என் மலர்
நீங்கள் தேடியது "முக்கிய குற்றவாளி கைது"
- முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தமைறைவாகி விட்டனர்.
- கள்ளநோட்டு அச்சடிப்பு வழக்கில் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரின் பிடியில் சிக்கினார்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த அதர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (39). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்து வந்தார்.
இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த சங்கருக்கும் முன் விரோத வழக்கு ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்த செல்வம் வீட்டிற்கு ராமநத்தம் போலீசார் சென்றனர். அங்கு செல்வம் இல்லாததால் வயலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.
போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பி ஓடியது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர்.
அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் எந்திரம், துப்பாக்கி, போலீஸ் சீருடை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து செல்வத்தின் வயலில் உள்ள வீட்டிற்கு வந்த ஒருவரையும், அதர்நத்தம் வீட்டிற்கு வந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் திட்டக்குடி ஆலந்தூர் நவீன் ராஜா (29), அதர்நத்தம் கார்த்திகேயன் (28) என்பதும் இவர்கள் இருவரும் 2 ஆண்டுகளாக செல்வத்திடம் கார் டிரைவராக வேலை செய்ததும் தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 85 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 4 வாக்கி டாக்கி, 2 ஏர் கன், லேப்டாப், போலீஸ் சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரை, கார், லாரிகள், ஜே.சி.பி.எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் நவீன் ராஜா, கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தமைறைவாகி விட்டனர். கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் செல்வம் தொடர்பில் இருந்ததால் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சிறுப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் ஆவட்டி கூட்டு ரோட்டில் சந்தேகத்துக்கிடமாக பதுங்கி இருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் அரவிந்த் (30), அஜித் (24) மா.புடையூர் வடிவேல் (28), கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்கலம் சக்திவேல் (26) என்பது தெரிய வந்தது.
இவர்கள் செல்வத்தின் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கு டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தோட்டத்து வயலில் உள்ள வீட்டின் விஸ்தாரமான அறையின் ஒரு பகுதியை தடுத்து மற்றொரு அறையை உருவாக்கி அதில் கள்ள நோட்டு அச்சடித்தது தெரிய வந்துள்ளது.
மாதத்திற்கு 2 நாட்கள் இரவில் மட்டும் அச்சடித்து விட்டு மற்ற நாட்களில் அறையை பூட்டி வைத்துள்ளனர். வெளி மாநில, மாவட்டங்களை சேர்ந்தவர்களை பயன்படுத்தி கள்ள நோட்டு அச்சடித்தது தெரிய வருகிறது.
இந்த நிலையில் கள்ளநோட்டு அச்சடிப்பு வழக்கில் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரின் பிடியில் சிக்கினார்.
இந்த வாலிபர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் பல ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தது தெரிய வந்தது. சென்னை சென்ற தனிப்படை போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அவர் ராமநத்தம் பகுதியில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டை கையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட வட மாநில வாலிபரை தனிப்படை போலீசார் ராமநத்தம் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் பிரமுகர் செல்வம் உள்ளிட்ட சிலர் தலைமறைவாகி இருந்தனர்.
அவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளி செல்வம் கர்நாடகாவில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் அங்கு விரைந்து சென்று செல்வத்தை கைது செய்தனர். அவருடன் மேலும் 5 பேரும் சிக்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரையும் தனிப்படையினர் ராமநத்தம் அழைத்து வந்து கொண்டுள்ளனர்.
கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் சுமார் ஒரு மாதத்திற்கு பின் முக்கிய குற்றவாளி சிக்கி இருப்பது ராமநத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வன்முறை தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.
- 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 4 பேர் பிடிபட்டுள்ளனர்.
வக்பு சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஒரு கும்பல் அங்குள்ள வாகனங்களை தீ வைத்து கொளுத்தியது. போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியது. வன்முறைச் சம்பவங்களின்போது தந்தை, மகன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.
வன்முறை கும்பல் வீட்டை கொள்ளையடித்த பின்னர் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியது. வன்முறை தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.
இந்த நிலையில் முர்ஷிதாபாத்தில் தந்தை- மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 4 பேர் பிடிபட்டுள்ளனர் எஜ்நஐ குறிப்பிடத்தக்கது.
- முக்கிய குற்றவாளியான பாலாஜி கைது செய்யப்பட்டு பவானி சிறையில் அடைக்கப்பட்டார்.
- திருமூர்த்தி தலைமறைவாக இருந்து வந்தார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு இளைஞர்கள் சிலர் போதை மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அந்தியூர் பவானி சாலையில் உள்ள சாந்திய பாளையம் பிரிவு மயான பகுதியில் போலீசார் ஆய்வு செய்து சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அந்த பகுதியில் நின்று கொண்ட இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
போலீசார் அவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 5 பேர் சிக்கனர். அவர்கள் 5 போலீசார் கைது செய்து பவானி சிறை யில் அடைத்த னர்.
இதில் முக்கிய குற்ற வாளியான ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த பாலாஜி சந்தியபாளையம் மண க்காடு பகுதியை சேர்ந்த திருமூர்த்தி ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு முக்கிய குற்றவாளியான ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த பாலாஜி கைது செய்யப்பட்டு பவானி சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்றொரு குற்றவாளியான சந்திய பாளையம் மணக்காடு பகுதியை சேர்ந்த திருமூர்த்தி தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் அந்தியூர் போலீசாருக்கு திருமூர்த்தி அந்தியூர் பகுதியில் சுற்றி திரிவதாக தகவல் கிடைத்தது. இதனை அடித்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் திரு மூர்த்தியை இன்று காலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அந்தியூர் போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அவரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.