என் மலர்
நீங்கள் தேடியது "வரி உயர்வு"
- இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிப்பு.
- டிரம்ப் நடவடிக்கையால் இந்திய பொருளாதாரதம் பாதிக்கப்படையும் எனக் கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு நாடுளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளார். இந்தியாவுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதித்துள்ளது. இது இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும், மோடி இதற்கு எதிரான எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார். பொருளாதார வல்லுனர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பின் தாக்கத்தை மதிப்பீடு செய்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்த கொண்டபோது டிரம்பின் நடவடிக்கை குறித்த கேள்விக்கு பங்கஜ் சவுத்ரி "டொனால்டு டிரம்பிற்கு அமெரிக்கா முதன்மையாக இருக்கலாம். ஆனால், மோடிக்கு இந்தியாதான் முதன்மையானது. அமெரிக்கா அமல்படுத்தியுள்ள பரஸ்பர வரி விதிப்பின் தாக்கத்தை மதிப்பிட்டு வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
- ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
- நேற்றை விட 805 புள்ளிகள் சரிந்துள்ளன.
புதுடெல்லி:
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மற்ற நாடுகளை சேர்ந்த பொருட்களுக்கு பரஸ்பரம் வரிவி திப்பை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தி யாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்ப டும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு காரணமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் ரூ.11 லட்சம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் நடை பெற்று உள்ளது. இந்தியாவில் உள்ள விவசாய பொருட்கள் மற்றும் அரிசி, இறால், தேன், காய்கறி ஜூஸ், ஆமணக்கு எண்ணை, மிளகு உள்ளிட்ட பல பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. விவசாய பொருட்கள் மட்டும் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரத்தின கற்கள், நகைகள், வாகனங்கள், உணவு பொருட்கள் ஆகியவை ரூ.7.5 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
தற்போது அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டு உள்ளதால் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
பாதாம், வால்நட், பிஸ்தா, ஆப்பிள், பருப்பு வகைகள் ஆகியவை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த பொருட்களுக்கு இந்தியாவில் 52 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வரியை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை மறைமுகமாக டிரம்ப் ஏற்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இந்திய பொருட்க ளுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு இருப்பது இந்தியாவில் பங்கு வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பங்கு சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
நேற்றை விட 805 புள்ளிகள் சரிந்துள்ளன. இன்று சென்செக்ஸ் 75,653 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை நிப்டியும் சரிவோடு தொடங்கியது.
வங்கிகள், ரியல் எஸ்டேட், தகவல் தொழில் நுட்பம், நுகர்வோர் பொருட் கள், நிதி சேவைகள் சார்ந்த பங்குகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. இந்தி யாவில் இருந்து எந்தெந்த பொருட்கள் அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி செய்யப்படு கிறதோ அந்தந்த பொருட் களை தயாரிக்கும் நிறுவ னங்கள் பங்கு சந்தையில் கடும் சரிவை சந்தித்து உள்ளன.
- மதுரையில் இன்று 4,200 லாரிகள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
- ரூ.250 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
மதுரை
நாடு முழுவதும் இயக்கப்படும் லாரிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை விதிக்கப்படும் காலாண்டு வரி 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டதை கண்டித்தும், லாரிகள் இயக்கத்தின் போது சாலைகளில் போலீசார் எவ்வித விசாரணையும் இன்றி ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்வதை யும், அபராதம் விதிப்பதை யும் கைவிட வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மதுரையில் இன்று காலை 6 மணி முதல் லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மதுரையை பொறுத்த வரை தினமும் 4,200 லாரிகள் அண்டை மாவட்டத்திற்கும், வெளி மாநிலங்களுக்கும் சரக்கு களை எடுத்துச் சென்று வருகின்றன.
இதற்காக மதுரை நெல் பேட்டை, வடக்குவெளி வீதி, சிம்மக்கல், கீழ மாரட்டு வீதி உள்ளிட்ட இடங்களில் 230 புக்கிங் அலுவல கங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக அலுவல கங்களும் மூடப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இந்த வேலை நிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் அனுப்பப்படாமல் புக்கிங் அலுவல கங்களில் தேங்கியுள்ளன.
இதன் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சரக்குகளை ஏற்றி இறக்க முடியாதால் சுமார் ரூ. 250 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
லாரி உரிமையாளர்கள் தங்களது உணர்வுகளை வெளிப் படுத்துவதற்காக தீபாவளி பண்டிகை நாட்களில் ஒரு நாள் மட்டும் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள் ளோம். எனவே எங்களது நியாயமான கோரிக்கைக்கு உடனடியாக அரசு செவி சாய்த்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று மதுரை மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் சாத்தையா தெரிவித்துள்ளார்.
- படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.
- ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட புதிய மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 10 சதவீதம் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான வரியை உயர்த்துவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள். பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்துக்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், 'கேப்'கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி நிர்ணயிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
வாகனங்களுக்கான வரியை உயர்த்தி சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து வாகனங்களுக்கான புதிய வரி நிர்ணயம் செய்யப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட புதிய மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 10 சதவீதம் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் விலை கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 18 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கும் மேல் விலை கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு 20 சதவீதமும் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஒரு வருடத்துக்குள் உள்ள ரூ.1 லட்சத்துக்கு உள்பட்ட பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 8.25 சதவீதமும், ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 10.25 சதவீதமும், ஓராண்டு முதல் 2 ஆண்டுக்குள் உள்ள ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 8 சதவீதமும், ரூ.1லட்சத்துக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 10 சதவீதமும் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2 ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ் நாள் வரி அதன் விலைக்கு ஏற்ப 6 சதவீதம் முதல் 9.75 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
2 ஆண்டு முதல் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் ரூ.1 லட்சத்துக்கு மேல் விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 8 சதவீதம் முதல் 18.75 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் வரை விலை கொண்ட புதிய கார்களுக்கு வாழ்நாள் வரி 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலை கொண்ட கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விலை கொண்ட கார்களுக்கு 18 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கு மேற்பட்ட கார்களுக்கு 20 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ரூ.5 லட்சத்துக்கு கார் வாங்கினால் ரூ.60 ஆயிரம் வாழ்நாள் வரியும், ரூ.1 லட்ச த்துக்கு மோட்டார்சைக்கிள் வாங்கினால் ரூ.10 ஆயிரம் வாழ்நாள் வரியும் செலுத்த வேண்டும்.
சரக்கு வாகனங்களில் சரக்கு ஏற்றிய பிறகு 3 ஆயிரம் கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.3,600 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 3 ஆயிரம் கிலோ முதல் 5,500 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு காலாண்டு வரியாக ரூ.1,425 முதல் ரூ.3100 வரை எடைக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு உள்ளது.
வாடகைக்கு இயக்கப்படும் மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகங்களில், 35 பேர் பயணிக்கும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கான காலாண்டு வரி ரூ,4,900 ஆகும். 35 பேருக்கும் அதிகமானோர் பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ.3,000 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.
டிரெய்லர் வாகனங்களுக்கு ஏற்றப்படும் எடையின் அளவுக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.1,800 வரை வரி உயர்த்தப்பட்டு உள்ளது. பயணிகள் போக்குவரத்து மற்றும் வாடகைக்கு பயன்படுத்தப்படும் 4 பேர் பயணிக்கும் வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரி உயர்த்தப்படுகிறது.
கட்டுமான தளவாட வாகனங்களுக்கு ஆண்டு வரி ரூ.15 ஆயிரம், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் போக்குவரத்திற்கான கல்வி நிறுவன பஸ்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45, போக்குவரத்திற்கான பிற நிறுவனங்களின் வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என்ற வீதத்தில் வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் 15 ஆண்டுகள் நிறைவடையாத மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்கக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3,000 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஓட்டுனர் சேர்த்து 7 முதல் 13 பேர் வரை ஏற்றக் கூடிய ரூ.5 லட்சத்துக்கு உள்பட்ட புதிய சுற்றுலா சீருந்துகளுக்கான வாழ்நாள் வரி அதன் விலையில் 12 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலை கொண்ட சீருந்துகளுக்கு 13 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விலை கொண்ட சீருந்துகளுக்கு 18 சதவீதம், ரூ.20 லட்சத்துக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு 20 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.