என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை குற்றம்"

    • தனது பெயரை அவர்களது உடலில் பச்சை குத்தி விடுவது இவன் வழக்கம்
    • பல வித சித்திரவதைகளை கையாண்டு தனது கூட்டத்திலிருந்து தப்பிப்பதை தடுப்பான்

    அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் வசித்தவன் "சுகர் பேர்" (sugar bear) என அழைக்கப்பட்டு வந்த சோமோரி மோசஸ் (47).

    2003 தொடக்கத்திலிருந்தே இவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகளை காட்டி மயக்கி, பிறகு அவர்களை பல விதங்களில் அச்சுறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தான். தன்னை விட்டு அவர்கள் வெளியேறுவதை தடுக்க பல வழிமுறைகளை கையாண்டு வந்தான. அவர்களது உடலில் அவனது பெயரை பச்சை குத்தி விடுவான்.

    ஒரு பெண் இவரை விட்டு தப்ப முயன்ற போது அவளை அடித்து காயங்களின் மேல் எலுமிச்சை சாற்றை ஊற்றினான். வேறொரு பெண்ணை மின் ஒயரால் அடித்து காயங்களில் உப்பை தடவினான். மற்றொரு பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி இத்தொழிலில் ஈடுபட வைத்தான்.

    இந்நிலையில், 2017ல் லியாண்ட்ரா ஃபாஸ்டர் எனும் 32 வயது பெண்ணை அடித்து கொன்று விட்டான். பிறகு அவள் உடலை கத்தியாலும், அறத்தாலும் துண்டு துண்டுகளாக்கினான். சில பாகங்களை தனது வீட்டில் உள்ள ஃப்ரீசரில் மறைத்து வைத்த அவன், பல பாகங்களை எப்படியோ அழித்து விட்டான்.

    லியாண்ட்ரா காணாமல் போனதாக வந்த புகாரை காவல்துறை விசாரித்து வந்தது. லியாண்ட்ராவை தேடி வந்த காவல்துறையினர் சோமோரியின் வீட்டை சோதனையிட்ட போது, "சோமோரி" என பச்சை குத்தப்பட்ட ஒரு உடல் பாகம் அவன் வீட்டில் சிக்கியது. இதனை தொடர்ந்த நடைபெற்ற தீவிர விசாரணையில் அவன் கைது செய்யப்பட்டான்.

    குற்றத்தை ஒப்பு கொண்ட சோமோரி 15 வருட சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளான்.

    • இந்த கொலை வழக்கு 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது
    • உணர்ச்சி வசத்தால் கொலை நடந்துள்ளது என்றார் நீதிபதி

    கடந்த 2009 ஆகஸ்ட் 16 அன்று அல்மந்தா என்பவருக்கு தன் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் அல்மந்தாவின் மனவி, அவரை தாக்கினார். இதில் ஆத்திரமடைந்த அல்மந்தா, தனது மனைவியை கத்தியால் குத்தினார். இதனையடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், 14 ஆண்டுகளாக நடைபெறும் அந்த வழக்கு இன்று டெல்லியில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நவ்ஜீத் புதிராஜா முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அவர் கூறியதாவது:

    கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. மனைவி கணவனை தாக்கி உள்ளார். இதில் கோபமடைந்த போதுதான் கணவன் கத்தியால் அவரை குத்தியுள்ளார்; அதில் மனைவி உயிரிழந்து விட்டார். எனவே இதில் "முன்கூட்டியே திட்டமிடல்" (premeditation) என்பது பொருந்தாது. சூழ்நிலையை சாதகமாக்கி கொலை முயற்சியில் இறங்குவதையும் கணவன் செய்யவில்லை. கொடுமையாகவோ அல்லது குரூரமாகவோ தாக்குதலில் ஈடுபடவுமில்லை. ஆனால், தனது தாக்குதலால் மனைவி இறக்க நேரிடும் என்பதை அறிந்திருந்தார்.

    குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தியில் ரத்த கறை இருந்திருக்கிறது. அதை அழிக்க கணவன் முயற்சி செய்யவில்லை.

    சண்டையில் உணர்ச்சி பெருக்கெடுத்து இந்த கொலை நடந்துள்ளது. கொலை செய்யும் எண்ணம் முன்னரே இருந்ததாக சாட்சியங்கள் இல்லை.

    கணவன் மீதும் காயங்கள் இருந்துள்ளது. தன் மீது ஏற்பட்ட தாக்குதலால் "திடீர்" என ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவியை பதிலுக்கு தாக்கி உள்ளார். எனவே இந்திய தண்டனை சட்டத்தின் 302 பிரிவு இங்கு பொருந்தாது. அதற்கு பதில் 304 பாகம் 1 பிரிவில்தான் அவர் குற்றவாளி ஆகிறார்.

    இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

    இந்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

    • அப்துல் ரஹீமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
    • அப்துல் ரஹீமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் நிதியுதவி வழங்கினார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோடம்புழா பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006-ம் ஆண்டு சவுதி அரேபியா நாட்டுக்கு வேலைக்கு சென்றார். ரியாத்தில் ஹவுஸ் டிரைவர் விசாவில் சென்று வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு 26 வயது.

    அங்கு ஒரு தம்பதியின் நடக்கமுடியாத நிலையில் இருந்த 15 வயது மாற்றுத்திறனாளி மகனை பராமரித்து வந்தார். இந்நிலையில் காரில் சென்றபோது அந்த சிறுவனை அப்துல் ரஹீம் கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதனடிப்படையில் அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டார்.

    சிறுவனின் கொலை தவறுதலாக நடந்தது என்று அப்துல் ரஹீம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அவர் சவுதி அரேபியா சிறையில் அப்துல் ரஹீம் அடைக்கப் பட்டார். கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பொது மன்னிப்பு வழங்க மறுத்ததால் அப்துல் ரஹீமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

    அவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தற்போது வரை 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். அப்துல் ரஹீமை மீட்க அவரது பெற்றோர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். சிறுவனின் பெற்றோர் மன்னித்தால் அப்துல் ரஹீமை விடுவிக்கலாம் என்று கோர்ட்டு தெரிவித்தது.

    அப்போது மகன் இறப்புக்கு இழப்பீடு செய்யும் வகையில் 'பிளட் மணி' என்ற வகையில் ஒன்றரை கோடி ரியால் (இந்திய மதிப்பில் ரூ34 கோடி) வழங்கினால் மன்னிக்க தயாராக இருப்பதாக சிறுவனின் பெற்றோர் கூறினர். அந்த தொகையை கடந்த ஏப்ரல் 16-ந்தேதிக்குள் ரூ.34 கோடியை வழங்கினால் அப்துல் ரஹீம் உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவானது.

    ஆனால் அவ்வளவு பெரிய தொகையை அப்துல் ரஹீமின் குடும்பத்தினரால் திரட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்துல் ரஹீமை காப்பாற்ற தேவையான நிதியை திரட்ட சமூக சேவகர்கள் களமிறங்கினர். உலகம் முழுவதும் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் நிதியுதவி வழங்கினார்கள்.

    இதன்மூலம் ரூ.34 கோடி வசூல் ஆனது. அந்த தொகை சவுதி அரேபியா கோர்ட்டில் குறிப்பிட்ட நாளுக்குள் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அப்துல் ரஹீம் விடுதலையாகும் சூழல் உருவானது. அவரது குடும்பத்தினர் வழங்கிய ரூ.34 கோடி கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது.

    அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள், அப்துல் ரஹீமை மன்னிக்க தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து அப்துல் ரஹீமுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்படுவதாக ரியாத் குற்றவியல் நீதிமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    மரணதண்டனை ரத்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டதால் சவுதி அரேபியா சிறையில் இருந்து அப்துல் ரஹீம் விடுதலையாகிறார். 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர் நாளை விடுதலை செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2022 ஆம் ஆண்டில் 48,800 பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் குடும்பத்தினரால் கொல்லட்டுள்ளனர்.
    • பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் அவர்களது சொந்த குடும்பத்தினரோ, உறவினரோ அல்லது தெரிந்தவராகவரோ இருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம்.

    இந்நிலையில் கடந்த 2023 ஆண்டில் மட்டுமே உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு 40 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று [நவம்பர் 25] கொண்டாடப்படுவதை ஒட்டி ஐநாவின் பெண்கள் மற்றும் ஐ.நா.வின் போதைப்பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு UNODC இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    உலகளவில், 2023 ஆம் ஆண்டில் சராசரியாக 51,100 பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணத்திற்கு அவர்களுக்கு நெருங்கியவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர் காரணமாக உள்ளார். இது ஒரு நாளைக்கு 140 பெண்கள் வீதம் ஆகும்.  மேலும் 1 நிமிடத்திற்கு ஒருவர்  கொலை என்றும் கணக்கில் உள்ளது.

     

    அதற்கு முன் 2022 ஆம் ஆண்டில் 48,800 பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் இணையர் அல்லது குடும்பத்தினரால் கொல்லட்டுள்ளனர். பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    உலகின் அனைத்து இடங்களிலும் உள்ள பெண்களும் சிறுமிகளும் இந்த தீவிரமான பாலின அடிப்படையிலான வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிக ஆபத்தான இடம் அவர்களது வீடுதான் என்று ஐநா அறிக்கை நிறுவியுள்ளது.

     

    இந்த குடும்ப கொலைகளில் ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் 21,700 பேர் தங்களது இணையர் அல்லது உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது இது கணிசமான எண்ணிக்கை ஆகும். ஆப்பிரிக்காவில் 100,000 பேருக்கு 2.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

    அமெரிக்காவில் 100,000க்கு 1.6 பெண்களும், ஓசியானியாவில் 100,000க்கு 1.5 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில் 100,000 பேருக்கு 0.8 பேர் மற்றும் ஐரோப்பாவில் 100,000 பேர் 0.6 பேர் என்ற விகிதங்களில் பெண்கள், குழந்தைகள் கொலையாகி உள்ளனர்.

    மேலும் 2023 ஆம் ஆண்டில் குடும்பத்துக்குள் நடந்த கொடிய வன்முறை ஆண்களை விடப் பெண்களையே அதிகம் பாதித்துள்ளது. இந்த கொலைகளுக்கு எதிரான =நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை குறைவதற்கு மாறாக அதிகரித்துக் கொண்டு இருப்பதாக ஐநா அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. 

    ×