search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊபர்"

    • அவரது பதிவு 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
    • பலரும் அவரின் புதுமையான யோசனையை பாராட்டி வருகின்றனர்.

    இந்தியாவின் ஐடி தலைநகராக விளங்கும் பெங்களூரு சாலைகள் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போனது. ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களுரில் தமிழ்நாடு உள்ளிட்ட பலவேறு மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் வேலைக்கு தாமதமாக செல்லக்கூடாது என இளைஞர் ஒருவர் எடுத்த வினோத முடிவு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஓலா மற்றும் உபர் டாக்ஸிகள் கிடைக்காததால் பொருட்களை டெலிவரி செய்யும் போர்ட்டர் செயலி மூலம் தன்னைத்தானே அந்த இளைஞர் தனது அலுவலகத்துக்கு டெலிவரி செய்து கொண்டார். பதிக் குகரே என்ற அந்த இளைஞர் தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டார்.

    அவர் தனது பதிவில், "ஓலா உபர் இல்லாததால் இன்று இப்படித்தான் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது" என்று அவர் போர்ட்டர் டெலிவரி ஏஜென்ட்டுடன் பைக்கில் பயணிக்கும் புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    அவரது பதிவு 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. பலரும் அவரின் புதுமையான யோசனையை பாராட்டி வருகின்றனர்.

    வடிவேலு காமெடி ஒன்றில் டிக்கெட் செலவை மிச்சப்படுத்த கணவன் தனது குடும்பத்தை பார்சலில் அனுப்பி வைப்பார். அதுபோல இந்த இளைஞர் தன்னைத் தானே டெலிவரி செய்து கொண்டது சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது. 

    • ஒரே பயணத்திற்கு ஐபோனில் காட்டும் கட்டணத்தை விட ஆண்ட்ராய்ட் போனில் ரூ.52 அதிகமாக காட்டுவதாக புகார்.
    • ஊபரில் 2 தொலைபேசியில் இருந்து வெவ்வேறு கட்டணங்கள் காட்டும் ஸ்க்ரீன்ஷாட்டை ஒருவர் பகிர்ந்துள்ளார்.

    ஓலா, ஊபர், ராபிடோ உள்ளிட்ட வாடகை வாகன செயலிகளை பயன்படுத்தி பலரும் தற்போது பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள ஊபர் செயலியில் ஒரே பயணத்திற்கு இருந்து புக்கிங் செய்தபோது வெவ்வேறு கட்டணங்கள் காட்டுவதாக எக்ஸ் பக்கத்தில் சுதிர் என்ற பயனர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அவரது பதிவில், "ஒரே பயணத்திற்கு எனது மகளின் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஊபர் செயலியில் கட்டணம் ரூ. 290.79 ஆகவும், என்னுடைய ஐபோனில், கட்டணம் ரூ.342.47 ஆகவும் காட்டுகிறது. அதனால் எனது மகளிடம் தான் பெரும்பாலும் ஊபர் புக் செய்ய சொல்வேன். உங்களுக்கும் இது நடக்கிறதா?" என்று பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "ஊபர் செயலியில் 2 தொலைபேசியில் இருந்து வெவ்வேறு கட்டணங்கள் காட்டும்" ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார்.

    இவரது குற்றச்சாட்டிற்கு ஊபர் பதில் அளித்துள்ளது. அந்த பதிவில், "இந்த இரண்டு சவாரிகளிலும் உள்ள பல வேறுபாடுகள் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில், பிக்-அப் பாயிண்ட், வாடிக்கையாளரின் இடத்திற்கு வரும் நேரம் மற்றும் டிராப்-ஆப் பாயின்ட் மாறுபடுகிறது. அதற்கேற்ப கட்டணங்கள் மாறுபடுகிறது. செல்போன்களின் அடிப்படையில் பயண விலைகளை ஊபர் மாற்றியமைப்பதில்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • புதிய செயலியை உருவாக்க ஆட்டோ ஓட்டுனர்கள் அரசிடம் கோரிக்கை.

    சென்னை:

    சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஆட்டோ கட்டணம் 25 ரூபாய் என்றும் அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கும் தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 என 2013-ம் ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

    இரவு நேரத்தில் இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டது.

    ஆனாலும் இதில் பல ஆட்டோ டிரைவர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால் மீட்டர் போடாமல் குத்து மதிப்பாக பணம் கேட்கும் நடைமுறை சென்னையில் பரவலாகி விட்டது.

    ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள் கடை வீதிகள் என எல்லா பகுதிகளிலும் ஸ்டாண்டு ஆட்டோக்களை அழைத்தால் அவர்கள் ஒரு தொகை கேட்பார்கள். நாம் ஒரு தொகை சொல்ல வேண்டும். இதற்கு மத்தியில் பேரம் பேசிதான் ஆட்டோவில் பயணிக்க முடியும். எந்த ஆட்டோவிலும் மீட்டர் போடுவது கிடையாது.

    ஓலா, ஊபர் ஆட்டோக்களில் கூட காண்பிக்கும் தொகையை விட 20 ரூபாய், 30 ரூபாய் அதிகம் தாருங்கள் என கேட்கும் வழக்கம் உருவாகிவிட்டது.

    இதனால் பல இடங்களில் ஆட்டோ டிரைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் பாதிக்கப்படும் பயணிகள் அரசுக்கு புகார்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த புகார் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் இதற்கு முடிவு காண அரசு தற்போது முயற்சி எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் ஓலா, ஊபர் செயலிக்கு மாற்றாக அரசு ஒரு புதிய செயலியை உருவாக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதை நிறைவேற்றும் வகையில் தமிழக போக்குவரத்து துறையின் சார்பில் ஸ்டார்ட் அப் மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயலி உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக முதல் கட்டமாக கிண்டியில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன பயிற்சி மையத்தில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

    ஆட்டோக்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பழைய கட்டணத்திற்கு பதிலாக குறைந்தபட்ச கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.50-ம், அதற்கு மேல் கிலோ மீட்டருக்கு ரூ.25-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறும் போது, ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக பிரத்யேக செயலி கொண்டு வர உள்ளோம். அதற்காக இதுவரை 1.70 லட்சம் தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்துள்ளோம்.

    புதிய கட்டண விவரத்தை அரசுக்கு பரிந்துரைத் துள்ளோம். அது பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் ஆட்டோ கட்டணத்தை அரசு அறிவிக்கும் என்றனர்.

    • ரேபிடோ, ஊபர் ஆகிய இரண்டிலும் மாறி மாறி பணியாற்றுவேன்.
    • யாரும் என்னை கேள்வியும் கேட்க முடியாது என கூறியுள்ளார்.

    வேலையில்லா திண்டாட்டம் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில் பட்டதாரி இளைஞர்கள் பலரும் உணவு வினியோக நிறுவனங்களிலும், வாடகை பைக் ஓட்டும் நிறுவனங்களிலும் பணியாற்றி சம்பாதித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் ரேபிடோவில் வாடகை பைக் ஓட்டும் இளைஞர் பற்றிய தகவல் உள்ளது. அதில் பேசும் இளைஞர், நான் சராசரியாக ஒரு நாளைக்கு 12 முதல் 13 மணி நேரம் வரை பணியாற்றுகிறேன். மாதம் ரூ. 80 ஆயிரம் முதல் ரூ. 85 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன்.

    ரேபிடோ, ஊபர் ஆகிய இரண்டிலும் மாறி மாறி பணியாற்றுவேன். சிலர் எங்கள் பணியை பார்த்து சிரிப்பார்கள். தற்போதைய சூழ்நிலையில் எந்த வேலையிலும் இவ்வளவு சம்பளம் கிடைக்காது. யாரும் என்னை கேள்வியும் கேட்க முடியாது என கூறியுள்ளார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் இந்த வீடியோவை பகிர்ந்து இந்தியாவில் கிக் பொருளாதாரத்தை பாராட்டி உள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்குவதில் தொழில்நுட்பம் சார்ந்த களங்களின் முயற்சிகளை பாராட்டினார்.



    • உள்ளூர் டாக்ஸியை பிடித்து விமான நிலையத்தை அடைந்த உபேந்திர சிங்கும் அவரது மனைவியும் விமானத்தை தவறவிட்டனர்.
    • டெல்லி நுகர்வோர் ஆணையத்தில் முறையான புகார் ஒன்றை அளித்தார்.

    சரியான நேரத்தில் வாகனத்தை (cab) வழங்கத் தவறியதற்காக ஊபர் நிறுவனத்திற்கு எதிராக டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு பயனர் தனது விமானத்தை தவறவிட்டார். நிதி இழப்புகள், சிரமம் மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றிற்காக ரூ.54,000 இழப்பீடாக வழங்க ஊபர் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    டெல்லியில் வசிக்கும் உபேந்திர சிங், கடந்த 2022-ம் ஆண்டு இந்தூருக்கு விமானத்தைப் பிடிக்க அதிகாலை 3:15 மணிக்கு ஊபர் வண்டியை முன்பதிவு செய்தார். வண்டி சரியான நேரத்திற்கு வரவில்லை. இதனால் உபேந்திர சிங் ஊபர்-ஐ தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்த போதிலும், அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    உள்ளூர் டாக்ஸியை பிடித்து விமான நிலையத்தை அடைந்த உபேந்திர சிங்கும் அவரது மனைவியும் விமானத்தை தவறவிட்டனர்.

    ஊபர் சேவை தோல்வியால் விரக்தியடைந்த சிங், ஊபர் நிறுவனத்திற்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.

    பின்னர் உபேந்திர சிங் ஊபரின் சேவையில் குறைபாடு எனக் கூறி, டெல்லி நுகர்வோர் ஆணையத்தில் முறையான புகார் ஒன்றை அளித்தார்.

    நுகர்வோர் ஆணையம் உபேந்திர சிங்கிற்கு ஆதரவாக தீர்ப்பளித்து, ஊபர் நிறுவனத்தை பொறுப்பேற்க வைத்தது.

    உபேந்திர சிங்கிற்கு ரூ.54,000 இழப்பீடு வழங்குமாறு ஊபர் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    நிதி இழப்பு மற்றும் சிரமத்திற்கு ரூ.24,100, மன உளைச்சல் மற்றும் சட்டச் செலவுகளுக்கு ரூ.30,000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சம்பவத்தை பற்றி வாடிக்கையாளர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
    • பதிவு வைரலாகி 1.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.

    நகர பகுதிகளில் பஸ், ரெயில் நிலையம் அல்லது விமான நிலையம் செல்வோர் தற்போது ஆன்லைன் செயலிகளை பயன்படுத்தி குறித்த நேரத்திற்கு செல்வதற்கு கார், ஆட்டோக்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.

    அவ்வாறு முன்பதிவு செய்து விட்டால் வாகனங்கள் வாடிக்கையாளர்களை தேடி வந்து விடுவதால் எளிதில் பயணம் செய்ய முடிகிறது. சில பயணிகள் ஓலா, ஊபர் என இரண்டிலும் முன்பதிவு செய்து விட்டு எது முதலில் வருகிறதோ அதில் பயணம் செய்கின்றனர்.

    இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் ஓலா, ஊபர் இரண்டிலும் முன்பதிவு செய்திருந்தார். அப்போது இரண்டு வாகனங்களுக்குமே ஒரே டிரைவர் கிடைத்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் சம்பவத்தை பற்றி வாடிக்கையாளர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

    அதில், ஓலா மற்றும் ஊபர் இரண்டிலும் ஒரே சவாரி கிடைத்தது. இது எப்படி சாத்தியம்? என்று கூறியிருந்தார். அவரின் பதிவு வைரலாகி 1.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.

    இது தொடர்பாக பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.



    • ஓலா, உபேர் டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
    • போராட்டத்தின் எதிரொலியாக நேற்று சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.

    சென்னை:

    ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    மூன்றாவது நாளாக ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் எதிரொலியாக நேற்று சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்தது. குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 120 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    குறைந்தபட்ச ஓட்டுநர்களே டாக்சி சேவை அளித்து வரும் நிலையில் கட்டணம் உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை பங்கேற்க உள்ளனர். போராட்டத்திற்கு முன் சென்னையில் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.400 வசூலிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், போராட்டத்தின் எதிரொலியாக 20 கிலோமீட்டர் தூரத்திற்கு இன்று ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மேலும் அதிகரிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அச்செயலிகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வரும் பெரும்பாலானோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
    • வாடகை வாகனங்களின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தொகை போதுமானதாக இல்லை எனவும், நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் கூறி ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அச்செயலிகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வரும் பெரும்பாலானோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தினால், இதர வாடகை வாகனங்களின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே, முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் இடம்பெற்றிருந்த ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக தனி நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
    • ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.

    சென்னை:

    ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இரண்டாவது நாளாக ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 120 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    குறைந்தபட்ச ஓட்டுநர்களே டாக்சி சேவை அளித்து வரும் நிலையில் கட்டணம் உயர்ந்துள்ளது.

    • வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்க வேண்டும்.
    • துறை சார்ந்த அதிகாரிகளோ கோப்புகளை இறுதி செய்யும் பணிகளை அரசு முன்னெடுக்க தாமதமாவதாக தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    உரிமைக் குரல் ஓட்டுனர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.ஜாஹீர் உசைன் கூறியதாவது:-

    ஓலா, ஊபர் செயலிகள்(ஆப்) வாயிலாக முன்பதிவு செய்யப்படும் வாடகை வாகனங்களை முறைப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்க வேண்டும். பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும். வணிக வாகனங்களை இயக்க பேட்ஜ் உரிமம் பெற வேண்டாம் என்ற அமைச்சரின் சட்டசபை அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.

    ஆனால் துறை சார்ந்த அதிகாரிகளோ கோப்புகளை இறுதி செய்யும் பணிகளை அரசு முன்னெடுக்க தாமதமாவதாக தெரிவிக்கின்றனர். எனவே, இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 16-ந் தேதி (நாளை) முதல் 3 நாட்களுக்குத் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்" என்றார்.

    ×