என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்திவிநாயகர் கோவில்"

    • மதுரை சோழவந்தானில் சித்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • 4 கால யாக பூஜைகள் முடிவடைந்து கடம் புறப்பாடாகி கலசத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கணபதி பூஜையுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின.

    சிவகங்கை மகாபிரபு சிவாச்சாரியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள் கந்தசாமி பிள்ளை குடும்பத்தினர் முன்னிலையில் யாக பூஜைகள் நடந்தன. தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    4 கால யாக பூஜைகள் முடிவடைந்து கடம் புறப்பாடாகி கலசத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மன்னாடிமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜன், திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டகோடா ஜான்சன், பிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே என்ற படத்தில் நடித்ததன் மூலம் உலக புகழ்பெற்றார்.
    • டகோடா ஜான்சன் பாடகர் கிறிஸ் மார்ட்டின் உடன் டேட்டிங் செய்து வருகிறார்.

    ஹாலிவுட் நடிகை டகோடா ஜான்சன் இந்திய நடிகைகள் சோனாலி பிந்த்ரே மற்றும் காயத்ரி ஜோஷியுடன் இணைந்து மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

    பிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தின் மூலம் புகப்பெற்ற நடிகை டகோடா ஜான்சன் கோவிலுக்கு செல்லும்போது நீல நிற பாரம்பரிய சல்வார் உடையை அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    இதற்கு முன்னதாக, டகோட்டா ஜான்சன் தனது காதலரும் கோல்ட்ப்ளே இசைக்குழுவினரின் தலைவரான கிறிஸ் மார்ட்டின் உடன் இணைந்து மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பாபுல்நாத் கோவிலுக்கும் சென்று வழிபட்டார். அப்போது இருவரும் பாரம்பரிய இந்திய உடை அணிந்திருந்தனர்.

    கோல்ட்ப்ளே இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் தற்போது நவி மும்பையில் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்ரீ சித்திவிநாயக கணபதி கோயில் அறக்கட்டளை (SSGTT) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • பக்தர்கள் இந்திய பாணி உடைகளை அணிந்து வர ஊக்குவிக்கப்படுகிறது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரபாதேவி அருகே பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.

    பாலிவுட் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இக்கோவிலுக்கு பிரதானமாக வருகை தந்து வழிபாடு நடத்துவது வழக்கம். ஆண்டு முழுவதிலும் பக்தர்கள் இங்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் பக்தர்களுக்கு ஆடை உள்ளிட்ட விஷயங்களில் சித்திவிநாயகர் கோவில் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இதுதொடர்பாக ஸ்ரீ சித்திவிநாயக கணபதி கோயில் அறக்கட்டளை (SSGTT) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    "வெட்டப்பட்ட அல்லது கிழிந்த துணியுடன் கூடிய கால்சட்டை அணிந்த பக்தர்கள், குட்டைப் பாவாடைகள் அல்லது உடல் உறுப்புகளை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வருபவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. புதிய ஆடை கட்டுப்பாடு அடுத்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது.

     

    பக்தர்கள் இந்திய பாணி உடைகளை அணிந்து வர ஊக்குவிக்கப்படுகிறது. பொருத்தமற்ற உடையில் வருகை தருவோர் குறித்து பக்தர்கள் சார்ப்பில் கோயில் அறக்கட்டளைக்குப் பல புகார்கள் வந்ததை அடுத்து கோயிலின் புனிதத்தைக் காக்கும் வகையில் ஆடைக் கட்டுப்பாட்டை அமல்படுத்தக் கோயில் அறக்கட்டளை முடிவு செய்தது. 

    ×