search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூனியம்"

    • மனைவியை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் பாலைய்யாவையும் தாக்கினர்.
    • தெலுங்கானாவில் சூனியம் வைத்ததாக கருதி ஒரே மாதத்தில் 3 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், கத்ரியலை சேர்ந்தவர் பாலையா. இவருடைய மனைவி முத்தவ்வா (வயது 45). அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவர் அவரது தாய்க்கு முத்தவ்வா சூனியம் வைத்ததாக கருதினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த முரளி அவரது உறவினர்களான ராமசாமி, லட்சுமி, ராஜ லதா உள்ளிட்ட 7 பேருடன் முத்தவ்வா வீட்டிற்கு சென்றனர்.

    வீட்டில் கணவருடன் தூங்கிக் கொண்டு இருந்த முத்தவ்வாவை தரதரவென வீட்டிற்கு வெளியே இழுத்து வந்தனர்.

    பின்னர் 7 பேரும் சேர்ந்து முத்தவ்வாவை சரமாரியாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் அலறி துடித்த முத்தவ்வா அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.

    இருப்பினும் விடாமல் துரத்திச் சென்ற கும்பல் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர்.

    மனைவியை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் பாலைய்யாவையும் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்தவ்வா, அவரது கணவரை மீட்டு சிகிச்சைக்காக செகந்திராபாத் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்தவ்வா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 7 பேரையும் தேடி வருகின்றனர். தெலுங்கானாவில் சூனியம் வைத்ததாக கருதி ஒரே மாதத்தில் 3 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியூரை சேர்ந்தவர்கள் ரஸ்மோவிடம் குறி கேட்க வந்து செல்வது வழக்கம்.
    • கிராமத்தில் உள்ள சிலர் ரஷ்மோவை கொலை செய்தால் தான் ஊரை விட்டு நோய் விலகும் என முடிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஏ.எஸ்.ஆர் மாவட்டம், கொய்யூர் அடுத்த புதரல்லா பஞ்சாயத்து உட்பட்ட நல்ல பள்ளியை சேர்ந்தவர் ரஷ்மோ (வயது 34). பெண் மந்திரவாதியான இவர் ஊருக்கு வெளியே குடிசை அமைத்து குறி சொல்வது, மாந்திரீகம், பில்லி சூனியம் செய்து வந்தார். வெளியூரை சேர்ந்தவர்கள் ரஸ்மோவிடம் குறி கேட்க வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கிராமத்தில் உள்ளவர்களை திடீரென மர்ம நோய் தாக்கியது. நோய் தாக்குதலில் ஒரு சிலர் இறந்தனர். அப்போது கிராம மக்கள் ரஷ்மோ மாந்திரீகம் செய்யும் சூனியக்காரி எனவும், அவர் மாந்திரீகம் செய்ததால் தான் ஊரில் நோய் பரவியதாக சிலர் வதந்தி கிளப்பி விட்டனர்.

    இதனால் கிராமத்தில் உள்ள சிலர் ரஷ்மோவை கொலை செய்தால் தான் ஊரை விட்டு நோய் விலகும் என முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ரஷ்மோ குறி சொல்லும் குடிசைக்கு வெளியே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ரஷ்மோ பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த லஷ்மணன் ராவ் மற்றும் சிந்தேரி அப்பாராவ் ஆகியோர் பெண் மந்திவாதி ரஷ்மோவை கொலை செய்து குடிசைக்கு வெளியே வீசியது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×