என் மலர்
நீங்கள் தேடியது "தொழில் அதிபர் கொலை"
- ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விருதுநகர் நகராட்சியில் மார்க்கெட் ஏலம் எடுப்பது தொடர்பாக இருதரப்பினரும் ஒருவரையொருவர் கொலை செய்யும் படலம் நடந்து வருகிறது.
விருதுநகர்:
விருதுநகர் மேலதெருவில் உள்ள குப்பையா தெருவை சேர்ந்தவர் குமரவேல் (வயது 47). இவர் விருதுநகர் நகராட்சியில் மார்க்கெட் குத்தகை உள்பட பல்வேறு தொழில்களை செய்து வந்தார். மேலும் மருதுசேனை அமைப்பின் மாநில பொருளாளராகவும் இருந்தார்.
நேற்று மாலை தேசபந்து திடல் எதிரே மாம்பழ பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் குமரவேல் கணக்குகளை சரி பார்த்து கொண்டிருந்தார். அங்கு அவரது மனைவியின் தங்கை ரூபி (40), உறவினர் ராம்குமார் (34) ஆகியோரும் இருந்தனர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அலுவலகத்துக்கு வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராம்குமார் அவர்களை தடுக்க முயன்றார். மேலும் அலுவலகத்தின் உள் அறையில் இருந்த குமரவேலிடமும் தகவல் தெரிவித்தார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அலுவலகத்தின் கதவு, கண்ணாடி, பொருட்களை உடைத்து உள்ளே புகுந்தது.
பின்னர் அரிவாளால் குமரவேலை சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க வந்த ரூபி, ராம்குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அதனை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிலைமை மோசமானதால் தனியார் ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமரவேல் பரிதாபமாக இறந்தார். ரூபி, ராம்குமார் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் கொலை நடந்த இடத்தை விருதுநகர் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பழிக்கு பழியாக குமரவேல் கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.
விருதுநகர் நகராட்சியில் மார்க்கெட் ஏலம் எடுப்பது தொடர்பாக மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான் பட்டியை சேர்ந்த மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஞானசேகர் தரப்பினருக்கும் கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வந்தது. இதில் கடந்த மாதம் 18-ந்தேதி காரைக்குடியில் ஞான சேகரின் மகன் அறிவழகன் என்ற வினித்தை ஆதிநாராயணன் தரப்பினர் வெட்டி படுகொலை செய்தனர்.
இதுதொடர்பாக காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதி நாராயணன், மதுரையை சேர்ந்த தனசேகரன் மற்றும் கூலிப்படையினர் 9 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் குற்றவாளியாக கொலை செய்யப்பட்ட குமரவேலை போலீசார் சேர்த்தனர். அதன் பின் நடத்திய விசாரணையில் அவரது பெயர் வழக்கில் நீக்கப்பட்டது. இந்த நிலையில் அறிவழகன் கொலைக்கு பழிக்கு பழியாக ஞானசேகர் தரப்பினர் குமரவேலை நேற்று அலுவலகத்தில் புகுந்து வெட்டி கொலை செய்துள்ளனர்.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிகிச்சை பெற்றுவரும் ரூபி விருதுநகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், விருதுநகரை சேர்ந்த பால்பாண்டி என்ற பவர் பாண்டி, அரவிந்த்ராஜ் என்ற சேகர் மற்றும் 20 வயது முதல் 25 வயதுடைய 6 பேர் என 8 பேர் கொண்ட கும்பல் நேற்று அலுவலகத்தில் புகுந்து குமரவேலை வெட்டி கொலை செய்தனர். மேலும் என்னையும், ராம் குமாரையும் அரிவாளால் வெட்டினர். குமரவேலை கொலை செய்த கும்பல், "அறிவழகனை கொலை செய்து விட்டு நீ உயிரோடு இருக்கிறாயா?" என கூறி வெட்டியது.
மேலும் இந்த கொலைக்கு மையிட்டான் பட்டியை சேர்ந்த சேகர் என்ற சந்திர சேகர், ஞானசேகர், விக்கிரமன், அவரது மகன் ஹரிகரன், சிவப்பிரகாஷ், விருதுநகரை சேர்ந்த சகோதரர்கள் அமிர்த சங்கர், அமிர்தராஜ் ஆகியோர் உடந்தையாக உள்ளனர் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க விருதுநகர் மாவட்ட தலைமையிட போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொலை தொடர்பாக குமரவேல் உறவினர்களிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
விருதுநகர் நகராட்சியில் மார்க்கெட் ஏலம் எடுப்பது தொடர்பாக இருதரப்பினரும் ஒருவரையொருவர் கொலை செய்யும் படலம் நடந்து வருகிறது. இனிமேலாவது கொலை நடக்காமல் இருக்க போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
- பணத்தேவைக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகஜோதியிடம் ரூ. 2 லட்சம் பணம் வட்டிக்கு வாங்கி இருந்தேன்.
- அடிக்கடி நாகஜோதி பணத்தை திருப்பி கேட்டு வந்தார்.
விளாத்திகுளம்:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகஜோதி (வயது48). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு காரில் எரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக நாகஜோதியின் கார் டிரைவரான கன்னிராஜபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல் ராஜ் மற்றும் அவரது சகோதரர் குழந்தைக்கனி, உறைகிணறு பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் என்ற மாரி மற்றும் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த சுந்தர கணபதி 4 பேரை கைது செய்து குளத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் மைக்கேல்ராஜ் கூறியதாவது:-
எனது பணத்தேவைக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகஜோதியிடம் ரூ. 2 லட்சம் பணம் வட்டிக்கு வாங்கி இருந்தேன். ஆனால் என்னிடம் அடிக்கடி நாகஜோதி பணத்தை திருப்பி கேட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் நாகஜோதியை கொலை செய்ய முடிவு செய்தேன்.
சம்பவத்தன்று காலை நாகஜோதிக்கு போன் செய்து விளாத்திகுளத்தில் எனக்கு ஒருவர் பணம் வரவேண்டியுள்ளது என்றும், என்னுடன் வந்தால் அதை வாங்கி உங்கள் கடனை கொடுத்துவிடுகிறேன் எனக்கூறி நாகஜோதியை அழைத்து வந்தேன். பின்னர் நாகஜோதியை விளாத்திகுளம் அழைத்து வந்தேன். சூரங்குடியில் எனது சகோதரர் குழந்தைக்கனி, உறவுக்காரர்காளான மிக்கேல் ராஜ் என்ற மாரி மற்றும் சுந்தர கணபதி ஆகிய 3 பேரை காரில் ஏற்றிக்கொண்டு விளாத்திகுளம் நோக்கி சென்றேன்.
சூரங்குடியில் இருந்து கார் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குமாரசக்கனபுரம் கிராமம் அருகில் காரில் வைத்தே கயிற்றைக்கொண்டு நாகஜோதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்.
பின்னர் நாகஜோதியின் உடலை காரின் உள்பகுதியில் இருந்து தூக்கி டிக்கியில் வைத்து கலைஞானபுரம் காட்டுப்பகுதிக்கு உடலை கொண்டு சென்று அங்கு பெட்ரோல் ஊற்றி காருடன் நாகஜோதியை எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கடன் கேட்டு கொடுக்காததால் கூலிப்படையை ஏவி கொலை.
- 5 பேர் கைது, 2 கார்கள், வீச்சரிவாள், கத்தி பறிமுதல்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள காசிகவுண்டன்புதூர் தாமரை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ள னர். ஊட்டியை பூர்வீகமாக கொண்ட ரமேஷ், திருப்பூரில் வீட்டில் இருந்தபடியே கார் கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 1-ந்தேதி அதிகாலை நடைபயிற்சி சென்ற போது அவினாசி 6 வழிச்சாலையில் வைத்து காரில் வந்த மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக ரமேசை வெட்டிக்கொன்றனர்.
இந்த கொடூர கொலை வழக்கில் முதற்கட்டமாக, திருவாரூர் மாவட்டம் அறித்துவாரமங்கலம் பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் (35), மன்னார்குடி பகுதியை சேர்ந்த அஜீத் (27), அதே பகுதியை சேர்ந்த சிம்போஸ் (23), சரண் (24) மற்றும் தேனி மாவட்டம் சில்லு வார்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (45) ஆகிய 5 பேரை அவினாசி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய 2 கார்கள், வீச்சரிவாள் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடததிய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.ரமேசுக்கும், இர்பான் என்பவருக்கும் பணம்-கொடுக்கல் வாங்கல் பிரச்சினை மற்றும் சேவூரில் இடப்பிரச்சினை இருந்து வந்தது.
மேலும் இர்பான் ரமேசிடம் பெரிய தொகையை கடன் கேட்டு ள்ளார். அதற்கு பிணையாக பத்திரமோ பொருளோ இல்லாமல் பெரிய தொகை தர முடியாது என ரமேஷ் மறுத்ததோடு இர்பானை தகாத வார்த்தைகளில் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், தனது நண்பர் அரவிந்தன் என்பவரிடம் தெரிவித்தார். இதையடுத்து ரமேசுக்கு உயிர் பயத்தை காட்டும் வகையில் அவரை மிரட்ட 2பேரும் முடிவு செய்தனர்.
இதற்காக கூலிப்படையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அஜீத், சிம்போஸ், சரண், மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரிடம் ரூ.4 லட்சம் பணம் கொடுத்துள்ளனர்.
மேலும் ரமேசை கை, கால்களில் மட்டும் வெட்டு மாறு கூறியுள்ளனர். ஆனால் கூலிப்படையினர் 5 பேரும் ரமேசின் தலையில் வெட்டியதால் அவர் உயிரிழந்தார்.
கொலைக்கு திட்டம் வகுத்த முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளான இர்பான், அரவிந்தன் ஆகிய 2பேரை போலீசார் இன்று கைது செய்தனர். கடன் கேட்டு கொடுக்காததால் கூலிப்படையை ஏவி, தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.