என் மலர்
நீங்கள் தேடியது "துளசி"
- ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் தினமும் துளசியை வழிபட்டு வந்தால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.
- விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.
அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாளாக சுக்ல பட்ச துவாதசி முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தட்சிணாயினத்தின் முதல் ஏகாதசியாக வருவது 'தேவசயனி ஏகாதசி'. இந்த நாளில் மகாவிஷ்ணு அரிதுயில் பயிலத் தொடங்குவார் என்றும் நான்கு மாதங்களுக்குப் பின்வரும் பிரபோதினி ஏகாதசி அன்றுதான் கண்விழிப்பார் என்பது ஐதிகம். அப்படிப்பட்ட தேவசயனி ஏகாதசி தினத்தன்று விரதம் இருந்தால் வாழ்வில் இக்கட்டான தருணங்களிலிருந்து தப்பிக்க உதவும் வலிமை உண்டாகும் என்கின்றன ஞான நூல்கள்.
ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் (துவாதசி வரையில்) தினமும் தவறாமல் துளசியை வழிபட்டு வந்தால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.
சுக்ல பட்ச துவாதசி திதியில், காலையில் வீட்டில் விளக்கேற்றி வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு சந்தனம் குங்குமமிட்டு, துளசி மாலை சாற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள், விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஒலிக்க வைத்து கேட்டு பெருமாளை வழிபடலாம்.
துளசியால் அர்ச்சனை செய்யுங்கள். புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். முடியுமெனில், சுக்ல பட்ச ஏகாதசியிலும் மறுநாள் துவாதசியிலும் என இரண்டு நாட்களும் பெருமாளை வழிபடலாம். காலையிலேயே நீராடி, பெருமாளின் திவ்விய நாமங்களைச் சொல்லி துளசியால் அர்ச்சித்து வழிபடுங்கள்.
ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் ஆடி கோபத்ம விரதம் கடைப் பிடிக்கப்படுவது, இந்த தினத்தில் பெண்கள் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும். அதே போல், ஆடி வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்தால் பெண்களின் ஜாதகத்தில் காணப்படும் நாகதோஷம் நிவர்த்தி யாகும்.
ஏகாதசி அன்று புளியோதரையும் துவாதசி அன்று தயிர்சாதமும் என பிரித்துக் கொண்டு நைவேத்தியம் செய்து மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யலாம். ஏகாதசி நாளில், அன்னதானம் செய்வது மகத்தான பலன்களை வழங்கும்.
- துளசியில் இருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை சரும பிரச்சினைகளை தடுக்கக்கூடியது.
- துளசி ஃபேசியல் செய்தால் முகப்பருக்கள், தழும்புகள் மறையும்.
துளசியில் இருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை சரும பிரச்சினைகளை தடுக்கக்கூடியது. ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தயிர் சேர்த்து பசை போல் அரைக்கவும். அதை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள், அவற்றால் உண்டாகும் தழும்புகள் நீங்கும்.
எண்ணெய்ப்பசை நீங்க:
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை பசை போல அரைத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு கலக்கவும். இதை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 2 முறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை நீங்கும்.
முகச்சுருக்கம் மறைய:
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். அதைக்கொண்டு முகத்தை கழுவவும். தினமும் இதுபோல் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறைந்து இளமை அதிகரிக்கும்.
முகம் பொலிவு பெற:
சிறிதளவு துளசி இலைகளை தண்ணீரில் போட்டு அது நன்றாக கொதித்த பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும், அந்த தண்ணீருடன் சிறிதளவு சந்தனம் சேர்த்து ஃபேஸ்பேக் தயாரிக்கவும். அதை முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரில் கழுவவும். அவ்வப்போது இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.
முகத்தில் கரும்புள்ளிகள் மறைய:
சிறிதளவு துளசி இலைகளை நன்றாக அரைத்து, அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் கலந்து முகத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்த பின்பு ஈரமான துணியால் மென்மையாக துடைத்து எடுக்கவும். பிறகு சிறு துண்டு பஞ்சை ரோஸ்வாட்டரில் தோய்த்து அதைக்கொண்டு முகத்தை துடைக்கவும். இதுபோல் வாரத்திற்கு முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.
முகத்தில் உள்ள வறட்சி நீங்க:
2 சிட்டிகை துளசி பொடியுடன், 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் பூசவும். ௧௫ நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் சரும வறட்சியை போக்கி, முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கலாம்.
சருமம் புத்துணர்ச்சி பெற:
சிறிதளவு துளசி மற்றும் புதினாவுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பசை போல அரைக்கவும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி நன்றாக உலர்ந்த பிறகு கழுவவும், இதனால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
- ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார்.
- நாம சங்கீர்த்தனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஒருமுறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, ருக்மணியும் சத்தியபாமாவும் சோதித்துப் பார்க்க விரும்பினர். தங்களுடைய கருத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.
கிருஷ்ணரும் அதற்கு சம்மதித்தார். அங்கே ஒரு துலாபாரம் (தராசு) கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணர் அதில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரும் மறுவார்த்தை பேசாமல் துலாபாரத்தில் அமர்ந்து, ஏதும் அறியாதவர் போல் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
முதலில் சத்தியபாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள். ஆனால் கண்ணன் அமர்ந்திருந்த தட்டில் அசைவே இல்லை. தனது முயற்சியில் சற்றும் தளராது சத்தியபாமா மேலும் தனது கழுத்தில், காதில், உடலில் அணிந்திருந்த எல்லா நகைகளையும் எடுத்து தராசில் வைத்தாள். அப்போதும் நகைகள் வைக்கப்பட்ட தட்டு கீழே வரவில்லை. சத்தியபாமா வெட்கத்தால் தலை குனிந்தாள்.
இந்த நிகழ்ச்சியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ருக்மணி, தராசின் அருகில் வந்து கிருஷ்ணரைப் பிரார்த்தித்து ஒரு துளசி இலையில் கிருஷ்ணரின் நாமத்தை எழுதி, தராசின் நகைகள் இருந்த தட்டில் வைத்தாள். என்ன ஆச்சரியம். அது கிருஷ்ணனுடைய எடைக்கு சமமாக நின்றது. இறைவனுக்கும், அவனது திருநாமத்துக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. பக்தியுடன் அவன் நாமத்தைச் சொல்லி ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார். கலியுகத்தில், அதனால்தான் நாம சங்கீர்த்தனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
- துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது.
- தினமும் இரண்டு இலை துளசி சாப்பிட்டால் பல்வேறு நோய்களை விரட்டலாம்.
துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவரது வீட்டிலும் இந்த செடி இருக்கும். இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.
வீட்டில் துளசி மாடம் என்று ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்தனர். இன்று அடுக்குமாடி குடியிருப்பில் துளசி வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் தான் இன்று துளசியை நிறைய பேர் பார்க்கின்றனர்.
சாமிக்கு சூட்டப்படும் மாலையில் தான் சிலர் துளசியை பார்க்கின்றனர். தினமும் இரண்டு இலை துளசி சாப்பிட்டால் பல்வேறு நோய்களை விரட்டலாம். ஆனால் சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறைவு தான். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.
ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் அறவே ஒழிக்கலாம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை அண்டாது. கோடை காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும்.
அதனை தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலை யால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறுடன் கலந்து நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை, சொரி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனை செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மருந்து, மாத்திரை மூலம் செய்ய முடியாததை இந்த அருமருந்தான துளசி செய்துவிடும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வரவேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அள விற்கு தண்ணீரும் பருகிவர பிரச்சினை சரியாகும். துளசி யிடம் காய்ச்சலைத் தடுக் கக்கூடிய இயல்பு உள்ளது.
இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந் துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமை ப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு. வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்களுடன் துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம்.
இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி கிருமி நாசினி, பல்வேறு வியாதி களையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது இந்த துளசி. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோளையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதி கமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக்க துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்பளங்களுக்கு துளசி இலையை நீர் விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி. எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு.
வைரஸ் காய்ச்சல் வந்தால் அதை குணப்படுத் தக்கூடிய வல்லமையும் துள சிக்கு உண்டு. ஜப்பானீஸ் என்செபலாடி டிஸ் எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளனர். அதேபோல பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும், தடுக்கும் வல்லமையும் துளசிக்கு உண்டு. நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு இருக்கிறது.
பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்பு குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும். துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறி தளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர பல்வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலை சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
வீடுகளில் துளசி இலை கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்றி துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது. துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல் படுவதோடு, ஞாபக சக்தியை யும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களில் இருந்து காக்கிறது. எளிமையான கருத்தடை சாதனமாக கொள்ளவும் இந்த துளசி ஏற்றது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது. கிருமி நாசினியாகவும், உடலை தூய்மைப்படுத்தும் பொருளாகவும் அது செயல்படுகிறது. சளி போன்ற வற்றிற்கும் துளசி அருமருந்தாக அமைகிறது. துளசி செடியின் இலைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் நம்மை அணுகாது. கல்லீரலில் வரும் அத்தனை நோய்களையும் இந்த துளசி செடியினால் விரட்டி அடித்து விடலாம்.
துளசி செடியை பிடுங்கிக்கொண்டு வந்து மண்பானைத் தண்ணீரில் அப்படியே ஊறப்போடுங்கள். அந்த தண்ணீரை அடிக்கடி குடித்து வாருங்கள். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும்.
- வயிற்றுப்போக்குடன் ரத்தம் போவது நிற்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
துளசி தீர்த்தம் 400-க்கும் மேற்பட்ட நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. துளசியில் உடனடி பலன் பெறும் சில நோய்கள் விவரம் வருமாறு:
1. உண்ட விஷத்தை முறிக்க உதவுகிறது.
2. விஷஜுரம் குணமாகும்.
3. ஜன்னிவாத ஜுரம் குணமாக உதவுகிறது.
4. வயிற்றுப்போக்குடன் ரத்தம் போவது நிற்கும்.
5. காது குத்து வலி குணமாக உதவுகிறது.
6. காது வலி குணமாகும்.
7. தலைசுற்று குணமாக உதவுகிறது.
8. பிரசவ வலி குறைய உதவுகிறது.
9. அம்மை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது.
10. சிறுநீரக துவார வலி குணமாக உதவுகிறது
11. வண்டு கடி குணமாகும்.
12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக உதவுகிறது
13. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
14. தோல் சம்பந்தமான நோய் குணமாக உதவுகிறது
15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற உதவுகிறது
16. அஜீரணம் குணமாகும்.
17. கெட்ட ரத்தம் சுத்தமாக உதவுகிறது
18. குஷ்ட நோய் குணமாகும்.
19. குளிர்காய்ச்சல் குணமாகும்.
20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக உதவுகிறது
21. விஷப்பூச்சியின் விஷம் நீங்க உதவுகிறது.
22. பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க உதவுகிறது.
23. வலிப்பு குணமாகும்
24. ஜலதோஷம் குணமாகும்
25. ஜீரண சக்தி உண்டாக உதவுகிறது
26. தாதுவைக் கட்ட உதவுகிறது
27. சொப்பன ஸ்கலிதம் குணமாக உதவுகிறது
28. இடிதாங்கியாகப் பயன்பட உதவுகிறது
29. தேள்கொட்டு குணமாக உதவுகிறது
30. சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக உதவுகிறது
31. கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற உதவுகிறது
32. வாதரோகம் குணமாக உதவுகிறது
33. காய்ச்சலின் போது தாகம் தணிய உதவுகிறது
34. பித்தம் குணமாகும்.
35. குழந்தைகளுக்கு வாந்தியை நிறுத்த உதவுகிறது
36. குழந்தைகள் வயிற்றுப்போக்கை நிறுத்த உதவுகிறது
37. சகல விதமான வாய்வுகளும் குணமாக உதவுகிறது
38. மாலைக்கண் குணமாகும்
39. எலிக்கடி விஷம் நீங்க உதவுகிறது
40. ரணத்தில் ரத்தம் ஒழுகினால் நிறுத்த உதவுகிறது
41. வாந்தியை நிறுத்த உதவுகிறது
42. தனுர்வாதம் குணமாகும்
43. வாதவீக்கம் குணமாகும்
44. மலேரியா காய்ச்சல் குணமாக உதவுகிறது
45. வாயுப் பிடிப்பு குணமாக உதவுகிறது
46. இருமல் குணமாகும்.
47. இன்புளூயன்சா காய்ச்சல் குணமாகும்.
48. காய்ச்சலால் ஏற்படும் வாந்தியை நிறுத்த உதவுகிறது
59. இளைப்பு குணமாகும்
50. பற்று, படர்தாமரை குணமாக உதவுகிறது
51. சிரங்கு குணமாக உதவுகிறது
52. கோழை, கபக்கட்டு நீங்க துளசியை பயன்படுத்தலாம்.
- கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார்.
- ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள்.
கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள். அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து வந்தாள். ஆனால் பாமாவோ விஷ்ணு தன்னை மார்பில் சுமந்து இருப்பதாலும் கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும் தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமை யாக்கிக்கொள்ள நினைத்தாள்.
இதற்காக கண்ணனை துலாபார தராசு தட்டின் ஒரு புறமும் மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள். ஆனால் தராசு சமமாக வில்லை. அப்போது அங்கு வந்த ருக்மணி கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என வருந்தி கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்தாள்.
அப்போது தராசு சமமாகியது. கண்ணன், புன் முறுவலுடன் நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந் திருக்கும். நான், எனது என்ற அகந்தையை ஒழித்து உண்மையான பக்தியுடன் என்னை சரண் அடைபவருக்கே நான் சொந்தம் என்றார். தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமா அந்த துளசி இலையை தன் தலையில் சூடிக்கொண்டாள்.
- துளசி திருமாலுக்கு மிகவும் உகந்த ஒருவகைச் செடியின் இலையாகும்.
- துளசி ஊறிய புனித நீரும் நல்ல மருந்தாகிறது.
துளசி திருமாலுக்கு மிகவும் உகந்த ஒருவகைச் செடியின் இலையாகும். துள+சி எனப் பிரித்து ஒப்பில்லாத செடி என இதனைக் கூறுவர். "திருத்துழாய்" என்று அழைக்கப்படும் துளசியைத்தான் பிரசாதமாக வழங்குகிறார்கள். செம்புப் பாத்திரத்தில் நல்ல சுத்தமான நீரை ஊற்றி அதில் துளசியை இட்டு வைத்திருப்பார்கள். இதைத்தான் தீர்த்தமாக வழங்குவார்கள். துளசி ஊறிய புனித நீரும் நல்ல மருந்தாகிறது. இதனால் மனம்கூட நல்ல தூய்மை பெறும்.
துளசியை கார்த்திகை பவுர்ணமியில் பூஜிக்க எல்லா சித்திகளும் ஏற்படும். எப்போதும் தர்மம் செய்யும்போது ஒரு துளசி இலை வைத்தே தானம் செய்ய வேண்டும் என தர்மசாஸ்திரம் கூறுகிறது. பொருளைவிட துளசி மேன்மையானதால் துளசிதானம் கொடுக்கப்படுகிறது என்றே கூறுவர்.
துளசி தீர்த்தம் வயிறை சுத்திகரித்து ரணம் ஏற்பட வழி செய்யும். மரணப் படுக்கையில் இருப்பவர்க்கு துளசித் தீர்த்தம் கொடுக்க, விஷ்ணு லோகம் போக வாய்ப்பு கிடைக்கும் என்பர். துளசிக்கு சமஸ்கிருதத்தில் 'பிருந்தா' எனப்பெயர். காடு போல் துளசி வளர்ந்திருக்கும் தலத்திற்கு பிருந்தாவனம் எனப்பெயர். இதனால்தான் துளசிக் காடாகிய பிருந்தாவனம் ராமருக்குரிய விருப்பமான தலமானது.
பூஜைக்குப் பூக்களை அர்ப்பணிக்கும் போது அன்று பூத்த மலர்களையே கீழே உதிர்வதற்கு முன்பிருக்கும் நிலையில் பறித்து பயன்படுத்த வேண்டும் என்பது நியதி. இதனால் பழைய பூ, புதிய பூ என்ற வேறுபாடுகள் உள்ளன. ஆனால் பூஜைக்குரிய துளசியில் இம்மாதிரியான நிலைகள் இல்லை. எப்போதும் புதிய நிலையைக் கொண்டது துளசி. எனவே பூஜைக்கு எப்போதும் உகந்ததாகத் துளசி கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் தினமும் வழிபாட்டுக்கு துளசி பயன்படுத்துவது மிக, மிக நல்லது.
பெண்கள் சுமங்கலிகளாக வாழ துளசி பூஜை முக்கியமாகும். வீட்டில் துளசி மாடம் அமைத்து அதற்கு விளக்கேற்றி, காலை, மாலை பூஜை செய்து மாடத்தினை வலம் வந்து வணங்க வேண்டும். துளசி மாடத்தை பூஜிக்க வேறு துளசியில் இருந்தே தழைகள் பறிக்க வேண்டும். கோவில்களில் துளசியைப் பிரசாதமாகக் கொடுத்தால் ஒரு தழையை காதில் வைத்துக் கொள்ள வேண்டும். "யார் துளசி பத்திரம் கொண்டு வருகிறானோ அவனுடன் நானும் ஓடி வருகிறேன்" என்றார் பகவான்.
துளசிச் செடிகள் அதிகமாக இருக்கின்ற வீடு மிக புனிதம் உடையதாவதால் யமகிங்கரர்கள் அங்கு வர மாட்டார்கள். நர்மதை நதியின் தரிசனம், கங்கையில் குளியல் துளசி தள ஸ்பரிசம் இம்மூன்றும் துளசிக்கு சமமானவை.
திருமணத் தடைகள் ஏற்பட்டு மன அமைதி இழப்போர், மன அமைதியற்றவர்கள், செல்வம் நிறைய அளவில் இருந்தும் நற்பணிகளைச் செய்ய முடியாத நிலையில் உள்ளோர், நல்ல எண்ணங்கள் கைகூட வேண்டுமென்று முயலுவோர், சமய பேதம் சிறிதுமின்றித் திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் நீராடி தூய ஆடை அணிந்து, தூய மனத்தினராய், தொட்டாற் சிணுங்கியையும் துளசியையும் ஒன்றாக வைத்து வளர்த்து வரும் தொட்டியைக் கொண்டு வந்து அதற்கு அலங்காரம் செய்ய வேண்டும். தூப தீபம் காட்ட வேண்டும், கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும், பழம் ஏதேனும் வைத்து வழிபட வேண்டும். இவ்விதமாக வழிபடும்போது இருபத்தியொருமுறை அந்தத் தொட்டியைச் சுற்றி வந்து வணங்க வேண்டும் இவ்விதம் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நாலாவது வார இறுதியில் நல்ல பலன்களைப் பெற்று சிறப்படையலாம்.
- புரட்டாசி மாதத்தை யொட்டி ஈரோட்டில் துளசி விற்பனை அதிகரித்துள்ளது
- ஒரு கட்டு ரூ.30-க்கு விற்பனையாகிறது
ஈரோடு,
புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என கருதப்படுகிறது. இதனால் புராட்டாசு மாதம் பிறந்தது முதலே பெருமாள் கோவில் களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் சனிக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகள வில் வந்து செல்கிறார்கள். மேலும் பெருமாளுக்கு உகந்ததாக துளசி உள்ளது. இதனால் பெருமாள் கோவி லுக்கு செல்லும் பக்தர்கள் துளசி கொண்டு சென்று பெருமாளுக்கு படைத்து வழிபாடுகிறார்கள். அதே போல் பெருமாள் கோவில் களில் சாமிக்கு துளிசி மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி புரட்டாசி மாதம் பிறந்தது. அன்று முதல் பக்தர்கள் பலர் மாவட்ட த்தில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு பக்தர்கள் அதிகளில் வருகிறார்கள். மேலும் புரட்டாசி சனிக்கிழ மைகளில் கடந்த 3 வாரமாக அனைத்து பெருமாள் கோவி ல்களிலும் பக்தர்கள் ஏராள மானேர் வந்து சாமி தரிசனம் செய்து வரு கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் துளசியை மாலையாக உதிரியாகவும் அதிகளவில் கொண்டு வந்து பெருமாளுக்கு அணி வித்து தரிசனம் செய்கி றார்கள். தொடர்ந்து பக்தர்கள் துளசி வாங்கு வதால் கடந்த 3 வாரங்களாக துளசி விற்ப னை அதிகரித்து வருகிறது.
இதனால் பெருமாள் கோவில்கள் முன்பு துளசி விற்பனைகள் கடைகளும் அதிகளவில் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மற்ற பூக்களை விட துளசி அதி களில் விற்பனை செய்ய ப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் துளசி கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்க ளாக கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் ஈரோட்டில் பல பகுதிகளில் கடந்த மாதம் துளசி 1 கட்டு ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த து.
ஆனால் கடந்த 3 வாரங்க ளாக விலை அதிகரித்து வருகிறது. இதனால் தற்போ து ஈரோட்டில் ஒரு கட்டு துளசி ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பகுதி களை சேர்ந்த ஏராளமான சிறு மற்றும் பெரிய வியா பாரிகள் அதிகளவில் துளசி வாங்கி செல்கிறார்கள். இதனால் துளசி விரைவில் விற்று தீர்ந்து விடுகிறது. மேலும் பெரும்பாலான கடைகளில் சனிக்கிழமை களில் துளசி கிடைப்ப தில்லை. பற்றக்குறை நிலவி வருகிறது.
அதே போல் பல பகுதி களில் இருந்து ஈரோட்டுக்கு கடந்த மாதம் 200 கட்டு களுக்கு மேல் துளசி வரும். ஆனால் தற்போது வியா பாரிகள் போட்டி போட்டு துளசி வாங்கி செல்வதால் வரத்தும் குறைந்தது. இதனால் தற்போது 50 முதல் 60 துளசி கட்டுகள் மட்டுமே கடைகளுக்கு வருகிறது. அதுவும் விரை வில் விற்று தீர்ந்து விடுகிறது. அதே போல் அந்தியூர் பகுதியில் கடந்த மாதம் ஒரு கட்டு துளசி ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.30 வரை விற்கப்பட்டு வரு கிறது.
அதே போல் அந்தியூர் பகுதியில் 1 முழம் துளசி முன்பு ரூ.10-க்கு விற்க ப்பட்டது. ஆனால் தற் போது ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப் படுகிறது.கடந்த மாதம் வரை ரூ.50-க்கு ஒரு பை நிறைய வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது தேவை அதிரிப்பு மற்றும் விலை ஏற்றாத்தால் குறைந்த அளவில் வாங்கி செல்லும் நிலை உள்ளதாக சிறு வியாபாரிகள் தெரி வித்தனர். ஆனால் துளசி விலை ஏற்றம் ஏற்பட்டாலும் பக்தர்கள் பலர் தங்கள் தேவைக்கேற்ப அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். மேலும் வரும் நாட்களிலும் துளசி தேவை அதிகரித்து உள்ளதால் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்த னர். தொடர்ந்து துளசி விற்ப னை அதிகரித்து உள்ளது. இதனால் வியா பாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- கார்த்திகை மாதம் துவாதசி நாளில், துளசி தேவி மகா விஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.
- ஒவ்வொரு துளசி தளைக்கும் ஒவ்வொரு அஸ்வமேதயாகம் செய்த பலன் உண்டு என்பர்.
கார்த்திகை மாதம் துவாதசி நாளில், துளசி தேவி மகா விஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.
எனவே, கார்த்திகை மாதம் முழுவதும் துளசி தளைகளால் மகா விஷ்ணுவை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால்,
ஒவ்வொரு துளசி தளைக்கும் ஒவ்வொரு அஸ்வமேதயாகம் செய்த பலன் உண்டு என்பர்.
துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.
கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால்,
கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும்.
- அதிலும் செடி, கொடிகள் நம் வாழ்வோடு ஒன்றிய காலம் நோயற்ற காலமாகவே இருந்துள்ளது.
- ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மூலிகையாக இது விளங்குகிறது.
இயற்கைக்கு ஈடு இவ்வுலகில் ஏதுமில்லை.
அதிலும் செடி, கொடிகள் நம் வாழ்வோடு ஒன்றிய காலம் நோயற்ற காலமாகவே இருந்துள்ளது.
அந்த வகையில் மற்ற செடிகளுக்கு இல்லாத சிறப்பு ஏன் இந்த துளசி செடிக்கு மட்டும் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?
அதற்கு காரணம் துளசி செடியை தெய்வமாக பார்க்கின்றனர் இந்து மக்கள்.
எந்த ஒரு சடங்கும் துளசி செடிகள் இல்லாமல் நடைபெறாது என்று கூறலாம்.
துளசி செடியில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மூலிகையாக இது விளங்குகிறது.
இதுபோக சளி, இருமல் மற்றும் இதர நோய்களை குணப்படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது.
சுற்றுச்சூழலை தூய்மையாக்கி கொசு விரட்டியை போல் செயல்படுகிறது இந்த துளசி செடி.
சரி, இந்த அதிசயமான செடியை பற்றிய கதையை இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக உள்ளதா?
அப்படியானால் மேலும் படியுங்கள்.
- மிகுந்த கவனத்துடன் சிந்தாமல், சிதறாமல் பாத்திரத்தில் வைத்து மாலை தொடுக்க வேண்டும்.
- அப்போது ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்றும், நாராயணாய நம என்றும் சொல்லிக் கொண்டே கட்ட வேண்டும்.
பூமி பெற்றெடுத்த பாக்கியமே! மோட்சமே நிரந்தரமானது என்பதால் அதை அடைவதற்கு ஸ்ரீமன் நாராயணன் முதலான
எல்லா தேவதைகளையும், எல்லா ஆச்சார்ய புருஷர்களையும் போதிப்பதற்காக துளசி பத்திரத்தை பறிக்கிறேன்
என் செயலை மன்னிப்பாயாக! என்று சொன்ன பிறகே துளசியை நாம் பறிக்கவேண்டும்.
பறித்த துளசியை கிள்ளி கிள்ளி எறியக்கூடாது.
மிகுந்த கவனத்துடன் சிந்தாமல், சிதறாமல் பாத்திரத்தில் வைத்து மாலை தொடுக்க வேண்டும்.
அப்போது ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்றும், நாராயணாய நம என்றும் சொல்லிக் கொண்டே கட்ட வேண்டும்.
- லட்சுமியின் சொரூபமான அவள் பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள்.
- அவள் பிறந்த இடத்தில் இப்போது துளசிமாடம் வைக்கப்பட்டுள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் துளசி தோட்டமான நந்தவனத்தில் தான் பிறந்தாள்.
லட்சுமியின் சொரூபமான அவள் பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள்.
அவள் பிறந்த இடத்தில் இப்போது துளசிமாடம் வைக்கப்பட்டுள்ளது.
இதில் கொட்டப்பட்டிருக்கும் மணலை பக்தர்கள் தங்கள் பர்சில் போட்டுக் கொள்கின்றனர்.
லட்சுமி தேவியின் பார்வை பட்ட இடம் என்பதால் தங்களுக்கு செல்வம் சேரும் என்ற நம்பிக்கையில் இப்படி செய்கிறார்கள்.
கல்லால் ஆன இந்த துளசி மாடத்தின் கீழே ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
துளசி தோட்டத்தின் முகப்பில் ஆண்டாளின் பிறப்பை சித்தரிக்கும் சுதை வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.