என் மலர்
நீங்கள் தேடியது "சர்பராஸ் கான்"
- 3-ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
- இந்தியா இன்னும் 125 ரன்கள் பின்னிலையில் உள்ளது.
பெங்களூரு:
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமான முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் ஜெய்ஸ்வால் 35 ரன்னிலும், ரோகித் சர்மா அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் 3-ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இறுதியில் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் உள்ளார். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா இன்னும் 125 ரன்கள் பின்னிலையில் உள்ளது.
- 3-ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இந்தியா 60 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சில் சிக்கி, 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர்.
366 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 35 ரன்னிலும், ரோகித் சர்மா அரை சதம் அடித்து 52 ரன்னிலும் அவுட் ஆகினர்.
விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். 3-ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இதனை தொடர்ந்து, இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இதில் சர்பராஸ் கான் சதம் விளாசினார். காலை 10 மணி நிலவரப்படி சர்பரஸ் கான் 117 பந்துகளில் 106 ரன்களுடன் விளையாடி வருகிறார். அவருக்கு ஜோடியாக ரிஷப் பண்டும் விளையாடி வருகிறார். அவர் 19 பந்துகளில் 11 ரன்களை எடுத்துள்ளார்.
இந்தியா 60 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து விளையாடி வருகிறது.
- மறுமுனையில் ரிஷப் பண்ட் அரை சதம் விளாசினார்.
- இந்தியா 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து இருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இதனை தொடர்ந்து, இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. சர்பராஸ் கான் உடன் ரிஷப் பண்ட் ஆட்டத்தை தொடங்கினார், இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அவரது முதல் சதம் இதுவாகும். மறுமுனையில் ரிஷப் பண்ட் அரை சதம் விளாசினார். ரிஷப் பண்ட் அரை சதம் விளாசினார்.
71 ஓவர் முடிவில் 344 ரன்கள் எடுத்திருக்கும் போது மழை குறுக்கிட்ட நிலையில், சர்பராஸ் கான் 154 பந்துகளில் 125 ரன்களுடனும் ரிஷப் பண்ட் 56 பந்துகளில் 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அத்துடன் 4 வது நாள் உணவு இடைவேளை விடப்பட்டது.
தற்போது வரை இந்தியா 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
- மும்பையைச் சேர்ந்த சர்பராஸ் கானுக்கு, இது 16-வது முதல் டெஸ்ட் போட்டி சதமாகும்
- சர்பராஸ் கானின் சகோதரன் முஷீர் கானும் 97 நம்பர் ஜெர்சியையே அணிந்துள்ளார்
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து இருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இதனை தொடர்ந்து, இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதலில் களமிறங்கிய சர்பராஸ் கான் ரிஷப் பண்ட் உடன் கூட்டணி அமைத்து ஆடினார். இதில் இதில் சர்பராஸ் கான் 133 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்சில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமை சர்பராஸ் கானுக்கு கிடைத்திருக்கிறது.

இதற்கு முன்பாக கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி , அசாருதீன்,திலீப் வெங்சர்கார், ஷிகர் தவான், சுப்மன் கில் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்கள். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்பராஸ் ஸ்கோர் செய்த முதல் சதம் இதுவாகும். 113 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன்அவர் சதம் விளாசியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த சர்பராஸ் கானுக்கு, இது 16-வது முதல் டெஸ்ட் போட்டி சதமாகும். தொடர்ச்சியாக அவர் விளாசும் இரண்டாவது சதமும் இதுவே ஆகும். டோனி தொடங்கி ஒவ்வொரு வீரரும் தங்களுக்கே உரிய தனித்துவமான நம்பர் கொண்ட ஜெர்சியை அணிவது வழக்கம. இந்நிலையில் சர்பராஸ் கான் அணிந்துள்ள 97 நம்பர் ஜெர்சி குறித்த சுவாரஸ்ய விளக்கம் கிடைத்துள்ளது.
97 என்ற நமபிரின் 9 என்பது ஹிந்தியில் 'நவ்' என்று உச்சரிக்கப்டுகிறது. 7 என்பது 'சாத்' என்ற உச்சரிக்கப்படுகிறது. சேர்த்துப்படித்தால் நவுசாத். சுவாரஸ்யமானது என்னவென்றால் சர்பராஸ் கானின் தந்தை பெயர் நவ்சாத் கான். எனவேதான் சர்பராஸ் 97 நம்பர் ஜெர்சியை அணிந்துள்ளார். மேலும் சர்பராஸ் கானின் சகோதரன் முஷீர் கான், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 2024 உலகப்கோப்பை போட்டிகளின்போது 97 நம்பர் ஜெர்சியையே அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனது முதல் டெஸ்ட் சதத்தையும் 150 ரன்களாக சர்பராஸ் மாற்றியுள்ளார்.
- சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பண்ட் 99 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து இருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இதனை தொடர்ந்து, இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதலில் களமிறங்கிய சர்பராஸ் கான் ரிஷப் பண்ட் உடன் கூட்டணி அமைத்து ஆடினார். இதில் இதில் சர்பராஸ் கான் 110 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்பராஸ் ஸ்கோர் செய்த முதல் சதம் இதுவாகும். இதன் மூலம் முதல் இன்னிங்சில் டக் அவுட்டாகி அடுத்த இன்னிங்சில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமை சர்பராஸ் கானுக்கு கிடைத்திருக்கிறது.
சதம் விளாசிய பின்பு நிதானமாக விளையாடிய சர்பராஸ் கான் 150 ரன்கள் அடித்து அவுட்டானார்.
முதல்தர கிரிக்கெட்டில் 15 சதங்களை சர்பராஸ் கான் அடித்துள்ளார். சதம் அடித்த பின்பு உடனடியாக தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் பெரிய ரன்கள் அடிப்பதை சர்பராஸ் வாடிக்கையாக வைத்துள்ளார். அவ்வகையியில் அண்மையில் நடந்த இரானி கோப்பையிலும் தனது சதத்தை இரட்டை சதமாக அவர் மாற்றினார். அவ்வகையில் தனது முதல் டெஸ்ட் சதத்தையும் 150 ரன்களாக சர்பராஸ் மாற்றியுள்ளார்.
அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 99 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
தற்போது 5 விக்கெட் இழப்பிற்கு 438 ரன்கள் எடுத்து இந்திய அணி 82 ரன்கள் முன்னிலை எடுத்துள்ளது. களத்தில் கே.எல்.ராகுலும் ஜடேஜாவும் உள்ளனர்.
- முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- 2-ம் இன்னிங்சில் 462 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆல் அவுட்டானது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 2ம் நாளில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
பின்னர் 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சர்பராஸ் கான் 150 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 99 ரன்களுக்கு அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் ரிஷப் பண்ட் இழந்தார். அடுத்து விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 462 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆல் அவுட்டானது.
107 ரன்கள் என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. நாளை நடைபெறும் இறுதிநாள் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி இந்திய அணி போட்டியை வெல்லுமா என்று ராசிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
- இந்திய அணியில் சர்பராஸ் கானுக்கு பல வருடங்களாக வாய்ப்பு மறுக்கப்பட்டது.
- யோயோ சோதனைகளை நிராகரித்து விட்டு ஒரு வீரர் மனதளவில் எவ்வளவு வலிமையானவர் என்பதை மதிப்பிடவும்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்திய மண்ணில் 36 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து வென்றுள்ளது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு இந்தியா ஆள் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. அதே சமயம் இரண்டாவது இன்னிங்சில் சர்பராஸ் கான் 150 ரன்களும் ரிஷப் பண்ட் 99 ரன்களும் குவித்தததால் 462 ரன்களை இந்திய அணி எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை இந்திய அணி தவிர்த்து.
சர்பராஸ் கான் உடல் பருமனாக இருக்கிறார் என்று கூறி அவருக்கு சில ஆண்டுகளாக வாய்ப்பு வழங்காமல் இருந்து வந்ததை குறிப்பிட்டு முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சுனில் கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ்டாருக்கு எழுதிய கட்டுரையில், "உள்ளூர் கிரிக்கெட்டில் நிறைய சதங்கள் அடித்தும் இந்திய அணியில் சர்பராஸ் கானுக்கு பல வருடங்களாக வாய்ப்பு மறுக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டுக்கு தேவையான மெலிதான இடுப்பு அவருக்கு இல்லை என்று அவர்கள் நம்பியதே இதற்கு காரணம். ஆனால் களத்தில் சர்பராஸ் பேட்டிங் அவருடைய இடுப்பை விட அபாரமாக இருந்தது.
துரதிஷ்டவசமாக இந்திய கிரிக்கெட்டில் பல முடிவெடுக்கும் யோசனைகள் உள்ளன. அவற்றை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. இந்த ஃபிட்னஸ் தூய்மைவாதிகள் விரும்பும் மெல்லிய இடுப்பை கொண்டிருக்காத மற்றொரு வீரர் ரிஷப் பண்ட். ஆனால் தாக்கத்தை ஏற்படுத்துவதில் அவர் என்ன ஒரு அற்புதமான வீரர். இதற்கிடையே அவர் நாள் முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்கிறார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அதற்கு 6 மணி நேரம் உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டியது மட்டுமல்லாமல் பந்துகளை சேகரிக்க ஸ்டம்ப்புகளுக்கு ஓடுவதும் தேவைப்படுகிறது. எனவே தயவு செய்து இந்த யோயோ சோதனைகளை நிராகரித்து விட்டு ஒரு வீரர் மனதளவில் எவ்வளவு வலிமையானவர் என்பதை மதிப்பிடவும். ஒரு வீரர் நாள் முழுவதும் பேட் செய்யவோ அல்லது 20 ஓவர்கள் வீசவோ முடிந்தால் அவரது இடுப்பு எவ்வளவு மெலிதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் ஃபிட்டாக இருக்கிறார் என்பது அர்த்தம்" என்று எழுதியுள்ளார்.
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சர்பராஸ் கான் முதல் சதத்தை பதிவு செய்தார்.
- அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 462 ரன்கள் குவித்தது. இக்கட்டான சூழலில் பொறுப்புடன் ஆடிய சர்பராஸ்கான் டெஸ்ட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 150 குவித்து ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி விளையாடி வரும் அவர் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார்.
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த கையோடு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார்.
அவர், தனது குழந்தையை கையில் ஏந்தி போஸ் கொடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பெங்களூரு டெஸ்டில் சர்பாராஸ் கான் 150 ரன் விளாசினார்.
- சுப்மன் கில் அணிக்கு திரும்புவதால் 2-வது டெஸ்டில் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் கழுத்து வலி காரணமாக சுப்மன் கில் விளையாடவில்லை. சர்பராஸ் கான் அணியில் இடம் பிடித்தார். முதல் இன்னிங்சில் இந்தியா 46 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் 462 ரன்கள் குவித்தது. இதற்கு சர்பாராஸ் கான் விளாசிய 150 ரன்கள் முக்கியமானதாகும்.

2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாட சுப்மன் கில் தயாராகிவிட்டார். இதனால் சர்பராஸ் கான் நீக்கப்படலாம். அதேவேளையில் கே.எல். ராகுல் இரண்டு இன்னிங்சிலும் சரியாக விளையாடவில்லை. இதனால் சர்பராஸ் கான் அல்லது கே.எல். ராகுல் ஆகியோரில் ஒருவர் நீக்கப்படலாம்.
ஆனால் ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் கே.எல். ராகுலை நீக்காது எனத் தெரிகிறது. இதனால் சர்பராஸ் கான் வெளியே இருக்க வாய்ப்புள்ளது.
இதற்கு முன்னதாக 2016-ல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் கருண் நாயர் முச்சதம் விளாசினார். ஆனால் அதன்பிறகு டெஸ்ட் போட்டியில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கருண் நாயர் அந்த போட்டியில் ரகானேவிற்குப் பதிலாக களம் இறக்கப்பட்டார். அடுத்த போட்டிக்கு ரகானே தயாரானதால் கருண் நாயருக்கு இடம் கிடைக்கவில்லை.
சேவாக்கிற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில முச்சதம் அடித்த ஒரே வீரர் கருண் நாயர்தான். இருந்தபோதிலும் அதன்பிறகு அவரது டெஸ்ட் வாழ்க்கை மங்கிப்போனது.
அதேபோல் சர்பராஸ் கானை வெளியில் வைக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது. அவர் ஆடும் லெவனில் இடம்பெற வேண்டும் என இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கூறுகையில் "அங்கு ஒரு கோட்பாடு உள்ளது. கருண் நாயர் 300 ரன்கள் அடித்தார். ஆனால் அடுத்த போட்டியில் அவர் நீக்கப்பட்டார். ஏன்?. ஏன் என்றால் அவர் ரகானோ இடத்தில் களம் இறங்கினார். ரகானே மீண்டும் அணிக்கு திரும்பியதும், கருண் நாயர் வெளியில் உட்கார வைக்கப்பட்டார். அதனோடு அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.
இந்த கோட்பாட்டின்படி, சர்பராஸ் கான் வெளியில் உட்கார வைக்கப்படுவார். அது நடக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட்டிற்கு தற்போது முக்கியமான விசயம், வெளிப்புறத்தில் இருந்து சர்பராஸ் கானுக்கு சாதகமான ஆதரவு வெளிப்புறத்தில் இருக்கிறது" என்றார்.
- ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்செல் சாண்ட்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் முறையே 76, 65 மற்றும் 33 ரன்களை அடித்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசினார். இவர் மட்டும் ஏழு விக்கெட்டுகளை கைப்பிற்றினார். இவருடன் ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து ஆடிக் கொண்டிருந்தது. அப்போது சர்பராஸ் கான் பேட்டர் அருகிலேயே ஃபீல்டிங் செய்ய நின்று கொண்டிருந்தார். அப்பது சர்ஃப்ராஸ் கானின் அந்தரங்க உறுப்பில் பந்து வேகமாக அடித்தது.
இதை பார்த்த தினேஷ் கார்த்திக் கமென்ட்ரியில் இருந்த படி, "சர்பராஸ் கான் பந்து அவரை தாக்கியதை விரும்பியிருக்க மாட்டார் என்று தெரிவித்தார்." இதற்கு பதில் அளித்த ரவி சாஸ்திரி, "அவர் தான் அப்பா ஆகிவிட்டாரே," என்று தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
- இந்திய வீரர் சர்பராஸ் கானை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
- முசீர் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.30 லட்சம் கொடுத்து வாங்கியது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் சர்பராஸ் கானை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. அதே சமயம் சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.30 லட்சம் கொடுத்து வாங்கியது.