நீராட சென்றவர்கள் பலியானதற்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தலைநகர் டெல்லியில் ரெயில் நிலையத்தில் மக்கள் பலியானதற்கு ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு காரணமான இவர்கள் பொறுப்பை ஏற்று பதவி விலகுவார்களா?

    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அநாகரீகமான முறையில் அழைத்து வரப்பட்டதை தடுக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடியை வன்மையாக கண்டிக்கிறேன்.

    மேலும், பல இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற செய்தி அனை வரையும் மன வேதனையில் ஆழ்த்தி வருகிறது. இத்தகைய அவலநிலைக்கு நரேந்திர மோடி என்ன தீர்வு காணப் போகிறார் என்பதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரயில்வே போலீஸ் ரீனா பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார்.
    • பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா செல்ல புறப்பட்ட மக்கள் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கினர்.

    இதில் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து டெல்லி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலுக்கு பின்னர், மகா கும்பமேளா செல்லும் வழித்தடத்தில் கூடுதலாக 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.

    இந்நிலையில் டெல்லி ரெயில் நிலையத்தில் தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரீனா என்ற ரெயில்வே போலீஸ் (RPF) கான்டபிள் தனது கடமையை செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    18 பேர் உயிரிழந்த ரெயில் நிலையத்தின் 16 ஆவது நடைமேடையில் ரீனா தனது குழந்தையை சுமந்தவாறு பயணிகளை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

    பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவரது அர்ப்பணிப்பைக் கண்டு, பல பயணிகள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வணக்கம் செலுத்தி செல்கின்றனர்.  

     

    • இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்.
    • ஷ்ரவண மாதத்தில் அசைவ உணவை உண்பதன் மூலம் சனாதன தர்ம விதிகளை புறக்கணிக்கிறார்கள்

    உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

    அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். ரெயில்வே துறையில் நிர்வாக தோல்வியே கூட்டநெரிசலுக்கு காரணம் என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்நிலையில் கூட்டநெரிசல் குறித்து கருத்து தெரிவித்த பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவரும், முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் சர்ச்சை ஒன்றை கிளப்பினார்.

    பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, மிகவும் சோகமான சம்பவம் நடந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். இது ரெயில்வேயின் தவறு. ரெயில்வேயின் தவறான நிர்வாகத்தாலும் அலட்சியத்தாலும் இவ்வளவு பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.

    மேலும் மகா கும்பமேளாவில் நிலவும் கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த கும்பமேளாவின் அர்த்தம் என்ன, கும்பமேளாவே அர்த்தமற்றது" என்றார்.

    இதை கையில் எடுத்த பீகார் பாஜக செய்தித் தொடர்பாளர் மனோஜ் சர்மா, ஆர்ஜேடி தலைவர்கள் எப்போதும் இந்துக்களின் மத உணர்வுகளை அவமதித்து வந்துள்ளனர்.

    மகா கும்பமேளாவை 'அர்த்தமற்றது' என்று ஆர்ஜேடி தலைவர் கூறியது, இந்து மதம் குறித்த அக்கட்சியின் மனநிலையை அம்பலப்படுத்தியுள்ளது. அவர்கள்(ஆர்ஜேடி) ஷ்ரவண மாதத்தில் அசைவ உணவை உண்பதன் மூலம் சனாதன தர்ம விதிகளை புறக்கணிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

     

    • பிளாட்பார்ம் 12ல் காத்திருந்த கூட்டமும், வெளியே காத்திருந்த கூட்டமும் 16வது பிளாட்பார்மை நோக்கி சென்றது.
    • ரெயில்வே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1,500 பொது(UNRESERVED) டிக்கெட்டுகளை விற்றது

    இழப்பீடு

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் செல்ல புறப்பட்ட மக்கள் நேற்று(சனிக்கிழமை) இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கினர்.

    இதில் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டநெரிசலுக்கு ரெயில்வே துறையின் தோல்வியே காரணம் என மக்களை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    'உயர்மட்ட' விசாரணை

    இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    பயணிகளின் திடீர் அதிகரிப்பு பீதியை ஏற்படுத்தியது என்று ரெயில்வே அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

    இந்நிலையில் கூட்டநெரிசல் ஏற்பட ரெயில் நிலையத்தில் நிலவிய பல்வேறு குளறுபடிகளே காரணம் என சம்பவத்தை நெரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

     

     தாமதமான ரெயில்கள்

    மகா கும்பமேளாவிற்குச் செல்ல, ரெயில்களில் ஏற கூட்டம் கூடியிருந்தது. பிரயாக்ராஜ் செல்லும்  ரெயில்கள் தாமதமாக வந்ததால் நிலைமை மோசமடைந்து கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது என்று கூறப்படுகிறது.

    பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ், சுதந்திர சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி தாமதமாக வந்தன. ரெயில்களில் ஏறுவதற்காக பயணிகள், 12,13, 14வது நடைமேடையில் கூடியிருந்தனர்.

    ரெயில் நிலையத்தில் வேலை செய்யும் போர்ட்டர் (கூலி) ஒருவர் கூறுகையில், பிரயாக்ராஜ் சிறப்பு ரயில் 12வது பிளாட்பார்மில் இருந்து புறப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த ரெயில் 16வது பிளாட்பார்மிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

    எனவே பிளாட்பார்ம் 12ல் காத்திருந்த கூட்டமும், வெளியே காத்திருந்த கூட்டமும் 16வது பிளாட்பார்மை நோக்கி சென்றது. மக்கள் ஒருவரை ஒருவர் மோதத் தொடங்கி எஸ்கலேட்டர் மற்றும் படிக்கட்டுகளில் விழுந்தனர். நான் 1981 முதல் கூலியாக வேலை செய்து வருகிறேன், ஆனால் இதுபோன்ற கூட்டத்தை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று கூறினார்.

     

    தடுக்கப்பட்ட படிக்கட்டுகள்:

    கூட்டத்தை நிர்வகிக்க 14 மற்றும் 15வது பிளாட்பார்ம்களில் ஒரு படிக்கட்டு அடைக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரயில் தாமதம் தொடர்ந்ததால், படிக்கட்டுகளில் அதிகமான பயணிகள் கூடத் தொடங்கினர்.

    நெரிசல் அதிகமாகி, மக்கள் ரெயிலில் ஏறுவதற்காக படிக்கட்டுகளை நோக்கி முன்னே இருப்பவர்களை தள்ளினர். அந்தத் தள்ளுமுள்ளு காரணமாக பலர் கீழே விழுந்து நெரிசல் ஏற்பட்டது. நடைமேடையில் கூட்டம் அதிகரித்ததால் மற்றவர்கள் மூச்சுத் திணறினர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஒரு மணி நேரத்துக்கு 1,500 பொது டிக்கெட்டுகள் விற்பனை:

    ரெயில்வே தலைமை வணிக மேலாளர் கூற்றுப்படி, ரெயில்வே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1,500 பொது(UNRESERVED) டிக்கெட்டுகளை விற்றது. இதனால் ரெயில் நிலையத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவு கூட்டம் காணப்பட்டது. நடைமேடை எண். 14 மற்றும் நடைமேடை எண். 16 அருகே உள்ள எஸ்கலேட்டர் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    • கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
    • 'புது டெல்லி ரயில் நிலையத்தில் "ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" நடந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    உத்தரப் பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசல் குறித்து விசாரணை நடந்த உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா இரங்கல் செய்தி வெளியிட்டார். முதலில் அந்த செய்தியில் 'கூட்டநெரிசல்' என்று சொல் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பின்னர் அதை நீக்கி துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று மட்டும் மறுபதிவு செய்துள்ளார்.

    அவரது திருத்தப்பட்ட எக்ஸ் பதிவில்,

    'புது டெல்லி ரயில் நிலையத்தில் "ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" நடந்துள்ளது. தலைமைச் செயலாளர் மற்றும் காவல் ஆணையரிடம் பேசி நிலைமையை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். நிவாரணப் பணியாளர்களை அனுப்புமாறு தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன்.

    மீட்புப் படையினர் மற்றும் காவல் ஆணையர் சம்பவ இடத்தில் இருக்கவும், நிவாரண நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    நான் தொடர்ந்து நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக முதல் வரியில், 'புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்டநெரிசல் மற்றும் குழப்பம் காரணமாகப் பல உயிர்கள் பறிபோன "ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" நடந்துள்ளது என்று எழுதியிருந்தார். 

     

    • ரெயில் நிலையத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    • கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

    டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    நேற்று இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    • சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவு.

    உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    உத்தர பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கிய படுகாயமடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    முன்னதாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "புதுடெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது அறிந்து துன்பமடைந்தேன். தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்த அனைவருடன் என் எண்ணங்கள் உள்ளன."

    "காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த நெரிசலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி வருகின்றனர்," என பதிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • டெல்லி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
    • கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட விடுமுறை நாட்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது.

    அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உத்தர பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்

    இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புதுடெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது அறிந்து துன்பமடைந்தேன். தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்த அனைவருடன் என் எண்ணங்கள் உள்ளன. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த நெரிசலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • டெல்லி ரெயில் நிலையத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    • இந்த நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

    புதுடெல்லி:

    புதுடெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் 14 மற்றும் 15 நடைமேடைகளில் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். பெண்கள் பலர் மயக்கம் அடைந்தனர்.

    கும்பமேளா செல்வதற்காக ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணிகள் குவிந்ததால் டெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது.

    தகவலறிந்து 4 தீயணைப்பு வண்டிகளில் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டன. நெரிசலில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி துணை நிலை ஆளுநர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சாக்‌ஷி அகுஜா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • மின்வயர் அறுந்து மழை நீரில் விழுந்து கிடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    புதுடெல்லி:

    கிழக்கு டெல்லியில் உள்ள பரீத் விஹார் பகுதியை சேர்ந்தவர் சாக்ஷி அகுஜா (வயது 34). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இவர் குடும்பத்தினருடன் சண்டிகர் செல்வதற்காக புதுடெல்லி ரெயில் நிலையம் வந்தார்.

    டெல்லியில் கடந்த சனிக்கிழமை இரவு முதலே கனமழை பெய்ததன் காரணமாக பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருந்தது. ரெயில் நிலையத்திலும் தண்ணீர் தேங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரெயில் நிலையம் வந்த சாக்ஷி அகுஜா மழை நீரில் மிதிக்காமல் இருக்க அதன் அருகே உள்ள மின்கம்பத்தை பிடித்துள்ளார்.

    அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சாக்ஷி அகுஜா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்வயர் அறுந்து மழை நீரில் விழுந்து கிடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்நிலையில் பலியான சாக்ஷி அகுஜாவின் தந்தை லோகேஷ் குமார் ஜோப்ரா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் நிலையங்களில் போதிய வசதி இல்லை. ஆனால் வந்தே பாரத் ரெயில்கள் விடுவதில் மட்டும் அரசு கவனம் செலுத்துகிறது. டெல்லி ரெயில் நிலையத்தில் எனது மகளுக்கு முதலுதவி எதுவும் அளிக்கப்படவில்லை. எந்த ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை. மருத்துவர்களோ, போலீசாரோ அங்கு இல்லை. 40 நிமிடங்கள் கழித்தே ரெயில் நிலையத்தை விட்டு வெளியேற முடிந்தது.

    ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் எனது மகள் இறந்து விட்டாள். இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நமது அமைப்புகள் எதுவும் மேம்படவில்லை. ஆனால் வந்தே பாரத் போன்ற உயர்தர ரெயில்களை உருவாக்கி வருகிறோம். அதே நேரம் ரெயில் நிலையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய முடியவில்லை. எங்களுக்கு பணம் எதுவும் வேண்டாம். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும். இதற்காக சட்டப் போராட்டத்திற்கு தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×