search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹமாஸ் தாக்குதல்"

    • உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காசா மக்கள் தவித்து வருகிறார்கள்.
    • தடுப்பூசிகள் குழந்தைகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய போர்நிறுத்தம் தேவை.

    பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போரால் உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காசா மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் காசாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, காசாவில் கழிவுநீர் மாதிரிகளில் தொற்று நோய் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.


    உலக சுகாதார நிறுவனம் காசாவிற்கு 1 மில்லியன் போலியோ தடுப்பூசிகளை அனுப்புகிறது. தடுப்பூசிகள் குழந்தைகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய போர்நிறுத்தம் தேவை என்றார்.

    காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, போலியோ தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.

    • இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டுகளை வீசினர்.
    • போர் நிறுத்த முயற்சி நடந்து வரும் சூழ்நிலையில் இந்த தாக்குதல் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காசாவில் இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் உயிருக்கு பயந்த பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் மத்திய காசா அல்நுசிராத் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டுகளை வீசினர்.

    இதில் அங்கு அகதிகளாக தங்கியிருந்த 16 பேர் இறந்து விட்டதாகவும், 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த முயற்சி நடந்து வரும் சூழ்நிலையில் இந்த தாக்குதல் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இஸ்ரேல் - ஹமாஸ் சண்டையில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.
    • பொதுமக்கள் உயிருக்கு பயந்து எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது என்று சபதம் ஏற்றுள்ள இஸ்ரேல் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த சண்டையில் பெண்கள், குழந்தைகள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிருக்கு பயந்து எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த பகுதியையும் இஸ்ரேல் ராணுவத்தினர் விட்டு வைக்கவில்லை.

    இந்நிலையில், பாலஸ்தீனத்தின் ஜெனின் நகரில் காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை கைது செய்த இஸ்ரேல் ராணுவம், அவரை ராணுவ ஜீப்பின் முன்புறம் கட்டி வைத்து இழுத்து செல்லும் வீடியோ ஒன்று வைரலானது.

    இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "மனிதர்களை கேடயமாக பயன்படுத்துவதை ஏற்கமுடியாது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் உயிருக்கு பயந்து எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    • பெண்கள், குழந்தைகள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    ரபா:

    பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது என்று சபதம் ஏற்றுள்ள இஸ்ரேல் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த சண்டையில் பெண்கள், குழந்தைகள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிருக்கு பயந்து எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இந்த பகுதியையும் இஸ்ரேல் ராணுவத்தினர் விட்டு வைக்கவில்லை.

    ரபா நகரில் கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள இஸ்ரேல் படையினர் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி பீரங்கிகளுடன் முன்னேறி வருகின்றனர்.

    ஷாதி அகதிகள் முகாம் அருகே உள்ள உணவு வினியோக மையத்தின் மீது இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு சரமாரியாக குண்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் 3 பேர் இறந்தனர்.

    பானி சுலைகா பகுதியில் நடந்த வான்வழி தாக்குதலில் நிவாரண பொருட்கள் ஏற்றி வந்த லாரியின் பாதுகாவலர் உள்ளிட்ட 8 பேர் உயிர் இழந்து விட்டதாக ஹமாஸ் அமைப்பின் சுகாதார துறை தெரிவித்தள்ளது.

    நேற்று ஒரே நாள் இரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆம்புலன்சு சிகிச்சை பிரிவின் இயக்குனர் இறந்தார். ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி ஒருவரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் படை தாக்குதலுக்கு பயந்து பல குடும்பங்கள் ரபாவில் இருந்து வெளியேறி வடக்கு காசாவில் உள்ள கான்யூனிஸ் மற்றும் மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் பாலா நகருக்கு தப்பி ஓடி விட்டனர்.

    • காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் உள்ளனர்.
    • காசாவில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நீடித்து கொண்டிருக்கிறது.

    காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

    இதில் காசாவில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள். இந்த நிலையில் காசாவின் தெற்கு நகரமான ரபாவிற்கு வெளியே இடம் பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்தனர்.



    • ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றாலும் இந்த விவகாரம் இஸ்ரேலில் புயலை கிளப்பி இருக்கிறது.
    • 4 பிணைக்கைதிகளை இஸ்ரேல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

    காசா:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்த சண்டையில் பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்து வந்தாலும் இஸ்ரேல் அதனை கண்டு கொள்ளவில்லை.

    ஹமாசை அழிக்கும் வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நுசிரத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். பொதுமக்கள் அதிகம் வசித்து வரும் இப்பகுதியில் சுரங்க பாதையில் இஸ்ரேல் பிணைக்கைதிகளை அடைத்து வைத்துள்ளதாக கூறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. சரமாரியாக குண்டுகள் வீசியதிலும், துப்பாக்கியால் சுட்டத்திலும் 274 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    இதில் 64 குழந்தைகள், 57 பெண்கள், 37 முதியவர்களும் அடங்குவர். இந்த தாக்குதலின் போது 4 பிணைக்கைதிகளை இஸ்ரேல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

    தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும், இஸ்ரேல் போர் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்து வரும் பென்னி காண்ட்சுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த சூழ்நிலையில் பென்னி காண்ட்ஸ் தனது மந்திரி பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது காசாவில் ஹமாசுக்கு எதிரான போரில் உண்மையான வெற்றியை நோக்கி முன்னேறுவதை பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தடுக்கிறார். அதனால் நான் இன்று கனத்த இதயத்துடன் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்,

    இஸ்ரேல் மந்திரி பென்னி காண்ட்ஸ் ராஜினாமா செய்வதற்கு முன்பு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அவரை பதவியை விட்டு விலக வேண்டாம். போரை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல. படைகள் சேர வேண்டிய நேரம் இது என்று கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மந்திரி பதவி விலகிய விவகாரம் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது .

    இதனால் ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றாலும் இந்த விவகாரம் இஸ்ரேலில் புயலை கிளப்பி இருக்கிறது.

    • ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசியது.
    • பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 9 மாதங்களாக நீடித்து வருகிறது.

    இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மத்திய காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலில் சுரங்கப்பாதையில் மறைந்திருந்த ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதாகவும் , அப்பகுதியில் உள்ள உள்கட்டமைப்புகளை அழித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. அதேபோல் வடக்கு காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசியது. இதில் 3 பேர் பலியானார்கள்.

    சமீபத்தில் மத்திய காசாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    • போரை நிறுத்த கத்தார் உள்ளிட்ட நாடுகள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
    • கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வரும் இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    காசா:

    பாலஸ்தீனத்தின் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டி விட்டது. இந்த சண்டையில் அப்பாவி பெண்கள், குழந்தைகள் பலியாகி வருவதால் போரை உடனே நிறுத்தவேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன.

    ஆனால் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் தொடரும் என்றும் ஹமாசை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார்.

    இதனால் இந்த போரை நிறுத்த கத்தார் உள்ளிட்ட நாடுகள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வரும் இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    எகிப்து வெளியுறவு துறை மந்திரி சமே ஷோத்ரி கெய்ரோவில் அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதிகளுடன் காசா போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்தநிலையில் இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸ் அமைப்பினர் இது வரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை என கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மஜித் அல்- அன்சாரி தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் தொடர்ந்து சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    • காசாவின் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.
    • இஸ்ரேல் ஏற்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    டெல் அவிவ்:

    பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 8 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 36 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். காசாவின் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.

    காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று ஐ.நா. சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை இஸ்ரேல் ஏற்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் காசா மீதான போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டீசச்சி ஹனேஜிபி கூறும்போது, ஹமாஸ் அமைப்பையும், அதன் அரசாங்கத்தையும் அழிக்க எங்களுக்கு இன்னும் 7 மாத கால அவகாசம் தேவைப்படும். இதனால் போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும். எகிப்து எல்லையில் பெரும் பகுதியை இஸ்ரேல் ராணுவம் கட்டுப்படுத்துகிறது.

    ஹமாசின் ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் வகையில் அனைத்தையும் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. காசாவில் சண்டை குறைந்தது இந்த ஆண்டு முழுவதும் தொடரும். பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் பணயக்கைதிகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் கோரியபடி போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் தயாராக இல்லை. காசாவின் ரபா நகரில் சண்டையிடுவது அர்த்தமற்ற போர் அல்ல. காசாவில் ஹமாஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதையும், அதையும் அதன் கூட்டாளிகளும் இஸ்ரேலை தாக்குவதையும் நிறுத்துவதே நோக்கம் என்றார்.

    இதற்கிடையே காசா மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுக்கான தூதரை பிரேசில் திரும்ப பெற்றுள்ளது. மெக்சிகோ நாட்டில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது. தலைநகர் மெக்சிகோ சிட்டியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது தூதரகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.
    • ஹமாஸ் படையினரிடம் சிக்கி தவிக்கும் பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    காசா:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரம் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த 8 மாதங்களாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இந்த சண்டையில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். காசா நகரமே மொத்தமாக உருக்குலைந்து போய் விட்டது. அப்பாவி மக்கள் உயிர் இழந்து வருவதால் போரை நிறுத்த பல நாடுகள் சமரச முயற்சிகள் மேற்கொண்டன. ஆனாலும் போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.

    இது வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா கூட உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டது.

    ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் படையினரிடம் சிக்கி தவிக்கும் பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பின் ஆயுத படை பிரிவினர் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்தியது. காசாவில் இருந்து இந்த ஏவுகணைகள் சரமாரியாக வீசப்பட்டன.

    இதையடுத்து இஸ்ரேல் அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது. ஆனாலும் சேத விவரம், உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் படையினர் ஹமாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது அதிரடி வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது.

    போருக்கு பயந்து வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரபாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்கள் மீது தான் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியது.

    இந்த சண்டையில் 35 பாலஸ்தீனர்கள் உயிர் இழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவார்கள் என காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

    இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதனால் காசாவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எற்கனவே ரபா எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்காததால் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். தற்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பொதுமக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர்.

    இதற்கிடையில் தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களில் இஸ்ரேல் படையினர் நடத்திய புதிய தாக்குலுக்கு 8 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    • இஸ்ரேல் படைகளுடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டு வருகிறார்கள்.
    • பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வேண்டும்.

    பாலஸ்தீனத்தின் காசா முனையில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் படைகளுடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை சிறைப்பிடித்துள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அல் கஸ்சாம் படைப்பிரிவின் ஹமாஸ் அமைப்பு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா கூறும் போது, வடக்கு காசாவில் ஜபாலியாவில் நடந்த சண்டையின் போது சுரங்கப்பாதைக்குள் பதுங்கியிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களை இழுத்து வந்தனர். இதில் சில இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்தனர். பலரை சிறைப்பிடித்துள்ளனர்.

    அவர்கள் காயமடைந்து உள்ளனர் என்று தெரிவித்தார். ஒரு சுரங்கப்பாதையில் ரத்தம் தோய்ந்த ஒரு நபர் தரையில் இழுத்துச் செல்லப்படும் வீடியோ, கைப்பற்றபட்ட துப்பாக்கி புகைப்படங்களை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டனர். ஆனால் இதை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. ஒரு ராணுவ வீரர் கூட கடத்தப்பட்ட சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தது.

    இதற்கிடையே ஹமாஸ் அதிகாரி ஒசாமா ஹம்டன் கூறும்போது, இஸ்ரேலுடன் புதிய பேச்சுவார்த்தைகள் தேவையில்லை. இது போன்ற பேச்சுவார்த்தைகள் இஸ்ரேல் ராணுவத்திற்கு காசாவில் "ஆக்கிரமிப்பைத் தொடர அதிக அவகாசம் தருவதாக இருக்கிறது என்றார்.

    ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக்கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை மீட்டுக்கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே தலைநகர் டெல் அவிலில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வேண்டும். புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதல் வெடித்தது.

    • காசாவில் உள்ள ரபா நகரில் லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    • ரபா நகரில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இப்போரில் காசாவின் வடக்கு, மத்திய பகுதிகள் முற்றிலும் அழிந்துள்ளது.

    இதையடுத்து தெற்கு காசாவில் உள்ள ரபா நகரில் லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நகரம் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதனால் அங்கிருந்து ஏராளமானோர் இடம் பெயர்ந்து வருகிறார்கள்.

    இதற்கிடையே காசா போரில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. இதில் ரபா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தொடர்பாக அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா கோரியது.

    இதையடுத்து விசாரணை நடத்திய சர்வதேச நீதிமன்றம், இஸ்ரேலுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    ரபா நகருக்குள் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும். அந்த நகரம் வழியாக காசாவின் பிற பகுதிகளுக்கு உதவி பொருட்கள் செல்ல எல்லைகளை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் பிணைக்கைதிகளை காசாவின் ஹமாஸ் அமைப்பினர் உடனே விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

    இதுதொடர்பாக இஸ்ரேல் தரப்பு கூறும்போது, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு மோசமானது, ஒழுக்க ரீதியில் அருவருப்பானது. காசாவில் இனப்படுகொலை செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானது. ரபாவில் போர் இலக்குகள் தொடரும். காசா பகுதி முழுவதிலும் ஹமாசை ஒழித்துக்கட்டவும், பிணைக்கைதிகளை மீட்கவும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்றனர். இதற்கிடையே ரபா நகரில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    ×