search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய மல்யுத்த சம்மேளனம்"

    • பிரிஜ் பூசனின் நண்பரும் ஆர்எஸ்எஸ் புள்ளியுமான சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளன தலைவர் ஆனார்.
    • 'இந்த வருட ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்தியா 6 பதகங்களுக்கும் மேல் வென்றிருக்கும்.. ஆனால்'

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் - ஒரு இந்தியக் கனவு

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப்போட்டியில் உடல் எடை அதிகரித்த காரணத்துக்காக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது.

     

    பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். ஆனால் வினேஷ் போகத் உடல் எடை 50 கிலோவுக்கு 100 கிராம்கள் அதிகமாக இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.

     

    இதையடுத்து வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரி வினேஷ் போகத்தின் முறையீட்டை விளாயாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான தீர்ப்பு வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரும் என எதிர்பார்க்கலாம். இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் [57 கிலோ எடைப்பிரிவில்] அமன் சேராவத் மட்டுமே பதக்கம் [வெண்கலம்] வென்றுள்ளார்.

     

    அதிகாரத்தோடு நடக்கும் மல்யுத்தம்

    வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் முக்கியத்துவம் பெறுவதற்கு மற்றோரு காரணமும் உள்ளது. அதாவது இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜக முன்னாள் எம்.பியுமான பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்தது. இதனால் பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு நியாயம் கேட்டு சக மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் கடந்த வருட தொடக்கத்திலிருந்து டெல்லியில் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     

    அரசியல் விளையாட்டு 

    இந்த போராட்டத்தின் முக்கிய முகமாக அறியப்பட்டவர் வினேஷ் போகத். அவர் மீதும் மற்றைய வீரர் வீராங்கனைகள் மீதும் மத்திய அரசானது அவர்கள் மீது கடுமையான அடக்குமுறையைப் பிரயோகித்தது. ஆனால் மாதக்கணக்கில் அவர்கள் நடத்திய போரட்டம் ஓரளவு வெற்றி அடைந்தது என்றே கூற வேண்டும். அதாவது, பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து விலகிய பின் தேர்தல் நடத்தப்பட்டு அவரது நண்பரும் ஆர்எஸ் எஸ் பின்னணி கொண்ட புள்ளியான சஞ்சய் சிங் நியமிக்கப்பட்டார்.  

    இடையில் சில காலம் மல்யுத்த சம்மேளனம் செயலிழந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் சஞ்சய் சிங் தலைமையில் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் வினேஷ் போகத்தின் தற்போதைய தகுதி நீக்கத்தில் அரசியல் சதி ஒளிந்துள்ளதாகப் பலர் சந்தேகிக்கின்றனர். வினேஷ் போகத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக மற்ற விளையாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

     

    கைவிரித்த இந்திய ஒலிம்பிக் சங்கம் 

    இதற்கிடையே வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பொறுப்பல்ல என்று அதன் தலைவர் பி.டி.உஷா கைவிரித்தது அனைவரிடையேயும் கோபத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி , அதிக செலவு செய்தும், திறமையான வீரர் வீராங்கனைகள் இருந்தும் பாரீஸ் ஒலிம்பிக்சில் இந்தியா 6 பதக்கங்களை மட்டுமே பெற்று பதக்கப்பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ள ஆதங்கமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது மத்திய அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அக்கறையின்மையினாலேயே நடந்துள்ளது என்ற பொதுக்கருத்தும் மக்களிடையே நிலவி வருகிறது.

     

    அவர்தான் பொறுப்பு.. 

    இந்த நிலையில்தான் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங், பாரீஸ் ஒலிம்பிக்சில் மல்யுத்தத்தில் ஒரே ஒரு பதக்கம் மட்டுமே பெற்று இந்தியா பிந்தங்கியுள்ளதற்கு கடந்த வருடம் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் நடத்திய போராட்டமே காரணம் என்ற கருத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

     

    'இந்த வருட ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்தியா 6 பதகங்களுக்கும் மேல் வென்றிருக்கும். ஆனால் கடந்த 15-16 மாதங்களாக ஏற்பட்ட தொந்தரவுகளால் நாம் பாதகங்களை இழந்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.மேலும் வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து பேசியபோது, தகுதி நீக்கத்திற்கு 'அவர்தான் [வினேஷ் போகத்தான்] பொறுப்பு. தீர்ப்பு சரியாக வந்தால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்கும்' என்று தெரிவித்துள்ளார். 

    • பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்களை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது.
    • இந்த முறை பாஜக சார்பில் அவருக்கு ஏன் எம்.பி சீட் கொடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு சிரித்தவாறே பிரிஜ் பூஷன் சிங், தனது மகனுக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும் 6 முறை பாஜக எம்.பியாகவும் இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக பெண் மல்யுத்த வீரர்கள் தொடுத்த கிரிமினல் வழக்கில் விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் டெல்லி ரோஸ் அவன்யூ மாவட்ட நீதிமன்றத்தில் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.




     

    பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்களை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் இணை குற்றவாளியும் முன்னாள் WFI உதவி செயலாளருமான வினோத் தோமர் மீதும் மிரட்டல் குற்றச்சாட்டையும் நீதிமன்றம் பதிவு செய்தது.

    இதுகுறித்து கருது தெரிவித்துள்ள பிரிஜ் பூஷன், இது அனைத்தும் தன் மீது புனையப்பட்ட குற்றச்சாட்டுகள் என்றும் தான் நிரபராதி என்பதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த முறை பாஜக சார்பில் அவருக்கு ஏன் எம்.பி சீட் கொடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு சிரித்தவாறே பிரிஜ் பூஷன் சிங், தனது மகனுக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.




    உத்தரப் பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜக எம்.பி.யாக இருந்த சிங் மீதான பாலியல் புகார்களை அடுத்து அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது. அக்கட்சி அவரது மகன் கரண் பூஷன் சிங்கை அந்த தொகுதியில் நிறுத்தியுள்ளது. 


    • தகுதி போட்டிக்கு வருமாறு வீரர்-வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
    • இதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிராகரித்துள்ளார்.

    மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இதையடுத்து வீரர்-வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மல்யுத்த சம்மேளனத்துக்கு நடந்த தேர்தலில் பிரிஜ்பூஷனின் ஆதரவாளர் சஞ்சய்சிங் தலைவராக வெற்றி பெற்றார். இதற்கும் வீரர்-வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் அடுத்த மாதம் கிரிகிஸ்தானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு இந்திய அணி தேர்வுக்காக தகுதி போட்டிக்கு வருமாறு வீரர்-வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

    இதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிராகரித்துள்ளார். மேலும் வருகிற 10-ந் தேதி டெல்லியில் நடைபெறும் தகுதி தேர்வு போட்டிக்கு தடை விதிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளார்.

    • கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது.
    • இந்திய மல்யுத்த சம்மேளம் மீதான இடைநீக்க நடவடிக்கையை உலக மல்யுத்த சங்கம் நேற்று தளர்த்தியது.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தாமல் பலமுறை தள்ளிவைக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த உலக மல்யுத்த சங்கம், கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது.

    இதற்கிடையே, பல்வேறு சலசலப்புக்கு மத்தியில் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு மல்யுத்த வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அவர் விதிமுறைக்கு புறம்பாக தேசிய போட்டிகளை நடத்த முயற்சித்ததால் உடனடியாக புதிய நிர்வாகத்தை மத்திய விளையாட்டு அமைச்சம் இடைநீக்கம் செய்தது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக கமிட்டி மல்யுத்த பணிகளை கவனிக்கிறது. ஆனாலும் புதிய நிர்வாகம், விளையாட்டு அமைச்சகத்தின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளம் மீதான இடைநீக்க நடவடிக்கையை உலக மல்யுத்த சங்கம் நேற்று தளர்த்தியது. அதே சமயம் முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக பல மாதங்கள் போராடிய பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் போன்ற வீரர், வீராங்கனைகளை சர்வதேச போட்டிக்கு பரிசீலனை செய்யும் போது எந்தவித பாகுபாடும் காட்டமாட்டோம் என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் எழுத்துபூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும் என்றும் உலக சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

    • ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி குரோஷியாவில் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்திய அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    முதலாவது உலக ரேங்கிங் போட்டியான ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி குரோஷியாவில் வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த அணியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டி அறிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்பட்ட முதல் அணி இதுவாகும். அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

    ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரருமான பஜ்ரங் பூனியா, சீனியர் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இளம் வீராங்கனை அன்திம் பன்ஹால் ஆகியோர் இடம் பெறவில்லை.

    இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில், சஞ்சய் சிங்குடன் தான் எங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. புதிய கூட்டமைப்பு அமைப்பு அல்லது தற்காலிகக் குழுவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சஞ்சய் சிங்கிற்கு மல்யுத்த கூட்டமைப்பு ஆணையத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை கேட்டுக் கொள்கிறேன். பிரிஜ் பூஷன் என் குடும்பத்தைக் குறிவைக்கிறார். எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் பொறுப்பு என தெரிவித்தார்.

    • பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் மத்திய அரசு வழங்கிய விருது, பதக்கங்களை திருப்பி அளிப்பதாக அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    • இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அமைத்தது.

    புதுடெல்லி:

    பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர், விராங்கனைகள் டெல்லியில் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து மல்யுத்த சம்மேளன நடவடிக்கைகளில் இருந்து பிரிஜ் பூஷன் ஒதுங்கினார். கோர்ட்டு உத்தரவுப்படி அவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடக்கிறது.

    கடந்த 21-ந்தேதி டெல்லியில் நடந்த இந்திய மல்யுத்த சமமேளன புதிய நிர்வாகிகள் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த கனமே, மல்யுத்தத்தில் மீண்டும் பிரச்சினை வெடித்தது. பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் யாரும் மல்யுத்த சம்மேளனத்தில் இருக்கக்கூடாது என்பது தான் வீரர்களின் பிரதான கோரிக்கை. தாங்கள் நினைத்தபடி நடக்காததால் வீராங்கனைகள் மறுபடியும் கோதாவில் குதித்துள்ளனர். பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் மத்திய அரசு வழங்கிய விருது, பதக்கங்களை திருப்பி அளிப்பதாக அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, புதிய தலைவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்ததால் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கடந்த 24-ந்தேதி மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. மேலும், வீரர்களுக்கு போதிய அவகாசம் வழங்காமல் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பை இந்த மாத இறுதிக்குள் நடத்தப்போவதாக புதிய நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்றும் விளையாட்டு அமைச்சகம் சுட்டிக்காட்டியது. அத்துடன் மல்யுத்த நிர்வாகத்தை தற்காலிகமாக கவனிக்க இடைக்கால கமிட்டியை அமைக்கும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கேட்டுக் கொண்டது.

    இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அமைத்தது. இந்திய உசூ சம்மேளன தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா கமிட்டியின் தலைவராகவும், முன்னாள் ஆக்கி வீரர் எம்.எம். சோமயா, முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை மஞ்ஜூஷா கன்வார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இந்த கமிட்டியில் இருப்பார்கள்.

    வீரர்கள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான பதிவை சமர்ப்பிப்பது, போட்டிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு, வங்கி கணக்கு விவரங்களை கையாள்வது, இதன் இணையதளத்தை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை எல்லாம் இடைக்கால கமிட்டி மேற்கொள்ளும்.

    ஏற்கனவே நிர்வாகிகள் தேர்தலுக்கு முன்பாக சில மாதங்கள் இடைக்கால கமிட்டி தான் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாக பணிகளை கவனித்தது. அதில் பூபிந்தர் சிங் பஜ்வாவும் ஒரு உறுப்பினராக இருந்தார். அந்த அனுபவம் அவருக்கு நிர்வாகத்தை திறம்பட வழிநடத்த உதவிகரமாக இருக்கும்.

    பஜ்வா கூறுகையில், '2024-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. அதற்கு தயாராவதை உடனடியாக தொடங்க வேண்டும். பயிற்சி முகாமுடன் சீனியர் மற்றும் ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளை விரைவில் நடத்துவோம். நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக மல்யுத்தம் திகழ்கிறது. முடிந்த அளவுக்கு ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வெல்லும் வாய்ப்பை உருவாக்குவதே எங்களது இலக்கு' என்றார்.

    • இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரத்தை உலக மல்யுத்த சங்கம் ரத்து செய்தது.
    • தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    சுவிட்சர்லாந்து:

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உறுப்பினர் அங்கீகாரத்தை உலக மல்யுத்த சங்கம் ரத்து செய்தது. இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரத்து காரணமாக மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாடு என்பதை உரிமை கொண்டாட முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும் என உலக மல்யுத்த சங்கம் கடந்த மே மாதம் 30-ம் தேதி கடிதம் எழுதி இருந்தது. அதில், 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்தாவிடில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியா சார்பில் விளையாடும் வீரர்கள் குறிப்பிட்ட நாட்டை உரிமை கொண்டாட முடியாது.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், இந்திய மல்யுத்த வீரர்களின் தொடர் எதிர்ப்புகள் மற்றும் போராட்டம் காரணமாக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

    • ஐந்து நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு 7 பேர் போட்டியிடுகிறார்கள்.
    • பிரிஜ் பூஷன் தரப்பினர் 15 பதவிகளுக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல்  அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர், மூத்த துணைத் தலைவர், 4 துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், 2 இணைச் செயலாளர்கள் மற்றும் 5 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

    இதில் தலைவர் பதவிக்கான போட்டியில், தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் விசுவாசியான சஞ்சய் குமார் சிங் (உத்தர பிரதேசம்) மற்றும் 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷியோரன் ஆகியோர் உள்ளனர்.

    துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் கர்தார் சிங் போட்டியிடுகிறார். இவர் ஆசிய போட்டிகளில் இரணடு முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

    இவர் தவிர அசித் குமா சகா(மேற்கு வங்காளம்), ஜெய் பிரகாஷ் (டெல்லி), மோகன் யாதவ் (மத்திய பிரதேசம்), என்.போனி (மணிப்பூர்) ஆகியோரும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

    இதேபோல் 2 இணை செயலாளர் பதவிகளுக்கு 4 பேரும், ஐந்து நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு 7 பேரும் போட்டியிடுகிறார்கள். பிரிஜ் பூசன் தரப்பினர் 15 பதவிகளுக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் 5 முக்கிய பதவிகளுக்கான போட்டியில் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×