என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிசிடிவி வீடியோ"

    • போலீசார் கூடுதல் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    • ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் காரை இயக்கி வந்த ஓட்டுனர் பெண் மீது மோதி காரின் பெனட்டில் வெகு தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பான அதிர்ச்சியான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், பெண் ஒருவர் காரின் பெனட்டில் தொங்கியபடி 500 மீட்டருக்கு இழுத்துச் செல்வது காணமுடிகிறது.

    மேலும், அந்தப் பெண்ணைக் காப்பாற்ற பலர் காரின் பின்னால் ஓடுவதைக் காண முடிந்தது. ஆனாலும் ஓட்டுனர் காரை நிறுத்தவில்லை.

    இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட காரின் உரிமம் தகடு உள்ளிட்ட தகவல்களை கூடுதல் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதையடுத்து, சம்பந்தப்பட்ட அடையாளம் தெரியாத கார் ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


    • திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக கதவைப் பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.

    மகாராஷ்டிராவில் உள்ள மாலேகான் நகரில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக மண்டபத்திற்குள் வைத்து பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.

    அந்த சிசிடிவி வீடியோவில், 'திருமண மண்டபத்தின் கதவு பக்கத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் மொபைல் போனில் கேம் விளையாடி கொண்டிருக்கிறான். அப்போது கதவின் உள்ளே சிறுத்தை ஒன்று மெதுவாக வருகிறது. அதனை பார்த்த சிறுவன் எந்த பதட்டமும் இல்லாமல் வெளியே சென்று மண்டபத்தின் கதவை பூட்டி விடுவது' பதிவாகியுள்ளது.

    பின்னர், அச்சிறுவன் ஊர் மக்களிடம் இதை பற்றி தகவல் சொல்ல, அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.

    இன்று காலை 7 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுவனின் தந்தை அந்த மண்டபத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
    • சிறுத்தை நடமாட்டம் சி.சி.டி.வி.-யில் பதிவாகி உள்ளது.

    குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பான வீடியோக்கள் சமீப காலங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. சி.சி.டி.வி.-யில் சிறுத்தை, காட்டு யானை என வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகும் சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ள கோயம்புத்தூர் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்படும். அந்த வகையில், கோம்யபுத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

    இது தொடர்பான வீடியோவில் வீட்டு தடுப்பு சுவற்றின் மீது கோழி நின்று கொண்டிருக்கும் காட்சிகளும், அந்த வழியாக வந்த சிறுத்தை ஒன்று கோழியை பிடித்து செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுவனின் தந்தை ராகுல் குப்தா குவாலியரை சேர்ந்த தொழிலதிபர் ஆவார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன

    மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் நேற்று [வியாழக்கிழமை] காலை பள்ளிக்குச் செல்லும் வழியில் தாயின் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடத்தப்பட்ட சிறுவன் 7 வயதான ஷிவாய் குப்தா. சிறுவனின் தந்தை ராகுல் குப்தா குவாலியரை சேர்ந்த தொழிலதிபர் ஆவார். குவாலியரில் முரான் பகுதியில் நேற்று சிறுவனை தாய் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிறுவனை கடத்திக்கொண்டு செல்வது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. தாயின் கண்களில் அவர்கள் மிளகாய்ப் பொடியை வீசியதால் அவர் நிலை தடுமாறி சுதாரிப்பதற்குள் அவர்கள் சிறுவனை கடத்திச் சென்றனர்.

    அவர் தனது கணவரிடம் விரைந்து சென்று நடந்த முழு சம்பவத்தையும் கூறினார்.  தொடர்ந்து இருவரும் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    காட்சிகளின் அடிப்படையில் கடத்தல்காரர்களைத் தேடும் பணியை போலீசார் தொடங்கினர். இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதற்கிடையில் நேற்று மாலை கடத்தப்பட்ட 7 மணி நேரம் கழித்து சிறுவன் மீட்கப்பட்டதாக அம்மாநில  முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்தார். சிறுவன் பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

    கடத்தல்காரர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றத்திற்காக அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் மோகன் யாதவ் கூறினார். 

    • இந்த விஷயத்தைப் பற்றி பேச பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார்
    • சிசிடிவி காட்சிகளில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் காணலாம் .

    பயிற்சி மையத்தில் தனது மகளுடன் பேசியதற்காக மாணவன் ஒருவரைப் பெண்ணின் தந்தை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தில் உள்ள பாவ்நகர் பகுதியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது.

    கடந்த பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமை, பயிற்சி மையத்தில் ஒரு மாணவர் ஆபீஸ் ரூமுக்குள் ஆசிரியர் முன்னிலையில் கத்தியால் குத்தப்பட்டார். இந்த தாக்குதல் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.  

    காயமடைந்த மாணவர் கார்த்திக் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் அந்த மையத்தில் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்து வருகிறார். அதே மையத்தில் படித்து வரும் ஒரு பெண் மாணவியுடன் தொலைப்பேசியில் கார்த்திக் பேசி வந்துள்ளார்.

    பெண்ணின் தந்தை ஜெகதீஷ் ராச்சாட் இதைப் பற்றி அறிந்ததும், இந்த விஷயத்தைப் பற்றி பேச பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார். உரையாடலின் போது, ராச்சாத் திடீரென ஒரு கத்தியை எடுத்து கார்த்திக்கை பலமுறை சரமாரியாகக் குத்தினார்.

    சம்பவ இடத்திலிருந்த ஒரு ஆசிரியர் தலையிட்டு அவரை தடுத்தார். சிசிடிவி காட்சிகளில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் காணலாம். பலத்த காயங்களுடன் கார்த்திக்கை மீட்டு பயிற்சி மைய அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பெண்ணின் தந்தை ஜெகதீஷ் ராச்சாட்டை கைது செய்தனர்.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடலை எடுத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.
    • காவல் துறையினர் சச்சின் என்ற நபரை நேற்று கைது செய்தனர்.

    அரியானா மாநிலம் ரோதக்கில் கொல்லப்பட்ட காங்கிரஸ் தொழிலாளி ஹிமானி நர்வாலின் வீட்டிற்கு வெளியே பதிவான ஒரு அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் குற்றம்சாட்டப்பட்ட சச்சின் ஒரு கருப்பு சூட்கேஸில் பெண்ணின் உடலை எடுத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.

    கடந்த சனிக்கிழமை ரோதக்கில் உள்ள ஒரு பேருந்து நிலையம் அருகே சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில், பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் காவல் துறையினர் சச்சின் என்ற நபரை நேற்று கைது செய்தனர்.

    அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சச்சின் நர்வாலை மொபைல் போன் சார்ஜிங் கேபிளால் அவரைக் கொன்று, உடலை சூட்கேஸில் அடைத்து வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.

    சிசிடிவி வீடியோவில், குற்றம் சாட்டப்பட்டவர் அமைதியாக சூட்கேஸுடன் பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு தெரு வழியாக நடந்து செல்வதை காாண முடிகிறது. சிசிடிவி காட்சிகளை போலீசார் சரிபார்த்துள்ளனர்.

    சச்சினை அந்த பெண்ணின் நண்பர் என்று போலீசார் விவரித்துள்ளனர். பணம் தொடர்பாக ஏற்பட்ட சண்டைக்கு பிறகு காங்கிரஸ் பிரமுகரான நர்வாலின் கழுத்தை சச்சின் நெரித்துள்ளார்.

    அரியானாவின் ஜஜ்ஜார் பகுதியை சேர்ந்த சச்சின், பணம் தொடர்பான தகராறு காரணமாக காங்கிரஸ் பிரமுகரை கொன்றதாக அரியானா காவல் துறையினர் கூறினர். அவர் பாதிக்கப்பட்டவரின் நண்பர் என்றும், ரோதக்கில் உள்ள அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்வார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    "உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது, சிறப்பு விசாரணைக் குழுக்களை அமைத்தோம். பாதிக்கப்பட்டவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது அவரை அடையாளம் காண்பதே எங்கள் முன்னுரிமையாக இருந்தது. குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டதும், குற்றம் சாட்டப்பட்டவரை கண்டுபிடிக்க போலீசார் விரைவான விசாரணைகளை மேற்கொண்டனர்."

    "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, குற்றம் சாட்டப்பட்டவர் சமூக ஊடகங்கள் மூலம் அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். மேலும் அவரது வீட்டிற்கும் சென்று வந்தார்," என்று கூடுதல் டிஜிபி கே.கே. ராவ் கூறியதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி 27-ம் தேதி இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்கு பிறகு இந்த கொலை நடந்ததாக ராவ் கூறினார்.

    "இருவருக்கும் இடையே பணப் பிரச்சினை இருந்தது. ஆனால் அது என்ன, இதையெல்லாம் முதலில் சரிபார்க்க வேண்டும். இதுதான் கொலைக்கான காரணம் என்று நாங்கள் கூற முடியாது," என்று அவர் மேலும் கூறினார்.



    ×