என் மலர்
நீங்கள் தேடியது "ஓபன் ஏஐ"
- அனிமே என்று அழைக்கப்படும் இவ்வகை அனிமேஷன் படங்கள் ஜப்பானை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிப்லி ஸ்டூடியோ பாணியை சேர்ந்தவை.
- ஓபன் ஏஐ மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி இவ்வகை அனிமேஷன் புகைப்படங்களை பலர் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.
எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபல இணைய தளங்களை திறந்தால் சமீப நாட்களாக ஒரே மாதிரியான அனிமேஷன் வகை புகைப்படங்கள் டிரெண்டிங்கில் இருப்பதை காணலாம்.
கிரிக்கெட், கால்பந்து வீரர்கள் தொங்கி திரைபிரபலலங்கள், அரசியல்வாதிகள் வரை இந்த டிரெண்டில் இணைந்துள்ளனர். அவர்களின் அனிமேஷன் படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
அனிமே என்று அழைக்கப்படும் இவ்வகை அனிமேஷன் படங்கள் ஜப்பானை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிப்லி ஸ்டூடியோ பாணியை சேர்ந்தவை. தற்போது ஓபன் ஏஐ மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி இவ்வகை அனிமேஷன் புகைப்படங்களை பலர் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜிப்லி டிரெண்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டின் இதயத்திலிருந்து ஸ்டுடியோகிப்லி உலகம் வரை எனது மிகவும் மறக்க முடியாத சில தருணங்களை காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- மின்மினிப் பூச்சிகளின் கல்லறை (Grave of the Fireflies) உள்ளிட்ட பல்வேறு அனிமே படங்கள் பிரபலமானவை.
- இயக்குநர்கள் ஹயாவோ மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டாஸ் ஆகியோர் உருவாக்கினார்.
எக்ஸ், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட பிரபல இணைய தளங்களை திறந்தால் சமீப நாட்களாக ஒரே மாதிரியான அனிமேஷன் வகை புகைப்படங்கள் டிரண்டிங்கில் இருப்பதை காணலாம்.
கிரிக்கெட், கால்பந்து வீரர்கள் தொங்கி திரைபிரபலலங்கள், அரசியல்வாதிகள் வரை இந்த டிரெண்டில் இணந்துள்ளனர். அவர்களின் அனிமேஷன் படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
அனிமே என்று அழைக்கப்படும் இவ்வகை அனிமேஷன் படங்கள் ஜப்பானை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிப்லி ஸ்டூடியோ பாணியை சேர்ந்தவை. தற்போது ஓபன் ஏஐ மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி இவ்வகை அனிமேஷன் புகைப்படங்களை பலர் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.
1985 ஆம் ஆண்டு இயக்குநர்கள் ஹயாவோ மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டா, தயாரிப்பாளர் தோஷியோ சுசுகி ஆகியோரால் ஜிப்லி ஸ்டூடியோ நிறுவப்பட்டது.
ஸ்பிரிட்டட் அவே (SPIRITED AWAY), மின்மினிப் பூச்சிகளின் கல்லறை (Grave of the Fireflies) உள்ளிட்ட பல்வேறு அனிமே படங்கள் ஜிப்லி ஸ்டுடியோவால் உருவாக்கி வெளியிடப்பட்டன.
இந்த படங்களில் ஜிப்லி ஸ்டூடியோவுக்கென தனி பாணி அனிமேஷன் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜப்பான் அனிமே ரசிகர்களுக்கு பரீட்சயமான பாணி இது.

இயக்குநர் ஹயாவோ மியாசாகி
இந்நிலையில் இந்த பாணி தற்போது உலகளவில் டிரண்ட் ஆக தொடங்கியுள்ளது. பிரபலங்கள், அவர்களின் முகிக்யமான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஜிப்லி பாணி அனிமேஷனாக மாற்றப்பட்டு வெளியிடப்படுகின்றன. சம்பந்தப்பட்ட பிரபலங்களே தங்கள் அனிமேஷன் புகைப்படங்களை பகிர்ந்து டிரண்ட்டில் இணைந்து வருகின்றனர்.
- சாட்ஜிபிடியிடம் தன்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளார்.
- தனது குழந்தைகளைக் கொலை செய்ததற்காக ஹோல்மனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
எக்ஸ் நிறுவனத்தின் குரோக் ஏஐ இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி (Chat GPT) சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது.
பொய்யான தகவலை கொடுத்ததற்காக சாட்ஜிபிடி மீது நார்வே நாட்டை சேர்ந்த அர்வே ஜால்மர் ஹோல்மென் என்பவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஹோல்மென் சமீபத்தில் சாட்ஜிபிடியிடம் தன்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளார்.

அர்வே ஜால்மர் ஹோல்மென் யார்? என்று சாட்ஜிபிடியிடம் அவர் கேட்டுள்ளார்.
இதற்கான பதிலளித்த சாட்ஜிபிடி, "ஆர்வ் ஜால்மர் ஹோல்மென் நார்வேயை சேர்ந்தவர். ஒரு சம்பவத்திற்குப் பிறகு அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவருக்கு பத்து வயது, மற்றொன்றுக்கு ஏழு வயது.
இரண்டு குழந்தைகளும் டிசம்பர் 2020 இல் அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது குழந்தைகளைக் கொலை செய்ததற்காக ஹோல்மனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது" என்று கூறியுள்ளது.

அர்வே ஜால்மர் ஹோல்மென்
இதைக் கண்டு ஹோல்மன் அதிர்ச்சியடைந்தார். இதற்குப் பிறகு, நொய்ப் என்ற டிஜிட்டல் உரிமைகள் குழுவை அணுகிய அவர், அவர்கள் மூலம் ஓபன் ஏஐ நிறுவனம் மீது புகார் அளித்தார்.
இதில், ஓபன்ஏஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொய்யை மக்கள் உண்மை என்று நம்பக்கூடும் என்பது ஹோல்மனின் கவலை.
இந்த நிலையில், சாட்ஜிபிடியின் பழைய வெர்ஷன் அது என்றும் பிழைகளைக் குறைக்க தங்கள் வெர்ஷன்களை தொடர்ந்து மேம்படுத்துவதாகவும் ஓபன் ஏஐ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
- ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது
- கூகுள் நிறுவனமும் டீப்மைண்ட் செயலியை உருவாக்கியுள்ளது
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது'ஓபன் ஏஐ' எனும் மென்பொருள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி, உலகெங்கிலும் மிகுந்த வரவேற்பையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இதற்கு போட்டியாக இது போன்றதொரு மென்பொருளை உருவாக்க உலகின் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. கூகுள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி 'டீப்மைண்ட்'ஐ உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவரும், உலகின் நம்பர் ஒன் கோடீசுவரருமான எலான் மஸ்க், நேற்று எக்ஸ்ஏஐ (xAI) எனும் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கினார்.
'ஏஐ' குறித்து பலமுறை எச்சரித்துள்ள மஸ்க், அதனை "மிகப்பெரிய அச்சுறுத்தல்" என்று குறிப்பிட்டிருந்தார். அதை உருவாக்குவதில் அவசரம் காட்டுவது "பேயை வரவழைப்பது போன்றது" என்றும் கூறியிருந்தார்.
தற்போது 'எக்ஸ்ஏஐ' நிறுவனத்தை குறித்து மஸ்க், "சாட்ஜிபிடி அரசியல் ரீதியாக சார்புநிலை கொண்ட பொறுப்பற்றது. ஆனால் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் குறிக்கோள் பிரபஞ்சத்தின் உண்மையான தன்மையை புரிந்துகொள்வதுடன் வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்கு பதிலளிப்பதுமாகும்" என கூறியிருக்கிறார்.
இந்நிறுவனத்தில் ஓப்பன்ஏஐ, கூகுள் டீப்மைண்ட், டெஸ்லா, மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
ஏஐ (AI) என்பது தொற்றுநோய் மற்றும் அணுஆயுத போருக்கு இணையான ஆபத்து என்று எச்சரித்தவரும், பிரான்சிஸ்கோவை மையமாக வைத்து செயல்பட்டு வரும் 'ஏஐ' பாதுகாப்பு மையத்தை வழிநடத்துபவருமான டான் ஹென்ட்ரிக்ஸ் எக்ஸ்ஏஐ குழுவிற்கு ஆலோசனைகள் வழங்குகிறார்.
2015-ல் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த மஸ்க், கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் விரைவாக செயல்படுத்த துடிக்கும் வகையில் பொறுப்பற்று செயல்படுவதாக கூறியிருந்தார். பின்னர், டெஸ்லாவில் கவனம் செலுத்துவதற்காக 2018-ல் ஓப்பன்ஏஐ நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் "ட்ரூத்ஜிபிடி" (TruthGPT) எனும் புதிய செயலிக்கான தனது திட்டங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்ட மஸ்க், "மக்களுக்கு 3-வதாக செயலியை உருவாக்குவேன் என நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
ஏஐ-ல் என்விடியா (Nvidia) எனும் கலிபோர்னியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஜிபியு (GPU) எனப்படும் மிகவும் விலையுயர்ந்த ஸெமிகண்டக்டர்கள் மிக அவசியம்.
ஓபன்ஏஐ அல்லது கூகுள் டீப்மைண்ட் போன்ற ஒரு ஏஐ நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவதற்கு பெரிதும் அவை தேவைப்படுவதால் மஸ்க்கின் இந்த ஏஐ ஆர்வத்தை மிகுந்த பொருட்செலவு தேவைப்படும் ஒரு முயற்சியாக மென்பொருள் நிபுணர்கள் கருதுகின்றனர்.
- இன்று இறுதிகட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தலை சீர்குலைக்க இஸ்ரேல் சதி செய்ததாக ஓபன் ஏஐ குற்றம்சாட்டியுள்ளது.
- ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரிய பொதுத்தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று இறுதிகட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தலை சீர்குலைக்க இஸ்ரேல் சதி செய்ததாக ஓபன் ஏஐ குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான ஓபன்ஏஐ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேலின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இந்தியாவில் நடைபெற்று வரும் பொதுத்தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்திட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்ததை பயன்படுத்த முயற்சித்தது.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக பிரசாரம் செய்யவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியை பாராட்டி மக்களிடம் கருத்துருவை உருவாக்கிடவும் முயற்சித்ததாக கூறியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரிய பொதுத்தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற பெயரில் மென்பொருள் சேவை அறிமுகம்.
- ஆப்பிள் நிறுவன அறிவிப்பை எலான் மஸ்க் கடுமையாக சாடினார்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள், சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC) நிகழ்வில் அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அந்த வரிசையில், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற பெயரில் மென்பொருள் சேவையை அறிமுகம் செய்தது.
இதோடு, தனது நிறுவன சாதனங்களில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவைகள் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட இருப்பதாகவும் அறிவித்தது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை உலகின் மிகப்பெரிய பணக்கராரரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் கடுமையாக சாடினார்.
இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக ஸ்மார்ட்போன் துறையில் களமிறங்குவீர்களா என்ற எக்ஸ் பயனரின் கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்தார். எக்ஸ் பயனர் ஒருவர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து, "எக்ஸ் தளத்திற்கென ஆப்டிமைஸ் செய்யப்பட்ட செயலிகள், ஓபன் சோர்ஸ் ஓ.எஸ். மற்றும் ஸ்டார்லின்க் இண்டகிரேஷன் வசதி கொண்ட எக்ஸ் போனை சாம்சங் மூலம் உற்பத்தி செய்வீர்களா" என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், "இது சம்பந்தமில்லாத கேள்வி ஒன்றும் கிடையாது," என பதில் அளித்துள்ளார். எலான் மஸ்க் அளித்திருக்கும் இந்த பதில் காரணமாக எதிர்காலத்தில் எக்ஸ் பிராண்டிங் கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தை கடுமையாக வசைபாடிய எலான் மஸ்க், "தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. உங்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ.-இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள்," என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எதையும் ஆராய்ந்தறிந்து செயல்படுவது, பிரச்சனைகளை தீர்ப்பது உள்ளிட்ட பகுத்தறியும் தன்மைகளை விஞ்ஞானிகள் கற்றுத்தந்து வருகின்றனர்.
- Q* தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக ஸ்ட்ராபெரி ஏஐ இருக்கும்.
உலகத்தை ஆட்டிப்படைக்கத் தொடங்கியிருக்கும் ஏஐ தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டுக்கொண்டே வருகிறது. சோசியல் மீடியா முதல் தொழில்துறை வரை மனித வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறும் நாளை நோக்கி ஏஐ தொழில்நுட்பம் முன்னேறி வருகிறது.
அந்த வகையில் சாட் ஜி.பி.டி.யை உருவாக்கிய முன்னணி ஓபன் ஏஐ நிறுவனம், ஸ்ட்ராபெர்ரி [Strawberry] என்ற பெயரில் பகுத்தறிவு கொண்ட ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பம் குறித்து பலர் அச்சம் தெரிவித்து வரும் நிலையில் இந்த பிராஜக்ட் ஸ்ட்ராபெர்ரியை ஓபன் ஏஐ நிறுவனம் மிகவும் ரகசியமாக செய்து வருவதாக ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்ட்ராபெர்ரி திட்டத்தின் மூலம் ஏஐ மாடல்களுக்கு தன்னிச்சையாக விஷயங்களை புரிந்து கொள்ளுதல், லாஜிக்கல் ரீசனிங், எதையும் ஆராய்ந்தறிந்து செயல்படுவது, பிரச்சனைகளை தீர்ப்பது உள்ளிட்ட பகுத்தறியும் தன்மைகளை விஞ்ஞானிகள் கற்றுத்தந்து வருகின்றனர். சுருக்கமாக சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தில் ரஜினி ரோபோட்டுக்கு உணர்வுகளையும் பகுத்தறிவையும் கற்றுத்தரும் தருணம் நிஜத்தில் நடந்து வருகிறது.

கிட்டத்தட்ட மனிதனின் அறிவை பிரதி செய்யும் வகையிலான ஏஐ மாடலை உருவாக்க ஓபன் ஏஐ நிறுவனம் முயன்று வருகிறது. கூகுள்,மெட்டா, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த முயற்சியில் பின்தங்கியுள்ள நிலையில் ஓபன் ஏஐ உருவாக்கிவரும் இந்த புதிய ஏஐ வருங்காலங்களில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், சிக்கலான சாப்டவேர்களை உருவாக்கவும் பயனுள்ளதாக இருக்கும்என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த புதிய ஸ்ட்ராபெர்ரி ஏஐ திட்டம் குறித்து ஓபன் ஏஐ இன்னும் உறுதி செய்யவில்லை.

ஆனால் சமீபத்தில் ஓபன் ஏஐ பரிசோதனை செய்த Q* என்ற புதிய திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஏஐ சிக்கலான கணிதம் மற்றும் அறிவியல் கணக்குகளுக்கு எளிதில் விடை கண்டுபிடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த Q* தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக ஸ்ட்ராபெர்ரி ஏஐ இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- 'சாட் ஜிபிடி' க்கு பயிற்சி அளித்தல், அதன் மேம்பாடு தொடர்பான பணிகளை செய்தவர் ஆவார்
- மனித குலத்துக்கு AI கொண்டு வரக்கூடிய ஆபத்துகள் குறித்து பாலாஜி நியூ யார்க் டைம்ஸ் பேட்டியில் எச்சரித்தார்.
OpenAI நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும், அந்நிறுவனத்தின் தீய நடைமுறைகளை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவருமான 26 வயதான சுசீர் பாலாஜி தற்கொலை செய்துகொண்டார்.
நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் நிலவி வந்த நிலையில் தற்கொலை மூலமே அவரது உயிர் பிரிந்துள்ளதாக சான் பிரான்சிஸ்கோ மருத்துவ பரிசோதகர் அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து அவரது இறப்பில் எந்த மர்மமும் இல்லை என சான் பிரான்சிஸ்கோ போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

யார் இந்த சுசீர் பாலாஜி?
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுசீர் பாலாஜி, ஏஐ தொல்நூட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஓபன் ஏஐ நிறுவனத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கணினி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.
சுமார் 4 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பாலாஜி 2022 பிற்பகுதியில் அந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 'சாட் ஜிபிடி' க்கு பயிற்சி அளித்தல், அதன் மேம்பாடு தொடர்பான பணிகளை செய்தவர் ஆவார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2024 இல் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
இதைத்தொர்ந்த்து ஓபன் ஏஐ சாட் ஜிபிடி குறித்த பல குற்றசாட்டுகளை பாலாஜி பொதுவெளியில் முன்வைத்தார். நியூ யார்க் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்த பாலாஜி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் வணிக கொள்கைகள் வணிகங்களுக்கும் சமூகத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்ததால் அதில் இருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.

சாட் ஜிபிடிக்கு பயிற்சி அளிக்க பதிப்புரிமை பெற்ற தரவுகளை ஓபன் ஏஐ பயன்படுத்தி அமெரிக்க பி[பதிப்புரிமை சட்டத்தை மீறியதாக அவர் குற்றம் சாட்டினார். பல எழுத்தாளர்கள், கம்பியூட்டர் புரோகிராமர்கள், பத்திரிகையாளர்கள் தங்களின் உழைப்பை ஓபன் ஏஐ எந்த அனுமதியும் இன்றி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினர்.
பாலாஜியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஓபன் ஏஐ மீது பல வழக்குகளும் தொடரப்பட்டன. கடுமையான விதிமுறைகள் இல்லாமல் மனித குலத்துக்கு AI கொண்டு வரக்கூடிய ஆபத்துகள் குறித்து பாலாஜி நியூ யார்க் டைம்ஸ் பேட்டியில் கவலை தெரிவித்தார்.காலப்போக்கில், இந்த தொழில்நுட்பம் சமூகத்திற்கு நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் பாலாஜியின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது. கடைசியாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவிலும் ஓபன் ஏஐ மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஏஐ வளர்ச்சி குறித்த கவலையை வெளிப்படுத்தி இருந்தார்.
உலகில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் சேவைகள் ஏஐ ஆல் சக்தியூட்டப்பட்டவை என்று விளம்பரம் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும் அளவுக்கு ஏஐ பெரு வணிகத் தேவையாக வளர்ந்துள்ள நிலையில் பாலாஜி மரணத்தை போலீஸ் தற்கொலை என்ற முடிவுக்கு வந்தாலும், இதில் இன்னும் மர்மம் உள்ளதாகவே பலர் சந்தேகிக்கின்றனர்.
- சாட் - ஜிபிடி தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் அறிமிருகப்படுத்தியது.
- தனியாக செயலியைப் பதிவிறக்கம் செய்ய தேவை இல்லை
மெட்டா நிறுவனத்தின் பிரபல சமூக தொடர்பு தளமான வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இந்தியாவில் சுமார் 54 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துகின்றனர். உலகளவில் 300 கோடி பேர் வரை இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் சாட்-ஜிபிடி அம்சத்தை பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ அறிமுகம் செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துடன் சாட்டிங் மூலம் மனிதர்கள் உரையாட சாட் - ஜிபிடி தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது.

இது சாதாரண உரையாடல் தொடங்கி தொழில்துறையும் வளர்ந்து வரும் நுட்பமாக உள்ள நிலையில் தனியாகச் செயலியைப் பதிவிறக்கம் செய்யாமல் தற்போது வாட்ஸ்அப் செயலி மூலம் நேரடியாகவே சாட் -ஜிபிடி உடன் உரையாடும் அம்சத்தை அருகப்படுத்துவதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் 1-800-CHATGPT என்று அழைக்கப்படும் இந்த சாட் ஜிபிடி வாட்ஸ்அப்பில் அறிமுகமாகிறது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன் உரையாட 1-800-242-8478 என்ற எண்ணை அழைத்தால் போதுமானது. ஏற்கனவே வாட்ஸ்அப்-இல் மெட்டா ஏஐ வசதி உள்ள நிலையில் இந்த சாட் ஜிபிடி அறிமுகம் பயனர்களிடத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக சாட்- ஜிபிடி குறித்து அதை பயிற்றுவிக்கும் குழுவில் பணியாற்றிய ஓபன் ஏஐ முன்னாள் ஆராய்ச்சியாளர் சுசீர் பாலாஜி[ 26 வயது] அதன் தீமைகள் குறித்து எச்சரித்திருந்தார். கடந்த நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
- பிரதமர் நரேந்திர மோடி குறி வைக்கப்பட்டு அவரின் குரலில் தமிழ் பாடல்கள் வைரலாகின
- அமெரிக்க சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் நிகழ்ந்தது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்த 2024 ஆம் ஆண்டு வெகு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். சமூக வலைத்தளம் முதல் வேலை செய்யும் இடம் வரை உலகம் முழுவதிலும் ஏஐ தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக பேஸ்புக், வாட்ஸப்பின் மெட்டா ஏஐ இந்த வருடம் அறிமுகமானது.

ஏஐ வளர்ச்சியும், அதன் தவறான பயன்பாடும், அது குறித்த அறிவுஜீவிகளின் எச்சரிக்கையும் இணைந்தே வந்துள்ளது. சாட்ஜிபிடி, டீப் fake உள்ளிட்டவை வார்த்தைகள் மக்கள் மத்தியில் புழங்கத் தொடங்கின. பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வரை மர்ம நபர்களின் டீப்ஃபேக் சேட்டைகளுக்கு உள்ளாகினர்.

குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறி வைக்கப்பட்டு அவரின் குரலில் தமிழ் பாடல்கள் முதல் மேடைகளில் அவரின் நடனம் வரை ஏஐ தொழில்நுட்பம் மூலம் இணைய வாசிகள் உருவாக்கி எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் என சமூக ஊடகங்கள் தோறும் டிரண்ட் செய்தனர்.
அவ்வாறு ஏஐ மோடி நடமாடும் ஒரு வீடியோவுக்கு பிரதமர் மோடியே தனது எக்ஸ் பக்கத்தில், உங்கள் அனைவரையும் போலவே நானும் நடனமாடுவதைப் பார்த்து மகிழ்ந்தேன். இது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற முக்கிய நபர்களில் ஏஐ உருவங்கள் பி[பேஷன் வாக் நடக்கும் வீடியோவை எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் பகிர்ந்து சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
கடந்த வருட இறுதியில் வெளியான தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவில் ஆபாசமான டீப் fake பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதன் பின் பாலிவுட் பிரபலங்கள் பலரும் டீப் fake க்கு இறையாகினர். பல சமூக வலைதள பக்கங்களில் நடிகைகள், ஆலியா பட், க்ரிதி சனோன், திஷா பதானி, தமன்னா பாட்டியா, சமந்தா ரூத் பிரபு,மாளவிகா மோகனன், கஜோல் உள்ளிட்டோர் பிகினி உள்ளிட்டடோரை சித்தரித்து போலி டீப் -fake வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வளம் வந்தன.
பாஜகவுக்கு எதிரான தான் பேசுவதுபோல் வெளியான deepfake ஆல் அதிர்ந்த தீபிகா படுகோனே கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் கடந்த அக்டோபரில் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்தார்.

ஒரு Reddit பயனர் சமீபத்தில் ஒரு மாணவருக்கும் கூகுள் ஜெமினி ஏஐக்கும் இடையிலான உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ளார், அதில் AI சாட்பாட், மாணவர் "இறக்க வேண்டும்" என்று பரிந்துரைத்தது.
மேலும் கேம் ஆப் திரோன்ஸ் காதாபாத்திரத்தின் சாட் ஜிபிடி உடன் காதல் கொண்ட அமெரிக்க சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அக்டோபரில் நிகழ்ந்தது.
ஓபன் ஏஐ இன் மனிதகுலத்துக்கு அபாயகரமான கொள்கைகள், மற்றவர்களின் அறிவுசார் தரவுகளை அனுமதியில்லாமல் எப்படி ஓபன் ஏஐ பயன்படுத்துகிறது என்பது குறித்து நியூ யார்க் டைம்ஸ் கு பேட்டி அளித்த அந்நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் சுசீர் பாலாஜி [26 வயது] கடந்த நவம்பரில் அவரது வீட்டில் சடலமாக கிடந்தார்.

சுஷீர் பாலாஜியின் பேட்டியின் பின் விளைவுகளால் ஓபன் ஏஐ நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில் அவரது மர்ம மரணம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுஷீர் பாலாஜி மரணம் தற்கொலை மாதிரி தெரியவில்லை என எலான் மஸ்க்கும் தெரிவித்துள்ளார்.
- இந்தப் பணம் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு அல்ல
- ஆனால் மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏஐ... என்று டிரம்ப் அவர்களை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்தார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்டார்கேட் என்ற ஏ.ஐ. திட்டத்தை அறிவித்தார்.
ஓபன் ஏஐ, ஜப்பானிய நிறுவனமான SoftBank மற்றும் மைக்ரோசாஃப்டின் கிளவுட் நிறுவனமான Oracle ஆகியவற்றின் பங்களிப்பில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்கும் திட்டமே ஸ்டார்கேட்.
ஸ்டார்கேட் திட்டம் மூலம் மேற்கூறிய நிறுவனங்கள் உதவியுடன் அமெரிக்காவில் ஏஐ உள்கட்டமைப்பு உருவாக்கத்துக்கு 500 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என்று டிரம்ப் கூறினார்.
ஆனால் எக்ஸ், ஸ்பெஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் உரிமையாளரும் டிரம்பின் கூட்டாளியுமான எலான் மஸ்க், அவர்களிடம் [அந்த நிறுவனங்களிடம்] அவ்வளவு பணம் இல்லை என்று எக்ஸ் பதவில் தெரிவித்திருந்தார். SoftBank நிறுவனம் 10 பில்லியன் வரை தரும், ஆனால் மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏஐ... என்று மஸ்க் அவர்களை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் CNBC செய்தி நிறுவன நேர்காணலின் போது, மஸ்க்கின் கூற்றுகளுக்கு பதிலளித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் சத்ய நாதெல்லா, என்னால் 80 பில்லியன் டாலர்கள் வரை [ஸ்டார்கேட் திட்டத்தில்]செலவழிக்க முடியும் என்று தெரிவித்தார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நம்பலாம். இந்தப் பணம் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு அல்ல, ஆனால் நிஜ உலகத்திற்காக பயனுள்ள விஷயங்களை உருவாக்குவதே என்றும் அவர் தெரிவித்தார்.
அவர்களிடம் பணம் இல்லை என எலான் மஸ்க் கருத்தை ஓபன் ஏஐ சிஇஓ சால்ம் ஆல்ட்மேனும் நிராகரித்துள்ளார். ஸ்டார்கேட் திட்டத்திற்கான ஏஐ பரிசோதனையை வேலைகள் ஏற்கனவே தாங்கள் தொடங்கிவிட்டதாகவும், அதை மஸ்க் வந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
- டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று டிரம்ப் கூறியுள்ளார்
- டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி ஆகியவையே அமெரிக்க நிறுவனகளே கோலோச்சி வந்தன.
இந்நிலையில் அவற்றுக்கு சவால் விடும் வகையில் சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஏஐ மாடல் அமைந்துள்ளது. இது ஏஐ உலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் டீப்சீக் (Deepseek).
இந்த நிறுவனம் தற்போது டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆர்1 மாடல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆர்1 என்பது வழக்கமான ஏஐ மாடல் ஆகும். இன்னும் பயன்பாட்டுக்கு வாராத ஆர்1 ஜீரோ தானாகவே கற்பித்துக்கொள்ளும் (self-taught) ஏஐ மாடல் ஆகும். அமெரிக்க நிறுவனங்களை விட குறைவாக 6 மில்லியன் டாலர்கள் செலவில் டீப்சீக் ஏஐ உருவாக்கப்பட்டுள்ளது.

டீப்சீக் ஏஐ மாடல் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன. ஏனெனில் டீப்சீக் ஏஐ முற்றிலும் இலவசமாகும். தற்போது சந்தையில் உள்ள சாட்ஜிபிடி, ஜெமினி ஆகியவை பயனர்களுக்குப் பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. புதிய அம்சங்களுக்குக் கட்டணம் பெறுகிறது. ஆனால் டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.
மேலும் டீப்சீக் ஏஐ மாடலை இயக்கும் செலவும் குறைவாகும். ஓபன் ஏஐ மாடலை இயக்க 10 இன்புட் டோக்கன்கள் தேவை, அதற்கு 15 டாலர் செலவாகும். ஆனால் டீப்சீக் மாடலில் அதே 10 இன்புட் டோக்கன்கள் செலவு 0.55 டாலர்கள் மட்டுமே. அதாவது ஓபன் ஏஐ மாடலை விட டீப் சீக் மாடலை இயக்க 27 மடங்கு குறைவாகவே செலவாகிறது.

மேலும் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஆகியவை க்ளோஸ்ட்டு சோர்ஸ் ஏஐ மாடல்கள். ஆனால் டீப்சீக் ஏஐ ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல், அதவாது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இதை அணுக முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. எனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்த புதிய போட்டியாளரை கண்டு நடுக்கத்தில் உள்ளன. பங்குச்சந்தையிலும் டீப்சீக் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மியாமியில் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சாட்ஜிபிடி ஐ விஞ்சி ஆப்பிளின் US ஸ்டோரில் அதிகமாக இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது. டீப்சீக் செயலி உலகளவில் அளவுக்கு அதிகமான டவுன்லோட்களை கடந்து அசத்தியது.
மிக குறுகிய காலக்கட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்த நிலையில், டீப்சீக் தளத்தை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, டீப்சீக் சேவையை பயன்படுத்த வழிவகை செய்யும் பதிவு முறையை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.