என் மலர்
நீங்கள் தேடியது "சாட்பாட்"
- சாட்ஜிபிடியிடம் தன்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளார்.
- தனது குழந்தைகளைக் கொலை செய்ததற்காக ஹோல்மனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
எக்ஸ் நிறுவனத்தின் குரோக் ஏஐ இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி (Chat GPT) சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது.
பொய்யான தகவலை கொடுத்ததற்காக சாட்ஜிபிடி மீது நார்வே நாட்டை சேர்ந்த அர்வே ஜால்மர் ஹோல்மென் என்பவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஹோல்மென் சமீபத்தில் சாட்ஜிபிடியிடம் தன்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளார்.

அர்வே ஜால்மர் ஹோல்மென் யார்? என்று சாட்ஜிபிடியிடம் அவர் கேட்டுள்ளார்.
இதற்கான பதிலளித்த சாட்ஜிபிடி, "ஆர்வ் ஜால்மர் ஹோல்மென் நார்வேயை சேர்ந்தவர். ஒரு சம்பவத்திற்குப் பிறகு அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவருக்கு பத்து வயது, மற்றொன்றுக்கு ஏழு வயது.
இரண்டு குழந்தைகளும் டிசம்பர் 2020 இல் அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது குழந்தைகளைக் கொலை செய்ததற்காக ஹோல்மனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது" என்று கூறியுள்ளது.

அர்வே ஜால்மர் ஹோல்மென்
இதைக் கண்டு ஹோல்மன் அதிர்ச்சியடைந்தார். இதற்குப் பிறகு, நொய்ப் என்ற டிஜிட்டல் உரிமைகள் குழுவை அணுகிய அவர், அவர்கள் மூலம் ஓபன் ஏஐ நிறுவனம் மீது புகார் அளித்தார்.
இதில், ஓபன்ஏஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொய்யை மக்கள் உண்மை என்று நம்பக்கூடும் என்பது ஹோல்மனின் கவலை.
இந்த நிலையில், சாட்ஜிபிடியின் பழைய வெர்ஷன் அது என்றும் பிழைகளைக் குறைக்க தங்கள் வெர்ஷன்களை தொடர்ந்து மேம்படுத்துவதாகவும் ஓபன் ஏஐ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
- ஒபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி முன்னணியில் இருந்து வருகிறது
- கூகுள் நிறுவனத்தின் பார்ட் செயலியும் பிரபலமாகி வருகிறது
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சாட்பாட் எனப்படும் உரையாடல் மென்பொருளை உருவாக்குவதில் நாளுக்கு நாள் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே போட்டி வலுத்து வருகிறது.
ஐ.டி. துறையில் சேவை மேலாண்மை அனுபவத்தை மேம்படுத்த சாட்பாட்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி முன்னணியில் இருக்கும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் பார்ட் செயலியும் பிரபலமாகி வருகிறது.
இணையத்தில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பயனாளர்களின் தகவல்களை கொண்டு இயந்திர கற்றல் தொழில்நுட்பம் மூலம் 'லார்ஜ் லேங்குவேஜ் மாடல்' எனப்படும் ஒரு மென்பொருள் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதனை கொண்டு உருவாக்கப்படும் செயலிகள்தான் சாட்பாட்கள்.
ஆனால் சாட்ஜிபிடி மற்றும் பார்ட் இரண்டும் தனியுரிமை வகையை சேர்ந்தவை. இவற்றை இலவசமாக பயன்படுத்த முடியாது. இதில் உள்ள புரோகிராமிங் குறியீடுகளை கணினி ஆராய்ச்சியாளர்கள் பார்க்கவோ பரிசீலனை செய்யவோ அனுமதி கிடையாது.
இந்நிலையில் முகநூல் வலைதளத்தை நடத்தி வரும் மெட்டா நிறுவனம் நேரடியாக ஒரு சாட்பாட்டை உருவாக்காமல் அதற்கு பதிலாக லாமா எனும் ஒரு 'லார்ஜ் லேங்குவேஜ் மாடல்' வடிவத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனை காப்புரிமை கட்டுப்பாடில்லாத, பயன்படுத்த அனுமதி தேவைப்படாத, கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லாத இலவச ஓபன் ஸோர்ஸ் எனப்படும் வகையில் கொண்டு வந்திருக்கிறது.
இதனைக் கொண்டு ஆராய்ச்சியாளர்களும் கணினி நிறுவனங்களும் இலவசமாக பதிவிறக்கி, பரிசீலித்து, பின்பு தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றங்களுடன் கட்டமைத்து புதிது புதிதாக பல சாட்பாட்களை உருவாக்க முடியும்.
ஆர்வலர்களும் நிபுணர்களும் லாமா மொழி மாதிரியை கொண்டு பல புதுமைகளையும் உருவாக்க முடியும்.
ஒரு செயலியை வடிவமைக்க உருவாக்கும் மென்பொருள் பரிசீலிக்கப்படும் வகையில் இருந்தால், தரவுகளின் பாதுகாப்பை வலுவாக்கவும், எதிர்கால செயலாக்க குறைபாடுகளையும், சிக்கல்களையும் முதலிலேயே கண்டறியவும் முடியும்.
தற்போது பிரபலமாக இருக்கும் சாட்பாட்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஏற்கனவே விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. சாட்பாட்களின் உரையாடல்கள் பல நேரங்களில் திசை திரும்பி செல்வதாக கூறப்படுகிறது.
உலகெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான மென்பொருள் நிபுணர்கள் இலவச பெரு மொழி மாதிரிகளை கொண்டு எண்ணற்ற சாட்பாட்களை உருவாக்க முடியும் என்பதால் லாமாவிற்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் ஜெமினி சாட்பாட் கருவியை கூகுள் உருவாக்கியது
- ஜெமினி எல்லா நேரங்களிலும் நம்பத்தகுந்த ஒரு கருவி அல்ல என்கிறது கூகுள்
இணையதள தேடலில் உலகின் பெரும்பான்மையான பயனர்களின் தேடல் இயந்திரமாக (search engine) இருப்பது அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் (Google) நிறுவனத்தின் கூகுள் தேடல் இயந்திரம்.
கூகுள், செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) மையமாக கொண்டு இயங்கும் ஜெமினி (Gemini) எனும் சாட்பாட் கருவியை உருவாக்கியது.
இந்நிலையில், ஒரு பயனர், இந்த சாட்பாட்டிடம், "பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஃபாசிசவாதியா?" என கேள்வி கேட்டதற்கு "ஃபாசிச கொள்கைகள் உடைய சில திட்டங்களை செயல்படுத்தியவராக பிரதமர் மோடி குற்றம் சாட்டப்பட்டுள்ளார்" என பதிலளித்தது.
தொடர்ந்து அந்த சாட்பாட் அளித்த விரிவான பதிலில் பிரதமர் குறித்து ஆட்சேபகரமான பல கருத்துகள் இருந்தன.
அதே சமயம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் குறித்த கேள்விகளுக்கு ஜெமினி சரியான பதில் அளிக்கவில்லை.
இதை தொடர்ந்து உரையாடலின் "ஸ்க்ரீன் ஷாட்டை" ஒரு பத்திரிகையாளர் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகருக்கு அனுப்பினார்.
இது குறித்து அமைச்சர் கூகுள் நிறுவனத்திடம் ராஜிவ் சந்திரசேகர் விளக்கம் கேட்டிருந்தார்.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருள் கருவிகளும் செயலிகளும் முழுமையாக நம்பத்தகுந்தவை இல்லை என்பதை காரணம் காட்டி கிரிமினல் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்து கொள்ள முடியாது என அவர் கூகுளை எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இந்த குறைபாடு குறித்து கூகுள் விளக்கம் அளித்துள்ளது.
அதன் பதிலில் கூகுள் தெரிவித்திருப்பதாவது:
ஜெமினி எல்லா நேரங்களிலும் நம்பத்தகுந்த ஒரு சாதனம் அல்ல.
அதிலும், சமகால நாட்டு நடப்புகள், அரசியல் மற்றும் உடனடி செய்திகள் ஆகியவற்றில் அதன் திறன் இன்னும் முழுமை பெறவில்லை.
இந்நிலையை மாற்ற எங்கள் வல்லுனர்கள் செயலாற்றி வருகின்றனர்.
எந்த நாட்டின் சட்டதிட்டங்களையும் மீறாத வகையில் அதன் உருவாக்கத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.
- டியோ/ஆடியோ அழைப்புகள், AI சாட்போட் gork உள்ளிட்ட அம்சங்களை எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தினார்.
- இந்தக் குறிச்சொற்களைச் சேர்ப்பதன் மூலம் தலைப்புகள் மற்றும் இடுகைகளை எளிதாகத் தேட முடியும்.
உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.
டிவிட்டரின் பெயரை எக்ஸ்[X] என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். வீடியோ/ஆடியோ அழைப்புகள், AI சாட்போட் gork உள்ளிட்ட அம்சங்களை எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேங் இடுகைகள் தேவையில்லாதது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவுகளில் அது தொடர்புடைய ஹேஸ்டேக் களை இடுவதும், அது டிரண்ட் ஆவதும் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது, மேலும் இந்தக் குறிச்சொற்களைச் சேர்ப்பதன் மூலம் தலைப்புகள் மற்றும் இடுகைகளை எளிதாகத் தேட முடியும். இந்நிலையில் எலான் மஸ்க் அது தேவையே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

எக்ஸ் இல் ஹேஸ்டேக் போடலாமா வேண்டாமா என்ற பயனர் ஒருவரின் கேள்விக்கு கோர்ட் சாட்பாட் அளித்த பதிலை பகிர்ந்து மஸ்க் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இனி சிஸ்டத்துக்கு ஹேஸ்டேக்குகள் தேவையில்லை, அதுமட்டுமில்லாமல் அவை பார்க்க அசிங்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தளத்தில் என்ன ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதை அறிந்துகொல்வதற்கு வேறு ஏதும் வழியை எக்ஸ் தளம் உருவாகியிருக்கலாம் என்றும் அதன் காரணமாகவே மஸ்க் இவ்வாறு கூறியுள்ளார் என்று இணைய வல்லுநர்கள் கூறுகின்றனர்.
- பிரதமர் நரேந்திர மோடி குறி வைக்கப்பட்டு அவரின் குரலில் தமிழ் பாடல்கள் வைரலாகின
- அமெரிக்க சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் நிகழ்ந்தது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்த 2024 ஆம் ஆண்டு வெகு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். சமூக வலைத்தளம் முதல் வேலை செய்யும் இடம் வரை உலகம் முழுவதிலும் ஏஐ தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக பேஸ்புக், வாட்ஸப்பின் மெட்டா ஏஐ இந்த வருடம் அறிமுகமானது.

ஏஐ வளர்ச்சியும், அதன் தவறான பயன்பாடும், அது குறித்த அறிவுஜீவிகளின் எச்சரிக்கையும் இணைந்தே வந்துள்ளது. சாட்ஜிபிடி, டீப் fake உள்ளிட்டவை வார்த்தைகள் மக்கள் மத்தியில் புழங்கத் தொடங்கின. பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வரை மர்ம நபர்களின் டீப்ஃபேக் சேட்டைகளுக்கு உள்ளாகினர்.

குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறி வைக்கப்பட்டு அவரின் குரலில் தமிழ் பாடல்கள் முதல் மேடைகளில் அவரின் நடனம் வரை ஏஐ தொழில்நுட்பம் மூலம் இணைய வாசிகள் உருவாக்கி எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் என சமூக ஊடகங்கள் தோறும் டிரண்ட் செய்தனர்.
அவ்வாறு ஏஐ மோடி நடமாடும் ஒரு வீடியோவுக்கு பிரதமர் மோடியே தனது எக்ஸ் பக்கத்தில், உங்கள் அனைவரையும் போலவே நானும் நடனமாடுவதைப் பார்த்து மகிழ்ந்தேன். இது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற முக்கிய நபர்களில் ஏஐ உருவங்கள் பி[பேஷன் வாக் நடக்கும் வீடியோவை எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் பகிர்ந்து சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
கடந்த வருட இறுதியில் வெளியான தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவில் ஆபாசமான டீப் fake பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதன் பின் பாலிவுட் பிரபலங்கள் பலரும் டீப் fake க்கு இறையாகினர். பல சமூக வலைதள பக்கங்களில் நடிகைகள், ஆலியா பட், க்ரிதி சனோன், திஷா பதானி, தமன்னா பாட்டியா, சமந்தா ரூத் பிரபு,மாளவிகா மோகனன், கஜோல் உள்ளிட்டோர் பிகினி உள்ளிட்டடோரை சித்தரித்து போலி டீப் -fake வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வளம் வந்தன.
பாஜகவுக்கு எதிரான தான் பேசுவதுபோல் வெளியான deepfake ஆல் அதிர்ந்த தீபிகா படுகோனே கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் கடந்த அக்டோபரில் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்தார்.

ஒரு Reddit பயனர் சமீபத்தில் ஒரு மாணவருக்கும் கூகுள் ஜெமினி ஏஐக்கும் இடையிலான உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ளார், அதில் AI சாட்பாட், மாணவர் "இறக்க வேண்டும்" என்று பரிந்துரைத்தது.
மேலும் கேம் ஆப் திரோன்ஸ் காதாபாத்திரத்தின் சாட் ஜிபிடி உடன் காதல் கொண்ட அமெரிக்க சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அக்டோபரில் நிகழ்ந்தது.
ஓபன் ஏஐ இன் மனிதகுலத்துக்கு அபாயகரமான கொள்கைகள், மற்றவர்களின் அறிவுசார் தரவுகளை அனுமதியில்லாமல் எப்படி ஓபன் ஏஐ பயன்படுத்துகிறது என்பது குறித்து நியூ யார்க் டைம்ஸ் கு பேட்டி அளித்த அந்நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் சுசீர் பாலாஜி [26 வயது] கடந்த நவம்பரில் அவரது வீட்டில் சடலமாக கிடந்தார்.

சுஷீர் பாலாஜியின் பேட்டியின் பின் விளைவுகளால் ஓபன் ஏஐ நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில் அவரது மர்ம மரணம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுஷீர் பாலாஜி மரணம் தற்கொலை மாதிரி தெரியவில்லை என எலான் மஸ்க்கும் தெரிவித்துள்ளார்.