search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுயம்புலிங்கம்"

    • 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்.
    • அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய நீரூற்று ஒன்று உள்ளது.

    ஆலயங்கள் எப்போதும் அதிசயம் நிறைந்தவை. அப்படி ஆச்சரியமும், அதிசயமும் நிறைந்த ஆலயங்களில் ஒன்றுதான், மகாராஷ்டிராவில் உள்ள திரியம்பகேஸ்வரர் திருக்கோவில்.

    இந்த ஆலயம், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் திரியம்பக் என்ற இடத்தில் உள்ளது. இந்தக்கோவில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்.

    சுயம்பு மூர்த்தியான இத்தல இறைவன், 'திரியம்பகேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.

    பிரம்மகிரி, நீலகிரி, கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு நடுவில், பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள இக்கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் பில்வ தீர்த்தம், விஸ்வநந் தீர்த்தம், முகுந்த தீர்த்தம் ஆகிய மூன்று நீர்நிலைகள் உள்ளன.

    கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலை மீது அமைந்த இவ்வாலயத்தில், பல நூறு ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய நீரூற்று ஒன்று உள்ளது. கோவிலின் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தின் மீது எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.

    இப்பகுதியில் வாழ்ந்த கவுதம முனிவர், கடுமையான தவத்தை மேற்கொண்டார். அவருக்காக சிவபெருமான் தன் ஜடாமுடியில் இருந்து கங்கையின் சில துளியை விழச் செய்ததாகவும், அதுவே இங்கு நீரூற்றாக வருவதாகவும் சொல்லப்படுகிறது.

    பிற ஜோதிர் லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டவை. ஆனால், இத்தலத்தில் உள்ள சிவலிங்கமானது, பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் அமைப்பில் இருப்பது தனித்துவமான சிறப்பு. திரியம்பகேஸ்வரர் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரகம் தாழ்வாக உள்ளது.

    இத்தல லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே உள்ளது. அதன் நடுவே உரல் போன்று பள்ளம் மட்டுமே சிவலிங்கமாக பாவிக்கப்படுகிறது. இந்த பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளம் காணப்படுகிறது.

    • அனுமனும், விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதாலேயே அவரின் அனுமதி பெறாமல் சிவலிங்கம் எடுக்க முனைந்ததை கூறி மன்னிப்பு கேட்டார்.
    • ஸ்ரீகால பைரவரும் மகிழ்ச்சி அடைந்து சிவலிங்கத்தை அனுமனுக்கு கொடுத்து அனுப்பினார்.

    காசியின் காலபைரவராகிய தன்னிடம் அனுமதி ஏதும் பெறாமல் அனுமன் லிங்கத்தை எடுக்க முயல்வது கண்டு கோபம் அடைந்த ஸ்ரீகால பைரவர், என் அனுமதி இல்லாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று அனுமனை தடுத்தார்.

    முதல் முறை சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு போகும் போதும் இந்த காலபைரவர் ஏதோ சூழ்ச்சி செய்து காளிங்க மடுவில் தடுத்துவிட்டார்.

    இப்போது மறுபடியும் தன்னுடைய முயற்சிக்கு தடை செய்கிறார் என்று கோபம் அடைந்த அனுமன் கால பாரவரை தாக்கத் தொடங்கினார்.

    ஆணவத்தால் செய்த போராகையால் அனுமனுக்கு தோல்வியே கிட்டுகிறது.

    அந்த சமயத்தில் அங்கு வந்த முனிவர்கள் காலபைரவரை வணங்கி, "உலக நன்மைக்காகவும், ராமனின் பெருமைக்காகவும் இந்த சிவலிங்கம் தென்னாடு போக அனுமதிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள்.

    அனுமனும், விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதாலேயே அவரின் அனுமதி பெறாமல் சிவலிங்கம் எடுக்க முனைந்ததை கூறி மன்னிப்பு கேட்டார்.

    ஸ்ரீகால பைரவரும் மகிழ்ச்சி அடைந்து சிவலிங்கத்தை அனுமனுக்கு கொடுத்து அனுப்பினார்.

    தன் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்கு துணை புரிந்ததால் கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், சுயம்புலிங்கத்தை அனுமனுக்கு உறுதி செய்த பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக்கூடாது என்றும் ஸ்ரீகால பைரவர் சாபமிட்டார்.

    அவரின் அந்த சாபப்படியே இன்றும் காசியின் நகர எல்லையில் கருடன் பறப்பதில்லை. அங்கே பல்லிகளும் ஒலிப்பதில்லை.

    • காரணம் காசியில், கங்கைக்கரையில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களாகவே காட்சி அளித்தன.
    • இந்த லிங்கங்களில் எது சுயம்புலிங்கம் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அனுமன் திணறினார்.

    "நான் கொண்டு வந்த லிங்கம் இங்கே வேரூன்றி நின்றதற்கு இந்த காளிங்க மடுகு தான் காரணம்.

    இது வற்றியிருந்தால் நான் லிங்கத்தை மாய சிறுவனிடம் கொடுக்காமல், தட்டுத்தடுமாறி சற்று தாமதமாகவாவது ராமேஸ்வரம் போய் சேர்ந்திருப்பேனே என்று மடுகின்மேல் ஆஞ்சநேயருக்கு கடும் கோபம் வந்தது.

    அருகில் இருந்த காரிகிரி என்ற மலையைப் பெயர்த்தெடுத்தார்.

    அந்த மடுகு மீது போட்டு "இந்த மலைப்பிரதேசம் இனி வனப்பிரதேசமாகப் போகக்கடவது என்று சபித்தார்.

    அந்த காரிகிரி மலையே இப்போது நாம் ராமகிரியில் காணும் பெரிய மலை.

    ராமேசுவரத்தில் எல்லோரும் காசி லிங்கத்திற்காக காத்திருப்பார்கள் என்பதால் நேரத்தை வீணாக்காமல் ஆஞ்சநேயர் மறுபடியும் காசிக்கு சென்றார்.

    இந்த முறை காசியில் தெரிந்த காட்சிகள் அனுமனுக்கு ஆச்சரியம் அளித்தது.

    காரணம் காசியில், கங்கைக்கரையில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களாகவே காட்சி அளித்தன.

    இந்த லிங்கங்களில் எது சுயம்புலிங்கம் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அனுமன் திணறினார்.

    அப்போது ஒரு குறிப்பிட்ட லிங்கத்திற்கு மேலே கருடன் வட்டமிட்டது.

    அதே நேரம் பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளினால் அதுவே சுயம்புலிங்கம் என்பதை உணர்ந்த அனுமன் அதனை எடுக்க முயன்றார்.

    • இந்த தலம் ஸ்ரீ கால பைரவரின் ஷேத்திரம் ஆயிற்றே அவர்தான் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து தன்னை ஏமாற்றி விட்டார் என்று தெரிந்து கொண்டார்.
    • தான் கொண்டு வந்த சுயம்புலிங்கத்தை அவரோடு வைத்துக் கொள்ளவே இத்தனை நாடகங்கள் ஆடி இருக்கின்றார்.

    இதற்குள் மதியம் நெருங்கி விட்டது. ஆதவனும் தன் வெப்பத்தை தணித்துக் கொண்டார்.

    புயலாக அடித்த காற்று படிப்படியாக குறைந்து தென்றலாக மாறியது. திருக்காரிக்கரை கிராம மக்களும் தமது இல்லங்களை விட்டு வெளிவரத் தொடங்கினர்.

    இந்த மாறுதல்களையெல்லாம் கவனித்த மாருதி, இவையெல்லாம் சாதாரண மாயைகள் அல்ல. ஒரு தெய்வத்தின் லீலைகள் என்பதை புரிந்து கொண்டார்.

    அவர் யோசித்த போது, உண்மைகள் யாவும் அவர் ஞான அறிவிற்கும் புலனானது.

    இந்த தலம் ஸ்ரீ கால பைரவரின் ஷேத்திரம் ஆயிற்றே. அவர்தான் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து தன்னை ஏமாற்றி விட்டார் என்று தெரிந்து கொண்டார்.

    தான் கொண்டு வந்த சுயம்புலிங்கத்தை அவரோடு வைத்துக் கொள்ளவே இத்தனை நாடகங்கள் ஆடி இருக்கின்றார்.

    ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமர் கையால் பிரதிஷ்டையாக வேண்டிய லிங்கம். அதே லக்கனத்தில் கால பைரவர் கையால் திருக்காரிக் கரையில் பிரதிஷ்டையாகி விட்டதே.

    அங்கு ஸ்ரீராமர் தன் வரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பாரே என்று பலவாறு நினைத்து ஆத்திரமும் துக்கமும் அடைந்தார்.

    • முயற்சியில் தோற்றுப்போன ஆஞ்சநேயர் தனக்கு ஏற்பட்ட கர்வ பங்கத்திற்கு வெட்கப்பட்டு லிங்கத்தைப் பக்தியுடன் வலம் வந்தார்.
    • மன்னிக்கக் கோரி பிரார்த்தித்து நமஸ்கரித்தார்.

    சிறுவன் குரல் கேட்டு திடுக்கிட்ட ஆஞ்சநேயர் விரைந்து கரையேறினார்.

    சிறுவன் நின்ற இடத்துக்கு ஓடி வந்தார். அங்கு "பூமியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    "இப்படி செய்து விட்டானே இந்த சிறுவன்" என்று கோபப்பட்டார்.

    கோபம் கண்ணை மறைக்க, தான் ஏற்கனவே காசியில் இருந்து பெயர்த்தெடுத்து வந்த லிங்கம் தானே இது என்ற அலட்சிய உணர்வு ஏற்பட்டது.

    சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்த தனக்கு, இந்த சிவலிங்கம் எம்மாத்திரம் என்ற ஆணவத்தாலும், தன் பலமிக்க நீண்ட வாலினால் அந்த சுயம்பு சிவலிங்கத்தை சுற்றி இழுத்தார்.

    ஆனால் லிங்கம் அசையவில்லை. சற்றும் லிங்கம் அசையாதிருக்கவே சுற்றியிருந்த வாலை சற்று இறுக்கி, பலமாக இழுத்தார்.

    ஆனால் லிங்கமோ இருந்த இடத்தை விட்டுத் துளி கூட நகரவே இல்லை.

    முயற்சியை கைவிடாத ஆஞ்சநேயர் தன் முழு பலத்தையும் பிரயோகித்து இழுத்தபோது கூட போனால் போகிறது பாவம் என்று பரிதாபப்பட்டுப் பரிகசிப்பது போல லிங்கம் சிறிது வடக்குப் புறமாகச் சாய்ந்ததே தவிர பெயர்ந்து வரவில்லை.

    முயற்சியில் தோற்றுப்போன ஆஞ்சநேயர் தனக்கு ஏற்பட்ட கர்வ பங்கத்திற்கு வெட்கப்பட்டு லிங்கத்தைப் பக்தியுடன் வலம் வந்தார்.

    மன்னிக்கக் கோரி பிரார்த்தித்து நமஸ்கரித்தார்.

    • அதற்கு அச்சிறுவனும் ஐயா, தாகத்தால் அவதிப்படும் தங்களுக்கு நான் அவசியம் உதவுகிறேன். ஆனால் நானோ சிறுவன்.
    • இவ்வளவு பெரிய சிவலிங்கத்தை என்னால் சுமக்க முடியுமா? என்பதுதான் யோசனையாக இருக்கிறது என்று இழுத்தான்.

    இதுதான் தக்க சமயம் என உணர்ந்த ஸ்ரீகால பைரவர் தன் அஷ்டபுஜங்கள் (எட்டு கரங்கள்) சுன வாகனம் (நாய் வாகனம்) முதலியவற்றை கைவிட்டு ஒரு மாடு மேய்க்கும் சிறுவனாக தன்னை மாற்றிக் கொண்டு சில பசுக்களையும் சிருஷ்டித்துக் கொண்டு அவற்றை மேய்ப்பவன் போல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முன்பாக நடமாடினார்.

    அச்சிறுவனைக் கண்ட ஆஞ்சநேயர், "தம்பி, தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கும் எனக்கு தண்ணீர் இருக்கும் இடத்தைக் காண்பிப்பாயாக" என்று கேட்டுக் கொண்டார்.

    சிறுவன் வடிவில் இருந்த சேத்திர பாலரும் தன்னுடன் மாருதியை, காளிங்க மடுகின் கரைக்கு அழைத்துச் சென்றார்.

    காளிங்க மடுகு, சுவையான தண்ணீருடன் கடல் போல் நிரம்பி இருப்பதைக் கண்ட ஆஞ்சநேயர் மிகுந்த ஆனந்தம் அடைந்தார்.

    அதிக தாகத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆஞ்சநேயர் மனமகிழ்ந்து, "சிறுவனே, இந்த சுயம்பு லிங்கத்தைச் சற்று நேரம் வைத்திருப்பாயாக.

    இதைக் கீழே வைக்கக்கூடாது.

    நான் தாக சாந்தி செய்து கொண்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறினார்.

    அதற்கு அச்சிறுவனும் ஐயா, தாகத்தால் அவதிப்படும் தங்களுக்கு நான் அவசியம் உதவுகிறேன். ஆனால் நானோ சிறுவன்.

    இவ்வளவு பெரிய சிவலிங்கத்தை என்னால் சுமக்க முடியுமா? என்பதுதான் யோசனையாக இருக்கிறது என்று இழுத்தான்.

    அதற்கு மாருதி, "பயப்படாதே, இது பாரமாக இல்லாதவாறு யான் உனக்கு வரம் அளிக்கிறேன்" என்று கூறினார்.

    அந்த தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் வடிவில் இருக்கும் பைரவர் மாருதியிடம் இருந்து அந்த சிவலிங்கத்தை வாங்கிக் கொண்டார்.

    "ஐயா தாங்கள் விரைவில் வந்து சிவலிங்கத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்.

    என்னால் அதிக நேரம் பாரம் தாங்க முடியாது. அப்படி தாங்க முடியாமல் போனால் சிவலிங்கத்தைக் கீழே வைத்துவிட நேரிடும்" என்று தன் எண்ணத்தை மறைமுகமாகத் தெரிவித்தார்.

    தான் வரமளித்தும் சிறுவன் பயப்படுகிறானே என்று நினைத்த மாருதி விரைவில் சிவலிங்கத்தை வாங்கிக் கொள்ளவே எண்ணினார்.

    ஏனெனில், முகூர்த்த லக்னம் வேறு நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தவராய் மடுகில் இறங்கி, தாகம் தீரும் வரை நீரை அருந்தினார். பின்னர் "அப்பாடா என்று ஒரு ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்.

    அவசரமாக சற்றே நீராடிக் களைப்பையும் போக்கிக் கொண்டார்.

    இதற்குள் அந்த சிறுவன் வடிவில் இருந்த கால பைரவர், தான் திட்டமிட்டபடியே, அந்த மடுகுக் கரையில் ஏற்கனவே நிர்ணயம் செய்திருந்த இடத்தில் அந்த சுயம்பு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து விட்டார்.

    "பாரம் தாங்க முடியாததால் லிங்கத்தை பூமி மீது வைத்து விட்டேன்" என்று உரக்கக் கூறி விட்டு மறைந்து விட்டார்.

    • அங்கிருக்கும் சுயம்பு லிங்கங்களில் ஒரு பெரிய சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டார்.
    • பிறகு ஆகாய மார்க்கத்தில் ராமேஸ்வரத்தை நோக்கிப் பயணமானார்.

    காசி பட்டணத்திற்கு சென்ற அனுமான் அன்றிரவு அங்கு உறங்கி மறுநாள் ஆதவன் உதிக்கும் முன்னரே எழுந்தார்.

    புனித கங்கையில் நீராடி, பக்தி சிரத்தையுடன் ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசித்தார்.

    அங்கிருக்கும் சுயம்பு லிங்கங்களில் ஒரு பெரிய சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டார்.

    பிறகு ஆகாய மார்க்கத்தில் ராமேஸ்வரத்தை நோக்கிப் பயணமானார்.

    கால பைரவருக்கு கொடுத்த வாக்குப்படி ஆதவன் உதயமாகி தன் பூரண சக்தியுடன் பிரகாசிக்கத் தொடங்கினார்.

    வாயு பகவானும் ஒப்புக் கொண்டபடி தென் திசையில் இருந்து வடதிசை நோக்கிப் பிரளயகாலப் புயல் போல் வீசத் தொடங்கினார்.

    ங்கா தேவியும் ஆஞ்சநேயர் கண்களுக்கு எங்கும் புலப்படாமல் மறைந்து போனார்.

    சுட்டுப் பொசுக்குகின்ற சூரிய வெப்பத்தின் கொடுமை, வேகத்தைக் குறைக்கும் பலமான எதிர்க்காற்று, தன் தோளின் மேல் இருக்கும் சிவலிங்கத்தின் பாரம் இவைகளினால் ஆஞ்சநேயர் விரைவில் களைத்துப் போனார்.

    தாங்க முடியாத தாகத்தோடு குடிதண்ணீரைத்தேடி அலைந்தார்.

    ஆகா, இன்று என்னவாயிற்று. நேற்று இதே வழியாக செல்லும் போது ஆறுகள், குளங்கள், கிணறுகள் எல்லாம் நீர் நிரம்பியிருந்தனவே.

    ஒருநாள் இரவுக்குள் எல்லாம் எப்படி வற்றிப்போயின?

    என்றுமில்லாத அளவில் இன்று ஏன் ஆதவன் இப்படி சுட்டுப் பொசுக்குகிறான்?

    எதிர் காற்றும் பலமாக இருக்கிறதே? முன்பு சஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுத்து வரும்பேது கூட இத்தனை களைப்பு எனக்கு ஏற்படவில்லையே என்றெல்லாம் பலவாறாக சிந்தித்தப்படியே திருக்காரிக்கரை கிராமத்தை வந்தடைந்தார் மாருதி.

    • திட்டத்தின் முதல் கட்டமாக சூரிய பகவானை அணுகினார் கால பைரவர்.
    • “நாளை காலை முதல் மதியம் வரை நீ உனது பரிபூரண சக்தியைப் பிரயோகித்துப் பிரகாசிக்க வேண்டும்” என்று ஆணையிட்டார்.

    திட்டத்தின் முதல் கட்டமாக சூரிய பகவானை அணுகினார் கால பைரவர்.

    "நாளை காலை முதல் மதியம் வரை நீ உனது பரிபூரண சக்தியைப் பிரயோகித்துப் பிரகாசிக்க வேண்டும்" என்று ஆணையிட்டார்.

    அடுத்து கங்கா தேவியிடம் கால பைரவர் சென்றார்.

    "பவானி நாளை சூர்யோதயம் முதல் மதியம் வரை காசியில் இருந்து திருக்காரிக்கரை வரை உள்ள பிரதேசத்தில் நீ ஆஞ்சநேயன் கண்களுக்கு மதியத்திற்கு பிறகே புலப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

    பிறகு பைரவர் வாயு பகவானிடம் சென்றார்.

    "வாயு தேவா, நாளை காலை முதல் மதியம் வரை திருக்காரிக்கரையில் இருந்து காசி வரை வடதிசை நோக்கி, உனது முழு பலத்தையும் பிரயோகித்துப் பெரும் புயலாக வீசவேண்டும் என்று பைரவர் கேட்டுக் கொண்டார்.

    அது தன் மைந்தனுக்கு எதிரான சூழ்ச்சி என்பதை அறியாத வாயு பகவானும் அப்படியே செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டார்.

    இப்படியாக தன்னுடைய திட்டத்திற்கு பலமான அஸ்திவாரத்தை போட்டுக் கொண்ட பைரவர் அன்று இரவே, தன் இருப்பிடமாகிய திருக்காரிக்கரை கிராமவாசிகளின் கனவில் தோன்றி, "நாளை விடியற்காலை முதல் மதியம் வரை யாரும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியே வர வேண்டாம்" என்று கட்டளையிட்டார்.

    • ராமர் கட்டளையை சிரமேற்கொண்டு, அக்கணமே காசியை நோக்கி ஆகாய மார்க்கத்தில் திருக்காரிக்கரை வழியாக பறந்தார் மாருதி.
    • திருக்காரிக்கரை அதாவது இன்றைய ராமகிரி கிராமத்தை கால பைரவ சேத்திரம் என்றும் அழைப்பது உண்டு.

    ராமர் கட்டளையை சிரமேற்கொண்டு, அக்கணமே காசியை நோக்கி ஆகாய மார்க்கத்தில் திருக்காரிக்கரை வழியாக பறந்தார் கடமை தவறாத கர்ம வீரரான மாருதி.

    திருக்காரிக்கரை அதாவது இன்றைய ராமகிரி கிராமத்தை கால பைரவ சேத்திரம் என்றும் அழைப்பது உண்டு.

    ஏனெனில் ஸ்ரீ கால பைரவ மூர்த்தி பிரதான கடவுளாக எழுந்தருளி பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    இப்போது சிவலிங்க வடிவம் போல் தோற்றம் தரும் பெரியமலை அந்நாளில் அங்கு இல்லை.

    அந்த இடத்தில் காளிங்கு மடுகு என்ற பெரிய ஒரு நீர்த்தேக்கம் இருந்தது.

    அதன் தென்கரையோரம் தன் பததினி ஸ்ரீ காளிகாதேவியுடன் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீகால பைரவர் ஆகாய மார்க்கத்தில் போகும் ஆஞ்சனேயரைக் கண்டு தன் ஞான திருஷ்டியால் மாருதி செல்லும் நோக்கத்தை உணர்ந்து கொண்டார்.

    காசியில் இருந்து ஆஞ்சநேயர் கொண்டு வர இருக்கும் சுயம்பு லிங்கத்தை தன்னுடைய சேத்திரமாகிய திருக்காரிக்கரையில் தன் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

    அதற்கு ஒரு நல்ல திட்டம் செய்தார்.

    • இதனால் கோபம் கொண்ட ஸ்ரீராமர் அவனை யுத்தத்திலே வதம் செய்து தனது தேவியை மீட்டுக் கொண்டு வந்தார்.
    • பிறகு வானர பரிவாரங்களோடு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தார்.

    திரேதாயுகத்திலே ஸ்ரீமன் நாராயணன் ராமாவதாரம் எடுத்து வந்தபோது, சீதா தேவியை இலங்கை வேந்தன் ராவணாசுரன் கவர்ந்து சென்று, சிறை வைத்தான்.

    இதனால் கோபம் கொண்ட ஸ்ரீராமர் அவனை யுத்தத்திலே வதம் செய்து தனது தேவியை மீட்டுக் கொண்டு வந்தார்.

    பிறகு வானர பரிவாரங்களோடு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தார்.

    பிரம்ம அம்சத்தில் பிறந்தவனும், வேதங்களை நன்கு பயின்றவனும், சிறந்த சிவபக்தனுமாகிய ராவணனை வதம் செய்த காரணத்தால் ராமருக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டு இருந்தது.

    அந்த தோஷத்துடன் அயோத்தி சென்று, முடிசூடிக் கொண்டு, அரசாள்வது முறையாகாது என்றும் குல குருவான வசிஷ்டர் முதலான முனிவர்கள் கூறினர்.

    எனவே ராமேஸ்வரத்தில் அதற்கு ராமர் பரிகாரம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக காசியில் இருந்து ஒரு சுயம்பு (இயற்கையாக தோன்றியது) லிங்கத்தைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து பூஜித்து, பிரம்ம கத்தி தோஷத்தில் இருந்து விடுபட ஸ்ரீராமர் முடிவு செய்தார்.

    ஆஞ்சனேய சுவாமியை அருகில் அழைத்து, "வாயுபுத்திரா, இன்றே நீ காசித்தலம் செல்வாயாக என்று பணித்தார்.

    • சுயம்புலிங்கம் தலையில் வெட்டுப்பட்ட காயம் உள்ளது.
    • ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    குடும்ப பிரச்சினைகளை தீர்க்கும் திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவ தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவாலயத்துக்கு 'வட திருமுல்லைவாயில்' என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவதலம் 'தென் திருமுல்லைவாயில்' என்றும் அழைக்கப்படுகிறது.

    தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவாலயங்கள் வரிசையில் 21-வது தலமாக இருப்பது, வட திருமுல்லைவாயில். புராதன சிறப்புமிக்க இந்த ஆலய இறைவன் திருநாமம் மாசிலாமணீஸ்வரர். இறைவி பெயர் கொடியுடைய நாயகி. சிவபெருமான் இங்கு சுயம்புலிங்கமாக அருள்புரிகிறார். சுயம்புலிங்கம் தலையில் வெட்டுப்பட்ட காயம் உள்ளது. இதனால் சிவனை குளிர வைக்கும் வகையில் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் இரண்டு தினங்கள் மட்டும் சந்தன காப்பு இல்லாமல் நிஜ திருமேனியுடன் இறைவன் காட்சி தருகிறார். அந்த நேரத்தில் இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கப் பெற்று முக்தி பெறலாம் என்பது நம்பிக்கை. இவருக்கு அபிஷேகம் இல்லாததால் ஒரு பாதரச லிங்கத்தை தனி சன்னிதியில் வைத்து பூஜை செய்கிறார்கள்.

    குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தீர்ந்து ஒற்றுமையுடனும், மன நிம்மதியுடனும் வாழ வழிபட வேண்டிய தலம் என்ற சிறப்பு இத்திருத்தலத்திற்கு உண்டு. சென்னை அரக்கோணம் புறநகர் ரெயில் பாதையில் திருமுல்லைவாயில் அமைந்துள்ளது. சென்னை அம்பத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை சென்றடையலாம்.

    தல வரலாறு

    காஞ்சீபுரத்தில் இருந்து அரசாட்சி செய்து வந்தார் தொண்டைமான் மன்னர். அதேவேளையில் புழல் கோட்டையில் ஓணன், காந்தன் என்ற அசுரர்கள், எருக்க தூண்களும், வெண்கல கதவும் கொண்டு ஒரு அரண் அமைத்து ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு மக்களை பல வகையிலும் துன்புறுத்தி வந்தனர். இதனால் அஞ்சி நடுங்கிய மக்கள் தொண்டமானிடம் வந்து முறையிட்டனர். அதை கேட்ட மன்னர் வெகுண்டெழுந்து பெரும் படையுடன் அங்கு சென்றார். 'கோலம்பேடு' என்ற கிராமத்தை கடக்கும் போது இரவு ஆனதால், அங்கேயே தங்கினார்.

    அப்போது தூரத்தில் இருந்து வெண்கல மணி ஓசை கேட்டது. அது சிவாலயத்தில் இருந்து ஒலிக்கும் மணி என்று மன்னர் நினைத்தார். அருகில் இருந்த அமைச்சர்கள், அது அரக்கர்கள் மாளிகையில் இருந்து வருகிறது என்று கூறினர். அரக்கர்களின் அடாத செயலுக்கு முடிவுகட்டி, அவர்களை அடக்கும் நோக்கத்தோடு மன்னர் படையுடன் விரைந்து சென்றார். தொண்டைமான் படையுடன் வருவதைக் கண்ட அரக்கர்கள், தாங்களும் படையை திரட்டி வந்து போர் செய்தனர். அரக்கர்களின் தெய்வமான பைரவரின் வரத்தால் ஒரு பூதத்தின் உதவியால் அவர்கள் தொண்டமான் படையை விரட்டி அடித்தனர். இதற்கு மேல் போர் செய்ய முடியாது என்று தீர்மானித்த மன்னன் படையுடன் பாசறைக்கு திரும்பினான்.

    வரும் வழியில், மன்னன் ஏறி வந்த யானையின் காலில் முல்லைக்கொடிகள் பின்னிக்கொண்டன. யானை கால்களை எடுக்க முடியாமல் திணறியது. இதை பார்த்த மன்னன் யானையின் மீது அமர்ந்தபடியே முல்லைக் கொடிகளை வெட்டினார். திடீரென்று அந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வரவே மன்னன் திடுக்கிட்டு யானையில் இருந்து இறங்கி வந்து அந்த இடத்தை பார்த்தான். புதர்கள் வெட்டப்பட்டு இருந்த இடத்தில் ஒரு லிங்கத் திருமேனி இருப்பதையும், அதில் இருந்து ரத்தம் வழிவதையும் கண்டு திகைத்தான். பின்னர் தனது வாளால் தலையை கொய்து உயிரைவிடத் துணிந்தான்.

    அப்போது இறைவன் காளை வாகனத்தில் காட்சியளித்து, "மன்னா! வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை, நான் மாசில்லா மணி கவலைப்படாதே! நந்தியை உனக்கு துணையாக அனுப்பி வைக்கிறேன், வெற்றி பெறுவீர்!" என அருள்புரிந்தார். அரசனும் அரக்கர்களுடன் மறுபடியும் போர் செய்து அவர்களை வெற்றி கொண்டான். தனக்கு உதவி செய்த இறைவனின் கருணையை நினைத்து போற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினார். அசுரர்களின் அரணில் இருந்து கொண்டு வந்த இரண்டு வெள்ளருக்கு தூண்களையும், தான் உருவாக்கிய சிவாலயத்தில் இறைவன் கருவறை முன் பொருத்தி வைத்தார். அந்த இடமே திருமுல்லைவாயில் ஆகும்.

    அந்த இடத்தில் பெருமானுக்கு கோவில் அமைத்து கருவறை மணிமண்டபம், கல்யாண மண்டபம் முதலியவற்றை அமைத்தார். நித்திய பூஜைகள் தவறாமல் நடைபெற ஏற்பாடுகளை செய்தார் தேவாரப் பாடல் ஆசிரியர்களில் ஒருவரான சுந்தரர். இதை தமது தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். சுயம்பு லிங்கம் ஆலயத்தின் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். உயரமான லிங்கத்தைச் சுற்றி சதுர பீட ஆவுடையார் உள்ளது. லிங்கத்தின் மேல் புறம் வெட்டப்பட்ட வடு உள்ளது. வெட்டப்பட்ட இடத்தில் எப்போதும் சந்தனம் சாத்தப்படுவதால் லிங்கப் பகுதிக்கு அபிஷேகங்கள் கிடையாது. ஆவுடையாருக்கு தான் வென்னீர்அபிஷேகம் செய்யப்படுகிறது.

    ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் என்பதால் லிங்கத்தின் மீது சந்தனம் களையப்படுவதில்லை. அந்த சந்தனத்தின் மீது மீண்டும் சந்தனம் சாத்தப்படும். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் மட்டும் சந்தன காப்பு முழுவதுமாக களையப்பட்டு, அபிஷேகம் முடிந்து மீண்டும் சந்தன காப்பு செய்யப்படும். இந்த நாளில் மட்டுமே லிங்கத் திருமேனியின் சொரூபத்தை நாம் தரிசிக்க முடியும். மற்றபடி ஆண்டு முழுவதும் இறைவன் மீது சந்தன காப்பு இருந்து கொண்டே இருக்கும். அம்பாள் சுவாமிக்கு வடபுறத்தில் எழுந்தருளியுள்ளார்.

    பொதுவாக சிவாலயங்களில் மூலவருக்கு நேராக நந்தி சிலை இருக்கும். தலபுராணபடி இங்குள்ள நந்தி தொண்டைமானுக்கு உதவி செய்வதற்காக அசுரர்களை எதிர்த்து போர் புரிய சென்றதால் நந்தி, சுவாமியை பார்த்தபடி இல்லாமல் எதிர் திசையை நோக்கி திரும்பியபடி உள்ளது. பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் போன்ற நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் நந்திக்கு பூஜை செய்து, நந்திக்கு சாற்றிய மாலையை அணிந்து கொண்டால் திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ம் மாசிலாமணீஸ்வரர்.

    • தேன் - இனிய குரல்வளம் தரும் நெய் - வீடுபேறு அடைய உதவும்
    • பன்னீர் - புகழ் சேர்க்கும் சந்தனம் - செல்வம் உண்டாகும்

    சந்தனாதித் தைலம் - சுகம் தரும்

    நல்எண்ணை - விஷசுரம் நிவர்த்தி

    பால் - தீர்க்காயுள் தரும்

    தயிர் - நன்மக்கட்பேறு

    தேன் - இனிய குரல்வளம் தரும்

    நெய் - வீடுபேறு அடைய உதவும்

    சர்க்கரை - எதிரிகள் தொல்லை நீங்குதல்

    பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்

    மாம்பழம் - வெற்றியைத் தரும்

    கரும்புசாறு - நல்ல உடல் நலம்

    இளநீர் - போகம் அளிக்கும்

    எலுமிச்சம் பழம் - சகல பகையை அழிக்கும்

    அன்னம் - சகல பாக்கியங்களும் தரும்

    பன்னீர் - புகழ் சேர்க்கும்

    சந்தனம் - செல்வம் உண்டாகும்

    நறுமணப்பொடி - கடன், நோய் தீரம்

    ஆண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், பெண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், மஞ்சள்தூளும் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    மஞ்சள் தூள் - மங்களம் அளித்திடும்

    விபூதி - கர்மவினைகளை நீக்கி மோட்சம் அளிக்கும்

    சொர்ணாபிஷேகம் - ஐஸ்வர்யம் வரும்

    ஒவ்வொரு அபிஷேகத்தின் இடையிலும் சுத்தநீர் - சாந்தி தரும்.

    தில்லை தீர்த்தங்கள் பத்து

    1. சிவகங்கை

    2. பரமானந்த கூபம் (சித்சபைக்கு கிழக்குப் பக்கத்தில் கிணறு வடிவில் சக்தி வடிவம் பொருந்தியது)

    3. வியாக்கிரபாத தீர்த்தம் (இளமையாக்கினர் கோவில்)

    4. அனந்த தீர்த்தம் (திருஅனந்தேஸ்சுரத்துக்கு முன்பு உள்ளது)

    5. நாகச்சேரி (திருஅனந்தேஸ்சுரத்துக்கு மேற்பாங்கான உள்ள திருக்குளம்)

    6. பிரமதீர்த்தம்

    7. சிவப்பிரியை

    8. புலிமடு

    9. குய்ய தீர்த்தம்

    10. திருப்பாற்கடல்

    பிரபஞ்சத்தின் மையம்

    பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர், திருமூலர் ஆகியோரால் பூஜிக்கப் பெற்ற சுயம்புலிங்கம்தான் ஆதிமூலநாதர். இதுதான் பிரபஞ்சங்களின் மையமாகும்.

    ஆதியந்த மற்றது. ஆகாயத்தின் மையம் இதுவேயாகும். ஒரு காலத்தில் பெரும் வனமான தில்லை மரங்கள் அடர்ந்த காட்டில் ஊடே வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்ட சுயம்புலிங்கம் தில்லை மரங்கள் நிறைந்த வனம்தான் இன்றைய சிதம்பரம்.

    எனவே சிதம்பரத்திற்கு தில்லை என்ற பெயரே பிரசித்தி பெற்று விளங்குகிறது.

    ஆதிமூலநாதர் சன்னதி இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும் நடராஜர் சன்னதி இரவு 10 மணிக்கே அர்த்தஜாம பூஜை நடைபெறும் முதலாவது அர்த்தஜாம பூஜையும், கடைசியாக அர்த்தஜாம பூஜையும் நடக்கும் இடம் தில்லையில் மட்டுமே.

    தில்லையம்பலவாணன் தினசரி பூஜைகள்

    தில்லை திருத்தலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜ மூர்த்திக்கு நாள்தோறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை மூன்று, மாலையில் மூன்று பூஜைகள் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளியறையில் பால், பொரி, பழம் முதலியன நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்து சுவாமியின் பாதுகையை வெள்ளி, தங்க பல்லக்கில் எழுந்தருளச் செய்து கொண்டு வந்து நடராஜரின் அருகில் வைத்து, நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியன நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்தும் வருகின்றனர். இது `திருவனந்தல்' என்றும், பால் நைவேத்தியம் என்றும் அழைக்கப்படும் இது ஆறு கால பூஜைகளில் சேர்ந்தல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    ×