search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீடி இலை"

    • போலீசார் தொடர்ந்து தடுத்து நிறுத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
    • கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து அவ்வப்போது பீடி இலைகள், மஞ்சள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதனை போலீசார் தொடர்ந்து தடுத்து நிறுத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது இன்று அதிகாலை 2 மணி அளவில் கடற்கரை ஓரமாக சந்தேகத்திற்கிடமான முறையில் லோடு ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

    போலீசார் வருவதை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் லாரியை நிறுத்திவிட்டு கீழே குதித்து தப்பி ஓடினர். போலீசார் சோதனை செய்ததில், வாகனத்தில் 30 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் 1500 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.

    அதனை இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் அவர்கள் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ரூ. 20 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் கைப்பற்றி வாகனத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கடந்த மே மாதம் தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் பீடி இலைகள், அதற்கு முன்பு வேம்பார் கடற்கரையில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் என அடுத்தடுத்து ரூ.1 கோடியை 40 லட்சம் மதிப்புள்ள பீடி இலை கடத்தல்களை 'கியூ' பிரிவு போலீசார் கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

    • கடலில் ஒரு படகு நீண்ட தொலைவில் செல்வதையும் போலீசார் கண்டனர்.
    • மூட்டைகள் முழுவதும் பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

    உடனே போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். போலீஸ் வாகனம் வருவதை கண்ட அந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த 3 மூட்டைகளை கடற்கரையில் போட்டு விட்டு அவர்கள் வந்திருந்த வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    மேலும் கடலில் ஒரு படகு நீண்ட தொலைவில் செல்வதையும் போலீசார் கண்டனர். அதனைத்தொடர்ந்து போலீசார் மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் மூட்டைகள் முழுவதும் பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. அவை கடத்தலுக்கு பயன்படுத்த கொண்டு செல்லப்பட இருந்த நேரத்தில் போலீசார் வருவதை தெரிந்ததும் ஒரு பகுதியை கடற்கரையோரம் போட்டுவிட்டு அவர்கள் தப்பி சென்றது தெரிய வந்தது. பிடிபட்ட பீடி இலை மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்கள் எங்கு கடத்த முயன்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • சினிமாவில் வருவதுபோல் இந்த காட்சி அமைந்தது.

    நாகர்கோவில் ்: கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நெல்லை மாவட்டம் கூட்டப்புளி கடற்கரை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் இன்று அதிகாலை அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஒரு டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த டெம்போ அங்கு நிற்காமல் மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. இது தொடர்ந்து பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலூர் பாதுகாப்பு குழும போலீசார் ஜீப் மூலம் அந்த டெம்போவை துரத்தி னார்கள். சினிமாவில் வருவதுபோல் இந்த காட்சி அமைந்தது.சினிமாவில் வருவதுபோல் இந்த காட்சி அமைந்தது.

    சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று கன்னியாகுமரி அருகே உள்ள சங்கம்தேரி பகுதியில் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அதற்குள் அந்த டெம்போவில் இருந்து டிரைவர் குதித்து தப்பி ஓடி விட்டார்.

    அந்த டெம்போவை போலீசார் சோதனை செய்து பார்த்தபோது அதில் 40 பண்டல் பீடி இலை கட்டு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. ஒவ்வொரு பண்டலும் 35 கிலோ வீதம் மொத்தம் 1400 கிலோ பீடி இலை இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து டெம்போவுடன் அந்த பீடி இலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு இந்த பீடிஇலை பண்டலை கடத்தி சொண்டு செல்வதற்காக டெம்போவில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சினிமா போல் போலீசார் துரத்திச் சென்று இந்த டெம்போவை மடக்கி பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    ×