என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடயங்கள்"

    • இன்று காலை வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ரவி அதிர்ச்சி அடைந்தார்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. தனியார் பஸ்சில் கண்டக்டராக உள்ளார். இவர் நேற்று பணிக்கு சென்று விட்டார். இவரது மனைவி சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். பணி முடிந்து இன்று காலை வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ரவி அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து ரவி ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது. கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இதனை அவரது மகன் ஜீன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் நிர்வகித்து வருகின்றனர்
    • காலை 11 மணியளவில் வந்து பார்த்தபோது ஷோரூமில் இருந்த கல்லா உடைக்கப்பட்டு இருந்தது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் செஞ்சி சாலையில் இயங்கி வருகிறது. இது மறைந்த முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. ஹிராசந்த் குழுமத்திற்க்கு சொந்த மானதாகும். இதனை அவரது மகன் ஜீன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் நிர்வகித்து வருகின்றனர் இந்த ஷோரூமை, அங்கு பணிபுரியும் சந்தோஷ் என்பவர் நேற்று இரவு மூடி பூட்டிவிட்டு சென்றார்.இன்று காலை 11 மணியளவில் வந்து பார்த்தபோது ஷோரூமில் இருந்த கல்லா உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சியடைந்த அவர் கல்லாவை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த பணம் ரூ.3 லட்சம் திருடு போய் இருந்தது. இது குறித்து ரோஷனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் ரோஷனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுண ர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • இன்று காலை வழக்கம் போல் தனியார் ஷோரூமை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
    • தடயவியல் நிபு ணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

    கடலூர்:

    கடலூர் - சிதம்பரம் சாலையில் செல்லங்குப்பம் பகுதி அருகே மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமை நேற்று இரவு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்று விட்டனர். இன்று காலை வழக்கம் போல் தனியார் ஷோரூமை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்தி ருந்தது. அங்கு ஒரு அறை யில் வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைந்து பொருட் கள் சிதறி கிடந்தது. பின்னர் லாக்கரை சென்று பார்த்த போது 3 லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் 6 கிராம் தங்க நாணயத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. கொள்ளையர்கள் ஷோரூம் க்குள் எப்படி வந்தனர்? என பார்வை யிட்ட போது, பின்புறம் இருந்த ஜன்னலை அறுத்து மர்ம நபர்கள் உள்ளே வந்து பணம் மற்றும் தங்க நாணயத்தை திருடியது தெரியவந்தது.

    இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப் புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபு ணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். கடலூர் - சிதம்பரம் சாலையில் மக்கள் நட மாட்டமும், வாகன போக்கு வரத்தும் 24 மணி நேரமும் இருந்து வரும் நிலையில் மர்ம நபர்கள் பணம் மற்றும் தங்க நாணயத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எண்ணை செக்கு உரிமையாளர் வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர்-திருவாதவூர் சாலையில் உள்ள மில்கேட் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிர்புறம் உள்ள வீட்டில் வசித்து வருபவர் மணி, எண்ணை செக்கு நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி. இவர்கள் நேற்று குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர்.

    இன்று அதிகாலை மீண்டும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டி ருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட் கள் சிதறி கிடந்தன.

    உள்ளே பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள்,ரூ.50 ஆயிரம், மேலும் சில பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மேலூர் போலீஸ் நிலை யத்திற்கு மணி தகவல் கொடுத்தார். அதன்பேரில் மேலூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டன.

    இங்கு வந்த மோப்பநாய் பெரியார் கால்வாய் பகுதி வரை ஓடி நின்றது. அந்த பகுதியில் இருந்த கண் காணிப்பு காமிரா பதிவு களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வீட்டிற் குள் மர்மநபர்கள் செல்வது மற்றும் பொருட்க ளுடன் திரும்பி வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படை யில் போலீசார் வழக்குப பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • தானேவில் வைத்து வங்கதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.
    • ஷரிபுல் இரத்த மாதிரிகள் மற்றும் உடைகள் தடயவியல் ஆய்வகத்துக்கு [FSI] அனுப்பப்பட்டுள்ளன

    பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், ஜனவரி 16 அன்று மும்பை பாந்ராவில் உள்ள தனது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கத்தி குத்தில் காயமடைந்த சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சைஃப் அலி கான் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

    சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் என்று சந்தேகத்தின் பேரில் ஜனவரி 19 அன்று, தானேவில் வைத்து வங்கதேசத்தைச் சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது என்ற 30 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

     

    ஆனால் அவரது கை ரேகை, சைஃப் அலி கான் வீட்டில் இருந்து பெறப்பட்ட 19 கைரேகை மாதிரிகளுடன் பொருந்தவில்லை என்று தகவல் வெளியானது. ஆனால் ஊடங்களில் வெளியான இந்த தகவலை மும்பை போலீஸ் மறுத்துள்ளது. கைரேகை ஒத்துபோகின்றனவனா என்பது குறித்த அறிக்கை இன்னும் ஆய்வகத்தில் இருந்து வரவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே கைதுசெய்யப்பட்ட ஷரிபுல் உடைய காவலை ஜனவரி 29 ஆம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

    ஷரிபுல் விசாரணைக் குழுவுடன் ஒத்துழைக்கவில்லை என்றும், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அவர் எங்கிருந்து வாங்கினார் என்பதை இன்னும் கூறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

     

    மேலும் ஷரிபுல் இரத்த மாதிரிகள் மற்றும் உடைகள் தடயவியல் ஆய்வகத்துக்கு [FSI] அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என மும்பை போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ×