search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எக்ஸ் தளம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரிஷா எக்ஸ் தளப்பதிவில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டார்.
    • விஜய் கட்சியில் த்ரிஷா இணைய இருப்பதாக பாடகி சுசித்ரா கூறியிருந்தார்.

    தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜயின் 50-வது பிறந்தநாள் கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி அன்று நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடினர்.

    அப்போது, நடிகை திரிஷா எக்ஸ் தளப்பதிவில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டார்.

    அதில், " அமைதியில் இருந்து புயலாகவும், புயலுக்கு பின் அமைதியாகவும்.. இதைத் தொடர்ந்து பல மைல்கற்களை அடைய வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், திரிஷா விஜய்யுடன் ஃலிப்ட் ஒன்றில் பயணிக்கும் போது எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை போஸ்ட் செய்திருந்தார். இந்த பதிவு திடீரென சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதைதொடர்ந்து, ஜெயலலிதாவோடு த்ரிஷாவை ஒப்பிட்டு சுசித்ரா பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், விஜய் கட்சியில் த்ரிஷா இணைய இருப்பதாக பாடகி சுசித்ரா கூறியிருந்தார்.

    இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "நீங்கள் ஏதேனும் ஒன்றை தவிர்க்க நினைத்தால் உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாதீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

    சுசித்ராவின் பேச்சு சர்ச்சையான நிலையில், த்ரிஷாவின் இந்த பதிவு சுசித்ராவுக்கான பதிலடியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.

    அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் என இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு அடுதடுத்து சுவாரஸ்யமான விஷயங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     

    மேலும், இன்று அதிகாலை அவர் நடத்தி வரும் பிளாகில் எழுதி பதிவிட்ட அவர், இந்தியா தென் ஆப்பிரிக்கா மோதிய உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதற்கு அவர் தெரிவித்துள்ள காரணம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, அவரது பதிவில், 'ஒருவழியாக உற்சாகமும், அச்சமும் நிறைந்த இந்த போட்டி நிறைவடைத்துவிட்டது. இந்த போட்டியை நான் டிவியில் பார்க்கவில்லை. நான் பார்த்தால் இந்தியா தோற்றுவிடும் என்பதாலேயே பார்க்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

     

    இதோபோல எக்ஸ் தளத்தில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தான் போட்டியை பார்த்தால் இந்தியா தோற்றுவித்திடும் என்பதால் நான் போட்டியை பார்க்காமல் தியாகம் செய்தேன் நான் என்ன செய்யட்டும் சுந்தர் என கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, போட்டியை பார்க்காததற்கு மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தி வருகிறது.
    • நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது,

    இன்று MSMEDay!

    நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS), பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்கப் புத்தொழில் நிதி (TN SC/ST Fund), சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள், தமிழ்நாடு தென்னை நார்க் கொள்கை 2024, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை – 2023

    உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தி வருகிறது.

    புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் MSME-க்கள் இன்னும் பெரும்பங்காற்றத் தேவையான ஊக்குவிப்பையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம்! என்று கூறியுள்ளார்.

    • ஆபாச சித்தரிப்புகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பதிவிடவும் பகிரவும் அனுமதி வழங்கும் முடிவை எக்ஸ் நிறுவனம் அறிவித்தது.
    • மொத்தம் 230,892 இந்திய கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

    முதன்மை சமூக வலைதளமான டிவிட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.

     

    சமீபத்தில் ஆபாச சித்தரிப்புகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பதிவிடவும் பகிரவும் அனுமதி வழங்கும் முடிவை எக்ஸ் நிறுவனம் அறிவித்தது. சட்டவிரோதமான வகையில் உள்ள ஆபாச பதிவுகள் நீக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை ஊக்குவித்தல், சுயநினைவில் இல்லாத நிலையில் இருக்கும்போது ஒருவரை ஆபாசமாக சித்தரித்து  Non - consensual nudity புகைப்படத்தையோ வீடியோவையோ பதிவிடுதல் ஆகியவற்றில் ஈடுபட்ட 2,29,925 இந்திய கணக்குகளை எக்ஸ் தளம் அதிரடியாக தடை செய்துள்ளது.  

    மேலும் 967 கணக்குகள் நாட்டில் தீவிரவாதத்த்தை ஊக்குவித்த காரணத்தால் நீக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 230,892 இந்திய கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 17,580 புகார்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை திறமையாக நடத்தி முடித்தார்.
    • தமிழ்நாடு முதன்முறையாக ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் 'கேலோ' இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 19-ந் தேதி தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது. நேற்றுடன் போட்டிகள் நிறைவடைந்தன.

    இதில் தமிழக வீரர்கள் எண்ணற்ற பதக்கங்களை பெற்றனர். இந்த விளையாட்டு போட்டியை திறமையாக நடத்தி முடித்த இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது 'எக்ஸ்' வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் மூலம் சமீபத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் விளையாட்டு தலைநகராகவும், உலகளவில் விளையாட்டு மையமாகவும் தமிழ்நாடு தனது நிலையை உறுதிப்படுத்தி உள்ளது.

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் ரன்னர் ஆனது.

    எங்களது சாம்பியன்களின் ஒரு அற்புதமான செயல்திறன் கேலோ இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளது. தமிழ்நாடு முதன்முறையாக ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

    இதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலினுக்கும், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை குறைவின்றி நடத்தியதற்காக அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    வருங்கால நட்சத்திரங்களான நமது திறமையான விளையாட்டு வீரர்களுக்கு இந்த சாதனை வழி வகுக்கும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • எக்ஸ் தளம் முடங்கியதால் பயனாளர்கள் அவதியடைந்தனர்.
    • சிக்கல் வெளிவந்த சில நிமிடங்களில் #XDown டிரெண்டானது.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமா எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார்.

    எக்ஸ் தளத்தை உலக தலைவர்கள் முதல் ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் இன்று காலை முதல் எக்ஸ் சமூக வலைத்தளம் செயலிழந்தது. இதனால் பயனாளர்கள் அவதியடைந்து வந்தனர்.

    எக்ஸ் தளத்தின் உள்ளே பயனாளர்களுக்கு பக்கங்கள் காண்பித்தாலும், அதில் யாருடைய பதிவுகளும் காட்டப்படவில்லை. பின்தொடர்தல் (Follow), உங்களுக்காக (For you) உள்பட அனைத்து தாவல்களும் தகவல்கள் இல்லாமல் காலியாக இருந்தன. பயனர்கள் தங்களின் பதிவுகளை உருவாக்கலாம் பதிவிடலாம். ஆனால், அந்த பதிவுகள் யாரும் பார்க்க முடியாத நிலையில் இருந்தது. சிக்கல் வெளிவந்த சில நிமிடங்களில் #XDown டிரெண்டானது.

    இந்நிலையில், எக்ஸ் தளம் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார்.
    • கடந்த ஆகஸ்ட் மாதம் ஐரோப்பிய ஒன்றியம், டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார். இந்த நிலையில் எக்ஸ் வலைதள சேவையை ஐரோப்பாவில் நிறுத்த எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் ஐரோப்பிய ஒன்றியம், டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. இதில் தீங்கிழைக்கும் உள்ளடக்கம் பரவுவதை தடுப்பது, சில பயனர் நடைமுறைகளை தடை செய்வது அல்லது கட்டுப்படுத்துவது, சில தரவுகளை பகிர்வது போன்ற விதிகள் உள்ளது.

    இந்த புதிய இணையதள ஒழுங்குமுறை சட்டம் காரணமாக ஐரோப்பிய பிராந்தியத்தில் எக்ஸ் செயலியின் இருப்பை அகற்றுவது அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பயனர்களை தடுப்பது குறித்து எலான் மஸ்க் ஆலோசனை நடத்தி உள்ளார்.

    • எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார்.
    • ஸ்ரீரங்கம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு இந்து அமைப்புகள் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அந்த பெரியார் சிலையை இடித்து தள்ள வேண்டும் என ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார். இதனால் மீண்டும் பிரச்சனை எழுந்தது.

    அதைத்தொடர்ந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, துணை போலீஸ் கமிஷனர் அன்பு உள்ளிட்டோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிலைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சர்ச்சைக்குரிய பதிவினை ராமநாதபுரம் திருவாடனை பகுதியைச் சேர்ந்த பரணி என்பவர் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஸ்ரீரங்கம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில் பெரியார் சிலையை தகர்க்கப் போவதாக மீண்டும் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் திருச்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×