search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பென் டக்கெட்"

    • இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
    • இன்று 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

    நாட்டிங்காம்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் டக்கெட் - ஜாக் கிராலி ஆகியோர் களமிறங்கினர். இதில் கிராலி 3-வது பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த பென் டக்கெட் -ஆலி போப் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். அதிலும் குறிப்பாக பென் டக்கெட் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போல் அதிரடி காட்டினார். இவரின் அதிரடியால் இங்கிலாந்து அணி 4.2 ஓவர்களில் 50 ரன்கள் அடித்து அசத்தியது.

    இதன் மூலம் 147 ஆண்டு கால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 ரன்கள் எட்டிய அணி என்ற மாபெரும் சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.

    32 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்திய பென் டக்கெட் 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    • ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார்.
    • இந்த கருத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

    பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிக் கொண்ட தொடரில் 4 போட்டிகள் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், அடுத்து நடந்த 3 போட்டிகளிலும் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தரம்சாலாவில் நடக்க உள்ளது.

    இந்நிலையில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார். இந்த கருத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து (2021) கடந்து முறை விளையாடியதை விட இந்த முறை சிறப்பாக விளையாடி உள்ளது. பேஸ்பால் என்றால் என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. எங்கள் அணியில் ரிஷப் பண்ட் என்று ஒருவர் இருந்தார். அவர் விளையாடியதை பென் டக்கெட் பார்த்ததில்லை போல.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • ஆஸ்திரேலியா 500 ரன்களை எடுக்கக்கூடிய நிலையில் இருந்தனர். அதை தடுத்து நிறுத்தினோம்.
    • லார்ட்ஸ் மைதானத்தில் சதத்தை நெருங்கி வந்தேன். அதை நிறைவேற்ற முடியாததால் ஏமாற்றம் அடைந்தேன்.

    லண்டன்:

    ஆஷஸ் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்தது. நேற்றைய 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் டுக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.

    தொடக்க வீரர் பென்டக்கெட் 98 ரன்னில் அவுட் ஆனார். இந்நிலையில் இங்கிலாந்து அணி நல்ல நிலையில் இருப்பதாக பென் டக்கெட் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    லார்ட்ஸ் மைதானத்தில் சதத்தை நெருங்கி வந்தேன். அதை நிறைவேற்ற முடியாததால் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் இது நிச்சயமாக எனது சிறந்த இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன். அவர்கள் 500 ரன்களை எடுக்கக்கூடிய நிலையில் இருந்தனர். அதை தடுத்து நிறுத்தினோம். நாங்கள் ஒரு சிறந்த நிலையில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன் என்றார்.

    ×