என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இதய பாதிப்பு"
- நோய்க்கிருமிகள் ஈறுகள் வழியாக நமது இரத்த ஓட்டத்தில் சென்று உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- ஒரு சில பற்களை இழந்தவர்களைக் காட்டிலும், பெரும்பாலான பற்களை இழந்தவர்களுக்கு இருதய நோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகம்.
மனிதனுக்கு பற்கள் மிகவும் இன்றியமையாதது. உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் உதவுகிறது. முக அழகிற்கும், முகப் பொலிவிற்கும், பேசுவதற்கும் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள் வராமலிருக்க வழி செய்யும்.
பற்களை இழப்பது எப்போதும் விரும்பத்தகாதது. பல் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தான இதய நோய்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
மேரிலாந்து பல்கலைக்கழகம், பெல்கிரேட் பல்கலைக்கழகம், ஷார்ஜா பல்கலைக்கழகம், கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம் மற்றும் பலவற்றின் சர்வதேச நிபுணர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வு ஜர்னல் ஆஃப் எண்டோடோன்டிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பற்கள் இழப்பு மற்றும் ஆபத்தான மாரடைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் சில ஆய்வுகள் இந்த இரண்டு விஷயங்களும் இணைக்கப்பட்டுள்ளன என்று கூறுகின்றன, மற்றவை அவை அப்படியில்லை என்று கூறுகின்றன.
இதய நோய்களுடன் பல் இழப்பை இணைப்பது முதலில் ஒரு நீட்சியாகத் தோன்றலாம் ஆனால் நோய்க்கிருமிகள் ஈறுகள் வழியாக நமது இரத்த ஓட்டத்தில் சென்று உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
"எங்கள் கண்டுபிடிப்புகள் பல் இழப்பு என்பது ஒரு பல் பிரச்சனை மட்டுமல்ல, இருதய நோய் இறப்பை கணிசமாக முன்னறிவிப்பதாகவும் தெளிவாகக் காட்டுகிறது," என்கிறார் அமெரிக்காவின் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தின் எண்டோடான்டிஸ்ட் அனிதா அமினோஷாரியா.
ஒரு சில பற்களை இழந்தவர்களைக் காட்டிலும், பெரும்பாலான பற்களை இழந்தவர்களுக்கு இருதய நோய்கள் வருவதற்கான ஆபத்து 66 சதவீதம் அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தங்கள் ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் முன்னர் வெளியிடப்பட்ட 12 ஆய்வுகளின் தரவுகளை சேகரித்தனர்.
கார்டியோ-வாஸ்குலர் நோய்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் காரணிகள் வரும்போது புகைபிடித்தல், அதிக கொழுப்பு, முதுமை மற்றும் பல காரணிகள் நிச்சயமாக உள்ளன. ஆனால் பல் இழப்புடன் தொடர்பு உள்ளது. இந்த ஆய்வு தொடர்பான ஊடக அறிக்கைகள், இணைப்பு தொடர்புள்ளது என்றும் காரணமல்ல என்றும் கூறுகின்றன.
ஆனால் இது நிச்சயமாக உங்கள் வாயை சுத்தமாக வைத்திருக்கவும், உயிருக்கு ஆபத்தான நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு சிறந்த வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
- இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்கிறார்கள்.
- வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள்.
தற்போது பலரும் ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்கிறார்கள். அதை வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள். இருசக்கர வாகனத்தில் பறக்கும் போதும், பஸ், ரெயிலில் பயணிக்கும் போதும் பல பெண்களை இயர்போனும் காதுமாய் காண முடிகிறது. தொடர்ந்து இயர்போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா? இதோ பட்டியல்...
இயர்போன் அல்லது ஹெட்போன் மூலம் உரத்த இசையை கேட்பது, கேட்கும் திறனைப் பாதிக்கும். இயர்போன் மூலம் ஒலியலைகள் தொடர்ந்து செவிப்பறையைத் தாக்குவது நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, இயர்போன்களை மணிக்கணக்கில் அணிந்துகொண்டு இசை கேட்பது காதுகளுக்கும் மட்டுமல்ல, இதயத்துக்கும் நல்லதல்ல. இதனால் இதயம் வேகமாக துடிப்பதுடன், படிப்படியாக பாதிப்புக்கு உள்ளாகும்.
இயர்போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதனால் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சினைகள் உண்டாகின்றன. பலர் தூக்கமின்மை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இயர்போன்கள் நேரடியாக காதில் வைக்கப்படுவதால் காற்றுப்பாதையைத் தடுக்கிறது. இந்த அடைப்பு, பாக்டீரியாவின் வளர்ச்சி உள்பட பல்வேறு வகையான காது நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.
இயர்போன்களை நீண்டகாலமாக பயன்படுத்துவது ஒரு நபரின் சமூக வாழ்க்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயங்களில் அதிகப்படியான பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.
இயர்போன்களில் தொடர்ந்து பாடல்களைக் கேட்பதால், கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படுகிறது. இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகளுக்கு வழிவகுக்கிறது.
இயர்போன்களை காதுகளில் பொருத்தி இசை. பேச்சு என கேட்டு ரசிப்பது சுகமாக இருக்கும்தான். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் மனதில்கொள்ள வேண்டும். விவேகமாகவும், குறைந்த நேரத்துக்கும் மட்டும் இயர்போன்களை பயன்படுத்துவது எப்போதுமே பாதுகாப்பு.
- மேற்கத்திய நாடுகளில் இந்த எண்ணிக்கை 23 சதவிகிதமாக உள்ளது.
- எண்ணை நொறுக்குத் தீனிகள் போன்ற பழக்கங்கள் இதய நோய்கள் ஏற்படும்.
கோவை,
உலக இதய தினத்தை யொட்டி கோவை ஜி.கே.என்.எம். ஆஸ்பத்திரி டாக்டர் ராஜ்பால் கே .அபைசந்த் கூறியதாவது
இந்தியாவில் இதய நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதத்தில் தமி ழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது.
கோவை பகுதியில் நடத்திய ஆய்வில் 52 சதவி கிதம் இதய நோய்களால் இறப்புகள் 70 வயதுக்கு முன்பே நிகழ்கின்றன. மேற்கத்திய நாடுகளில் இந்த எண்ணிக்கை 23 சதவிகிதமாக உள்ளது.
புகைப் பிடித்தல், அதிக ப்படியாக மது அருந்துதல், உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் எண்ணை நொறு க்குத் தீனிகள் போன்ற பழக்கங்கள் இதய நோய்கள் ஏற்படும்.ஆரோக்கியமான வாழ்க்கை அம்சங்களைப் பற்றி கவனமாக இல்லாத வர்கள் கரோனரி தமனி நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. கரோனரி தமனி நோய்க்கு கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் பிளேஸ்மென்ட் சிகிச்சை ஆகும். இது அடைபட்ட இதயத் தமனிகளைத் திறக்கும் குறைந்தபட்ச ஊடுருவும் செயல்முறை யாகும். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரி டாக்டர் தாமஸ் அலெக்சாண்டர் கூறியதா வது:-
பெருநாடி ஸ்டெனோ சிஸை எதிர்த்துப் போராட, மருத்துவ வல்லுநர்கள் டிரான்ஸ்கேதீட்டர் பெருநாடி வால்வு மாற்ற த்தை ஏற்றுக்கொண்டனர். இது குறைந்த வலி மற்றும் விரைவான மீட்பு செயல்முறை ஆகும். சிகிச்சையின் போது பெரும்பாலும் குறுகிய காலம் மருத்துவமனையில் தங்கி இருந்தால் போதும். மேலும் நோயாளியின் சுமையை குறைக்கிறது மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்