search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிசிடிவி வீடியோ"

    • சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
    • சிறுத்தை நடமாட்டம் சி.சி.டி.வி.-யில் பதிவாகி உள்ளது.

    குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பான வீடியோக்கள் சமீப காலங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. சி.சி.டி.வி.-யில் சிறுத்தை, காட்டு யானை என வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகும் சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ள கோயம்புத்தூர் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்படும். அந்த வகையில், கோம்யபுத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

    இது தொடர்பான வீடியோவில் வீட்டு தடுப்பு சுவற்றின் மீது கோழி நின்று கொண்டிருக்கும் காட்சிகளும், அந்த வழியாக வந்த சிறுத்தை ஒன்று கோழியை பிடித்து செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக கதவைப் பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.

    மகாராஷ்டிராவில் உள்ள மாலேகான் நகரில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக மண்டபத்திற்குள் வைத்து பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.

    அந்த சிசிடிவி வீடியோவில், 'திருமண மண்டபத்தின் கதவு பக்கத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் மொபைல் போனில் கேம் விளையாடி கொண்டிருக்கிறான். அப்போது கதவின் உள்ளே சிறுத்தை ஒன்று மெதுவாக வருகிறது. அதனை பார்த்த சிறுவன் எந்த பதட்டமும் இல்லாமல் வெளியே சென்று மண்டபத்தின் கதவை பூட்டி விடுவது' பதிவாகியுள்ளது.

    பின்னர், அச்சிறுவன் ஊர் மக்களிடம் இதை பற்றி தகவல் சொல்ல, அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.

    இன்று காலை 7 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுவனின் தந்தை அந்த மண்டபத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • போலீசார் கூடுதல் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    • ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் காரை இயக்கி வந்த ஓட்டுனர் பெண் மீது மோதி காரின் பெனட்டில் வெகு தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பான அதிர்ச்சியான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், பெண் ஒருவர் காரின் பெனட்டில் தொங்கியபடி 500 மீட்டருக்கு இழுத்துச் செல்வது காணமுடிகிறது.

    மேலும், அந்தப் பெண்ணைக் காப்பாற்ற பலர் காரின் பின்னால் ஓடுவதைக் காண முடிந்தது. ஆனாலும் ஓட்டுனர் காரை நிறுத்தவில்லை.

    இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட காரின் உரிமம் தகடு உள்ளிட்ட தகவல்களை கூடுதல் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதையடுத்து, சம்பந்தப்பட்ட அடையாளம் தெரியாத கார் ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


    ×