என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூனியம்"

    • மோப்ப நாய்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் அவை மாந்திரீகர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றன.
    • அதுமட்டுமின்றி, மற்றுமொரு இளைஞரையும் கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியதாகவும் கூறினார்.

    பீகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி நடத்தப்பட்ட சடங்கில் முதியவரில் தலை துண்டிக்கப்பட்டு உடல் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த யுக்வல் யாதவ் (65) கடந்த வாரம் காணாமல் போனார். இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இதற்கிடையே அவர் வசித்து வந்த கிராமத்தின் பக்கத்துக்கு கிராமத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெக்கப்பட்டது. சம்பவ இடத்தில் யுக்வலின் செருப்புகள் கிடந்தன. மோப்ப நாய்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் அவை மாந்திரீகர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றன.

    அங்கிருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், யுக்வலை அவர்கள் கொலை செய்தது தெரிய வந்தது. சுதிர் பாஸ்வான் என்பவர் குழந்தை பாக்கியம்வேண்டி, மாந்திரீகர் ராமாஷிஷ் ரிக்யாசனுடன் சேர்ந்து பூஜை நடத்தினார்.

    ஒரு மனிதரின் தலையைத் துண்டித்து, அவரின் தலையை ஹோலிகா தஹான் தீயில் எரித்தால் மட்டுமே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று மாந்திரீகர் கூறியுள்ளார்.

    எனவே அவர்கள் சேர்ந்து யுக்வலை கடத்தி கொலை செய்துள்னர். அதுமட்டுமின்றி, மற்றுமொரு இளைஞரையும் கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியதாகவும் அவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து, கொலையில் ஈடுப்பட்ட சுதிர் பாஸ்வான் மற்றும் மாந்திரீகரின் சீடர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான மாந்திரீகர் ராமாஷிஷ் ரிக்யாசனை தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியூரை சேர்ந்தவர்கள் ரஸ்மோவிடம் குறி கேட்க வந்து செல்வது வழக்கம்.
    • கிராமத்தில் உள்ள சிலர் ரஷ்மோவை கொலை செய்தால் தான் ஊரை விட்டு நோய் விலகும் என முடிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஏ.எஸ்.ஆர் மாவட்டம், கொய்யூர் அடுத்த புதரல்லா பஞ்சாயத்து உட்பட்ட நல்ல பள்ளியை சேர்ந்தவர் ரஷ்மோ (வயது 34). பெண் மந்திரவாதியான இவர் ஊருக்கு வெளியே குடிசை அமைத்து குறி சொல்வது, மாந்திரீகம், பில்லி சூனியம் செய்து வந்தார். வெளியூரை சேர்ந்தவர்கள் ரஸ்மோவிடம் குறி கேட்க வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கிராமத்தில் உள்ளவர்களை திடீரென மர்ம நோய் தாக்கியது. நோய் தாக்குதலில் ஒரு சிலர் இறந்தனர். அப்போது கிராம மக்கள் ரஷ்மோ மாந்திரீகம் செய்யும் சூனியக்காரி எனவும், அவர் மாந்திரீகம் செய்ததால் தான் ஊரில் நோய் பரவியதாக சிலர் வதந்தி கிளப்பி விட்டனர்.

    இதனால் கிராமத்தில் உள்ள சிலர் ரஷ்மோவை கொலை செய்தால் தான் ஊரை விட்டு நோய் விலகும் என முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ரஷ்மோ குறி சொல்லும் குடிசைக்கு வெளியே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ரஷ்மோ பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த லஷ்மணன் ராவ் மற்றும் சிந்தேரி அப்பாராவ் ஆகியோர் பெண் மந்திவாதி ரஷ்மோவை கொலை செய்து குடிசைக்கு வெளியே வீசியது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மனைவியை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் பாலைய்யாவையும் தாக்கினர்.
    • தெலுங்கானாவில் சூனியம் வைத்ததாக கருதி ஒரே மாதத்தில் 3 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், கத்ரியலை சேர்ந்தவர் பாலையா. இவருடைய மனைவி முத்தவ்வா (வயது 45). அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவர் அவரது தாய்க்கு முத்தவ்வா சூனியம் வைத்ததாக கருதினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த முரளி அவரது உறவினர்களான ராமசாமி, லட்சுமி, ராஜ லதா உள்ளிட்ட 7 பேருடன் முத்தவ்வா வீட்டிற்கு சென்றனர்.

    வீட்டில் கணவருடன் தூங்கிக் கொண்டு இருந்த முத்தவ்வாவை தரதரவென வீட்டிற்கு வெளியே இழுத்து வந்தனர்.

    பின்னர் 7 பேரும் சேர்ந்து முத்தவ்வாவை சரமாரியாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் அலறி துடித்த முத்தவ்வா அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.

    இருப்பினும் விடாமல் துரத்திச் சென்ற கும்பல் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர்.

    மனைவியை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் பாலைய்யாவையும் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்தவ்வா, அவரது கணவரை மீட்டு சிகிச்சைக்காக செகந்திராபாத் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்தவ்வா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 7 பேரையும் தேடி வருகின்றனர். தெலுங்கானாவில் சூனியம் வைத்ததாக கருதி ஒரே மாதத்தில் 3 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பிரேத பரிசோதனையில் சிறுமி முஸ்கான் மூச்சுத்திணறலால் உயிரிழந்தாக இறந்ததை உறுதி தெரிய வந்தது.
    • உள்ளூர் சூனியக்காரரான நௌஷாத், அனீஷாவை கொலை செய்ய தூண்டியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்

    கேரளாவில் 6 வயது சிறுமியை சித்தி கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த எர்ணாகுளம் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடனத்துள்ளது.

    கொத்தமங்கலம் அருகே உள்ள நெல்லிக்குழியில் வசித்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜாஸ் கான் என்பவரின் மகள் முஸ்கான் [6 வயது]. அஜாஸ் கானின் இரண்டாவது மனைவி அனீஷா.

    சிறுமி முஸ்கான் டிசம்பர் 19 [வியாழன்] அன்று காலை தனது வீட்டில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் முஸ்கான் படுக்கையில் அசையாமல் படுத்திருப்பதாக அவரது தந்தை கருதிய நிலையில் இறுதியில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

    பிரேத பரிசோதனையில் சிறுமி முஸ்கான் மூச்சுத்திணறலால் உயிரிழந்தாக இறந்ததை உறுதி தெரிய வந்தது. இதனையடுத்து நடந்த விசாரணையில் சித்தி அனீஷா சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது.

    விசாரணையில், புதன்கிழமை இரவு கணவர் இல்லாதபோது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதை அனீஷா ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அனீஷாவின் மூட நம்பிக்கையால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் கருதுகிறது.

    உள்ளூர் சூனியக்காரரான நௌஷாத், அனீஷாவை கொலை செய்ய தூண்டியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே நௌஷாத்திடம் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • அக்கம்பக்கத்தினர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பிடித்துச் சென்றனர்.
    • சிறுநீரை குடிக்கவும், நாய் மலத்தை சாப்பிடவும் வற்புறுத்தினர்.

    மகாராஷ்டிராவில் மூதாட்டி ஒருவர் சூனியம் செய்வதாக சந்தேகப்பட்டு அவரை கிராமத்தினர் சித்ரவதை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள ரெத்யகேடா கிராமத்தைச் சேர்ந்த 77 வயது மூதாட்டி கடந்த டிசம்பர் 30 அன்று அக்கம்பக்கத்தினரால் இந்த சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

    வெளியூருக்கு வேலைக்கு சென்ற அவரின் மகனும் மருமகளும் ஜனவரி 5 அன்று திரும்பி வந்து மூதாட்டி இருந்த நிலை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    அந்த புகாரில், அக்கம்பக்கத்தினர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பிடித்துச்சென்று கட்டைகளால் அடித்தும், அறைந்தும் துன்புறுத்தி உள்ளனர். சூடான இரும்புக் கம்பிகளால் கைகளிலும் கால்களிலும் முத்திரை குத்தி உள்ளனர்.

    அவரை சிறுநீரை குடிக்கவும், நாய் மலத்தை சாப்பிடவும் வற்புறுத்தி இருக்கின்றனர். மேலும், கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து அணிவகுத்து ஊர்வலாக அழைத்து சென்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரை உள்ளூர் காவல்துறை மறைக்க முயன்றதாக கூறி மூதாட்டியின் மகனும் மருமகளும் தற்போது அமராவதி காவல் நிலையத்தை அணுகியுள்ளனர்.

    இதுதொடர்பாக பேசிய அமராவதி காவல் கண்காணிப்பாளர் விஷால் ஆனந்த், கிராமம் வனப்பகுதியின் உள்பகுதியில் உள்ளதால், சம்பவத்தை சரிபார்க்க போலீஸ் அதிகாரி அனுப்பப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    புகார் அளிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட காவல்நிலையம் நடந்த சம்பவத்தை மறைக்க முயன்றதா என்றும் சரிபார்க்கப்படும். அது உறுதியாகும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார். 

    ×