என் மலர்
நீங்கள் தேடியது "செபி"
- வல்லுநர் குழு முதல் கட்ட விசாரணை அறிக்கையை மே மாதம் தாக்கல் செய்தது.
- ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செபி தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும், அதானி நிறுவனம் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி மோசடியில் ஈடுபட்டதாகவும், அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்திருந்தது.
இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை மே மாதம் தாக்கல் செய்தது. அதில், அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடி வேலை செய்தற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தது. அதேசமயம், 2014-2019 காலகட்டத்தில் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) செய்த பல திருத்தங்களை மேற்கோள் காட்டி, இது விசாரணை திறனைக் கட்டுப்படுத்தியதாக குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், அதானி குழும நிறுவனங்கள் மீதான முறைகேடு புகார் குறித்து இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) விசாரணை அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில், வல்லுநர் குழுவின் அறிக்கையில் உள்ள கருத்துக்களை ஏற்கமுடியாது என்றும், 2019 ஆம் ஆண்டில் செய்த மாற்றங்கள், வெளிநாட்டு நிதிகளின் பயனாளிகளைக் கண்டறிவதை கடினமாக்கவில்லை என்றும் கூறி உள்ளது. ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.
- மேற்கத்திய நாடுகளில் பங்கு சந்தையில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர்
- 2024 மார்ச் மாதம், புதிய நடைமுறை அமலுக்கு வரும் என மாதாபி தெரிவித்தார்
இந்தியர்களின் வாழ்க்கை முறையில், பொருளாதார சேமிப்பு திட்டங்கள் அனைத்தும் குடும்ப நன்மை (family interest) மற்றும் தங்களின் வருங்கால சந்ததியினரின் நன்மையை (dynastic approach) உள்ளடக்கியது. எனவே, அவர்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட், தங்கம், வெள்ளி, வங்கி வைப்பு தொகை, ஆயுள் காப்பீடு போன்றவற்றிலேயே தங்கள் சேமிப்புகளை முதலீடாக செய்து வருகிறார்கள்.
இதற்கு நேர்மாறாக அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளில் பொதுமக்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், கடந்த இரு தசாப்தங்களாக இந்தியர்களின் பங்கு சந்தை முதலீடு அதிகரித்து வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் முழு ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட பொதுமுடக்கம் பலரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியது. அப்போது வருவாய் ஈட்டும் வழியாக பங்கு சந்தை வர்த்தகத்தில் மக்கள் ஆர்வமுடன் ஈடுபட ஆரம்பித்தனர்.
தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக இந்திய பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இணையவழி பங்கு சந்தை வர்த்தகம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகியவை இந்திய இளைஞர்களுக்கு பங்கு சந்தை ஆர்வத்தை மேலும் பெருக்கி வருகிறது.
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி (Securities Exchange Bureau of India) முதலீட்டாளர்களுக்கு வழிமுறைகளை எளிதாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
பங்கு சந்தையில் ஒரு முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட நிறுவன பங்கை விற்கிறார்; வேறொருவர் அதை வாங்குகிறார். விற்பவருக்கு பணமும், வாங்குபவருக்கு பங்கும் அவரவர் கணக்குகளில் சேர்வதற்கான நாள் கணக்கு "செட்டில்மென்ட் காலம்" என அழைக்கப்படும்.
வர்த்தகம் (Trading) நடைபெற்ற 2 நாட்கள் கழித்து செட்டில்மென்ட் நடப்பது T+2 என்றும் 1 நாளில் நடப்பது T+1 என்றும் அழைக்கப்படும்.
முன்பு 2 நாட்கள் என இருந்த செட்டில்மென்ட் காலம், 1 நாள் என குறைக்கப்பட்ட பிறகு ரூ.700 கோடி அளவிற்கு முதலீட்டாளர்களுக்கு பயன் கிடைத்ததாக ஆய்வுகள் தெரிவித்தன.
இந்நிலையில், செபி, செட்டில்மென்ட் நாட்களை மேலும் குறைக்க இருக்கிறது.
இது குறித்து செபி தலைமை அதிகாரி மாதாபி புரி புக் (Madhabi Puri Buch) கூறியதாவது:
முதலில் ஒரு-மணி நேர செட்டில்மென்ட், பிறகு சில நாட்களில் உடனடி செட்டில்மென்ட் என கொண்டு வர திட்டமிட்டிருந்தோம். முதலீட்டாளர்கள் மற்றும் பங்கு சந்தை தரகர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம். அதன்படி ஒரு முதலீட்டாளர் பங்கை விற்கும் அன்றே அவருக்கு பணம் கிடைக்கவும், வாங்குபவருக்கு பங்கு கிடைக்கவும் வழிவகை செய்யும் அதே நாள் செட்டில்மென்ட் (same-day settlement) முயற்சியை முதலில் கொண்டு வந்துள்ளோம். அடுத்த வருட மார்ச் மாதத்திலிருந்து முதலீட்டாளர்களுக்கு இது செயல்பாட்டில் வரும்.
இதனையடுத்து ஒரு-மணி நேர செட்டில்மென்ட் (one-hour settlement) அமல்படுத்தப்பட்டு, பிறகு படிப்படியாக உடனடி செட்டில்மென்ட் (instantaneous settlement) அமலுக்கு வரும். இதன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பணப்புழக்கம் மேலும் அதிகமாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிறு முதலீட்டாளர்களை காட்டிலும் பெரும் தொகை மற்றும் மிக பெரும் தொகை முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் பயன் அளிக்கும் திட்டம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டது
- அறிக்கைகளை ஆதாரமாக கொண்டு மனு தாக்கல் செய்வது தவறு என உச்ச நீதிமன்றம் கூறியது
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று, அதானி குழுமம். இதன் நிறுவனர், இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான குஜராத் மாநிலத்தை சேர்ந்த கவுதம் அதானி (Gautam Adani).
கடந்த 2023 ஜனவரி மாதம், அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் (Hindenburg), அதானி குழுமம் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி நீண்ட அறிக்கையை வெளியிட்டது. இதை தொடர்ந்து அதானி குழும பங்குகள் பெரும் சரிவை சந்தித்தது.
இதனை தொடர்ந்து, செபி (SEBI) எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் இந்த முறைகேடுகள் குறித்த விசாரிக்க தொடங்கியது.
உச்ச நீதிமன்றத்திலும் அதானி குழுமத்திற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த மார்ச் மாதம், இது குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
இரு மாதங்கள் கழித்து "குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை" என இந்த குழு அறிக்கை சமர்ப்பித்தது.
இதை தொடர்ந்து அதானி குழுமத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்திருப்பதாவது:
ஹிண்டன்பர்க் அறிக்கை போன்ற ஒரு அறிக்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டு எந்த விசாரணைக்கும் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி இது குறித்து விசாரணை செய்வதுதான் சரியானது. இதில் தற்போது உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், தனியாக "சிட்" (SIT) எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட முடியாது. நீதிமன்றம் நியமித்த குழுவின் பரிந்துரைகளின்படி அடுத்த கட்ட நடவடிக்கையை மத்திய அரசும், செபியும்தான் எடுக்க வேண்டும். தகுந்த ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பொது வெளியில் வரும் அறிக்கைகளை மட்டுமே ஆதாரமாக கொண்டு மனு தாக்கல் செய்வதும், அவற்றின் அடிப்படையில் உத்தரவிடுவதும் நீதி பரிபாலனத்திற்கே இழுக்காக அமையும்.
இவ்வாறு அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மொத்தம் உள்ள 22 புகார்களில் 20 குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையை செபி முடித்து விட்டது. மீதமுள்ள 2 வழக்குகளிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் செபி விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தீர்ப்பு குறித்து கவுதம் அதானி, எக்ஸ் சமூக வலைதளத்தில் தனது அதிகாரபூர்வ கணக்கில் கூறியிருப்பதாவது:
மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உண்மை எப்பொதும் நிலைத்திருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சத்தியமே வெல்லும். எங்களுடன் உறுதுணையாக இருந்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தியாவின் வளர்ச்சிக்கு எங்களின் சிறு பங்களிப்பு தொடரும். ஜெய் ஹிந்த்.
இவ்வாறு அதானி தெரிவித்துள்ளார்.
- அனைத்து கருதுகணிப்புகளையும் பொய்யாக்கி இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்றது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்தது.
- பங்குசந்தையில் முறைகேடு செய்யவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களிலும் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது.
முன்னதாக தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் எனவும் காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தில் தான் இடங்களைக் கைப்பற்றும் எனவும் கணித்திருந்தன. இந்த கருத்துக்கணிப்புகள் பாஜகவால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியிருந்தன.
இதற்கிடையே ஜூன் 4 ஆம் தேதி அனைத்து கருதுகணிப்புகளையும் பொய்யாக்கி இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்றது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்தது. வட மாநிலங்களில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஆர்.ஜே.டி ஆகியவற்றின் தயவுடனேயே பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானதும் இந்திய பங்குச் சந்தையில் பங்குகளின் விலை அதிரடியாக உயர்ந்தது. பங்குசந்தையில் முறைகேடு செய்யவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் கருத்துக்கணிப்பை வெளியிட்ட பல்வேறு நிறுவனங்களில் முக்கியமானதாக விளங்கும் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மீதும் இந்த குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்டுகிறது.
எனவே செபி அமைப்பு மற்றும் பாராளுமன்ற குழு இணைந்து ஆக்சிஸ் மை இந்தியா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் வருங்காலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தற்போது பதிலளித்துள்ள ஆக்சிஸ் மை இந்தியா தலைவர் பிரதீப் குப்தா, அனைத்து வகையான விசாரணைக்கும் தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். பங்குச் சந்தைக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று முற்றிலுமாக மறுத்துள்ள அவர் வருங்காலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்பது குழந்தைத்தனமானது என்றும் விமர்சித்துள்ளார். இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 361 முதல் 401 இடங்களைக் கைப்பற்றும் என ஆக்சிஸ் மை இந்தியா கணித்தது. முன்னதாக பிரதீப் குப்தா தேர்தல் ரிசல்ட் நாளன்று பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறாததால் தொலைக்காட்சி விவாத மேடையில் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது.
- அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் பங்குகளை வாங்கியதாக ஹிண்டன்பர்க் புகார்
- அதானி குழுமத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதானி குழும மீதான வழக்கை செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று தெரிவித்தது.
இதற்கிடையே ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், செபியின் தலைவரான மாதபி புரி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளது. எனவே தான் அதானி குழுமத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக செபி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. செபி தலைவர் மீதான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "செபி தலைவர் மாதபி புச் மீது ஹிண்டன்பர்க் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும். ஹிண்டன்பர்க் ஏற்கனவே அதானி புலி வருகிறது அம்பானி புலி வருகிறது என்று கூறினார்கள். ஆனால் கழுதை புலி கூட வரவில்லை. இந்த முறை செபி புலி வந்திருக்கிறது. அதையும் விசாரிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
- அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் பங்குகளை வாங்கியதாக ஹிண்டன்பர்க் புகார்
- SEBI தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதானி குழும மீதான வழக்கை செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று தெரிவித்தது.
இதற்கிடையே ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், செபியின் தலைவரான மாதபி புரி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளது. எனவே தான் அதானி குழுமத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக செபி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. செபி தலைவர் மீதான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "SEBI தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?
முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமர் மோடியா.., SEBI தலைவரா.. அல்லது அதானியா?
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்குமா?
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சுகிறார் என இப்போது புரிகிறது" என்று பேசியுள்ளார்.
- நிப்டி 78 புள்ளிகள் குறைந்து 24,288 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
- அதானி என்டர்பிரைசஸ், அதானி, போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவை கண்டு வருகிறது.
அதானி குழும முறைகேடுகளை வெளிப்படுத்திய ஹிண்டன்பர்க் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் அதானியின் வெளிநாட்டு நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பங்குகளை செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் வைத்திருப்பதனாலேயே முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியது.
இந்த புதிய அறிக்கை இன்றைய பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தபடியே வாரத்தின் முதல் நாளான இன்றுபங்குச்சந்தை பெரும் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 409 புள்ளிகள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 78 புள்ளிகள் குறைந்து 24,288 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இதன்படி அதானி என்டர்பிரைசஸ், அதானி, போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவை கண்டு வருகிறது.
- அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு இன்று 46.65 ரூபாய் குறைந்து 3,140.90 ரூபாயாக உள்ளது.
- அதானி போர்ட் பங்கு இன்று 35.80 ரூபாய் குறைந்து 1,498 ரூபாயாக உள்ளது.
அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர் என்று ஹிண்டர்பர்க் நேற்றுமுன்தினம் கூறியிருந்தது.
இதனால் திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கும். முதலீட்டார்கள் லட்சக்கணக்கான கோடிகளை இழக்கும் அபாயும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்பட்டது. வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 79,705.91 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்திருந்தது.
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 79,705.91 புள்ளிகளுடன் ஆரம்பானது. அப்போது சுமார் 400 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமானது. அதன்பின் மெல்லமெல்ல வர்த்தகம் உயர்வை கண்டது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 80,106.18 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இறுதியாக 3.30 மணிக்கு வர்த்தகம் சென்செக்ஸ் 79,648.92 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை நிறைவடைந்ததை வர்த்தகம் 56.99 சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து நிறைவடைந்தது.
இந்திய பங்குச்சந்தை நிஃப்டி வெள்ளிக்கிழமை 24,367.50 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு 24,320.05 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆரம்பமானது. சுமார் 47 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் இன்று அதிகபட்சமாக 105 புள்ளிகள் அதிகரித்து 24,472.80 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இறுதியாக நிஃப்டி 24,347 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்ததை விட 20.50 சதவீதம் குறைவாகும்.

அதானியின் டோட்டல் கியாஸ் லிமிடெட் பங்கு 3.95 சதவீதம் குறைந்த 835.50 ரூபாயாக இருந்தது. இன்று 34.35 ரூபாய் சரிவை சந்தித்துள்ளது.
அதானி எனர்ஜி பங்கு 3.25 சதவீதம் குறைந்து 1067.90 ரூபாயாக உள்ளது. இன்று 35.90 ரூபாய் குறைந்துள்ளது. என்டிடிவி பங்கு 2.32 சதவீதம் குறைந்த 203.50 ரூபாயாக உள்ளது. 4.83 ரூபாய் குறைந்துள்ளது.
அதானி பவர் பங்கு 1.24 சதவீதம் குறைந்த 687 ரூபாய் உடன் நிறைவடைந்தது. இன்று 8.40 ரூபாய் குறைந்துள்ளது.
அதானி வில்மர் லிமிடெட் பங்கு 4.10 சதவீதம் குறைந்து 369.35 ரூபாயுடன் நிறைவடைந்தது. இன்று 15.80 ரூபாய் குறைந்துள்ளது.
அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு இன்று 1.46 சதவீதம் குறைந்து 3,140.90 ரூபாய் உடன் உள்ளது. இன்று 46.65 ரூபாய் குறைந்துள்ளது.
அதானி போர்ட் பங்கு இன்று 2.33 சதவீதம் குறைந்துள்ளது. 1,498 ரூபாயாக உள்ளது. இன்று 35.80 ரூபாய் குறைந்துள்ளது.
- அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில், 1%-ஐ ஒரே நாளில் தவறவிட்டுள்ளது
- இன்று ஒரே நாளில் அதானி குழுமத்துக்கு $2.4 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:
அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம், அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது.
அதில் 'அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 நிறுவனங்களும் தங்களது நிதி நிலை அறிக்கையை உண்மைக்கு புறம்பாக வலுவாக காட்டி பங்குகளின் விலையை அதிகரித்து முறைகேடு செய்தது' என்று குறிப்பிட்டு இருந்தது.
ஆய்வறிக்கை வெளியிட்ட அடுத்த ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் ரூ. 12.6 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்தது. மீள் நடவடிக்கைகள் மூலம் தற்போது உலகின் 12-வது பெரிய பணக்காரராக அதானி திகழ்கிறாா்.
இதற்கிடையே சந்தையில் ஆதாயம் தேட உண்மைகளை திரித்து பொய் தகவல்களைப் பரப்புவதாக ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனத்துக்கு செபி அமைப்பான இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஜூன் 26-ந்தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஆா்வம் காட்டவில்லை என ஹிண்டன்பா்க் மீண்டும் குற்றச்சாட்டை கூறியுள்ளது. அதோடு அதற்கான ஆதாரங்களையும் அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.
செபி தலைவர் மாதபி பூரி புச்சுடன் எங்களுக்கு எந்த வணிக உறவும் இல்லை என்று அதானி நிறுவனமும், ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் மாதபி பூரியும் மறுப்பு தெரிவித்து இருந்தனர்.
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நிலையில் அதானி குழுமத்தினுடைய அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் இன்று சரிவை சந்தித்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் 17 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன.
சந்தை மதிப்பு சரிவால், இன்று ஒரே நாளில் அதானி குழுமத்துக்கு $2.4 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.20,000 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில், 1%-ஐ ஒரே நாளில் தவறவிட்டுள்ளது
ஹிண்டன்பெர்க் - அதானி பங்குகள் - செபி விவகாரத்தின் எதிரொலியாக, பங்குச்சந்தையில் பெரிதளவு தாக்கம் ஏற்படவில்லை என்றாலும், இன்றைய வர்த்தகம் சற்று வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
- சந்தை மதிப்பு சரிவால், நேற்று ஒரே நாளில் அதானி குழுமத்துக்கு ரூ.20,000 கோடி இழப்பு
- அதானியின் ஊழல் குறித்த விசாரணை செய்ய காங்கிரஸ் கோரிக்கை.
புதுடெல்லி:
அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம், அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது.
ஆய்வறிக்கை வெளியிட்ட அடுத்த ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் ரூ. 12.6 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்தது.
இந்நிலையில் அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஆா்வம் காட்டவில்லை என ஹிண்டன்பா்க் மீண்டும் குற்றச்சாட்டை கூறியுள்ளது. அதோடு அதற்கான ஆதாரங்களையும் அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.
செபி தலைவர் மாதபி பூரி புச்சுடன் எங்களுக்கு எந்த வணிக உறவும் இல்லை என்று அதானி நிறுவனமும், ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் மாதபி பூரியும் மறுப்பு தெரிவித்து இருந்தனர்.
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நிலையில் அதானி குழுமத்தினுடைய அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் இன்று சரிவை சந்தித்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் 17 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன.
சந்தை மதிப்பு சரிவால், நேற்று ஒரே நாளில் அதானி குழுமத்துக்கு $2.4 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.20,000 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில், 1%-ஐ ஒரே நாளில் தவறவிட்டுள்ளது
இந்நிலையில், செபி தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் உள்ள அமலாக்கத்துறை அலுவலத்தை முற்றுகையிட்டு நாடு தழுவிய போராட்டத்தை வரும் 22 ஆம் தேதி நடத்த உள்ளோம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "அதானியின் மெகா ஊழல் குறித்த விசாரணை செய்யவேண்டும். இந்த ஊழலில் பிரதமரும் சம்பந்தப்பட்டுள்ளார். பங்குச் சந்தை ஒழுங்குமுறை இப்போது கடுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு விஷயங்களை முன்னிறுத்தி தான் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
- அதானியின் மெகா ஊழல் குறித்த விசாரணை செய்யவேண்டும். இந்த ஊழலில் பிரதமரும் சம்பந்தப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் தெரிவித்தது
- 'மோதானி [மோடி- அதானி] மெகா மோசடி பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது'
அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம், அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாகக் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது. இது இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. எதிர்க்கட்சிகள் அதானி மற்றும் பிரதமர் மோடியின் நட்படை விமர்சிக்கத்தொடங்கின.
இந்நிலையில் அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஆர்வம் காட்டவில்லை என ஹிண்டன்பா்க் மீண்டும் குற்றச்சாட்டைக் கூறியுள்ளது. அதோடு அதற்கான ஆதாரங்களையும் அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.
செபி தலைவர் மாதபி பூரி புச்சுடன் எங்களுக்கு எந்த வணிக உறவும் இல்லை என்று அதானி நிறுவனமும், ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் மாதபி பூரியும் மறுப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், செபி தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் உள்ள அமலாக்கத்துறை அலுவலத்தை முற்றுகையிட்டு நாடு தழுவிய போராட்டத்தை இன்று [ஆகஸ்ட் 22] நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
அதானியின் மெகா ஊழல் குறித்த விசாரணை செய்யவேண்டும். இந்த ஊழலில் பிரதமரும் சம்பந்தப்பட்டுள்ளார். பங்குச் சந்தை ஒழுங்குமுறை இப்போது கடுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு விஷயங்களை முன்னிறுத்தி தான் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர்க் கே.சி வேணுகோபால் தெரிவித்திருந்தார்.
மேலும், செபி தலைவர் மாதபி பூரி புச் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், அவர் மீதமான குற்றச்சாட்டை விசாரிக்கப் பாராளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று இந்த போராட்டத்தைக் காங்கிரஸ் நடத்த உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, நாடு முழுவதிலும் 20 மாநாடுகளை நடத்தி, மோதானி [மோடி- அதானி] மெகா மோசடி மூலம் கோடிக்கணக்கான சிறு முதலீட்டாலர்களை ஏமாற்றியும், பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும் நடந்த ஊழலை விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.
- நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- அனில் அம்பானிக்கு தடை மட்டுமின்றி ரூ.25 கோடி அபராதமும் விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.
மும்பை:
பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இந்தத் தடையை விதித்துள்ளது.
நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அனில் அம்பானிக்கு இந்த தடையை செபி விதித்துள்ளது.
அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உள்பட 24 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுக்கு செபி தடை விதித்துள்ளது.
அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ள செபி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நிறுவனத்திலும் இயக்குநராகவோ அல்லது முக்கிய பொறுப்பாளராகவோ இருக்கவும் தடை விதித்துள்ளது.
அத்துடன், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்துக்கு 6 மாதத்துக்கு தடை விதித்துள்ள செபி, அந்நிறுவனத்துக்கு ரூ.6 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.