என் மலர்
நீங்கள் தேடியது "துரியன் பழம்"
- மரத்தில் துரியன் பழங்கள் கொத்து கொத்தாக பழுத்து தொங்குகின்றன.
- தம்பதிகள் துரியன் பழத்தை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
குன்னூர்:
மலை பிரதேசமான நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது.
இங்கு பல்வேறு அரியவகை பழ மரங்கள் உள்ளது. இவை சீசனுக்கு உகந்தவாறு விற்பனைக்கு வருகிறது. இவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்தது துரியன் பழம்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் கல்லாறு தோட்டக்கலை பண்ணையில் மருத்துவ குணம் நிறைந்த துரியன் பழ மரங்கள் அதிகளவில் உள்ளன.
இங்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் துரியன் பழ சீசன் தொடங்கியது. அதன் பின்னர் 3 ஆண்டுகளாக துரியன் பழ சீசன் தாமதமாகி வந்தது.
இந்த நிலையில் தற்போது கல்லாறு பழப்பண்ணையில் துரியன் பழ சீசன் தொடங்கி உள்ளது. அங்குள்ள மரத்தில் துரியன் பழங்கள் கொத்து கொத்தாக பழுத்து தொங்குகின்றன.
குற்றலாம் மற்றும் கல்லாறு பண்ணையில் விளைந்த துரியன் பழங்கள் தற்போது பர்லியார், வடுக தோட்டம் உள்பட குன்னூரில் உள்ள பழ கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன.
வெளி மார்க்கெட்டில் கிலோ 55 ரூபாய் முதல் 600 ரூபாய் வரைக்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:-
குழந்தை இல்லாத தம்பதிகள் துரியன் பழத்தை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த பழத்தின் தாயகம் தென்கிழக்கு ஆசியா ஆகும். மேலும் சீசன் காலமாக ஜனவரி, பிப்ரவரி மற்றும் ஜூன், ஜூலை மாதங்கள் உள்ளன.
இந்த பழகம் 1 கிலோ முதல் 3 கிலோ எடை வரை இருக்கும். பார்ப்பதற்கு பலாப்பழம் தோற்றத்தில் இருப்பதுடன், உண்டால் வெண்ணை போன்ற சுவை கொண்டதாகும்.
இந்த பண்ணையில் 50 துரியன் மரங்கள் உள்ளன. இங்குள்ள மரங்களில் தற்போது துரியன் காய்த்து பழுத்து தொங்குகின்றன. இவை தானாகவே கீழே விழுந்து விடும். அவற்றை சேகரித்து விற்பனை செய்கிறோம். கிலோ ரூ.520 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
துரியன் பழ சீசன் தொடங்கியதை அடுத்து நீலகிரிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அனைவரும் கல்லார் பழப்பண்ணையை பார்வையிட்டு விட்டு, அங்கு விளையக்கூடிய துரியன் பழங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
- சிங்கப்பூரில் கிடைக்கும் புக்கிட் மேரா என்று அழைக்கப்படும் இனிப்பு மற்றும் கசப்பு சுவை கலந்த சுல்தான் துரியன்.
- துரியன் பழம் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
பழங்களின் ராஜாவாக அறியப்படுவது துரியன் பழம். உலகின் சில நாடுகளில்தான் துரியன் பழங்கள் கிடைக்கின்றன.
சிங்கப்பூரில் கிடைக்கும் புக்கிட் மேரா என்று அழைக்கப்படும் இனிப்பு மற்றும் கசப்பு சுவை கலந்த சுல்தான் துரியன், தாய்லாந்தில் கிடைக்கும் சற்று காரம் மற்றும் இனிப்பு கலந்த மான்தோங் துரியன், மலேசியாவில் பிரபலமான இனிப்பு மற்றும் கிரீம் சுவை கொண்ட கருப்பு முள் துரியன், இந்தோனேசியாவில் பரவலாக கிடைக்கும் இனிப்பு, கசப்பு சுவை கலந்த பச்சை துரியன் உள்ளிட்டவற்றை உதாரணமாக கூறலாம்.
ஆனால், இவை அனைத்தையும் மிஞ்சும் சுவையும் ஊட்டச்சத்துக்களும் நிரம்பியது தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கிடைக்கும் துரியன் பழங்கள்.
இந்த பழங்களில் மற்ற துரியன் பழங்களை விட சுவை மற்றும் மருந்துவ குணங்கள் அதிகம் இருக்க காரணம், மேற்கு தொடர்ச்சி மலையின் மண் வளமும், தண்ணீர் வளமும் தான்.
பொதுவாக, துரியனில் வைட்டமின் சி, போலிக் அமிலம், தியாமின், ரிபோப்ளேவின், நியாசின், பி-6 மற்றும் வைட்டமின்-ஏ போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன, அத்துடன் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளன. இரும்பு, கால்சியம், மெக்னீசியம், சோடியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ், பைட்டோ கெமிக்கல்கள், நீர், புரதம் மற்றும் நன்மை பயக்கும் நார்ச்சத்து போன்றவை உள்ளன.
துரியன் பழம் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. நோய்களை தடுக்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இருப்பினும் ரத்த சர்க்கரை அளவு அதிகம் இருக்கும் நீரிழிவு நோயாளிகள் துரியன் பழங்களை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். சோகையை நீக்குகிறது. தூக்கமின்மையால் அவதிப்படுவோர் சீசனில் கிடைக்கும் துரியன் பழங்களை உண்டு வந்தால் விரைவில் இயற்கையான தூக்கத்தை பெறலாம். மேலும், குற்றாலம் துரியன் பழங்கள் குழந்தை பேறு உருவாக்கும் சக்தியை ஊக்குவிப்பதாக நம்பப்படுகிறது. மொத்தத்தில் சொல்வது என்றால், குற்றாலம் துரியன் பழங்கள் இயற்கையின் கொடை ஆகும்.