search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவ்தாஸ் மீனா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவ்தாஸ் மீனா ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
    • தமிழக அரசின் 50-ஆவது தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்.

    தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதன் காரணமாக, தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலாளர் யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    இந்த நிலையில், தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலாளராக முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    • சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமனம்
    • புதிய தலைமைச் செயலாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதனையடுத்து புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதிய தலைமைச் செயலாளராக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

    • காவல் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
    • இன்று மாலை 6 மணியளவில் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலும் பங்கேற்கிறார்.

    மேலும் காவல் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

    இன்று மாலை 6 மணியளவில் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 19-ந்தேதி மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி மாவட்ட கலெக்டர்களும் பங்கேற்கிறார்கள்.
    • அனைத்து துறைகளின் முக்கிய திட்டங்கள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு ஒரு சில நாட்களில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும்.

    இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மண்டல அளவில் மாவட்ட கலெக்டர்களை அழைத்து சென்னை தலைமைச் செயலகத்தில் 4 நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளார்.

    11-ந்தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி கலெக்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    13-ந்தேதி கூட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    ஜூன் 15-ந்தேதி சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் மாவட்ட கலெக்டர்களும், 19-ந்தேதி மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி மாவட்ட கலெக்டர்களும் பங்கேற்கிறார்கள்.

    குடிநீர் பிரச்சனை, பட்டா மாறுதல், சாலை சீரமைப்பு, தெரு விளக்கு உள்ளிட்ட அனைத்து துறைகளின் முக்கிய திட்டங்கள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார்.

    • மாவட்ட ஆட்சியர்களும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.
    • மழை நேரத்தில் நிறுத்தப்பட்ட வடிகால் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள் குறித்து தியாகராய நகரில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    சென்னையில் திடீர் கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மட்டுமின்றி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களிலும், நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

    மழை நேரத்தில் நிறுத்தப்பட்ட வடிகால் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தீவிரமாக உள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

    • மாதம் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம்.
    • புதுமைப்பெண் திட்டத்தால் மாணவிகளின் சேர்க்கை விகிதம் கல்லூரிகளில் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு இப்போது மாவட்ட வாரியாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் `கல்லூரி கனவு 2024' நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

    சென்னையில் இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை மாவட்டத்திற்கான `கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 12 -ம் வகுப்பு பயின்ற மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்-அமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கள். அப்போது முருகானந்தம் பேசியதாவது:-

    அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் காரணமாக மாணவர்களின் வருகை பதிவு அதிகரித்து உள்ளது. வறுமையின் காரணமாக பெண்கள் உயர் கல்வி மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. பஞ்சாலைகளில் பெண்கள் வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த நிலை இருந்தது.

    ஆனால் இப்போது புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கபடுகிறது. அதன் காரணமாக உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    நாங்கள் படிக்கும்போது விழிப்புணர்வு தெரியாது. இப்போது அதிக விழிப்புணர்வு அரசால் ஏற்படுத்தபடுகிறது. உயர் கல்வியில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளது மாணவ-மாணவிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    புதுமைப்பெண் திட்டம் போல, இந்த ஆண்டு முதல் உயர் கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய அளவில் ஒப்பிடும் போது தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ப்ளஸ் டூ முடித்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 100 சதவீதத்தை எட்டும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    புதுமைப்பெண் திட்டத்தால் மாணவிகளின் சேர்க்கை விகிதம் கல்லூரிகளில் அதிகரித்துள்ளது. இதே போல் ஜூலை மாதம் முதல், அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் நிகழ்ச்சி இன்று திருச்சி, கோவை, நாகை, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது.

    நாளை திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடு துறை, திண்டுக்கல், தருமபுரி மாவட்டங்களிலும், நாளை மறுநாள் செங்கல்பட்டு, திருப்பூர், அரியலூர், கடலூர், தேனி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 11-ந் தேதி காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி, திருபத்தூர் மாவட்டங்களில் 13-ந் தேதி ராணிபேட்டை, தென்காசி, நாமக்கல், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

    • பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது
    • தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 20,000 மெகா வாட் மின் தேவை உள்ளது.

    குடிநீர் விநியோகம், தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை உள்ளிட்ட 19 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார்.

    பின்பு மின்னகத்தை ஆய்வு செய்த தலைமை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கோடை காலத்தில் அதிக மின் தேவை இருப்பதால் சீரான மின்சாரம் வழங்க மின்சார வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னையில் நாள் ஒன்றுக்கு 4000 மெகா வாட் மின் தேவை உள்ளது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 20,000 மெகா வாட் மின் தேவை உள்ளது. இதை கருத்தில் கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய சென்னையில் 60 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது

    கோடையில் அதிக மின் தேவை ஏற்பட்டால் அதை சமாளிக்க தமிழக மின்சார வாரியம் தயாராக உள்ளது. மின் தடை ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மின்னகத்திற்கு அணுகி சீரான மின்சாரம் பெறலாம்" என்று அவர் தெரிவித்தார்.

    விழுப்புரம், தேனி, நெல்லை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நகர பேருந்தின் நாற்காலியுடன் நடத்துனர் சாலையில் கீழே விழுந்தார்.
    • 20,000 அரசு பேருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் - தலைமை செயலாளர்

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரசு பேருந்துகள் சேதமடைவது தொடர்பான புகார்கள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நகர பேருந்தின் நாற்காலியுடன் நடத்துனர் சாலையில் கீழே விழுந்தார். இதே போன்று விருதுநகரிலும் பேருந்தில் சேதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது.

    இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பேருந்துகள் எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பாக நேற்று தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு போக்குவரத்துக்கு துறையானது ஒரு விரிவான உத்தரவை அனைத்து போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கும் வழங்கியுள்ளது.

    அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் விரைவு போக்குவரத்து கீழ் இயங்கப்படும் விரைவு பேருந்துகள் மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கப்படும் வெளியூர் பேருந்துகள் சென்னையில் இயங்கப்படும் மாநகர பேருந்து உள்ளிட்ட 20,000 பேருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆய்வு செய்த பின்பு அந்த பேருந்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை உடனடியாக கண்டறிந்து அவற்றை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சீரமைக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது.
    • வரும் 19-ல் பொதுவிடுமுறையாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் இன்று முதல் தபால் வாக்குகளைப் பெறும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம் தேதி அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது என தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

    • ‘மக்களிடம் செல்’ என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் ஆகும்.
    • தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட கலெக்டர்களை சென்னைக்கு அழைத்து பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் ஒரு நாள் கிராமங்களில் தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

    "அரசு அறிவித்துள்ள திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகிறதா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றதா? என்பதை களத்திற்கு நேரடியாகச் சென்று, ஆய்வில் ஈடுபட்டு, அரசு எந்திரத்தை முடுக்கி விட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் களத்தில் முதல்வர் திட்டம்.

    இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் கூறுகையில்,

    "மக்கள் அரசு நலத்திட்டங்களின் முழுப்பலனையும் அடைவதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களைய வேண்டியதும் அரசு எந்திரத்தின் முதன்மையான பணி. அரசு இயந்திரம், கடமை, கண்ணியம், கட்டுப் பாட்டுடன், மக்களைத் தேடிச் சென்று பணியாற்ற வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

    மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வருபவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என்றும் ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கும் மக்களும் தங்கள் கிராம முன்னேற்றத்துக்கும் அரசு தொடர்பாக தனக்கிருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வை நாடிச் செல்லும் நபர் மாவட்ட ஆட்சித் தலைவர் தான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

    "தங்கள் அருகில் இருக்கும் பிற அதிகாரிகள் அன்புக்குரியவராக இருப்பினும், மக்களின் மகத்தான அன்புக்கும் ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களாக மாவட்ட ஆட்சியர்களைப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்திருந்த முதலமைச்சர் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர்," என்று தெரிவித்து இருந்தார்.

    இது, 'மக்களிடம் செல்' என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் ஆகும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும், ஒரு நாள் வட்ட அளவில் தங்கி ஆய்வில் ஈடுபட வேண்டும். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறை களை கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தங்கு தடையின்றி மக்களிடம் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

    நானும், அரசு எந்திரமும் களத்திற்கு வருகிறோம். குறைகளை கேட்டு, மக்களின் கவலையை போக்கி, மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்று தெரிவித்திருந்தது.

    அதன் அடிப்படையில் நாளை முதல் மாவட்ட கலெக்டர்கள் வட்ட அளவில் நேரடியாக கிராமத்துக்குச் சென்று 24 மணி நேரம் தங்கியிருந்து மக்களின் கருத்துக்களை கேட்டு அறிய உள்ளனர்.

    இது தொடர்பாக இன்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட கலெக்டர்களை சென்னைக்கு அழைத்து பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

    • கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு புதிய அதிகாரியை நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
    • நீண்ட வரிசையில் நின்றும் உணவு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

    சென்னை:

    கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு புதிய அதிகாரியை நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

    கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களின் தலைமை நிர்வாக அலுவலராக ஜெ.பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள கடைகளில் நீண்ட வரிசையில் நின்றும் உணவு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர்.
    • சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கிளாம்பாக்கம்:

    பொங்கல் பண்டிகை நகர்ப்புறங்களைவிட கிராமப் பகுதிகளில் தான் உற்சாகமாக கொண்டாடப் படும். அதனால் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பேருந்து முனையத்தில் வைக்கப்பட்டு இருந்த குடிநீரை அருந்திய சிவ்தாஸ் மீனா, பேருந்து முனையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இருக்கிறதா என பயணிகளிடம் கேட்டறிந்தார்.

    ×