என் மலர்
நீங்கள் தேடியது "சொத்துத் தகராறு"
- இனி நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் தனது தந்தையிடம் பொய் கூறினர்
- சில நாட்களுக்குப் பிறகு போலீசார் அவரைக் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் வசிக்கும் குர்மீத் சிங்கிற்கு 103 வயது. 2018 ஆம் ஆண்டில் அவர் தனது ஐந்து ஏக்கர் நிலத்தை குருத்வாராவிற்கு நன்கொடையாக வழங்க முடிவெடுத்தார்.
இது அவரது மகன்களான கமல்ஜீத் மற்றும் ஹர்பிரீத் சிங்கிற்குப் பிடிக்கவில்லை. தந்தை குருத்வாராவிற்கு நிலத்தை நான் கொடுப்பதைத் தடுக்க விரும்பினர்.
இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் முதியவரின் மகன்கள் ஒரு தந்திரமான திட்டத்தை வகுத்தனர்.
நிலம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாகவும், இனி நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் தனது தந்தையிடம் பொய் கூறினர். முதியவர் தனது மகன்களை நம்பினார். நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை.
ஆனால் மகன்கள் கமலும் ஹர்ப்ரீத்தும் தொடர்ந்து நீதிமன்றத்திற்குச் சென்று வந்தனர். எனவே விசாரணைகளுக்கு ஆஜராகத் தவறியதற்காக குர்மீத்துக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. சில நாட்களுக்குப் பிறகு போலீசார் அவரைக் கைது செய்தனர். அதன்படி முதியவர் கைது செய்யப்பட்டு கடந்த 18 மாதங்களாக சிறையில் இருந்துள்ளார்.

இதற்கிடையே சிறைக்குச் சென்ற உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் குர்மீத்தைப் பற்றி அறிந்து கொண்டனர். அவருடைய கதையைக் கேட்டு அவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
குர்மீத்தை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. இந்த முயற்சிகளை குர்மீத்தின் மகன்கள் முறியடிக்க முயன்றனர். ஜாமீன் கிடைக்காமல் இருக்க அவர்கள் நிறைய முயற்சி செய்தனர்.
இருப்பினும், அந்த தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் பின்வாங்கவில்லை. பல மாத முயற்சிக்குப் பிறகு, குர்மீத்துக்கு ஜாமீன் கிடைத்தது.
அவர் சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். இதன்மூலம் அவரது கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனது மகன்கள் செய்த காரியத்தால் அவர் மிகவும் மனமுடைந்து போயுள்ளார். எந்தத் தந்தைக்கும் தன்னைப் போன்ற ஒரு நிலைமை வரக்கூடாது என்று அவர் கண்ணீர் மல்க கூறுகிறார்.
- ஆஸ்பத்திரியில் தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தாக்குதல் நடத்தி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆக்க னூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு ராஜா என்ற ராஜேந்திரன், கிருஷ்ணன், அசோக்ராஜ், தர்மராஜ் என்ற 4 மகன்கள் உள்ளனர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்ற னர். இவர்களில் ராஜேந்திர னுக்கும், கிருஷ்ணணுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அசோக்ராஜூக்கும், தர்ம ராஜூக்கும் திருமணம் ஆக வில்லை. ராஜேந்திரனை தவிர மற்று 3 பேரும் பரம சிவத்திடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளனர். அப்போது மூத்த மகன் ராஜேந்திரன் பின்னர் பார்ப்போம் என்று கூறி வந்தார். இந்நிலையில் தற்போது கடைசி மகனான தர்மராஜ் மீண்டும் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். பின்னர் தர்மராஜ் தனது அண்ணன் அசோக்ராசுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் திட்டக்குடி இடைச்செருவாய் அய்யனார் கோவில் அருகே மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ராஜேந்திரன், அவரது மகன் சக்திவேல் மற்றும் சிலர் சேர்ந்து தர்மராஜ், அசோக்ராஜ் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து அவர்கள் வைத்தி ருந்த கம்பியால் 2 பேரை யும் பலமாக தாக்கினர். இதில் வலிதாங்க முடியா மல் அசோக்ராஜ் அங்கிருந்து தப்பித்து அய்யனார் கோவில் அருகில் இருந்த காட்டு பகுதிக்குள் சென்றார். தர்மராஜை அந்த கும்பல் தலை, கை, கால்களில் பலமாக தாக்கியது. இந்த தாக்குதலில் தர்மராஜ் ரத்த வெள்ளத்தில் சாலையில் சுருண்டு விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. அந்த வழியாக கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள், வாகனங்களில் வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து திட்டக்குடி போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரிவித்த னர்.
தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தர்மராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து தாக்குதல் நடத்திய ராஜேந்திரன் உள்ளிட்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். சொத்திற்காக தம்பியை அண்ணனே கும்பலுடன் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டில் இரவு உணவுக்குப் பிறகு காவலுக்காக தனது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார்.
- வெள்ளிக்கிழமை காலை, வயலில் உள்ள 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் அவரது உடல் கிடந்தது
உத்தரப் பிரதேசத்தில் சொத்துத் தகராறில் காதலியுடன் சேர்ந்து தந்தையை எரித்துக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நிகோஹான் பகுதியில் உள்ள ராமாபூர் கிராமத்தை சேர்ந்த ராமு ராவத் (44) என்ற விவசாயி, கடந்த வியாழக்கிழமை வீட்டில் இரவு உணவுக்குப் பிறகு காவலுக்காக தனது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை, வயலில் உள்ள 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் அவரது உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
ராமுவின் மகள் ஜூலி அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரணை நடத்திவந்த நிலையில் ராமுவின் மகன் தர்மேஷ் [26 வயது] விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
குடும்பத்தின் 2.5 பிகா விளைநிலத்தில் தனது பங்கை தர மறுத்ததால் தர்மேஷ் தனது 24 வயது காதலி சங்கீதாவுடன் சேர்ந்து தனது தந்தையை வயலில் வைத்து எரித்துக்கொன்றார். இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.