search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபரணங்கள்"

    • பூரி பட்டத்து அரசர் கஜபதி மகாராஜாவின் பிரதிநிதி உள்ளிட்ட 11 பேர் உடனிருந்தனர்.
    • பொக்கிஷ அறையில் உள்ள நகைகள் குறித்த பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் ஆலயத்தின் ஆபரணங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பொக்கிஷ அறை 40 ஆண்டுகளுக்குப் பின் இன்று திறக்கப்பட்டது.

    12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிற அறையில் (ரத்ன பந்தர்) பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரிய ஆபரணங்கள், மன்னர்கள் நன்கொடையாக அளித்த அரிய நகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த அறை கடைசியாக 1978-ம் ஆண்டு திறக்கப்பட்டு நகைகள் கணக்கெடுக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதன்பின்னர் 1985-ல் பொக்கிஷ அறையை திறந்தனர். ஆனால் அறையின் நிலை மிகவும் மோசமாக இருந்ததாலும், பாம்புகள் போன்ற ஆபத்தான பூச்சிகள் சூழ்ந்திருந்ததாலும் பெட்டிகளைதிறந்து நகைகளை கணக்கெடுக்க முடியாமல் போனது.

    இந்நிலையில், பொக்கிஷ அறையின் நகைகளை கணக்கிடுவதற்காக ஒடிசா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பிஸ்வநாத் ராத் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பொக்கிஷ அறையை திறக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி குழுவின் உறுப்பினர்கள் இன்று மதியம் கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் ஊழியர்களின் உதவியுடன் பொக்கிஷ அறையை திறந்தனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    பொக்கிஷ அறை திறக்கப்பட்டபோது முன்னாள் நீதிபதி பிஸ்வநாத் ராத், ஜெகநாதர் கோவில் தலைமை நிர்வாகி அரபிந்த பதி, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் டி.பி. கடநாயக் மற்றும் பூரி பட்டத்து அரசர் கஜபதி மகாராஜாவின் பிரதிநிதி உள்ளிட்ட 11 பேர் உடனிருந்தனர்.

    பொக்கிஷ அறையில் உள்ள இரண்டு பகுதிகளில் உள்ள பெட்டிகளில் உள்ள நகைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, பொக்கிஷ அறையில் உள்ள நகைகள் குறித்த பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ஆனால் பொக்கிஷ அறையின் நிலை மோசமாக இருப்பதால், முதலில் புனரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்றும், அதன்பின்னர் பெட்டிகளை திறந்து கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்றும் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் டி.பி.கடநாயக் கூறி உள்ளார். பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் இதர மதிப்புமிக்க பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பு நிறைந்த வேறு ஒரு அறைக்கு (ஸ்ட்ராங் ரூம்) மாற்றப்படும். அங்கு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

    • 1500 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது.
    • அபயாம்பிகைக்கு தங்கமூலம் பூசபட்ட முழுகவச ஆபரணங்கள் அணிவிக்கபட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை காவேரி ஆற்றின் தெற்கு நோக்கி 1500 வருடங்கள் பழமையான புகழ் பெற்ற ஸ்ரீ மாயூரநாதர் பெரிய கோவில் அமைந்துள்ளது.

    இந்நிலையில் மகாதானத்தெருவில் வசித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் செந்தில்நாதன்- முல்லை தம்பதியினர் பல ஆயிரம் ரூபாய் செலவில் அபயாம்பிகை அம்மனுக்கு தங்கமூலம் பூசபட்ட முழு கவச ஆபரணங்களை திருவாவடுதுறை ஆதீனம் 24- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவானதேசிக பரமாச்சாரியர் சுவாமிகளிடம் ஆசிபெற்று வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து ஸ்ரீஅபயாம்பிகை அம்பாளுக்கு தங்கமூலம் பூசபட்ட முழு கவச ஆபரணங்கள் அணிவிக்கபட்டது. நிகழ்ச்சியின் போது கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் உடன் இருந்தனர்.

    • பெண்கள் அணியும் ஆபரபணங்களில் வளையல்களுக்கு முக்கியபங்கு உண்டு.
    • வளையல்கள் கைகளில் இறுக்கமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இந்திய கலாசாரத்தில், பெண்கள் அணியும் ஆபரபணங்களில் வளையல்களுக்கு முக்கியபங்கு உண்டு. கண்ணாடி, செம்பு, வெள்ளி, தங்கம். வைரம் என்று பல்வேறு உலோகங்களால் தயாரிக்கப்ட்ட வளையல்கள் பண்டைய காலம் முதல் பழக்கத்தில் இருந்து வருகின்றன.

    பாதுகாப்பு மற்றும் பராமரிப்பதில் இருக்கும் சிரமம் காரணமாக, கண்ணாடி வளையல்களின் உபயோகம் குறைந்து வருகிறது. நவீன காலத்திற்கு ஏற்றவாறு ஸ்டெர்லிங் சில்வர், ரோஸ் கோல்ட் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் வளையல்களை தற்போது பலரும் அணிகிறார்கள். இத்தகைய உலோகங்களால் ஆன வளையல்களை பொலிவு மங்காமல் பராமரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

    அனைத்து உலோக வளையல்களையும் மொத்தமாக ஒரே பெட்டியில் பாதுகாத்து வைப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு தனிப்பட்ட பண்பு உண்டு. அவை ஒன்றோடொன்று சேரும்போது ரசாயன மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் வளையல்களின் பொலிவு குறையும்.

    எனவே எப்போதும் வளையல்களை அவற்றின் வகைக்கேற்ப பிரித்து பாதுகாத்து வைப்பது நல்லது. உலோகங்களால் ஆன ஆபரணங்கள் காற்றில் இருக்கும் ஆக்சிஜனுடன் சேர்ந்து ரசாயன மாற்றத்துக்கு (ஆக்சிடைஸ்டு) உள்ளாகும்.

    இவ்வாறு எளிதாக ரசாயன மாற்றத்திற்கு உள்ளாகும் நகைகள் மலிவான விலைக்கு கிடைக்கும். அவற்றை தவிர்த்து தரமான உலோகங்களால் தயாரிக்கப்பட்ட வளையல்களை வாங்குவது நல்லது.

    பல்வேறு உலோகத்தால் ஆன வளையல்களை அவற்றுக்காக கொடுக்கப்பட்ட பிரத்தியேக பெட்டிகளில் வைப்பது நல்லது. காற்று புகாதவாறு இறுக்கமான பெட்டி அல்லது அறையில் அவற்றை பத்திரப்படுத்தி வைத்தால் ஆக்சிடைஸ்டு ஆவதை தவிர்க்கலாம்.

    செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்ட வளையல்களை அவ்வப்போது பருத்தி துணியைக் கொண்டு துடைத்து பாலிஷ் செய்யலாம். செம்பு வளையல்களை எப்போதும் கைகளில் அணிந்து இருந்தால் சருமத்துடன் ஏற்படும் உராய்வு காரணமாக பொலிவு குறையாமல் இருக்கும். வியர்வைபடும்போது செம்பு நிறம் மாறும் தன்மை கொண்டது. எனவே செம்பு வளையல்கள் கைகளில் இறுக்கமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    ஸ்டெர்லிங் சில்வர் வளையல்கள் நேரடியாக சூரிய வெளிச்சத்தில் படும்போது அவற்றின் பொலிவு குறையும். எனவே, இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு இவ்வகை வளையல்களை அணிந்து செல்லலாம்.

    குளிப்பது, பாத்திரம் துலக்குவது. வீட்டை சுத்தம் செய்வது ஆகிய வேலைகளை செய்யும்போது வளையல்களை கழற்றி வைக்க வேண்டும். தண்ணீர் அடிக்கடி படும்போது வளையல்கள் அதன் பொலிவை இழக்கக்கூடும்.

    வளையல்களை பாதுகாத்து வைக்கும் இடத்தில் ஈரப்பதம் அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்ட சாக்பீஸ், சிலிகா ஜெல் ஆகியவற்றை வளையல் பெட்டிகளில் வைக்கலாம். வளையலில் கிளியர் நெயில் பாலிஷ் கோட்டிங் போட்டும் வைக்கலாம்.

    ×